Tuesday, October 27, 2015

என்ன தான்.... என்னுதே என்னுது தான்

1. என்ன தான் பணக்காரனா இருந்தாலும்        கையில் அடி பட்டா டாக்டர் கிட்டே கைநீட்டி தான் ஆகவேண்டும்

2. என்ன தான் பெரிய வீரம் மிக்க ராஜாவா இருந்தாலும் முதுகு வலி வந்தால் வைத்தியரிடம் புறமுதுகு காட்டித்தான் ஆகவேண்டும்

3. என்ன தான் பெரிய பல் டாக்டரா இருந்தாலும் தன் சொத்தைப்பல் புடுங்க இன்னொரு பல் டாக்டரிடம் பல்லைக்காட்டித்தான் ஆகவேண்டும்

4. என்ன தான் பெரிய காமெடியனா இருந்தாலும் பேசினா நாலு பேர் நாலு விதமா சிரிக்கத்தான் செய்வாங்க

5. என்ன தான் பச்சை தண்ணி குடிக்காவிட்டாலும் சில பேர் பச்சை பச்சையாக பேசுவதும் உண்டு

6. என்ன தான் பெரிய Dr. டெய்லர் னு பேர் வெச்சிருந்தாலும் சில சமயம் போட்ட தையலை பிரித்துத்தான் ஆகவேண்டும்

7. என்ன தான் சிங்கம் னு பேரு வெச்சிருந்தாலும் அப்பா பேரு அரிமா என்று இருந்தால் அசிங்கம் ஆகிவிடும்

8. என்ன தான் மாதமாயிருந்தாலும் ஆடு எப்போதும் "மே" என்று தான் சொல்லும்

9. என்ன தான் சட்ட சபையில் ஸ்பீக்கரா இருந்தாலும் விரதம் இருந்தா மௌனமாகத்தான் இருக்க வேண்டும்

10. என்ன தான் படேல் னு பேர் இருந்தாலும் படேல் னு அடிச்சா வலிக்கத்தான் செய்யும்

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!