Saturday, October 06, 2018

இதுல உனக்கு என்ன பெரும?

//பள்ளியில் 30 குறள், மதிப்பெண்னுக்காக படிச்சவனை திருக்குறள் தெரிந்த கணக்கில் வைப்பது 👌🏽
என்னடா சொல்ற? பள்ளியில் குறள் படித்தவனெல்லாம் மதிப்பெண்ணுக்காக படித்தான் என்றால், வேதம் படிச்சவன் எல்லாம் ராக்கெட் விடவா படித்தான்? இவனாவது தினப்படி வாழ்வில் அவ்வப்போது சரியான பொருளில் இரண்டொரு குறள்கள் பயன்படுத்துகிறான். அந்த 1000 கோடி பேரும் மதச் சடங்குகளில் ஒப்பிக்கத்தானே படித்தார்கள்? அவர்களுக்குள் பொருளுணர்ந்து அவ்வப்போது சிலபல செய்யுள்களை சொல்லிக்கொள்கிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் இரண்டும் ஒன்றுதானே? திருக்குறள் தெரிந்தவர்கள் வெறும் மதிப்பெண்ணுக்காக படித்தார்கள்; அதனால் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாதே!

//பரமசிவன், பார்வதி, சரஸ்வதின்னு சொல்லாம, பரம்பொருள்ன்னு சொன்னதை வைத்திருங்திருக்கலாம். 
பரம்பொருள் வரியை நீக்காது விட்டு வைக்க வேண்டுமென்றால் "சிதைந்து, வழக்கொழிந்த ஆரியம்" என்பதையும் வைக்கணும். இல்லையா? அதுக்கொரு சட்டம் இதுக்கு வேறயா?

//உனக்கு எனக்கும் தமிழ் பிடிக்கும் என்பதால் மற்ற மொழி பற்றி அவதூறு பேசுவது சரியல்ல.
அவதூறு ஏதுமில்லை. உண்மையைச் சொல்வது அவதூறு என்றால், பேதை, பெருந்தன்மையற்றவர் என்பதை எல்லாம் எந்தக் கணக்கில் வைக்க?

//உலகலாவிய கற்றவர்களுள் அதிகம் ஆராயாப்படும் படைப்புகள் அதிகம்(தமிழை விடவும்) கொண்டது சமஸ்கிருதம்.  
"தமிழை விடவும்". 
எந்த அடிப்படையில்? உன் ஒப்பீட்டுத் தரவு என்ன? கற்பனைகள், ஆசைகள் எல்லாம் செல்லாது. சமற்கிருதத்தின் மீது நடக்கும் ஆராய்ச்சிகள் எல்லாம் மொகஞ்சதாரோ, கீழடி, டைனோசர் எலும்புகள் போன்றவற்றின் மீது நடக்கும் புதைபொருள் ஆராய்ச்சி போலத்தான். சிலப்பதிகாரம் முதல் இன்றைய காவல் கோட்டம் வரை குண்டு குண்டு புத்தகங்களாக எழுதிப் படிக்கிறோமே, அந்த "சமற்கிருதம் கற்றவர்களை" இப்போ அப்படி ஒன்னு எழுதச் சொல்லேன் பார்ப்போம். எழுதவும் ஆளில்லை; படிக்கவும் ஆளில்லை. என்றோ இருந்ததை தோண்டித் துருவி செய்யும் ஆராய்ச்சி புதைபொருள் ஆய்வு போலத்தான்.

