Tuesday, December 26, 2006

வலைவலம்

எந்தரோ ப்ளாகிகளு அந்தரிகி மா வந்தனமு

வலைப்பதிவு எழுதுவோர் எல்லாரும் வெட்டியல்ல. சமீபத்தில் வலைப்பதிவர்கள்(ப்ளாகிகள்) சில நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்கள். செய்கிறார்கள். தேசிகன் என்பவரின் பதிவில் பார்த்த சிறுவன் ஆதித்யா இப்போது பிட்ஸ்பர்க் குழந்தை மருத்துவகத்தில் இருக்கிறான். அவன் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதில் வலைப்பதிவர்களின் பங்கு பெரிது. ஆதித்யா வேலூர் CMCயில் இருந்தபோது அங்கு சிகிச்சை பெற்று வந்த என் நண்பன் சொன்னான் - அந்த வார்டு முழுவதும் ஆதித்யா போல நிறைய குழந்தைகள். அங்கு போவதற்கே கஷ்டமாக இருந்தது.

இப்போது பிட்ஸ்பர்கில் இருக்கும் ஆதித்யாவுக்கு ஒரு பொம்மைகடை வைக்கும் அளவுக்கு பொம்மைகள் வந்து குவிந்திருக்கின்றன என்கிறார்கள் அவன் பெற்றோர்கள்.

ஆதித்யாவுக்கு நீங்களும் உதவலாம். விவரங்கள் இதோ.

Residents of USA and US citizens who would like to contribute thro US$ Check can draw it payable to "Children's Hospital of Pittsburgh" and mail it to the address mentioned below. Please make sure you write "For Aditya Kumar - Visit # 1022726762" in the memo part of the check.

Nandita & Mahesh
5701 Governors Pond Circle
Alexandria, VA 22310
(703) 960-6615

After mailing the check, please send the check details to kumarsang@gmail.com , ravi2604@gmail.com and nandita999@yahoo.com




ஆதித்யா போன்ற புற்றுநோயாளிகளுக்கு உதவ இந்தியாவில் ஒரு அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பிற்கு அவ்வப்போது நிதி உதவி செய்தால் உங்களுக்கு எல்லா நலங்களும் வந்து சேரும்.

இனி வலைப்பதிவர்களின் இன்னொரு முயற்சியை பார்ப்போம்.

ஏழைப்பெண் மகாலட்சுமியின் தடைப்பட்ட கல்விக்கு
உதவ முயல்கிறார் செந்தழல் ரவி என்ற பெயரில் பெங்களூரில் இருந்து எழுதும் ரவி. திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி கிராமத்தை சேர்ந்த இந்த மாணவியின் பெயர் ஆர்.மகாலட்சுமி..தந்தையார் பெயர் ராமன்..படித்தது எம்.எஸ்.ஸி / காந்திகிராமம் கல்லூரியில்...எம்.எஸ்.ஸி அப்ளைடு பயாலஜி பிரிவில் பட்டம் பெற்றுள்ள இவரது மதிப்பெண் ( 1978 / 2750 ). இப்போது பி.எட்: ஆர்.வி.எஸ் எஞ்சினீயரிங் கல்லூரியில் படிக்கும் போது பணம் கட்டமுடியாமல் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

தந்தையார் கடைகளில் எண்ணையை வாங்கி வீடுவீடாக விற்கும் பணியை செய்து சொற்ப வருமானம் பெறுகிறார்...ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர்..தம்பி படிக்காததால் ஒரு மெக்கானிக் ஒர்க் ஷாப்பில் வேலைசெய்கிறார்...தங்கை ஐ.டி.ஐ படிக்கிறாராம்... இவள் முன்னுக்கு வந்தால்தான் குடும்பம் வாழமுடியும் என்னும் நிலை....மிகுந்த ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது கல்விக்கண் திறந்தால் வாழுமே ஒரு குடும்பம்...

மேலே விவரங்களுக்கு செந்தழல் ரவியின் பதிவை படியுங்கள். அவரது பள்ளிக்கூட நண்பன் எழிலரசன் பற்றி தெரிந்தாலும் அவருக்கு தெரிவிக்கவும்.

வலைவலம் வராமலே இந்த பதிவு நீண்டுவிட்டது. ஆகவே - RTP (ராகம் தானம் பல்லவி) பற்றி கேட்ட வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு வருந்தி வருந்தி விக்கிபசங்க சொல்லியதை நான் மறுபடியும் எழுதப் போவதில்லை. நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

ப்ளாகிகளே - சற்றே மௌனம் கலைந்து உங்கள் லொள்ளையும், எதிரொலியையும், பித்து மொழிகளையும் நமக்கு அருளவும்.

தடயம் - அத்தியாயம் - 3.

