Saturday, September 22, 2012

கை வந்த கலை

சில ஆண்டுகளுக்கு முன் மதுரை நகரத்துக்குப் போயிருந்தேன். எந்த நகரத்துக்குப் போனாலும் அந்த நகரத்தில் உள்ள பழைய புத்தகக் கடைகளுக்குச் செல்வது என் வழக்கம். குறிப்பாக மதுரை நகரத்தில் பழைய நாடக நூல்களும் சங்கரதாஸ் சுவாமிகளுடைய நாடகங்களும் நிறையவே கிடைக்கும்.அந்த வகையான புத்தகங்களைத் தேடிச் சென்ற எனக்கு இந்த முறை சற்று ஏமாற்றம்தான் மிஞ்சியது.
ஆனால் எதிர்பாராவிதமாக வேறு ஒரு நூல் கிடைத்தது. அது சைவ சித்தாந்தம்
பற்றிய ஒரு சிறிய புத்தகம். ஏற்கனேவே என்னிடம் சைவ சித்தாந்தம் பற்றிய புத்தகங்கள் இருந்த போதிலும் நான் அந்த புத்தகத்தை வாங்கினேன். அதை
நான் வாங்கியதற்குக் காரணம் சைவ சித்தாந்தம் பற்றிய அந்த புத்தகத்தை
எழுதியவர் ஒரு கிறிஸ்தவர். ஒரு கிறிஸ்தவர் சைவ சித்தாந்தம் பற்றி என்ன
எழுதியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்தான் வாங்கினேன்

தங்கி இருந்த அறைக்குத் திரும்பி வந்து புத்தகத்தை படிக்கத் தொடங்கியதும் வேறு சில உண்மைகளையும் தெரிந்து கொண்டேன். கிறிஸ்தவப் பாதிரியார்களுக்கு சமயப் பிரச்சாரம் செய்ய பயிற்சி கொடுக்கும் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு இந்திய சமயங்கள் பற்றி தெளிவு கொடுப்பதற்காக அந்த புத்தகம் எழுதப்பட்டது என்ற செய்தியை தெரிந்து கொண்டேன். இந்த
வகையில் வைணவம் பற்றியும், மற்ற இந்திய சமயங்கள் பற்றியும் பல புத்தகங்களை அவர்கள் எழுதிவெளியிட்டிருக்கிறார்கள் என்ற செய்தியையும் அறிந்தேன். இந்த புத்தகங்கள் கிறிஸ்தவ மிஷினரிகள் நடத்தும் பாதிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில்உள்ள மற்ற சமய நிறுவனங்கள் வைணவமோ, சைவமோ, அல்லது பிற சமயத்தார்களோ இத்தகைய பயிற்சியை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பதாக நான் கேள்விப் பட்டதில்லை. பொதுவாக எல்லா சமய நிறுவனங்களும் மற்ற சமய நூல்களைப் படிக்கக் கூடாது என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். சமண சமயத்தவர் எழுதிய நீதி நூல்களைக் கூட படிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சைவ சமயத் தலைவர்கள் கூறியிருப்பது பலருக்கும் தெரியும். வைணவர்களும் அப்படியே என்பதை சொல்ல வேண்டியதில்லை.

இந்த வகையில் கிறிஸ்தவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள்என்று நினைத்தேன்.  16,17ம் நூற்றாண்டுகளில் பல ஐரோப்பிய நாட்டினர் இந்தியாவுக்கு வாணிபம்  செய்ய வந்த பிறகும்,குறிப்பாக, பிரிட்டிஷ் ஆட்சி இந்திய நாட்டில் வேரூன்றிய பிறகும் பல மேல்நாட்டு அறிஞர்கள் இந்திய சமய நூல்களை படிக்கத் தொடங்கினார்கள். இந்திய சமயங்களின்
அடிப்படைத் தத்துவங்களையும் இந்திய சமூக அமைப்பையும் தெளிவாகப் புரிந்து கொள்வதிலும் அதிக அக்கறை காட்டினார்கள். ஆனால் அனைவரும் ஒரே நோக்கத்தோடு படித்தார்கள் என்று சொல்வதற்கில்லை.

இந்திய சமயங்களின், குறிப்பாக இந்து சமயத்தின், பலவீனங்களை
கண்டறியும் நோக்கத்தோடும் இந்து சமயத்தில் நம்பிக்கை கொண்டுள்ள மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளும் நோக்கத்தோடும் அவர்கள் இந்திய சமயநூல்களைப் படிக்கத் தொடங்கினார்கள் என்பதுதான் உண்மை.

சைவ, வைணவ, அத்வைத சமயங்களின் அடிப்படைத் தத்துவங்களை அறிந்தால்தான் இந்தியர்களை புரிந்து கொள்ள முடியும். அந்த நோக்கத்தோடு பாதிரியார்களுக்கு இந்திய சமயங்கள் பற்றி பாடம் நடத்தப்பட்டது.

சாதாரண மக்களுக்கு அவர்களுடைய பழக்கவழக்கங்களிலிருந்து உதாரணங்களையும் எடுத்துக் காட்டுகளையும் கூறினால்தான் எளிதில் விளங்கிக் கொள்வார்கள். இந்த சாதாரண உண்மையை கிறிஸ்தவ மிஷினரியைச் சேர்ந்தவர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். பல நூற்றாண்டுகளாக மற்ற மதத்தினரை தன் மதத்துக்கு மாற்றுவதில் தனிக் கவனம் செலுத்திய அவர்களுக்கு இது கை வந்த கலையாக இருந்தது. தமிழ்நாட்டில் மதப் பிரச்சாரம் செய்து தமிழுக்கும்தொண்டு செய்த வீரமாமுனிவர் பிராமணர் போல் உடை அணிந்து பூணுலுடனும் காவி உடையுடனும் வாழ்ந்தார். காலில் கட்டையால்  ஆன காலணி அணிந்துதான் நடந்தார் என்பது நன்கறிந்த செய்தியாகும்.

தங்கள் மதத்தை பரப்ப அவர்கள் இந்திய சமயங்களை மிக மோசமாக கொச்சைப் படுத்தினார்கள். தப்பித் தவறி அவர்களுடைய பார்வையில் நல்லதாகப் பட்ட அம்சங்களை இந்துக்கள் கிறிஸ்தவ சமயத்திலிருந்து கடன் வாங்கியதாகவும், காப்பி அடிக்கப் பட்டதாகவும் கூறிப் பிரச்சாரம் செய்தார்கள்.

உதாரணத்துக்கு ஒரு செய்தி.

ஹோரஸ் ஹேமாஸ் வில்சன் என்ற ஆங்கிலேயர் 1840ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பேசிய பேச்சிலிருந்து ஒரு பகுதி.

இந்திய சமயங்களில் காணப்படும் குற்றம், குறைகளை மெய்ப்பித்துக் காட்டி இந்திய மக்களை கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றும்படி தூண்டும் பொருட்டு இந்திய சமயங்கள் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வது மிக முக்கியமான கடமையாகும். இருளில் மூழ்கிக் கிடக்கும், அதே நேரத்தில் மதிநுட்பம் மிக்க இந்தியர்களை அவர்களுடைய சமயப் பொய்மைகளிலிருந்து காப்பாற்றி கிறிஸ்தவ சமய உண்மைகளை உணரச் செய்ய வேண்டும்.

இது அவருடைய உரையின் ஒரு சிறிய பகுதி மட்டும்தான். பலகலைக் கழக உரையே இந்த தரத்தில் இருந்தால் இந்தியாவில் பாமர மக்களிடையில் பிரச்சார மேடையில் எப்படி பேசியிருப்பார்கள் என்று அனுமானம் செய்து கொள்ளலாம். இவர்தான் விஷ்ணு புராணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பல புராணங்களை ஆராய்ச்சி செய்து பல (கிறிஸ்தவ மதப் பிரச்சார ) கட்டுரைகளை எழுதினார்.

இவருடைய ஆலோசனையை ஏற்றுக் கொண்டு கல்கத்தா பல்கலைக் கழகம் இந்திய சமயங்களின் அடிப்படைகள் பற்றிய ஆராய்ச்சிக்காக ஒரு துறையை ஏற்படுத்தியது.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல ஐரோப்பிய நாட்டு அறிஞர்கள் இந்திய சமயங்கள் பற்றி ஆரரய்ச்சி கட்டுரை எழுதி வெளியிட்டார்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவோடு பல பாதிரியார்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் பல மதப் பிரச்சாரக் கட்டுரைகளை வெளியிட்டனர். கிருஷ்ண பகவான் மற்றும் கிருஷ்ண னுடைய பிறந்த நாள் பண்டிகை(கோகுலாஷ்டமி ) பற்றி ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதிய வெபர்  என்பவர் வைணவ சமயத்தில் உள்ள பக்தி மார்க்கம் பற்றிய கொள்கைகள் பெரும்பாலும் கிறிஸ்தவ சமயத்திலிருந்து கடன் வாங்கப்பட்டவை என்று எழுதினார்.

(An investigation into the origin of kirishna janmaashtami)

இந்த முறையில் எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் உலகத்தில் எந்த மூலையில் ஏதாவது நல்ல அம்சம் இருந்தால் அது ஐரோப்பிய நாகரீகத்தின் பங்களிப்பு என்றும், கிறிஸ்தவ சமயமே மனித குலத்தை நாகரீகப் படுத்த தோன்றிய முதல் மதம் என்றும் கூசாமல் எழுதினார்கள். உலகம் முழுவதும் உள்ள மக்களின் ஆன்மீகத் தேவையை பூர்த்தி செய்ய வல்லது கிறிஸ்தவ சமயம் மட்டுமே என்று பிரச்சாரம் செய்தார்கள்.

