Sunday, January 25, 2009

நமது ரிச்மண்ட் தமிழ் சங்கத்தில் அடுத்த கலைவிழா

பொங்கல், குடியரசு தினம் மற்றும் காதலர் தின விழா இம்மூன்றையும் ஒரு சேரக் கொண்டாட நமது சங்கத்தின் நிர்வாகக் குழுவினர் அனைவரும் ஒரு மனதாக முடிவு செய்து வரும் பிப்ரவரி மாதம், 28ம் தேதி மாலை 4 மணி முதல் 7 மணி வரை நமது ரிச்மண்ட் கோவிலில் (ஹிந்து சென்டரில்) ஒரு கலாச்சார விழாவினை நடத்த இருக்கிறோம். பல கலை நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றை பரிசீலித்து பட்டியலிடும் பணியில் கலாச்சாரக் குழு தங்களை ஈடு படுத்திக் கொண்டுள்ளார்கள்.

ஒரு கலை நிகழ்ச்சி முடிந்து அடுத்த கலைநிகழ்ச்சி துவங்கும் முன்பு இருக்கும் இடைவெளிகளின் ஊடே சிறுவர் சிறுமிகள் தங்களுக்குத் தெரிந்த ஒரு திருக்குறளைச் சொல்ல (முடிந்தால் அதற்கு விளக்கமும் சொல்ல) ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். திருக்குறள் சொல்லும் (முடிந்தால் விளக்கமும் சொல்லும்) ஒவ்வொரு சிறுவர் சிறுமிக்கும் ஒரு சிறிய பரிசும் உண்டு. இந்தப் பங்கேற்பு முக்கிய கலைநிகழ்ச்சியின் எண்ணிக்கையில் சேராது எனவே, உங்கள் குழந்தைகள் எவ்வளவு திருக்குறள் சொல்ல விழைந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப் படும்.

நிகழ்ச்சியில் பங்கேற்க அல்லது மேலும் விவரம் வேண்டுவோர் நமது சங்கத்தின் நிர்வாகக் குழுவினரை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.

வாருங்கள் எல்லோரும் வடம் பிடிப்போம், வரலாற்றில் ஓர் இடம் பிடிப்போம்.


அன்புடன்

ரிச்மண்ட் தமிழ் சங்கம்

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!