தடயம் மர்மத்தொடரின் மூன்றாவது அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக்கவும்:

http://kalaichcholai.blogspot.com/2006/12/3.html

- முரளி.

Saturday, December 16, 2006

தடயம் - அத்தியாயம் - 2

தடயம் மர்மத்தொடரின் இரண்டாவது அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக்கவும்:

http://kalaichcholai.blogspot.com/2006/12/2.html


- முரளி.

Friday, December 08, 2006

நிறம்

அன்னை வயிற்றின் கதகதப்பில்
அன்புக் குடிலின் அரவணைப்பில்
கண்கள் மூடி அருந்தவத்தில்
காத்திருந்தாய், அன்று நிறங்களில்லை

ஈரைந்து மாதங்கள் கரைந்த பின்னே
உறக்கம் கலைந்து எழுந்த பின்னே
உலகைக் கண்ணால் கண்ட பின்னே
உன் சிரிப்பினில் மலர்ந்தது வெள்ளை நிறம்

தத்தித் தவழ்ந்து நடை பயின்றாய்
மழலைப் பேச்சால் மயங்க வைத்தாய்
கள்ளம் இல்லாப் பிள்ளை நெஞ்சில்
இன்னும் இருந்தது வெள்ளை நிறம்

செல்லக் கோபம் காட்டக் கற்றாய்
ஒன்று கிடைக்காவிடில் பிடிவாதம் செய்தாய்
கண்ணீர் சிந்தி அடம்பிடிக்கையிலே
லேசாய் மாறுது வெள்ளை நிறம்

பாகுபாடுகள் பார்க்கக் கற்றாய்
ஏற்றத் தாழ்வையும் ஏற்றுக் கொண்டாய்
நம்பிக்கையின்றி வாழக் கற்றாய்
அன்பைக்கூட அளந்து வைத்தாய்
ஆளைப் பார்த்து ஆடை பார்த்து
ஆதாயம் பார்த்து நடக்கும் பொழுதினில்
தானாய் மறையுது வெள்ளை நிறம்…

--கவிநயா

Tuesday, December 05, 2006

தடயம் - மர்மத்தொடர்

தடயம் மர்மத்தொடரைப் படிக்க இங்கே க்ளிக்கவும்:

http://kalaichcholai.blogspot.com/2006/12/1.html

- முரளி.