மாக்ஸ் முல்லர் என்ற மேல்நாட்டவரும் இதற்கு விலக்கல்ல. லண்டனில் உள்ள இந்திய செயலாளருக்குஎழுதிய கடிதத்தில் அவர் கீழ்க் கண்டவாறு குறிப்பிட்டார். இந்து சமயம் கூடிய சீக்கிரம் அழியப் போகிறது. அந்த காலிஇடத்தை இட்டு நிரப்பும் கடமையை மேல்நாட்டு கிறிஸ்தவ சமயம்தான் செய்தாக வேண்டும். இதற்கான எல்லா உதவியையும் அரசாங்கம்
செய்ய வேண்டும்.

இவர்தான் கீழ்த் திசை நாடுகளின் புனித நூல்கள் என்ற தொகுப்பை தயாரித்தார். அந்த நூல்களுக்கு எழுதிய முன்னுரையில் இவருடைய நோக்கத்தையும் சமயச் சார்பையும் தெளிவாகப் புரிந்து
கொள்ளலாம். ஆராய்ச்சி கட்டுரை என்ற பெயரில் இத்தகையவர்கள் எழுதிய
எல்லாவற்றிலும் மேல் நாட்டவர்கள் மட்டுமே உலகத்தை ஆளப் பிறந்தவர்கள் என்ற மமதை காணக் கிடக்கிறது.

நாகரீக வளர்ச்சியில் பின்தங்கிக் கிடந்த ஆப்பிரிக்க நாடுகளைப் போல்
அல்லாமல் இந்தியாவில் அவர்கள் முழுமையான நாகரீகம் உள்ள சமுதாயத்தை கண்டார்கள்.இங்கே அவர்களுடைய கடையை விரித்து ஆன்மீக வியாபாரம் செய்ய இந்து சமய நிறுவனங்களும், கல்வியில் சிறந்த ஒரு சில மேன்மக்களும் தடையாக இருந்ததை அறிந்தனர். அந்த தடைகளை உடைத்தெறிய அவர்கள் செய்த முயற்சியாக பல  ஆராய்ச்சி( ?) கட்டுரைகள் அமைந்தன.

எல்லா மேல்நாட்டு அறிஞர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்று
கூறமுடியாது. சிலர் ஒவ்வொரு சமூக வளர்ச்சியிலும் பல்வேறு சமயங்கள் எப்படி தொழிற்பட்டிருக்கிறது என்பதை கண்டறியும் ஆர்வத்தில் ஆராய்ச்சி
மேற்கொண்டனர்.

இந்த வகையில் ஆராய்ச்சி என்ற பெயரில் நடைபெற்ற கிறிஸ்தவ மதப் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல இந்திய நாட்டு அறிஞர்கள் மறுப்புக் கட்டுரைகள் எழுதினார்கள். ஆர் ஜி.பண்டார்கர் என்ற அறிஞர் இவர்களில் மிக முக்கியமானவர். இந்து சமயம் தன் பலவீனங்களை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியர்களுக்கு அறிவுரை கூறினார். மற்ற சமயங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து நம்இந்திய சமயங்களின் நிறை, குறைகளை கண்டறிய வேண்டும் என்றார் அவர். பிரஜெந்திரநாத் என்ற அறிஞர் ரோம் நகரத்தில் ஒரு கருத்தரங்கத்தில் பேசும்போது கிறிஸ்தவ சமயத்தோடு ஒப்பிடும்போது,கீழை நாட்டு சமயங்கள் மிகச் சாதாரணமானவை என்ற மேல்நாட்டு அறிஞர்கள் கருதுவது பற்றி கடுமையாக விமர்சித்தார். 20. மநூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு வழி காட்டக் கூடிய விலை மதிப்பற்ற அம்சங்கள் இந்திய சமயங்களில் உண்டு என்று கூறி பதிலடி கொடுத்தார்.


அச்சுத் தொழில் ஓரளவு வளர்ந்த பிறகும் இந்தியாவில் கிறிஸ்தவ மிஷினரிகள் மட்டுமே அச்சகங்களை வைத்துக் கொள்ள உரிமை பெற்றிருந்தார்கள். உள்நாட்டவர்கள் அச்சு யந்திரங்கள் வாங்க அனுமதி மறுக்கப்பட்டது. வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட யந்திரங்கள் விலை மிகுந்திருந்தது. இந்தியர்கள் அச்சகங்களை இயக்க பெரும் தொகையை காப்புத் தொகையாக அரசாங்கத்துக்கு கட்ட வேண்டிதாயிற்று.


பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான பிரசுரங்கள் அச்சடிக்கப் படுவதை
தவிர்க்கவே இத்தகைய கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்தது. இந்த வகையான கட்டுப்பாடுகள் இல்லாத கிறிஸ்தவ மிஷினரிகள் நிறைய பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தன. 19 ம நூற்றாண்டின் கடைசி 20 ஆண்டுகளில் (1880 to 1900 ) வெளியாகிக் கொண்டிருந்த பிரசுரங்களில் 70 சதவிகிதத்துக்கு மேற்பட்டவை கிறிஸ்தவ சமயப் பிரச்சார ஏடுகள்தான் என்ற உண்மை இன்று நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும்.

இந்த மாற்றங்கள் காரணமாக இந்திய சமயங்களை மேலை நாட்டு சமயங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் முறையும் வளரத் தொடங்கியது. அதன் விளைவாகத்தான் பிரம்மசமாஜம் போன்ற சீர்திருத்த இயக்கங்கள் வளர்ந்தன. சாதி என்ற அமைப்பு இந்து சமயத்தை பலவீனப் படுத்தி சமூக ஒற்றுமையை சிதைக்கிறது என்ற செய்தி மக்களிடம் பரவியது. அரசாங்க ஆதரவோடு கிறிஸ்தவ மிஷினரிகள் தொடங்கிய சமயப் பிரச்சாரமும்,இந்து சமய எதிர்ப்பு பிரச்சாரமும் இந்திய மக்களிடம் முதன் முறையாக ஒரு நெருடலை ஏற்படுத்தியது.

பல ஆயிரம் ஆண்டுகளாக நிலைபெற்று இறுகிப் போன சாதி அமைப்பில் இந்த காலகட்டத்தில்தான் ஒரு கீறல் விழத் தொடங்கியது. ஆனால் உடனடியாக எந்த விளைவையும் ஏற்படுத்தி விடக்கூடிய அளவில் அது வளரவில்லை.

பிற்காலத்தில் இந்து சமயத்தவர்களும் பொறுப்புள்ள பொதுவாழ்வு பிரமுகர்களும் அது பற்றி கவனமாக சிந்திக்கத் தொடங்கினார்கள். கிறிஸ்தவ மிஷினரிகள் இந்து மதத்தின் மீது தொடுத்த பிரதானமான தாக்குதல் இந்த சாதி வேறுபாடு மீதுதான். ஆனால் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய மக்கள் மத்தியிலும் சாதி அமைப்பும் அதன் அடிப்படையிலான வேறுபாடும் இன்றும் தொடர்கிறது என்பதுதான் உண்மை

படிப்படியாக இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் சகல மக்களிடமும் கல்வி வளர்ச்சி பற்றிய நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.

பர்மா,சிலோன் (இன்றைய மியான்மர், ஸ்ரீலங்கா ) போன்ற மற்ற காலனி நாடுகளிலும் பௌத்த சமயத்தவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த கிறிஸ்தவப் பாதிரியார்கள் புத்தருடைய வாழ்க்கை வரலாற்றையும் பௌத்த மதக் கொள்கைகளையும் திரித்தும்,மலினப் படுத்தியும் பல நூல்களை வெளியிட்டனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் இனக்குழுக்களின் சச்சரவைப் பயன்படுத்தி கிறிஸ்தவ மதத்தை வளர்த்து அந்த மக்களை அடிமைப் படுத்திய வரலாறு மிகக் கொடுமையானது. ரத்தக் கறை படிந்த அந்த வரலாறு பற்றி எழுதிய ஒரு ஆப்பிரிக்க எழுத்தாளருடைய வாசகத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். மதப் பிரச்சாரத்தின் சுயரூபத்தை அனைவரும் புரிந்து கொள்ளும்படி தோல் உரித்துக் காட்டும் அந்த வாசகம் இதுதான்.

அவர்கள் வந்தபோது எங்கள் கையில் நிலம் இருந்தது,
அவர்கள் கையில் பைபிள் இருந்தது.
இப்பொழுது எங்கள் கையில் பைபிள் இருக்கிறது.
அவர்கள் கையில் நிலம் இருக்கிறது.
- மு.கோபாலகிருஷ்ணன்



Wednesday, September 19, 2012

வள்ளலாரும் பாரதியும் நாமும்


நமக்கு எப்பவுமே ஒரு இலக்கு இருந்து கொண்டே இருக்கும்.  நாம் வைத்துக் கொள்கிறோமோ இல்லையோ, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நிச்சயம் நமக்கு ஒரு இல'க்கு' வைத்து விடும்.  இதற்கு சிலபல உதாரணங்கள் இன்றைய நடைமுறை வாழ்வில் நாம் காணலாம்.

ஒரு பள்ளி சிறந்த பள்ளி என்று பெயரெடுத்துவிட்டால் போதும், அவர் பையனை அங்கு விட்டார் என்று, இவரும் விடுவார்.  இவர் ஏழையாக இருந்தாலும், சமூக உந்துதல் இவரை விடாது.  இதே போல சைக்கிளுக்கே வழியில்லாதவராக இருந்தாலும், அவர் வைத்திருக்கிறார் என இவர் கார் வாங்குவார்.  இப்படித் தொடங்கிய பயணம் ஒரு முடிவுக்கே வராது, அது வேண்டும், இது வேண்டும் என்று தவிதவிக்கும்.

பாரதியாரும் அவர் பங்கிற்கு எழுதிய பாடல் எத்துனை சான்று.