//நாம் பிறந்த நாட்டில் தோன்றிய மொழி எனும் பெருமை எனக்குண்டு.
இதுல உனக்கு என்ன பெருமை? 47ல் Radcliffe கோடு போடுகையில் கொஞ்சம் இந்தப் பக்கம் வலிச்சு போட்டிருந்தார்னா இன்றைய "நாம் பிறந்த நாட்டின்" சில பகுதிகள் "டுஷ்மன் டேஷ்" ஆகி இருக்கும். அந்தப்பக்கம் வளைச்சு இழுத்து இருந்தார்ன்னா, லாகூர் "மேரா பாரத் மகான்" பகுதி ஆகி இருக்கும். அவுரங்கசீப் காலத்தில் இன்றைய சில ஈரானியப் பகுதிகள் வரை ஆக்ரா/தில்லி ஆட்சியின் கீழ்தான் இருந்தது. அரபி, பெர்சியன், உருது மொழிகளுக்கும் நீ பெருமைப் பட வேண்டி இருக்கும். அதனால, "நான் பிறந்த நாட்டில் தோன்றிய மொழி" ன்னு ஓவர் செண்டிமெண்ட் ஆகாதே. யாதும் ஊரே, எல்லா மொழிகளும் மனித சாதனைகளே என்று இரு. எல்லைக் கோடுகள் எல்லாம் நாமாக கற்பனையாக போட்டுக் கொண்டவை.
உனக்கு சமற்கிருதம் எழுதவோ படிக்கவோ பேசவோ தெரியாது. உனக்கு மத/கடவுள் நம்பிக்கை இல்லை என்றும்  சொல்கிறாய். ஆக, மதச் சடங்கு மொழியான சமற்கிருதத்துடன் உனக்கு எந்த விதத்திலும் தொடர்போ அம்மொழியால்  உனக்கு பயனோ இல்லை. தொடர்பில்லாத ஒன்றில் நீ பெருமைப் பட என்ன இருக்கிறது? நீ பெருமைப் பட வேண்டியது தமிழில் பேசி, எழுதி, சண்டை போட்டு தமிழின் நீட்சிக்கு பங்களிப்பதற்கு. "நாம் பிறந்த" என்ற பெருமை இங்கே சரி, உண்மை.
மற்றபடி, யாதும் ஊரே, யாரவரும் கேளிர்; வழக்கொழிந்த மொழிகள் உட்பட எல்லா மொழிகளும் மனிதர்கள் கூட்டாக அடைந்த உன்னதங்களே என்று பெருந்தன்மையாக இருப்பதே சரி.

மனசிலாயோ.

* இனி அடிச்சு கேட்டாக் கூட இத்தலைப்பில் பதில் பேசமாட்டேன்னு ஒருத்தருக்கு சூடம் அடிச்சு உறுதி கொடுக்காத குறையாகச் சொன்னேன். அவர் சிரிப்பது கேட்குது.



1 comment:

  1. கார்த்தி

    கற்பது கடைபிடிக்க, ராக்கட் விட என்று யார் சொன்னா, மத சடங்கு என்றாலும் எதற்காக கற்றார்களே அதை அவர்கள் செய்கிறார்கள்.

    திராவிடம் எனும் வார்த்தை இருந்ததற்காக தேர்வு செய்த பாடலில், பத்தி பத்தியாக நீக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வரி வரியாகவும் நீக்கியிருக்கலாம்.

    (அந்த பாடலை எழுதிய பிள்ளை, மடங்கள் வைத்து தமிழ் வளர்த்த சைவ மரபை சார்ந்தவர், மடங்கள் சைவ மதத்தை தமிழ் கொண்டு மட்டும் போற்றும் நோக்கம் உடையவை, அவர் ஆரியத்தை புகழ வாய்ப்பே இல்லை, இருந்தும் சைவ கடவுளை முன்னிருத்தாமல் பரம்பொருள் என்றது சிறப்பே).

    //மொகஞ்சதாரோ, கீழடி, டைனோசர்//
    ராமாயணம், மகாபாரதம் முதல் பல இலக்கியங்கள் சமஸ்கிருதத்தில் உண்டு! காளிதாசன் உட்பட படிக்க பல உண்டு!!
    காமாலைக்கண்களுக்கு காண்டதெல்லாம் மஞ்சள்

    உலகலாவி என்பதற்கு தமிழ்நாட்டையும் தாண்டி என்று பொருள், அதன் அடிப்படையில் தேடிப்பார், மற்ற மாநிலங்களில்/நாடுகளில் உள்ள கல்வி கூடத்தில் சமஸ்கிருதம் போற்றப்படுவது புலனாகும்.

    தொடர்பில்லாத ஒன்றில் நீ பெருமைப் பட என்ன இருக்கிறது?
    தொடர்புடைய/என்னுடய எண்ணத்தில் இருந்திருந்தால், நான் அறிவியலா, கணிதமோ, கணிப்பொரியோ கற்றிருக்க முடியாது! திருக்குறள்/சிலப்பதிகரம் மட்டும் படித்து தாம்பரத்தில் கடை நடத்தியிருப்பேன். நான் கற்பதை நினைத்து பெருமைப்பட்டேன்!

    மத சடங்கு மொழி என்பது உனக்கு அதில் உள்ள மற்ற இலக்கியங்கள் தெரியாததால். பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடாது.

    இன்று உன் மொழியில் பதிவு செய்யும் ஒரு ஆக்கம், நாளை வேறு மொழியில் மற்றவர்களை அடையும், அந்த மனித தொடர் சங்கிலியில் எதையும் நீக்குவதிலோ குறைகூறுவதிலோ எனக்கு உடப்பாடில்லை.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!