அரங்கேற்றம்

அவங்க ஐந்து பேரும் அந்த கட்டிடத்தை வந்து அடைந்த போது அவங்களுக்கு முன்பே பலர் வந்து சேர்ந்திருப்பது அங்கு நிறுத்தி வைக்கப் பட்ட கார்களைப் பார்த்து தெரிந்தது.
அவர்களுள் முதலில் நடந்து சென்றவர் நடுத்தர வயது, நல்ல வாட்ட சாட்டமாக, ஆஜானுபாகுவாக இருந்தார். நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை, நல்ல பொன்னை ஒத்த நிறம், கரிய விழிகள், அடர்ந்த கேசம். அவரை தொடர்ந்தது அவருடைய மனைவி. யாராவது முதல் தடவையா பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே அம்மான்னு அவங்க கால்ல விழக்கூடிய ஒரு கருணை அவங்க முகத்தில கொட்டி கிடந்தது. சற்று குண்டா ஒரு இளைஞன், அவனுடைய கண்களே அவன் மிக மிக அறிவாளி என்று சொல்லும்படி களையாக இருந்தான். அவனோடு அவனுடைய தம்பி போல ஒரு சிறுவன், துருதுரு என அலை பாயும் கண்களோடு என்ன விஷமம் செய்யலாம் என அலைபவன் போல கொள்ளை அழகோடு வந்தான். இவங்க நாலு பேரையும் தொடர்ந்து சற்று தள்ளி அவங்க உதவியாளர் போல ஒருத்தர் வந்தார். அவருக்கும் நடுத்தர வயது, அவருடைய திரட்சியான மார்பும், வலுவான கைகளும், கால்களும் அவர் அவர்களின் பாதுகாப்பாளர் என்பதை சொல்லாமலே தெரிந்தது.
அந்த கட்டிடத்தின் வாயிலில் சற்றுத் தயங்கி அவர்கள் நின்றார்கள். அப்போது சிறுவன் "அப்பா, இந்த இடம்தானா" என்றான்.
"இந்த இடம்தான், அதோ அங்க அவங்க தயாராயிட்டு இருக்காங்க, இப்போ நிகழ்ச்சி ஆரம்பிச்சுடும், வாங்க உள்ளே போகலாம்"
அப்போது பாதுகாப்பாளர், "ஐயா, நானும் உள்ளே வரலாமா?"
"ஏன் என்ன தயக்கம், கண்டிப்பாக வரலாம்"
"இல்லை அழைப்பு உங்களுக்கு மட்டும்தான் அதனால் கேட்டேன்."
"நல்ல வேடிக்கை, நீ இல்லாமல் நான் என் குடும்பத்துடன் எங்கயாவது போனதுண்டா, எப்போ இப்படி பேச கத்துக்கிட்ட?"
"மன்னிச்சிடுங்க, நீங்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கனும்னு உற்சாகமாக வந்தீங்க, அதை நான் கேள்வி கேட்டு கெடுத்துட்டேன்."
அப்போது இளைஞன், "அப்பா, உள்ள போய் நிகழ்ச்சியைப் பார்க்கலாமா அல்லது, இங்கேயே பேசிண்டு இருக்கலாமா என்பதை சீக்கிரம் முடிவு பண்ணுங்க" என்றான்.
பெரியவர் பாதுகாப்பாளர் பக்கம் திரும்பி ஒரு சிறிய புன்முறுவல் செய்தார், அதன் அர்த்தம் தெரிந்த பாதுகாப்பாளர் ஓடிச் சென்று இரட்டைக் கண்ணாடிக் கதவுகளைத் திறந்து அவர்களை அழைத்துச் சென்றார்.
அவர்கள் உள்ளே நுழைந்ததும் அவர்கள் கண்ணில் பட்டது கம்பீரமான நடராஜர் சிலை. அதைப் பார்த்ததும், பெரியவரும் அவர் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அப்போது அவருடைய சிறிய மகன் "அப்பா, நாம கொஞ்சம் உட்காரலாமா" என்றான்.
அதற்கு அவனுடைய அம்மா, "இருப்பா, அப்பா சொல்லுவார் அப்பரம் உட்காரலாம்" என்றார்.
"கொஞ்சம் இருப்பா, அவங்க இப்போ ஆசீர்வாதம் வாங்க வருவாங்க அதுக்கு அப்பரம் நாம உட்காரலாம்" என்றார் அப்பா.
அவர் சொல்லி முடித்த போது, ரெண்டு சிறுமிகள் மேடையில் தோன்றினார்கள்.
"போனவருடம் இவங்க அரங்கேற்றம் பாக்கத்தானே நாம இங்க வந்தோம்!" என்றார் அந்த அம்மா.
அதற்கு அந்தப் பெரியவர் ஆம் என தலையசைத்தார்.
அந்த ரெண்டு சிறுமிகளும் மைக் முன்னாடி வந்து பேசத் துவங்கினார்கள்.
அப்போது பாதுகாப்பாளர், "ஐயா இவங்களா! நீங்க சொன்ன அந்த ரெண்டு பேர்"
"மலர்கள் பேசும் போது இடைஞ்சல் செய்யாதே" என்றார் அம்மா.
இல்லை என தலையசைத்தார் அந்தப் பெரியவர்.
தெளிவாக அவர்கள் பேசத் துவங்கினார்கள்.
"திருமதி. உமா செட்டி அவர்களுடைய மாணவிகளாகிய மீனா வீரப்பன் மற்றும் ப்ரீதி பாடில் இருவருக்கும் நடக்கும் இந்த நடன அரங்கேற்றத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்......."
"தத்தோம் தகதோம், தத்தீத் ......" கணீரென ஜதியின் சப்தம் அந்த அரங்கத்தை நிரப்பியது. அந்த ஐந்து பேரும் கண்மூடி மௌனமாக நின்றனர்.