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்
காவலுற வேணும், – என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

அவர் வேண்டியவற்றை, நாம் அப்படியே பின்பற்றி, காணி நிலம் என்ன, கண் காணும் இடமெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டு(ம்) இருக்கிறோம்.  பாரதியார் கேட்டவை ஒரு சிறு காணி நிலமும், அதனைச் சுற்றி அழகிய சுற்றுப் புறமும், ஒரு மாளிகையும், அன்பு மனைவியும், கத்தும் குயிலோசையும்.  படிக்கக் கேட்க பாடல் அற்புதம்.  அதில் சிறு மாற்றுக் கருத்தும் இல்லை.  ஆனால், இந்த நிலையில் நில்லாது, அடுத்து அடுத்து எனத் தாவி இன்று எந்த நிலையில் நாம் இருக்கிறோம் என்பது எவருக்குமே தெரியும்.

இத்தனையும் வேண்டும் என்றாலும், ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே உதவாது என்பதை நாம் உணரவேண்டும்.  உணர்ந்தால், நமது இலக்கை நமக்கு அடுத்தவர் எப்படி அமைக்க முடியும்?!  வேடிக்கை என்னவென்றால், இந்தக் காலத் தலைமுறையினர், பொய் சொல்வது குற்றம் என்றோ, பெரியவர்களை அவமதிப்பதைத் தவறு என்றோ உணர்ந்தார்களில்லை.  எல்லா 'வேண்டும்'களுக்கும் பின்னே, பெற்றோர் அலைவதால் ஏற்பட்ட கொடுமை தானோ இது ?!!!

அன்றைய காலகட்டத்தில், பலரும் தத்தமது 'வேண்டும்'களைப் பாடல்களில் தெரிவித்து இருக்கலாம்.  அப்படி, வள்ளலாரின் 'வேண்டும்'கள் சமீபத்தில் கேட்ட பொழுது உடல் சற்றே சிலிர்க்கத் தான் செய்தது.  மேற்கண்ட 'வேண்டும்'களில் இருந்து மிகவே மாறுபட்டு, நல்லறிவும், நல்உறவும், நற்சிந்தனையும் வேண்டும் என்கிறார்.

  ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
   உத்தமர் தம் உறவு வேண்டும்
  உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
   உறவு கலவாமை வேண்டும்
  பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
   பொய்மை பேசாது இருக்க வேண்டும்
  பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
   மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
  மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
   உனை மறவாதிருக்க வேண்டும்
  மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்
   நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
  தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
   தலமோங்கு கந்த வேளே
  தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி
   சண்முகத் தெய்வமணியே! சண்முகத் தெய்வமணியே!

காணி நிலம் நம் மனதை ஆக்கிரமித்தது போல வள்ளலாரின் மேற்கண்ட பாடல் எத்தனை பேருக்குப் பரிச்சயம் ?!!!!

Tuesday, August 28, 2012

செய்திகள் வாசிப்பது - முரளி - 3

ஆரத்தியின் திருமணம் - பகுதி 2.

"என்னப்பு, டக்கு டக்குன்னு ரெண்டு-மூனுன்னு பதிவைப் போட்டு வாங்கரே, என்ன சமாசாரம்"ன்னு நீங்க கேக்க நெனைக்கரது எனக்கு தெரியும்.  அப்படி ஒரு நெனைப்பே இல்லைன்னாலும், இருக்கரமாதிரி  நடிக்கவாவது செய்ங்கப்பா.

நீங்க நெனைச்சாமாதிரியும் அதுக்கு நான் பதில் சொன்னா மாதிரியும் இந்த பதிவுன்னு வெச்சுக்கங்க.

என்னோட சில அன்பு நண்பர்கள் ஃபோன் பண்ணி, "யோவ், நாங்க ஆரத்தி கல்யாணத்துல டான்ஸ் ஆடினோம்னு பொத்தாம் பொதுவா சொன்னியே, அதுக்கு முன்னாடி நாங்க எவ்வளவு பொறுமையா சாப்பாட்டை வெளுத்து வாங்கினோம்னு சரியா சொன்னியா? அதுல என்ன என்ன வெரைட்டின்னு சொன்னியா? அது முடிஞ்சதும், ஸ்நாக்ஸை ஒரு கட்டு கட்டினோமே அதை பத்தி எழுதினியா இல்லை? அதுல என்ன ஐட்டம் இருந்ததுன்னு எழுதினியா?  அட அதெல்லாம் போகட்டும், இதை எல்லாம் பார்த்து பார்த்து ஏற்பாடு பண்ணின  ஷீலாவைப் பத்தி எழுதாம உன் ஃப்ரெண்ட் கார்த்தியைப் பத்தி மட்டும் எழுதினியே, என்ன பொட்டி கிட்டி வாங்கினியா?   கார்த்தியோட ஸ்பீச்சைப்  பத்தி எழுதினியா? அவர் பையன் அர்ஜுன் பேசி வெளுத்து வாங்கினானே அதைப் பத்தி எழுதினியா" ன்னு கேட்டு, வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்ஸன் துரையை கேள்வி கேட்டா மாதிரி கேட்டுட்டானுவ.

இதுல இவங்க சொல்லாத ஒன்னு மாலை மாத்தும்  விளையாட்டையும் விடாத நடத்தினதை நான் சொல்லாததை யாரும் கண்டுபிடிச்சி திட்டலை.  நீங்களும் சொல்லாதீங்க.  அப்புறம் அதுக்கும் சண்டை பிடிக்கப் போறாங்க.

ஒரே ஒரு நண்பர், "ஏம்பா இவ்வளவு எழுதினியே, சாயங்காலம், வெஸ்டர்ன் ஸ்டைல்ல நடந்த கல்யாணத்தைப் பத்தி ஒன்னும் சொல்லலியே அதப் பத்தியும் சொல்லிடு.  ஏன்னா நீ நல்லா அனுபவிச்சு ரசிச்சு இந்தக் கல்யாணத்தைப் பார்த்துட்டு இருந்தே" அவர் இப்படி சொல்லவும், எனக்கு என்னவோ, என்னோட கதைக்கு ஒரு 'சாகித்ய அகாடமி' அவார்ட் கொடுத்தா மாதிரி இருந்தது, அதுவும் ஒரு ரெண்டு செகண்டு தான், உடனே அவர், "நாங்க எல்லாம், வெள்ளிக்கிழமை காலைல இருந்து சனிக்கிழமை சாயங்காலம் ஒரு 7-7:30 மணி வரைக்கும் கல்யாணத்துல அவ்வளவு வேலை பார்த்திட்டிருந்தோம், கல்யாணத்தை சரியா பாக்க முடியலை.   நீதான், ஒரு வேலையும்  செய்யாம பெரிய எழுத்தாளன் கணக்கா வேஷ்டி ஜிப்பா மூக்குக் கண்ணாடியோட போஸ் கொடுத்திட்டு இருந்தே, அதனால கண்டிப்பா கல்யாணத்தை நல்லா வேடிக்கை பார்த்திருப்பே, நீ ப்ளாகுல எழுதினா அதை படிச்சுக்கரோம்"ன் சொல்லி என் சாகித்ய அகாடமி கனவுல கத்தியை சொருகிட்டார்.

எல்லாரும் (யார் அந்த எல்லாரும் னு எல்லாரும் எல்லார் கிட்டயும் கேக்கரமாதிரி யாரும் யார் கிட்டயும் இனிமே கேக்காதீங்க.  உஸ் அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே!)  கேட்ட எல்லா கேள்விகளுக்கு பதில் சொன்னா விடிஞ்சுடும்.

கார்த்திக்கு க்ரியேடிவிட்டி அதிகம்னா, அதை தூண்டிவிட்டு அதை அணையாம பார்த்துக்கரது ஷீலான்னு யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  அதுலயும் இந்தக் கல்யாணத்துல அவங்க எப்படி டென்ஷனே ஆகாம சிரிச்சுகிட்டே எல்லா வேலையையும் செஞ்சாங்கன்னு யோசிச்சா ஆச்சர்யமா இருந்தது.  ஒரு சின்ன சமாச்சாரம் சொல்லிட்டு அடுத்த விஷயத்துக்கு போயிரலாம்னு இருக்கேன்.  கமல் நடிச்ச மூன்றாம் பிறை படத்துக்கு அவருக்கு 'பாரத்' - இந்தியாவுல அந்த வருடத்துல வந்த படங்கள்ல நல்லா நடிச்ச ஹீரோவுக்கு கொடுக்கர பரிசு, கெடச்சதுக்கு படத்தோட டைரக்டர் பாலு மகேந்திராவை பேட்டி காண்றாங்க அப்போ அவர ஒருத்தர் கேட்டார், இந்தப் படத்துல கமல் கடைசி சீன்லதான் கொஞ்சம் ஏதோ நடிச்ச மாதிரி இருந்துது அதுக்கு அவருக்கு 'பாரத்' அவர்டா?  ஶ்ரீதேவி படம் பூரா சூப்பரா மனநிலை சரியில்லாத ஒரு சின்னப் பொண்ணா நடிச்சங்களே அதுக்கு அவங்களுக்கு ஏன் 'ஊர்வசி' அவார்ட் தரலைன்னு.  இதுக்கு பாலு மகேந்திரா சொன்னார், "ஶ்ரீதேவிங்கர காட்டாறு எப்படி வந்துச்சுன்னு நீங்க படத்துல பார்த்தீங்க, அந்தக் காட்டாற்றோட இருக்கர கமல் தனக்கும் நடிக்கத் தெரியுங்கரதுனால நடிச்சிருந்தா அந்தக் கேரக்டர் கெட்டுப் போயிருக்கும், அவர் தன்னால இப்படி அமுக்கமாவும் நடிக்க முடியும்னு நிருபிச்சுட்டு அவர் கடைசி சீன்ல ஶ்ரீதேவியோட நிலைமைக்கு வந்ததும் ஶ்ரீதேவியை தூக்கி சாப்பிடரமாதிரி நடிச்சார் அதனால அவருக்கு பாரத் அவார்ட் கொடுத்தாங்க.  ஶ்ரீதேவிக்கு ஏன் கொடுக்கலைன்னு நீங்க எல்லாம் அந்தக் கமிட்டிக்கு தந்தி அடிங்க"ன்னா ர்.  அந்த ரிப்போர்டருக்கு இருந்த குறை உங்களுக்கெல்லாம் இருக்கக் கூடாதுன்னு, ஶ்ரீதேவி மாதிரி வேலை பார்த்த கார்த்திக்கு அவார்ட் கொடுத்துட்டு, கமல் மாதிரி அநாயசமா எல்லா வேலையையும் பார்த்த ஷீலாவுக்கு அவார்ட் தரலை.  யப்பா எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.  ஒரு கவனக் குறைவுல விட்டுடேன், அதப் பெரிசாக்கி, எங்க வூட்ல வேர சொல்லி அவங்க பங்குக்கு இடிக்க.  யம்மா, இனிமே அடிவாங்க நம்ம ஒடம்புல சக்தியில்லை.  விட்டுடுங்க.

