Wednesday, February 19, 2014

அம்மா வாழ்க

இராஜீவ் காந்தியின் கொலையாளிகளாக மரண தண்டனைக்  கைதிகளாய் இருந்தவர்களை உச்சநீதி மன்றம் ஆயுள் தண்டனைக் கைதிகளாய் மாற்றவும், தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய அறிவித்துள்ள செயல் நமக்குப் பல சுவாரஸ்யம், அதிர்ச்சி  மற்றும் அரசியல்வாதிகளின் சுயநலம் மற்றும் கையாலாகத்தனத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.

இதில் பல பரிமாணங்கள்

1. இராஜீவ் கொலையாளிகள் - இது ஒரு முட்டாள்தனமான கருத்து.  கொலை செய்யத் திட்டம் போட்டது ஒரு கும்பல், செய்தது ஒரு கும்பல், அதற்கு உதவியாய் இருந்த சில குப்பன் சுப்பன்மார்களைப் பிடித்து கொலையாளிகள் என்று பிரயோகப் படுத்தி குளிர் காய்ந்தாகி விட்டார்கள். இவர்களுக்கு ஆயுள் தண்டனை தேவை, ஆனால் மரண தண்டனை? கல்யாண  வீட்டில் புகுந்து 17 பேரைக் கொலை செய்தவனின்  கருணை மனுவை அங்கீகரிக்கும் இந்த நாட்டில் இவர்களுக்கு ஏன் மரண தண்டனை? ஏன் இந்த பாரபட்சம்? நிர்பயா வழக்கில் கண் முன் உள்ள குற்றவளிகளைத் தண்டிக்க வக்கில்லாத அரசமைப்பிற்கு இந்த 3 பேரின் மரண தண்டனையில் என்ன ஒரு ஆர்வம்?


2. கருணை மனுவைப் பதினோரு வருடங்களாகக் கிடப்பில் போட்டு விட்டு இப்போது புலம்பும் காங்கிரஸ் ஒரு இத்துப் போன கட்சி என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.

3. குற்றவாளிகளை விடுதலை செய்ய அம்மா காண்பிக்கும் அவசரம் பல ஊகங்களுக்கு வழி வகுக்கிறது. ஆனாலும் மதிய அரசின் கையாலகாத்தனத்தை அம்மா இதன் மூலம் வெளிப்படுத்தி மேலும் அவமானத்தையும் தர்ம சங்கடங்களையும் உச்ச நீதி மன்றமும் அம்மாவும் ஏற்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் . அதே சமயம் இது ஒரு தவறான முன் உதாரணத்தைக் கொண்டு வரலாம்

4. குற்றவாளிகளின் சமூக வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக அமையலாம், அல்லது மதிமுக கட்சியின் மூலம் சீட்டு வாங்கி அவர்கள் MP ஆகலாம்


1 comment:

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!