சுழன்று சுழன்று ஆடியபடி மீனாவும், ப்ரீதியும், மேடையின் நடுவில் வந்து பிறகு, நடராஜர் சிலையை நோக்கி ஆடத்துவங்கினர். இருவரும் ஒருவித மயக்கத்தில் இருப்பது போல இருந்தது, அது ஒரு தவ நிலை என்பது அந்த ஐந்து பேருக்கும் புரிந்தது. கலையுடன் அவர்கள் உணர்வு ஒன்றாமல் இந்த நிலை வராது என்பது தெளிவாகத் தெரிந்தது.
மீனாவும், ப்ரீதியும் நடராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அவருடைய ஆசீர்வாதத்தை வேண்டி நின்ற போது, பெரியவர் புன்சிரிப்புடன் தன் மனைவியைப் பார்த்தார்.
"என்ன அவங்களுக்கு ஆசீர்வாதம் செய்யலையா"
"தேவி, இவருடைய ஆசீர்வாதம் இல்லாமல் இவர்களால் இன்று இந்த நிகழ்ச்சிக்கு தயாராகியிருக்க முடியுமா?" என்றார் பாதுகாப்பாளர்.
"நந்தியம்பதி, நம் குழந்தைகளை நாம் ஆசீர்வதிக்காமல் வேறு யார் ஆசீர்வதிப்பது"
"சரியாகச் சொன்னாய் தேவி, நாம் அனைவருமே அவர்களை ஆசீர்வதிப்போம்" என்ற பரமன் கண்மூடி ஓம் என ஜெபித்து தன் வலக்கையை தூக்கி ஆசீர்வதித்தார். தேவியும், இளைஞன் விநாயகனும், சிறுவன் கந்தனும், பாதுகாப்பாளர் நந்தி தேவரும் ஆசீர்வதித்தனர்.
மீனாவுக்கும், ப்ரீதிக்கும் ஒரு கண நேரம் சில்லென்ற ஒரு உணர்வு உடல் முழுதும் பரவி பளிச்சென்று விலகியது. உடலில் இருந்து அத்தனை சொர்வும், வலியும், களைப்பும், மனதில் இருந்த தயக்கம் எல்லாம் பட்டென்று விலகியது போல இருந்தது. பளிச்சென்று இருவரும் சிரித்த படி நடனமாடத் துவங்கினர்.
முருகனின் லீலைகளைச் சொல்லி நடனமாடியபோது, பரமன் முருகனைப் பார்த்து, "என்னப்பா, வள்ளியுடன் வந்திருக்கலாம் எனத் தோன்றுகிறதா" என்றார்.
"நான் இன்று உங்களுடன் இங்கு வரப்போவது தெரிந்தவுடன் அவளும், தெய்வயானையும் நமக்கு முன்பே வந்து நடனத்தை ரசித்துக் கொண்டிருக்கின்றனர்" என்றார் கந்தன். "
"அதுதானே பார்த்தேன் வா என்று சொன்னதும் நீ ஒன்றும் சொல்லாமல் என்னுடன் வந்ததின் காரணம் என்னவாக இருக்கும் என்று"
"தந்தையே, என்ன இது விளையாட்டு, உங்களுக்குத் தெரியாமல் இந்த உலகில் ஏதும் நடக்குமா?"
"அப்பாவும் மகனும் பரஸ்பரம் பாராட்டிக் கொள்வது இருக்கட்டும் நாட்டியத்தை கவனியுங்கள்" என்றார் தேவி.
சிறிது நேரம் கழித்து பலர் மேடைக்கு வந்து மீனாவையும், ப்ரீதியையும் பாராட்டி பேசினார்கள், பரமன் புன்சிரிப்புடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
விநாயகன் பரமனைப் பார்த்து, "தந்தையே, எல்லா அரங்கேற்றத்திற்கும் சென்று அனைத்து கலைஞர்களையும் ஆசீர்வதிக்கின்றீர்கள், உங்கள் எண்ணம் என்ன?"
"விநாயகா, இந்த உலகில் தருமம் தழைக்க, பகை, துவேஷம் அழிய, போர் முற்றிலும் நிற்க ஒரே வழி கலை வளர்வதுதான். கலையில் தன்னை அர்ப்பணித்த எவருக்கும், உலகில் எதையும் வெறுக்கவும் தெரியாது, அழிக்கவும் முடியாது. கலை ஒருவரை பண்படுத்தும், பலப்படுத்தும், அன்பைப் பெருக்கும்"
"தெரியும் தந்தையே, இதை நீங்கள் கூறக் கேட்பதில் எனக்கு ஒரு ஆனந்தம், அவ்வளவுதான்."
அப்போது நந்தியம்பதி, "பெரும, மேடையில் பலர் அந்த இரு பெண்மணிகளையும் பாராட்டிப் பேசியபோது நீங்கள் எதற்காகச் சிரித்தீர்கள்"
"அது வேறொன்றும் இல்லை, அவர்களைப் பாராட்டிப் பேசியவர்கள் இந்த அரங்கேற்றத்துடன் இவர்களது கடின உழைப்பு முடிந்து விட்டது போல பேசினார்களே அதை நினைத்து சிரித்தேன். இந்த அரங்கேற்றம் ஒரு துவக்கம்தான், இவர்கள் இத்தனை வருடங்கள் பெற்ற பயிற்சியின் பலன் இந்த அரங்கேற்றம் இல்லை, இந்தப் பயிற்சியின் பலன் இவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான பேருக்கு இவர்கள் இந்தக் கலையை கற்பித்து இந்தக் கலையை வளர்ப்பதுதான். "
"அவர்களுக்கு துவக்கத்தில் என்ன ஆசீர்வாதம் செய்தீர்கள்"
"நந்தி உன் கேள்விகளுக்கு முடிவே இல்லையா? நான் அவர்களுக்கு ஆசீர்வாதமாக, இந்தக் கலையை பலருக்கு கற்பித்து, வளர்க்க அவர்கள் மனதில் ஒரு விதையை தூவி விட்டிருக்கிறேன்"
மங்களம் பாடி முடித்து மீனாவும், ப்ரீதியும் அனைவரையும் வணங்கி நிற்க, பரமன் மீண்டும் ஒருமுறை தன் வலக்கையை தூக்கி ஆசீர்வதித்து விட்டு ஒரு புன்முறுவலுடன் அனைவருடன் மறைந்தார்.
- முரளி.