மத்தியானம் நடந்த வெஸ்டர்ன் கல்யாணம் நான் மொத மொதலா பாத்த வெஸ்டர்ன் ஸ்டைல் கல்யாணம்.  இதுக்கு கோ-ஆர்டினேடர்கள் - ராஜி தேவதாசனும், க்ரிஸ்டஃபர் தேவதாசனும்.  இவங்க இந்த நிகழ்ச்சிக்கு பக்காவா ப்ளான் பண்ணியிருந்தாங்க.  இடது பக்கம் இத்தனை சேர்ஸ், வலது பக்கம் இத்தனை சேர்ஸ்ங்கரது வரைக்கு ப்ளான் பண்ணியிருந்தாங்கன்னா பார்த்துக்கங்க.

மொதல்ல அந்த சேர்ஸ்ல உக்காரதுக்கு மைக்கேல் சார்புல அவரோட அம்மா, அப்பா, தாத்தா பாட்டி வந்தாங்க, ஆரத்தி சார்புல ஷீலா, ஷீலாவோட அம்மா, சகோதரி, அர்ஜுன் வந்தாங்க.  அதுக்கு அப்புறம்,  ஆரத்தி சார்புல ஒரே மாதிரி புடைவை கட்டிகிட்டு 5 பெண்கள் வந்தாங்க அதே மாதிரி மைக்கேல் சார்புல ஒரே மாதிரி குர்தா பைஜாமா போட்டுண்டு 5 பசங்க வந்தாங்க.  அப்புறம் எல்லோரும் எழுந்து நிக்க கார்த்தி ஷீலாவை அழைச்சுண்டு வந்தார்.  மேடைக்கு கீழ மைக்கேலும், ப்ரீஸ்டும் இருந்தாங்க, கார்த்தி வந்து ஆரத்தி கையை மைக்கேல் கைல கொடுத்துட்டு நகர்ந்துட்டார்.  அதுக்கப்புறம் ப்ரீஸ்ட் கல்யாணம்ங்கரது எவ்வளவு முக்கியங்கரதைப் பத்தி சொல்லிட்டு பைபிள்ல இருந்து ஒரு சில வாக்கியங்களப் படிச்சுட்டு, ரெண்டு பேரையும் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதமான்னு கேட்டுட்டு, அவங்களை உறுதி மொழி எடுத்துக்க வெச்சுட்டு, மோதிரம் மாத்திக்கச் சொல்லி, கல்யாணம் முடிஞ்சாச்சுன்னு சொன்னார்.  இது ரத்ன சுருக்கமா இருந்தாலும், ஒரு ஒழுங்கு இருக்கரதா எனக்குப் பட்டுது.  இதுக்கு அப்புறம்தான் தாகசாந்தி, ஸ்நாக்ஸ், டான்ஸ் (என்கிற உடான்ஸ்) எல்லாம்.

கடைசியா கேக் கட் பண்ணினதும், கார்த்தி வழக்கம் போல நல்லாத்தான் பேசினார், ஆனா அவர் பேச்சை தூக்கி சாப்டு ஏப்பமே விட்டுட்டான் அர்ஜுன்.  மைக்கேலோட ஃப்ரெண்டு ஒருத்தர் பேச வந்துட்டு, டெல்லி தமிழ்காரங்க "எனக்கு அவ்வளவா பேஷ வராது, மன்னிச்சுக்கோங்கோ"ன்னு மழலைத் தமிழ்ல பேசரமாதிரி, ஆரம்பிச்சுட்டு ஒரு ஸ்டாண்டப் காமெடி தோத்து போர ரேஞ்சுக்கு பேசி அசத்தினார்.

அடுத்தது தமிழ்நாட்டு விஷயம்:

நித்திக்கும் - ஆதீனம் அருணகிரிக்கும் லாடாய்ன்னு சில பத்திரிகைகள்ல போட்டிருக்காங்க.  நிஜமான்னு தெரியலை.  க்ராணைட் குவாரில ஊழல்ன்னு எல்லாரும் தாம் தூம்னு குதிக்கராங்க.  அதுல   பெரிய தலைன்னு ஒருத்தரை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க.  அழகிரி பையன் தலைமறைவா இருக்கானாம்.  என்னய்யா காமெடி பண்றீங்க, எப்படியா இவ்வளவு பேருக்கு தெரிஞ்ச ஒருத்தன் சட்டுன்னு தலைமறைவாக முடியும்.  இதே ரேஞ்சுல போனா, தாத்தாவும்  சக்கர நாற்காலியோட காணலன்னு சொன்னாலும் சொல்வாங்க.  பாராளுமன்றத் தேர்தல் சீக்கிரம் வரலாம்னு ஒரு புரளி இந்தியாவுல ஓடுது, அதுக்கு ஜெவும் தேர்தல் வந்துட சான்ஸ் இருக்குனு கருத்து சொல்லிட்டு ஒரு நால்வர் அணியை ஃபார்ம் பண்ணியிருக்கார்.  அது எதுக்குன்னு தெரியலை, எப்படியும் இவர்தான் முடிவெடுக்கப் போரார், அப்புறம் எதுக்கு நால்வர் அணி?

தமிழ்ப் படம் நான்
விஜய் ஆண்டனி தயாரிச்சு, நடிச்சு, ம்யூசிக் போட்டு இருக்கர படம் நான்.  கதை Talented Mr. Ripley படத்தோட கதையையும் Taking Lives கதையையும் மிக்ஸ் பண்ணி அங்கங்க திகிலை சேர்த்து, சில இடங்கள்ல திரைக் கதைல சொதப்பி எடுத்திருக்காங்க.  சுமாரா ஆக்ட் பண்ணியிருக்கார் விஜய் ஆண்டனி.  பாட்டு சுமார்ன்னு வெப்ல பல இடங்கள்ல சொல்றாங்க எனக்கு அப்படி ஒன்னும் பெரிசா தெரியலை.  போரடிச்சா பாருங்க.

இனிமே அடுத்த வாரம் அலாஸ்கா பயணக் கட்டுரை 2ல பாக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.


Monday, August 27, 2012

செய்திகள் வாசிப்பது - முரளி - 2

அலாஸ்கா பயணம் பத்தி அடுத்த பகுதி எழுதரதுக்கு முன்னாடி கொஞ்சம் லைட்டா சமீபத்துல ரிச்மண்ட்ல நடந்த ஒரு கல்யாணம் அதுக்கப்பரம் சமீபத்துல நான் பார்த்த சில சினிமா பத்தி எழுதிடரேன்.

ஆகஸ்ட் 25ம் தேதி நம்ம தமிழ்சங்கத்து முன்னாள் செயலாளர், எங்க நாடகக் குழு (தமிழ்த்தென்றல் நாடகக் குழு)வின் ஆஸ்தான இயக்குனர், நடிகர், கதாசிரியர், ஓவியர், யோகா மாஸ்டர், பல மொழி வித்தகர், பண்முகக் கலைஞர், திரு கார்த்திகேயனின் மகள் ஆரத்திக்கும், மைக்கேல் சலாட்டிக்கும் நடந்த கல்யாணத்துக்கு போய் நல்லா மூக்கு பிடிக்க சாப்பிட்டுட்டு ஒரு வேலையும் செய்யாம,  செஞ்சாமாதிரி ஆஸ்கார் அவார்ட் ரேஞ்சுல நடிச்சுட்டு வரும்போது சாத்துக்குடி பையும் வாங்கிண்டு வந்தேன்.

சாவியின் வாஷிங்டனில் திருமணம் எத்தனைப் பேர் படிச்சீங்களோ தெரியாது, அதை நேர்ல பார்த்தேன்னுதான் சொல்லனும்.  கார்த்தால நம்ம ஊர் மாதிரி கல்யாணம், மத்தியானம் அமெரிக்க ஸ்டைல்ல கல்யாணம்னு கலக்கிட்டாங்க.  மொதல்ல காசியாத்திரைல ஆரம்பிச்சு, ஊஞ்சல், பாலிகை தெளிக்கரது, கூரப்புடைவை தரது, கன்யாதானம்னு நம்மூர் கல்யாணத்தை சூப்பரா நடத்தினார்  நம்ம கண்ணன் சாஸ்திரிகள்.  கடைசியா மைத்துனன் அர்ஜுன் பொரி தர அதை ஆரத்தியும்,   மைக்கேலும்  யாக குண்டதுல இட்டுட்டு எல்லோருக்கும் சாஷ்டாங்கமா கீழ விழுந்து நமஸ்காரமும் பண்ணினாங்க.

கல்யாணம் ஃபங்ஷன்ல,  என்ன ஒரு பர்ஃபெக்ட் ப்ளானிங், என்ன ஒரு டைமிங், என்ன ஒரு அரேஞ்மெண்ட்னு எந்த ஒரு ஏரியாவை பார்த்தாலும் அதை நகாசு பண்ணி அசத்தியிருந்தாங்க.  யார் எந்த வேலை செஞ்சிருந்தாலும் அதுக்கு சூத்ரதாரி, இயக்குனர் எல்லாம் கார்த்திக்னு யாருக்கும் தெரியாத மாதிரி சூப்பரா ஆக்ட் வேற கொடுத்தார்.  நடுவுல ஆரத்தி கூட டான்ஸ் ஆடரேன் பேர்வழின்னு இங்கயும் அங்கயும் நடந்து நடந்தே ஒப்பேத்திட்டார்.