Monday, December 04, 2006

தமிழா, ஹிந்தியா?

நாம் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருக்கிறோம். இதைப் பாருங்கள். தமிழ்நாட்டிலேயே பள்ளிக்கூடத்தில் தமிழுக்கு பதில் ஹிந்தி படித்திருக்க வேண்டும் என்கிறார் திருச்சியில் வளர்ந்த, தமிழ் படித்த தேசிகன்.

இதில் எனக்கு உடன்பாடில்லை. தேசிகன் கேட்கிறார்: சுஜாதாவையும் பிரபந்தத்தையும் சொல்லிக் கொடுத்த அப்பா தமிழை சொல்லிக் கொடுத்திருக்க மாட்டாரா என்று? தமிழ் தெரிந்திருக்காவிட்டால் எங்கேயிருந்து சுஜாதாவையும், பிரபந்தத்தையும் சொல்லிக் கொடுப்பது. ஆளை விடுடா சாமி என்று மலைக்கோட்டைக்கு நடையை கட்டியிருப்பார் அப்பா.

வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது ஹிந்தி தெரியாதிருப்பது கேவலமா, திருச்சியில் உட்கார்ந்துகொண்டு தமிழ் தெரியாமலிருப்பது கேவலமா? என் கல்லூரியில் ஒருவன் சீரங்கத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் கற்காமலிருந்தான். அதை பெருமையாக வேறு சொல்லிக் கொள்வான். எத்தனை பெற்றோர்களால் குழந்தைகளுக்கு ஒரு மொழியை சொல்லிக் கொடுக்க முடிகிறது. அது கட்டாயம், கடமை என்று எல்லாம் பட்டி மன்றத்தில் பேசலாம். நடைமுறையில் பத்தில் ஒருவராவது கற்றுத் தருகிறார்களா?

பள்ளியில் மும்மொழித்திட்டம் இல்லா நிலையில், தமிழ் கற்காவிட்டால், வீட்டில் தமிழ் கற்பது கடினம். அதானால் முன்னேறுவார்களா இல்லையா என்பது தேசிகன் சொல்வதுபோல விவாதத்துக்கு அப்பாற்பட்ட விஷயம். தமிழ் அழியும் என்று நான் வசனம் பேசவும் இல்லை. அந்த மாணவர்களுக்கு பள்ளிக்கு வெளியே தமிழ் கற்கமுடியாது என்பதே என் கருத்து. அதுவும் வெளியே தமிழ் கற்றால், பிரபந்தமும் படிப்பது கஷ்டம். குமுதம், விகடன் படிக்கலாம். ஆனால் நாராய், நாராய் செங்கால் நாராய் எல்லாம் தெரியாது.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில்(comment) இடவும்.

Saturday, December 02, 2006

டிசம்பர் மாத லொள்ளு மொழிகள்

கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்
காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம்
ஏன் ஜேம்ஸ் ஆத்துல கூட மீன் பிடிக்கலாம்
ஆனா ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?

கோல மாவுல கோலம் போடலாம்
கடலை மாவுல கடலை போட முடியுமா?

Wednesday, November 22, 2006

பித்தனின் கிறுக்கல்கள் - 5

எனது ஐந்தாவது கிறுக்கலைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.

http://pkirukkalgal.blogspot.com/2006/11/5.html





- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com

ப க(3)...

இத்துடன் இந்தத் தொடரை முடிக்க விழைகிறேன். பார்ப்போம். பிற்பாடு, இன்னொரு நாள், வேறொரு தலைப்பைப் பிராண்ட அவா.

உமா செட்டி அவர்களைப் ப்ற்றி எழுதுவதாக குறிப்பிட்டிருந்தோம். ஆதலால் இந்த சிறு குறிப்பு.

நீங்கள் தமிழராக, ஏன் ஒரு இந்துவாக, இருந்து ரிச்மாண்ட் நகரிலே சில நாட்கள் இருந்திருந்தீர்களேயானால், மாதுஸ்ரீ உமா செட்டி அவர்களை அறியாமல் இருப்பது அரிது. இந்த அம்மையார் பற்றி நான் எழுதி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. ஆயினும் அவர் பெருமையைக் கூறி நான் சிலாகிப்பதில் தவறில்லையே?

நேச்முடன் ஒரு நினைவாக சிந்தை கலங்காது முழு ஈடுபாட்டுடன் தியானிக்கும் முருக பக்தர். மெத்தப் படித்து இருக்கிறார். சி.பி.ஏ மற்றும் எம்.பி.ஏ. அலுவலகத்திலே முழுநேர வேலை பார்க்கிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருக்கிறார். ம்ற்றும் மனைவி, வீட்டிலே எஜமானி. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நடனம் கற்றுக்கொண்டு இருக்கிறார். கற்றும் கொடுக்கிறார். கோவிலிலே முருகனுக்கு முறை தவறாது வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்கிறார். பல ந்டனக்க்லை நட்சத்திரங்களை உருவாக்கியிருக்கிறார். மற்றும் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார். நடனத்துடன் நட்டுவாங்கம் வேறு. எனக்குத் தெரிந்தது இவை. இன்னும் எவ்வளவோ?