சாயங்காலம் எல்லாரும் தாக சாந்தி பண்ணிட்டு அதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு யோசிச்சு, சாப்பிட்ட லஞ்ச், ஸ்நாக்ஸ் எல்லாம் செறிக்கனும்னு டான்ஸ் வேற ஆடினாங்க.  அதுல நாகு, ஹரி, ரவின்னு பல பேர் குதி குதின்னு குதிச்சாங்க அது மாக்கரீனா டான்ஸுன்னு நாம நம்பிடனும்.  (இன்னும் நிறைய பேர் குதிச்சாங்க, எல்லார் பேரையும் சொன்னா, வெளில வாசல்ல பாத்தா கண்டிப்பா தர்ம அடிதான் எனக்கு).

இனிமே சினிமா பத்தி கொஞ்சம்.

மொதல்ல மார்ஜின் கால் (Margin Call).  கெவின் ஸ்பேசி, டெமி மூர் மற்றும் பலப் பலர் நடிச்சு வந்திருக்கர படம்.  படத்துல அடிதடி இல்லை, கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் இல்லை, நல்ல நடிப்பு, ஒவ்வொரு சீனும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்காங்க.  ஒரு ரெண்டு மணிநேரம் நல்ல படம் பாக்க ஒதுக்க முடியும்னா கண்டிப்பா பாக்கவேண்டிய படம்.  கதை: ஒரு ஃபைனான்சிங் கம்பெனில ஒரு நல்ல நாள் பார்த்து 80% ஆளுங்களை வீட்டுக்கு அனுப்பராங்க, அதுல ஒருத்தர் வீட்டுக்கு வருத்ததோட போறப்ப, தன் கீழ வேலை செய்யர ஒரு சின்ன பையன் கிட்ட ஒரு ஃப்ளாஷ் டிரைவை கொடுத்து இதை கொஞ்சப் பார்த்துடு ஆனா ஜாக்கிரதைன்னு சொல்லிட்டு போயிடரார்.  அதுக்கு அப்புறம் இருக்கர ஒரு 12 மணி நேரம் என்ன ஆகுதுங்கரதுதான் கதை.


ரெண்டா வது க்ராண்ட் மாஸ்டர் (மலையாளம்)
மோகன்லால், நரேன் (சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ல நடிச்சவர்), ப்ரியாமணி, சீதா, ஃபாத்திமா பாபு, ஜகதி ஶ்ரீகுமார், பாபு ஆண்டனி அப்புறம் தேவன்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க.  இந்த ரோலை, கமல், அமிதாப் ஏன் ரஜனி கூட பண்ணலாம். என்ன மோகன்லால் மாதிரி நடிப்புல அடக்கி வாசிக்கனும்.   தோள்ள துண்டைப் போட்டுன்டு கூட இருக்கர எல்லோருக்கும் சேர்த்து நடிக்கக் கூடாது.   கதை மோகன்லால் MCSC (Metro Crime Stoppers Cell)க்கு தலைவர்.  இவரோட முன்னால் மனைவி ப்ரியாமணி.  இவரை டைவர்ஸ் பண்ணினதும் இவர் ரொம்ப தனிமைப் பட்டுப் போய் எந்த ரெஸ்பாண்சிபிலிடியும் இல்லாம இருக்கரவர்.  இவரை சவால் விட்டு ஒரு சீரியல் கில்லர்  கொலைகளை செய்ய ஆரம்பிக்க, இதுக்கு நடுவுல இன்னொரு போலீஸ் ஆஃபீஸர் கொடச்சல் கொடுக்க ஆரம்பிக்க,  இவர் எப்படி எல்லோரையும் சமாளிக்கரார்ங்கரதுதான் கதை.  ஃபைட்டு,  பாட்டு, செண்டிமெண்ட், த்ரில் என்ன வேணும்னாலும், இந்தப் படத்துல இருக்கு.  கண்டிப்பா பாருங்க.

மூனாவது தமிழ்ப் படம் கலகலப்பு.
சுந்தர் சி டைரக்ட் பண்ணியிருக்கர படம்.  விமல், சந்தானம், மனோபாலா, மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, வி.எஸ். ராகவன் இவங்களையெல்லாம் தூக்கி சாப்பிடர ரோல்ல இளவரசு நடிச்சு வந்திருக்கர படம்.  லாஜிக் பாக்காம, காமெடி காமெடி காமெடி (சரி சரி ஒரே ஒரு டப்பாங்கூத்து டான்ஸும்) பாக்க ரெடின்னா கண்டிப்பா வீட்டுல எல்லோரோட பாக்கலாம்.  விமல் ஒரு டப்பா ஓட்டல் நடத்தரார், அவர் தம்பி மிர்ச்சி சிவா திருடன் வீட்டுக்கு பரோல்ல வந்திருக்கான், ஓவியா அந்த ஓட்டல் சரக்கு மாஸ்டர் வி.எஸ். ராகவனோட பேத்தி(சிவாவுக்கு ஜோடி), அஞ்சலி ஹெல்த் இன்ஸ்பெக்டர் (விமலுக்கு ஜோடி), 5 வட்டி அளகேசனா இளவரசு, அஞ்சலியோட முறை மாமன் வெட்டுப் புலியா சந்தானமும், அவரோட மாமனா மனோபாலாவும் வந்து கல்லா கட்டியிருக்கர படம்.

நாலாவது பில்லா 2
அஜித் அடிக்கடி ஸ்க்ரீன்ல நடக்கரார், அடிக்கரா, சுடரார்.  ஹூம். அப்பப்ப டான்ஸ் ஆடர சாக்குல குதிகரார்.  பாட்டு எல்லாம் தண்டம். ஃபைட் சூப்பர்.  படம் எடுக்கும் போது எந்த ஆர்டிஸ்ட் பணம் கேட்டாலும் படத்துல உடனே போட்டு தள்ளிடராங்க.  கடைசியா அந்த டைரக்டரையும் போட்டு தள்ளியிருக்கலாம்.  தமிழ்நாட்டுக்கு அகதியா வந்திருக்கர டேவிட் பில்லா (அஜித்), எங்கயிருந்துன்னு காமிக்கல, நாம அது இலங்கைன்னு யூகம் பண்ணிக்கனும்னு சொன்னா அத விட கேவலம் இல்லை.  ஒருத்தர் கூட இலங்கைத் தமிழ் பேசல.  மொதல்ல சின்னதா கள்ளக் கடத்தல் பண்ண ஆரம்பிச்சு பெரிய அளவுல எப்படி தொழில் பண்றார்ங்கரதுதான் கதை.

5வது படம் ஸ்நாட்ச் (Snatch)
இது ஒரு விதமான படம், இந்தப் படத்தை மாதிரி இந்தியாவுல படம் வந்தாலும் மக்களுக்கு புரிஞ்சு ஓட ஆரம்பிக்கரதுக்குள்ள மாதுரியோட பேரன் பேத்திக்கே பேரன் பேத்தி வந்திருக்கும்.  அங்கங்க நடக்கர பலதை ஒரு புள்ளிக்கு கொண்டு வந்து அசத்தியிருக்காங்க.  எனக்கு ப்ராட் பிட், ஜேசன் ஸ்டாதம் ரெண்டு பேரோட நடிப்பு ரொம்ப பிடிக்கும்.  இந்த படத்துல ப்ராட் பிட்  அடிக்கர கூத்தும், அவர் பேசர ஸ்டைலும் சூப்பர்.  வீட்டுல குழந்தைங்க இருந்தா அவங்களை வெச்சுண்டு பாக்காதீங்க.

6வது படம் கேப்டன் அமெரிக்கா
அம்புலிமாமா கதை, படம். அதுக்கு மேல இதுல ஒன்னும் இல்லை.

கடைசியா சங்கத் தலைவர் சத்தியாவோட உணர்வுகளைத் தூண்டும் ஒரு யூ ட்யூப் வீடியோ.

http://www.youtube.com/watch?v=BzmDgxduteM&feature=player_embedded

என்சாசாசாசாய்ய்ய்ய்ய்ய்ய்ய்......


சரி சரி எல்லோரும் "டேய் அடங்குடா"ன்னு சொல்றது காதுல விழுது, அதனால,  அடுத்து அலாஸ்கா பயணக் கட்டுரை ரெண்டுல பாக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.

Thursday, August 23, 2012

அலாஸ்கா பயணக் கட்டுரை - 1

காஸ்ட்கோவில் போனவாரம் ஒரு சிறிய உரையாடல்:

ரவி திருவேங்கடத்தான்: "ஹேய் முரளி, என்னப்பா அலாஸ்காலாம் போயிட்டு வந்தாச்சா, இல்லை இனிமேதான் போகப் போறியா?"

நான்: "போயிட்டு வந்தாச்சுப்பா, ஏன் என்ன திடீர்ன்னு கேக்கர?"

ரவி: "என்னமோ இதோ அடுத்த வாரம் அதப் பத்தி எழுதப் போறேன்னு சொன்னியே, அப்படி சொல்லி 7-8 வாரம் ஓடி போச்சே, அதான் கேட்டேன்.  ஒரு சின்ன தடயம் கதையே 5-6 வருஷமா நம்ம ப்ளாகுல ஓடுது, இது என்ன ஜுஜுபி."

நான்:  "இருப்பா ஆஃபீஸ்ல ஆணி புடுங்கர வேலை கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு, அதுக்குள்ள இப்படி பப்ளிக்கா மானத்தை வாங்காதே.."