ஆகவே. தமிழ்ச்சங்கத் (புது) தலைவர் திரு நாகு-வுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு முறை தமிழ்ச்சங்க மேடையிலே இவருக்கு (உமா), சங்க சார்பாக, "மாது சிரோன்மணி" அல்லது "மாதர் சிகாமணி" என்ற ரீதியில் ஒரு பட்டத்தை அளிக்க ஏற்பாடு செய்யுங்கள். ஒன்று நிச்சயம். அவ்வாறு செய்தீர்களேயானால், அதனால் பெருமை அடையப் போவது சங்கமும் நாமுமே தவிர, உமா அவர்கள் அல்ல. உமா அவர்கள் ரிச்மண்ட் இந்து சமூகத்திற்கு செய்யும் தொண்டை நாம் பரிபூரணமாக உணர்வதாக பகிரங்கமாக சபையில் உணர்த்துவதே இந்த முன்மொழிதலின் நோக்கமாகும். யாராவது இக்கருத்துக்குப் பின்மொழிகிறார்களா பார்ப்போம்.

கடைசியாக ஒன்று. In lighter vein. உமா அவர்களின் கணவர் நிலையை சற்று நினைத்துப் பார்ப்போம். சென்ற ஞாயிறு நடனமாடிய மாதர்கள், கடைசியாக, இன்றுடன் எனது கடின உழைப்பு முடிந்தது என்ற ரீதியில் பேசியபோது, அவரவர் கணவன்மார்களின் முகாந்திரத்திலே ஒரு விடுதலைக்க்ளிப்பு எட்டிப் பார்த்ததைக்கண்டோம். உமா அவர்கள் என்று ரிடையர் ஆவது, என்று அசோக் அவர்களின் முகத்திலே களிப்பைக்காண்பது? அசோக் அருகிலிருப்பது தெரியாததுபோல் அவர்கள் அவ்வாறு பேசியது தவறு. பாவம் அசோக். நாகு இவருக்கும் ஏதாவது பட்டமளிப்பார் என்று எதிர்பார்ப்போமாக.

முற்றும்.

பரதநாட்டியம் ... கண்ணோட்டம் - ஒரு விளக்கம்

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். அஜாத சத்ரு இரு கேள்விகளை எழுப்பியுள்ளார். எனக்குத் தெரிந்த பதில்:
1. பாரதியின் கண்ணம்மா : எனக்குப் பாடம் கற்பித்த ஆசிரிய்ர்கள் மற்றும் நான் படித்த சில பல உரைகள் எல்லாம் சொன்னது இதுதான்: பாரதி கண்ணனைப் பெண்ணாக பாவித்து செய்த கவிதைக்ள் இவை என்று. ஆனால் இந்த நாட்டிய விழாவிலே, ஒரு பாடலை எடுத்து இது பராசக்தியை பாவித்து என்றனர். திக்கித்தேன். நான் கற்றதே தவறோ? இறையனாரும் எம்மான் இலக்குவனாரும் கட்டிக்காத்த தமிழ்ச்சங்கத்திலே இந்தக் கேள்வியை வைக்கிறேன். படித்த்மான்களே. கருத்துக்க்ளை அள்ளி வீசுங்கள். சரியான விடையை, விளக்கத்துடன், அறிய அவா.



இந்த லிங்கில் விடை இருக்குது:

http://www.sas.upenn.edu/~vasur/kili.html


இந்த படத்திலும் இருக்குது:





இலக்குவனார் தெரியும், இறையனார் யார்?


2. RAGAA : ராகம் தமிழ். RAAG ஹிந்தி. ராகா என்ன மொழி? அவர்கள் ஷொன்னார்கள், நம ஷிவாய, போன்ற த்வனிகள் - பேச்சுக்களல்ல - எமக்கு ரத்தக் கொதிப்பைத் தரும். ராகாவும் அதேரகம் போலும். தன்னைத்தானே அறிவு ஜீவி என்று கருதும் ஒரு நடிகர், தங்கிலீஷ் என்பார் இதை. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்....


அண்ணே, யார் அப்படி பேசினாங்கன்னு நீங்க சொல்லலை. உங்க வீட்ல சூரிய தொலைக்காட்சி இல்லை போல இருக்கு, இருந்தா தமிழ் நாட்டில தமிழ எவ்வளவு கேவலமா பேசராங்கன்னு தெரிஞ்சுருக்கும். தமிழ் நாட்டில தமிழ் கத்துக்க, பேச அவ்வளவு சந்தர்ப்பம் இருக்கும்போதே அப்படி தமிழ் பேசரது தப்பா தோணலையா! அட அத விடுங்க தமிழ்ன்னு சொல்லத்தெரியாம தமில்ன்னு சொல்லிகிட்டு இருக்காங்க, அவங்கள விட இங்க அப்படிபட்ட வசதிகளெல்லாம் இல்லாத போதே தமிழ் பேசும் போது தப்பா கொஞ்சம் உச்சரித்தா அது குத்தமா? கூடவே எதுக்கு அந்த நடிகரைப் பாவம் இதுல இழுக்கறீங்கன்னு தெரியலை. அவர் உண்டு அவர் அவதாரம் உண்டுன்னு இருக்கார்.



நாகு சொன்னா மாதிரி நீங்க தோப்புக்கரணம் போடரதைப் பார்க்க நாங்க ரெடி.

- முரளி.









Tuesday, November 21, 2006

பரதநாட்டியம் ... கண்ணோட்டம்(2)

இப்பகுதியிலே சற்றே சர்ச்சைக்குரிய சில விஷயங்களைப் பார்ப்போம்.

முதலில். இதில் எது சரி எது தவறு என்று ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்த்து எழுதுகிறேனே தவிற வேறு சண்டையைத் துவக்க வேண்டுமென்ற எண்ணம் கிஞ்சித்தும் கிடையாது. நல்லெண்ணத்துடன் கூடிய ஆதார பூர்வமான, ஒத்த (ம) எதிர்ப்புக், கருத்துக்களை வரவேற்கிறேன்.

1. பாரதியின் கண்ணம்மா : எனக்குப் பாடம் கற்பித்த ஆசிரிய்ர்கள் மற்றும் நான் படித்த சில பல உரைகள் எல்லாம் சொன்னது இதுதான்: பாரதி கண்ணனைப் பெண்ணாக பாவித்து செய்த கவிதைக்ள் இவை என்று. ஆனால் இந்த நாட்டிய விழாவிலே, ஒரு பாடலை எடுத்து இது பராசக்தியை பாவித்து என்றனர். திக்கித்தேன். நான் கற்றதே தவறோ? இறையனாரும் எம்மான் இலக்குவனாரும் கட்டிக்காத்த தமிழ்ச்சங்கத்திலே இந்தக் கேள்வியை வைக்கிறேன். படித்த்மான்களே. கருத்துக்க்ளை அள்ளி வீசுங்கள். சரியான விடையை, விளக்கத்துடன், அறிய அவா.

2. RAGAA : ராகம் தமிழ். RAAG ஹிந்தி. ராகா என்ன மொழி? அவர்கள் ஷொன்னார்கள், நம ஷிவாய, போன்ற த்வனிகள் - பேச்சுக்களல்ல - எமக்கு ரத்தக் கொதிப்பைத் தரும். ராகாவும் அதேரகம் போலும். தன்னைத்தானே அறிவு ஜீவி என்று கருதும் ஒரு நடிகர், தங்கிலீஷ் என்பார் இதை. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்....

நான் நினைத்ததை எழுதிவிட்டேன். இனி உங்கள் பாடு.
(தொடரும்..)

Monday, November 20, 2006

ரிச்மண்டில் பரத நாட்டியம் ..ஒரு அறிவிலியின் கண்ணோட்டம்

முயற்சி திருவினையாக்கும்....

சுகி சிவம் சொல்வார், "யார் எங்கே என்ன சென்றாலும் கடைசியில் இந்த கிழவன் காலில் விழ வேண்டும்" என்று. ஞாயிறு மதியம் இது மீண்டும் ஒரு முறை உண்மையாயிற்று. இரண்டு மத்திய வயது பெண்மணிகள் சுமார் இரண்டறை மணி நேரம் சற்றும் சளைக்காமல் களிப்புடன் நடனமாடினார்கள். கடைசிவரை முகாந்திரத்திலே புன்னகை குறையவில்லை; சற்றும் சளைப்பு தெரியவில்லை. என்ன அற்புதம்!

மாதர்களின் வயதைப்பற்றி நாகரிகம் குறித்து விமர்சனம் செய்வது கிடையாது. ஆனால் இந்த நிகழ்ச்சியிலே இவ்ர்களின் வயது அவர்களின் பெருமையைக் கூட்டியதே தவிர குறைக்கவில்லை. அறியாமல் செய்தாரோ, அல்ல்து குறும்போ, யாமறியோம். உமா அவர்கள், நாட்டியமாடிய நாரீமணிகளின் வயதைச் சொன்னார். அதிலொன்றும் தவறு நமக்குத் தெரியவில்லை. என் பக்கத்திலே இருந்த ந்(ண்)பர் அது தவறு என்று சொன்னமையால், இதைப்ப்ற்றி எழுத நேர்ந்தது.