ரவி: "உங்க ஆஃபீஸ்ல ஆணி புடுங்கர வேலை ஜாஸ்தியா, யார் கிட்ட காது குத்தரே, என் தம்பியும் அங்கதான் வேலை செய்யரான்.  இந்த சம்மர் லீவுல பாதி பேர் வேலைக்கே வரப்போரதில்லை.  ஹூம் நீயும் நல்லா கதை விடர, நானும் நம்பறமாதிரி கேட்டுக்கரேன். "

நான்: "யப்பா இன்னும் ஒரு வாரத்துல ஆரம்பிச்சுடரேன்.  போதுமா?"

ரவி:  "தடயம் கதை மாதிரி, ஆரம்பிச்சா மட்டும் போதாது ஒழுங்கா முடிக்கனும்."

ரவி அடுத்த விஷயம் பேச ஆரம்பிக்கரதுக்குள்ள வுடு ஜூட்.

பூர்வாங்க வேலைகளை பத்தி ரொம்ப சொல்லாம, டைரக்ட்டா அலாஸ்கா டிரிப் பத்தி சொன்னா க்விண்டின் டராண்டினோ படம் மாதிரி இருக்கும் அதனால ரவியோட நடந்த ஒரு சின்ன பேச்சை மொதல்ல போட்டுட்டேன், இப்ப மெயின் கதைக்கு வருவோம்.

அலாஸ்கா க்ரூய்ஸ் டிரிப் போகலாம்னு மொதல்ல ஒரு பிட்டை போன வருஷம் ஆகஸ்ட்-செப்டம்பர்ல போட்டது,  என் வீட்டுக்காரம்மாவோட அம்மாவோட அக்காவோட ரெண்டாவது பையன்(அதாவது மாலதியோட கசின், சுருக்காமா சொன்னா சுவாரசியமா இருக்காதுன்னு கொஞ்சம் இளுத்து புடுச்சு எளுதிட்டேன்).  அவன் ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்.  வடிவேலு மாதிரி ஒரு பெரிய பிட்டை போட்டுட்டு, சும்மா இருந்த சங்கை நல்லா ஊதி விட்டு, அமெரிக்காவுல இந்தக் கோடியில எங்க வீடும், அடுத்த கோடி கலிஃபோர்னியாவுல ஒரு 7 வீட்டு மக்களும், சியாட்டில்ல ஒரு வீடும் சேர்ந்து பேசிப் பேசிப் பேசிப் பேசிப் (நிஜமாவே அவ்வளவு பேசியிருக்காங்க) பேசி ஒரு வழியா 44 பேர் சேர்ந்து க்ரூய்ஸ் போகலாம்னு முடிவு பண்ணினாங்க.

(நாகு: "என்னது முடிவு பண்ணினாங்கன்னு எழுதர அப்போ நீ முடிவு பண்ணலையா? "

நான்: "நானும் சேர்ந்து முடிவு பண்ணலா மா?  சொல்லவே யில்லை!!!!  அடுத்த வாரம் காஸ்ட்கோ போய் பால், தயிர் பர்ச்சேஸ் பண்ணும் போது நானே முடிவு பண்ணி ஒரு செட் சாக்ஸ் வாங்கிட்டு வரப்போறேன் அப்பதான் இவங்களுக்கு நம்ம பவர் என்னன்னு தெரியும், எப்ப்புடி?"

நாகு: "சூப்பர் இப்படியே இரு,  வெளங்கிடும்.... " )

உடனே இருவர் குழுவை ஃபார்ம் பண்ணி அவங்க ரெண்டு பேர் மட்டும் காஸ்ட்கோ கிட்ட பேசி நல்லா  திட்டம் போட்டு, தேவையான ரூமெல்லாம் புக் பண்ணி ஒரு வழியா புக்கிங் விஷயம் முடிச்சதும், எதிர்பாராத விதமா சில பேர் வரமுடியாத சூழ்நிலை உருவாகி, கடைசியா 18 பேர் மட்டும் க்ரூய்ஸ் போகலாம்னு முடிவு பண்ணினோம்.  இதுல காமெடி என்னன்னா,  க்ரூய்ஸ் போகலாம்னு பிட்டை போட்ட மகானுபாவன் ஜகாவாங்கிட்டு, பி.எஸ். வீரப்பா மாதிரி ஒரு சிரிப்பு சிரிச்சான், அவனை அப்பால பாத்துக்கலாம்னு விட்டுட்டேன். (வேற வழி).

காஸ்ட்கோ நல்லாவே டிரிப்பை மேனேஜ் பண்ணினாங்க.  அப்பப்போ என்ன கேள்வி கேட்டாலும், டக்குன்னு பதில் சொல்லி, தேவையானதை தேவையான நேரத்துல செஞ்சு கொடுத்தாங்க.  மொதல்ல புக் பண்ணும் போது ஒருத்தருக்கு  100$ ந்னு வாங்கிட்டு இந்த வருஷம் ஏப்ரல் மாசம் மொத வாரம் மொத்த பணத்தையும் கட்டினா போதும்னு சொல்லிட்டாங்க.  இது ரொம்ப சவுகரியமா இருந்தது, மாசா மாசம் கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சு வெச்சுட்டு அதை ஏப்ரல் மாசம் கட்டிட்டோம்.

க்ரூய்ஸ் ஸ்டார்ட் பண்றது சியாடில்லருந்து அதுக்கு நாலு பேருக்கு டிக்கெட் போட்டு அதெல்லாம் பக்காவா ரெடி பண்ணினா, ரிச்மண்ட் ஏர்போர்ட் போனதும் அதுக்கு ஒரு கேட்டை போட்டுடானுவ.  எங்க டிரிப் ரிச்மண்ட் - சார்லேட் - சியாடில், அதுல ரிச்மண்ட் - சார்லேட் ஃப்ளைட் சார்லேட்லயிருந்து வரும்ம்ம்ம்ம்ம்ம் ஆனா வராதுன்னு ப்ளைட் கிளம்பர டைமுக்கு 5 நிமிஷம் முன்னாடி சொன்னானுவ,  சொல்லிட்டு, இங்க வாங்க நாங்க நாளைக்கு ஃப்ளைட்டுக்கு டிக்கெட் போட்டு கொடுக்கறோம்ன்னு சொல்லி ஒரு லைன் ஃபார்ம் பண்ண சொன்னாங்க.  குடும்பமே கெளண்டர் முன்னாடி லைன்ல நின்னுகிட்டே மெதுவா ஹரே ராமா மஹா மந்திரம் சொல்ல ஆரம்பிச்சோம்.  5 நிமிஷம் கூட சொல்லியிருக்க மாட்டோம், நம்ம நாட்டுகாரர் ஒருத்தர் திடீர்ன்னு வந்து "நான் யு.எஸ் ஏர்வேஸ்லதான் வேலை செய்யரேன், வாங்க நான் ஏற்பாடு பண்றேன்" சொல்லி யார் யாரையோ பிடிச்சு 15 நிமிஷத்துல ஃபிலடெல்ஃபியா வழியா சியாட்டில் போக ஏற்பாடு செஞ்சு தந்தார்.  மஹா மந்திரத்துக்கு பலன் உண்டுன்னு மனப்பூர்வமா நம்பர ஆளுங்க நாங்க, ஆனா இப்படி சொன்ன 5 நிமிஷத்துல பலன் கை மேல கிடைச்சதும், ஏர்போர்ட்ல டான்ஸ் ஆடாத குறைதான்.  டிக்கெட் போட்டு கொடுத்ததும், அவருக்கு தாங்க்ஸ் சொன்னா, "முரளி என்னை தெரியலையா, நான் உன்னை நிறைய தடவை நம்ம கோவில்ல பாத்திருக்கேன்.  உனக்கு என்னை நியாபகம் இல்லை போல இருக்குன்னு" போற போக்குல ஹிந்தில அடிச்சு விட்டார்.

ஒருவழியா ஃபிலி வழியா சியாட்டில்ல மாலதியோட கஸின் (சிஸ்டர்) வீட்டுக்கு ராத்ரி 1:30 மணிக்கு போய் சேர்ந்தோம்.  காலைல 10:30 மணிக்கு கிளம்பி சியாட்டில் ஹார்பர் போய் நாங்க போக வேண்டிய நார்வேஜியன் க்ரூய்ஸ் கப்பல்ல ஏறினோம். 



மஹிமா இழுத்து பிடிச்சு கட்றாளே இந்த கப்பல்தான் அது.  இந்தக் கப்பல மொத்தம் 14 மாடி அதுல 13, 14 மாடி கொஞ்சம் பெருந்தனக்காரங்களுக்காம்,  என்னைய மாதிரி ஏழை பாழைங்களுக்கு கிடையாதாம், சீசீ அலாஸ்கா குளிர்ல 14ம் மாடில போயி எவன் இருப்பான்னு நாங்களும்  போகல.

ஆக, அலாஸ்கா கப்பல்ல ஏறியாச்சு.  அடுத்து, அலாஸ்காவோட காபிடல் ஜுனு போன கதை அடுத்த பாகத்துல பாக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.

Tuesday, July 31, 2012

இந்திய அரசியலில் மீண்டும் ஒரு அராஜகம்

'சோ' வை நிறைய பேருக்கு புடிக்காது, எவ்வளவு கேவலமா திட்டனுமோ திட்டுவாங்க, போன வார துக்ளக்ல ஒரு கேள்வி பதிலுக்கு அவரோட பதிலைப் படிங்க அது எவ்வளவு பர்ஃபெக்ட்டா இருக்குன்னு தெரியும்.

கே: ‘பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொள்வார்’ என்று ப. சிதம்பரம் கூறியுள்ளாரே? 

ப: ஒரு குறிப்பிட்ட அமைச்சரை, வேட்டி கட்டுபவரை, தென்னகத்திலிருந்து வருபவரை, நிதியமைச்சராக இப்போது நியமித்தால், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும், அந்த நியமனம் உதவும். அதுதான் சரியான நடவடிக்கை. அதைப் பிரதமர் எடுப்பார் - என்று சிதம்பரம் நம்புகிறார். அது நடக்கிறதா, பார்ப்போம். 


நேத்திக்கு ப.சிதம்பரத்தை மறுபடி நிதி அமைச்சரா நியமிச்சுட்டதா தகவல்.


எவ்வளவுதான் அரசியலைப் பத்தி எதுவும் எழுதாதேன்னு ஆளாளுக்கு மதிச்சும்,  சில சமயம் மிதிச்சும் சொன்னாலும், எதோட வாலையோ நிமிர்த்த முடியாதுன்னு சொல்லுவாங்களே அதுமாதிரி தான் இதுவும்.  கவுண்ட மணி சொல்ற மாதிரி "அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா".


முரளி.

Monday, July 09, 2012

எச்சரிக்கை - அலாஸ்கா பயணக்கட்டுரை

சமீபத்தில் அலாஸ்கா சென்று வந்த பயணத்தைப் பற்றி எழுதுன்னு சில கோடி  நண்பர்கள் (கேடி இல்லை, நல்லா பார்த்துப் படிங்க) அன்பாக மிதிச்சு, சாரி மதிச்சு கேட்டதால அடுத்த வாரத்துல இருந்து எழுதலாம்னு இருக்கேன், உங்களுக்கு ஒரு 5-6 நாள் டைம் இருக்கு அதுக்குள்ள இந்த எச்சரிக்கைக்கு பதில் எழுதி என்னை எழுத வேண்டாம்னு சொன்னா மன்னாப்பு கொடுத்து விட்டுடுவேன். இல்லை, உங்க தலை எழுத்து அம்புட்டுதேன்.

போன தடவை போன பஹாமாஸ் ட்ரிப் 4 நாள் சொகுசு கப்பல் ப்ரயாணம், இந்த தடவை போன அலாஸ்கா பயணம் 7 நாள் சொகுசு கப்பல் ப்ரயாணம்.

அடுத்தவாரம் உங்களுக்கு டைம் சரியா இல்லைன்னா சந்திப்போம்.

முரளி இராமசந்திரன்.

Friday, July 06, 2012

ஜீவன் முக்தி


"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியோம் பராபரமே"
                                                              - தாயுமானவர்

ஒரு கோடீஸ்வரர் பழ மரங்கள் வைத்தார்.  ஏழைகள் ஃப்ரீயா சாப்பிடட்டும்னு.  கொய்யாப்பழம், மாம்பழம், பலாப்பலம், வாழைப்பழம், திராட்சைப்பழம், மாதுளம்பழம். இந்தப் பழங்களை யார் வேண்டுமானாலும் அருந்தலாம்.  இலவசம் !

நாளாக நாளாக இந்த உண்மையை மக்கள் உணரவில்லை.  உண்மைக்கு மாறாகப் பேசுவது சிலருடைய வழக்கம்.  'உள்ளே பேய் பிசாசு இருக்குதுடா'ன்னான் ஒருத்தன்.  கருப்பா ஒன்னு உலாத்துதுடான்னான்.  அந்தப் பக்கமே போறதில்லை.  கடைசியில் ஒரு துணிந்த ஆளு, 'என்ன இருக்கிறது பார்க்கலாம்' என்று பாதி மதில் மேல ஏறினான்.  வழுக்கி விழுந்துட்டான்.  யாரோ புடிச்சு தள்ளுறாங்கன்னான்.

முக்கால் பாகம் ஏறி வழுக்கி விழுந்தார்கள் சிலர்.  முக்காலே மூனு வீசம் ஏறி வழுக்கி விழுந்தார்கள் சிலர்.  ஒருவர் முழுவதும் ஏறிவிட்டார்.  உள்ளே, பெரிய பெரிய பலாப்பழம் வெடிச்சு மஞ்சளா.  இவ்வளவு பெரிய மாதுளம் பழம், ராஜா வாழை, செவ்வாழை, ஆரஞ்சுப் பழம் உதிர்ந்திருக்கு.  அநேகம் பேர் உண்ணுகிறார்கள்.  இவர் மதில் மேல இருந்த படியே, 'அண்ணா, என்ன விலை?'ன்னார்.  'இல்ல இலவசம்'.  உள்ளே குதிச்சுட்டார்.  இந்த உண்மை தெரியாது போச்சேனு பழமா சாப்பிடறார்.

அப்புறம் ஒருவர் மதில் மேல ஏறினார்.  'என்ன விலை'ன்னார்.  'ஒரு புண்ணியவான் இலவசமா வச்சது'.  உள்ளே குதிச்சுட்டார்.  இறுதியில் ஒருவர் ஏறினார்.  'ஐயா, இது விலையா?'ன்னார்.  'இல்ல இல்ல இலவசம்'.  ரெண்டு பழம் சாப்பிட்டார்.  தித்திப்பா இருந்தது.  வெளியே குதிச்சார்.  உள்ளே குதிக்கலை.  'ஐயா வாருங்கள், ஏக உருவாய் கிடக்குது ஐயோ.  சிவானந்த போகமென்னும் பேரின்பம் ...' தாயுமானார் அழைக்கிறார்.  ஏன் அழைக்கின்றேன்.  காகம் கறைந்து உண்ணக் கண்டீர்.  காக்கைக்கு இருக்கிற நல்ல குணம் எனக்கில்லையா?'  கா கா என்று அழைத்து தன் இனத்தை ஒறுங்கு சேர்த்து உண்ணுவதில்லையா.

'காகம் உறவு கலந்து உண்ணக் கண்டீர்; அகண்டாகார சிவ போகம் என்னும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப்பூரணமாய், ஏக உருவாய்க் கிடக்குது ஐயோ! இன்புற்றிட நாம் இனி எடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் ஜகத்தீரே !'

கொள்வாரற்றுக் கிடக்கிறது.  மதில் மேல ஏறி உள்ளே குதித்தவர்கள் எல்லாம் ஜீவன் முக்தர்கள்.  வெளியில் குதித்தவர் அவதார புருஷர்.  ஜீவன் முக்தர்கள் தான் தானே அருள் பெற்றவர்கள்.  அவதார புருஷர்களை நமக்காக இறைவன் அனுப்பினார்.

சுவாரஸ்யமான இக்கருத்துக்கள் வாரியார் அவர்களுடையது.  இன்றைக்கு நித்தி போன்ற போலிகளின் கையில் ஞானசம்பந்தர் தோற்றுவித்த மடமும், ஜீவன் முக்தியும், இதை நம்பி அவரிடம் சென்ற அமெரிக்கவாழ் இந்தியப் பெண்ணும்.  என்ன கொடுமை சார் ....



Monday, June 25, 2012

செய்திகள் - ஒரு சிறு விளக்கம்

தமிழ்நாட்டுல ஆளுக்கொரு கதை, நாளுக்கொரு கதைன்னு சொல்லிட்டு இருக்கானுவ, சும்மா சின்னதா ஒரு பதிவு போட்ட ஒடனே ஆளாளுக்கு கம்பை எடுத்துகிட்டு அடிக்க வராங்க. 

போன பதிவை போட்டதும் ஒரு நண்பர், "என்ன பித்தன் பிஸினஸ் ஆரம்பிச்சுட்டரா, சொல்லவே இல்லை, நீயும் ஏதோ பிஸினஸ் ஆரம்பிச்சுட்டியாமே, அவர் பிஸினஸ் என்ன, உன் பிஸினஸ் என்ன, அவர் பிஸினஸ்ல பிஸின்னா  நீ பிஸியில்லையா? அதப் பத்தி அடுத்த பதிவுல எழுது.  இவர் பேசின அதே நாள் சாயங்காலம் இன்னொரு ஃப்ரெண்ட், "ஏய் என்னா? தமிழ்நாட்டுல நல்லாட்சி நடக்குதுன்னு உனக்கு யார் சொன்னாங்க, உனக்கும் தாத்தாவை பிடிக்காதுன்னா அந்தம்மா ஆட்சி நல்லாயிருக்குதுன்னு உன் கிட்ட சர்டிஃபிகேட் யார் கேட்டாங்க, அப்பால அசிங்கமா திட்டிடுவேன்" னு சொன்னார்.  சரி இவருக்கு இன்னிக்கு வீட்டுல ஏதோ ப்ரச்சனைன்னு விடலாம்னா, அடுத்த நாள் இன்னொரு நண்பி, "உன்னை வீட்டுல கண்டிச்சு வெக்கரதில்லை, பொம்பளைங்க நாங்க எவ்வளவு வேலை செய்யறோம், அதை விட ஆம்பளைங்க நீங்க என்ன செஞ்சிடரீங்கன்னு உங்களுக்கு ஒரு தந்தையர் தின கொண்ட்டாட்டம்?"  சரி இவங்களுக்கும் என் ஃப்ரெண்டுக்கு இருக்கர அதே ப்ரச்சனைதான்னு விட முடியலை.  அதனால இந்த தன்னிலை விளக்கம்.

பிஸினஸ்:
பித்தன் பிஸினஸ் ஒன்னும் பெரிசில்லை, அவர் ஒரு கம்பெனியில காண்ட்ராக்டரா வேலைக்கு சேர்ந்துட்டதாகவும், அதனால அவருக்கு ஆணிபுடுங்கர வேலை அதிகமாயிட்டதாகவும் கேள்வி.  என் பிஸினஸ்ங்கரது நானும் ஹரி வெங்கடேசனும் சேர்ந்து ஆரம்பிச்சிருக்கர ஒரு பிஸினஸ்.  ஃபோட்டோ மற்றும் வீடியோ கவரேஜ் செய்யர ஒரு சேவை (காசுக்குத்தான்).  ரிச்மண்ட்ல நாங்க ரெண்டு பேரும் பல நிகழ்ச்சிகள்ல ஃபோட்டோ எடுக்கரதையும், நான் அதோட வீடியோவும் எடுக்கரதையும் பார்த்து இருப்பீங்க, அதை கொஞ்சம் கமர்ஷியலா செய்யலாம்ன்னு முடிவு பண்ணி ரெண்டு பேரும் சேர்ந்து நியூவேவ் விஷுவல்ஸ் ன்னு ஒரு கம்பெனியை ஆரம்பிச்சு செய்யரோம்.  பிஸினஸ் இன்னும் சூடு பிடிக்கலை அதனால நான் இன்னும் பிஸியாகலை.  

தந்தையர் தினம் 
ஒரு சின்ன கதை, என்னை மாதிரி ஒருத்தன் வீட்டுல மனைவிக்கிட்ட வாய்சவடால் அடிக்கும் போது, "என்ன சும்மா பேசிட்டே இருக்க, நீ என்னை மாதிரி ஒரு நாளைப் போல ஆஃபீஸுக்கு போய் அங்க அடி ஒதை வாங்கி வேலை செஞ்சு மத்யானம் சாப்பிடக் கூட நேரமில்லாம திண்டாடி தெருப் பெருக்கி சாயங்காலம் வீட்டுக்கு வந்தா அப்ப நான் உன்னை மாதிரி வெட்டியா ஒரு வேலையும் செய்யாம ஜாலியா ஏசி காத்து வாங்கிட்டு, உன்னை பார்த்ததும் அத வாங்கினியா, இத வாங்கினியான்னு நொய் நொய்ன்னு பிடுங்கினா உனக்கு எவ்வளவு கோபம் வரும்"னு சொல்ல, அவன் மனைவி, "அப்படியா, சரி நான் ஒத்துக்கரேன், நீங்கதான் நம்ம வீட்டுல அதிகமா வேலை செஞ்சு உழைக்கரீங்க"ன்னு சொல்ல அந்தப் பயலும் ஏதோ சாதிச்சுட்ட மாதிரி அடுத்த நாள் வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தான்.  

வீட்டுக்குள்ள வந்தா, வீடு கந்த கோளமாயிருந்தது.  வீடு முழுசும் குழந்தைங்க விளையாட்டு சாமான்கள் கிடந்தது, கிட்சன் சிங்க்ல, டைனிங் டேபிள்ள எல்லாம் பாத்திரங்கள் எதுவும் தேய்க்காம அப்படியே இருந்தது, அங்கங்க குழந்தைங்க சாப்பிட்ட சாப்பாடு தரைல சிந்தியிருந்தது, ஒரு இடத்துல தண்ணி கொட்டி துடைக்காம அப்படியே இருந்தது, டாய்லட்ல ஃப்ளஷ் பண்ண முடியாம ஒரு டாய் உள்ள கிடந்தது, குழந்தைங்க செருப்பு, ஷு எல்லாம் அங்க இங்கன்னு இரை பட்டு கிடந்துச்சு. ஃப்ரிட்ஜ்ல பால் கொட்டி துடைக்காம இருந்துச்சு.  சரி அவன் பெண்டாட்டிக்கு இன்னிக்கு மூடு சரியில்லைன்னு மாடிக்குப் போய் அவன் ரூம்ல டிரெஸ் சேன்ஜ் பண்ணலாம்னு போனா, அங்க பெட் கலைஞ்சு கிடந்துச்சு, தலைகாணிங்க எல்லாம், பெட் ரூம்ல மூலைக்கொன்னா கிடந்துச்சு.  அழுக்குத் துணிமணிகள் தோய்க்காம அப்படியே காலைல அவன் போட்டுட்டு போனது போட்ட படியே கிடந்துச்சு. கோபமா கீழ வந்து "ஏய் என்ன அப்படி உனக்கு கோபம் வீடு இப்படி தாறுமாறா கிடக்கு, நமக்கு கல்யாணம் ஆகி இந்த 10 வருஷத்துல ஒரு நாள் கூட வீடு இப்படி இருந்ததில்ல அப்படி என்ன ஆச்சு இன்னிக்கு"ன்னு கேட்டான் அதுக்கு அந்த மனைவி கூலா, "ஒன்னும் இல்லை நான் நீங்க சொன்ன மாதிரி இன்னிக்கு ஒரு நாள் வீட்டுல ஒரு வேலையும் செய்யாம ஏசி காத்து வாங்கிட்டு சும்மா இருந்தேன் அதான் வீடு இப்படி இருக்கு"ன்னா.  அப்பதான் அவனுக்கு புரிஞ்சுது அவன் வெளில வாசல்ல போய் எவ்வளவு வேலை செஞ்சாலும் அதுக்கு ஏத்த கூலி அவனுக்கு கிடைக்குது, ஆனா வீட்டுல நாள் முழுதும் வேலை செய்யர பெண்களுக்கு என்ன கூலி கொடுக்கரோம் சொல்லுங்க.  அதனால நான் எழுதினதுல இருக்கர காமெடி நிறைய பேருக்கு போய் சேரலைன்னு நினைக்கரேன்.  நான் என்னை மாதிரி இருக்கர ஆம்பளைங்க வீட்டு வேலைன்னு சொல்ற அத்தனையும் லிஸ்ட் போட்டு காட்டிட்டேன் அதத் தாண்டி ஒரு லட்சம் வேலை நம்ம வீட்டு பெண்மணிகள் செய்யராங்கங்கரதையும் சொல்லியிருக்கனும்னு இப்போ தெரிஞ்சுண்டுட்டேன்.   கொஞ்ச நாள் முன்னாடி நான் கொலு பத்தி ஒரு பதிவு எழுதியிருந்தேன் அதுல இல்லாள் எப்படி இருக்க வேண்டும்னு ஒளவையார் எழுதியிருந்த ஒரு பாட்டை பத்தி சொல்லிருந்தேன் அந்தப் பாட்டு:

இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

அதாவது, இல்லாள் - மனைவி வீட்டிலிருந்தால் இல்லாதது எதுவும் இல்லை, அவளே இல்லாளாக இல்லாமல் இருந்தால் அந்த இல் (வீடு) புலி இருந்த குகை போல இருக்கும்.   இதுல ஒளவையார் சொல்ற இல்லாள் அதாவது இல்லத்தை - வீட்டை ஆள்பவள் ஒரு பெண் அதுவும் அவள் அகத்திருக்க, அதாவது இல்லம் - வீடு என்ற ஒன்றுக்கு கட்டுப் பட்டு இருப்பவள் என்றால் அந்த வீட்டில் இல்லாதது எதுவும் இல்லைன்னு சொல்றாங்க. நல்ல வேளை இந்தப் பாட்டைப் பாடினது ஒரு பெண் கவிஞர், ஒரு ஆண் பாடியிருந்தா அவ்வளவுதான் அந்த ஆள உண்டு இல்லைன்னு பண்ணியிருப்பாங்க. 


ஜெயலலிதாவின் ஆட்சி.
எனக்கு இந்தம்மாவோட ஆட்சி தாத்தாவோட ஆட்சியை விட 100 மடங்கு பெட்டர்ங்கர அபிப்ராயம்.  தாத்தா நல்லா தமிழ் பேசராரு அதனால அவர் எனக்குப் பிடிக்கும்ன்னு சொல்ற சில பேர் ரிச்மண்ட்ல இருக்காங்க, அவங்களுக்கு அவரோட சுயநலம் தெரியலை, அவரோட ஊழல் தெரியலை, அவரோட பல கெட்ட குணாதிசயங்களைத் தெரியலன்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்ன்னு தெரியலை.   அதே சமயம், சமீபத்திய இடைத் தேர்தல்ல அந்தம்மாவோட கட்சியும் பணத்தை வாரி செலவு பண்ணியிருக்காங்கன்னு தெரியுது, ஆனாலும் இன்னமும் அந்தம்மா, பல விஷயங்கள்ள தொலை நோக்கோட செய்யராங்கன்னு என்னோட கருத்து.  பித்தன் இதை பத்தி படிச்சுட்டு "கொஞ்சம் அரசியல் பத்தி எழுதாம வழக்கம் போல கதை, டிராமா, இலக்கியம்னு எழுத வேண்டியதுதானே ஏன்  இதைப் பத்தி எழுதி கேவலப் படரே"ன்னு சொல்லிட்டதால் இனிமே 'நோ அரசியல்'.

முரளி இராமச்சந்திரன்.


Monday, June 18, 2012

வர்ஜினியா டென்னிஸ் சாம்பியன்


ரிச்மண்ட் தமிழ்ச் சங்க  சிறுவன் ஒருவன் இந்த வருடம் டென்னிஸில் சாதனை படைத்திருக்கிறான். கடந்த ஜூன் 10-ம் தேதி  நடைபெற்ற வர்ஜினியா மாநில உயர்நிலைப் பள்ளி டென்னிஸ் இறுதிப் போட்டியில் இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறான் பரணி சங்கர். நமது சங்க உறுப்பினரான பிருந்தா, சங்கர் தம்பதிகளின் மூத்தப் புதல்வன் பரணி சங்கருக்கு மாநில இறுதிப் போட்டி ஒன்றும் புதிதல்ல. சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சங்க போட்டி என்று எண்ணுமளவு இரட்டையர் இறுதிப் போட்டியில் நமது சிறுவர்கள் மூவர் ஆடியதை பற்றி இங்கே படிக்கலாம். அந்தப் போட்டியில் இழந்த கோப்பையை இந்த ஆண்டு வெற்றிகரமாக கைப்பற்றியிருக்கிறான் பரணி.

டீப் ரன் பள்ளி இரட்டையர் போட்டியில் வெற்றி வாகை சூடிய செய்தியை இந்தத் தளத்திலும், டீப் ரன் பள்ளியின் தளத்திலும் படிக்கலாம்.

மே மாதத்தில் ரிச்மண்ட் டைம்ஸ் டிஸ்பாட்ச் செய்தித்தாளின் 'இந்த வார சிறந்த விளையாட்டு வீரன்' பரணி சொல்வதை நீங்களே கேளுங்கள்.


இந்த ஆண்டு கல்லூரி செல்லும் பரணிக்கு மேன்மேலும் வெற்றிகளைக் குவிக்க எங்கள் வாழ்த்துக்கள்!