விடா முயற்சி. மனதிலே இளமை. மற்றும் வேறென்ன வேண்டும்? சுமார் எட்டு வருடங்களாக பயின்று மற்றும் பயிற்சி செய்கிறார்களாம். "யாண்டு பலவாயினும் நரையிலவாகுதல்.." கவிதையை நான் மீண்டும் பாடம் செய்ய வேண்டும். வெறுமே படித்து என்ன பயன்? கற்ற பின் அதற்குத்தக நிற்க வேண்டாமா? என் போன்ற் சோம்பேறிகளுக்கு விடா முயற்சியும் பயிற்சியும் வேப்பங்காய். அவரவர் கணவன்மார்களும், குழந்தைகளும் உறுதுணையாய் இருந்திருக்கிறார்க்ள். குடும்பத்துடன் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

நமது பரத நாட்டை விட்டு பல நூறு காத தொலைவிலேயிருக்கிறோம் என்ற் நினைப்பேயில்லாமல் லலிதா அம்மையாரின் கான மழையிலே நனைந்தோம், சில மணித்துளிகள். அது எப்ப்டி ஒரே சீராக அவ்வளவு நேரம் பாடினார் அவர்? ஒரு முறையாவது ஒரு க்கும், ஒரு ஹுக்கும் க்னைப்பு இல்லை. சங்கராபரணத்திலே மிதந்தார். தேநீர் இடைவெளியில் நமது கர்ணகடூர தொண்டையிலும் சங்கராபரணம் ரீங்காரித்தது என்றால் பாருங்களேன். பிற்பாடு குறிப்பாக தோடியிலே உயரே பறந்து சஞ்சாரித்தார். கனம் கட்டியபோது நீட்டாமல் சட்டென்று முடித்தார். என்னடா இது இன்னும் கொஞ்சம் சஞ்சாரிக்கக் கூடாதா என்று தோன்றியது என்னவோ வாஸ்தவம்தான். பிறகுதான் தோன்றியது. இது பாட்டுக்க்ச்சேரியல்லவேயென்று. மிருதங்கம், புல்லாங்குழல், வயலின் எல்லாமே ஒருங்கே ஒத்துழைத்தன. இவை எது பற்றியும் விமரிசனம் செய்யும் அருகதை இல்லாத ஞானசூனியம் யாம். உப்புமா கூட பண்ணத்தெரியாது. யாராவது பண்ணினால் சாப்பிட்டு உப்பில்லை, உரப்பில்லை என்று சொல்லத்தெரியும். அவ்வளவே.

க்டைசியாக ஒரு ஆதங்கம். தோடி என்றவுடன். அடுத்த முறையாவது, யாராவது தமிழ்ப்பெண் - சிறுமியோ அல்லது மாதுவோ. நாட்டியமாடும் போது, தாயே யசோதா உந்தன் ... சாகித்யத்தைத் தேர்வு செய்யட்டும். இது ஒரு சாதாரணனின் வேண்டுகோள்.

கடைசியாக ... இவற்றுக்கெல்லாம் காரண்கர்த்தாவான மாதுஸ்ரீ உமா செட்டி அவர்களைப் ப்ற்றி எழுத்வில்லையென்றால் மகாபாபம். இவர் பற்றி அடுத்த குறிப்பில் பார்ப்போம். ....

Sunday, November 19, 2006

அம்பி துருப்பிடிச்சக் கம்பி

தமிழ்த் தென்றல் நாடகக் குழுவின் முதல் நாடகமான அம்பி துருப்பிடிச்சக் கம்பியை வளைப்பதிவில் காண கீழ் கண்ட linkஐ க்ளிக்கவும்.

http://tthendral.blogspot.com/2006/11/blog-post.html

-முரளி.

Tuesday, November 14, 2006

இவர் யார் தெரியுமா?



இந்த பிரபலமான பாடகர் யாரென்று தெரிகிறதா?

சில விநோதமான படங்களும் என்னுடைய குறிப்புகளும்




















அட இன்னாய்யா இந்த சிக்னலோட படா பேஜாரப்போச்சு. ரெட் லைட்டுல லெப்ட் டர்ன் அடிக்கலாம்னு பாத்தா ஸ்ட்ரெய்ட் சிக்னல் விழுந்திடுச்சு.











கண்டக்டர்: பஸ்ஸுக்கு வெளியே தொங்கறவங்க டிக்கட் எடுத்தாச்சா?
LIC எல்லாம் இறங்கியாச்சா? ரைட் ரைட்

குரல்: கண்டக்டர், Hold On நான் இறங்கணும்

கண்டக்டர்: யாருய்யா அது? குரல் மட்டும் கேக்குது. ஆளு எங்க?

குரல்: பஸ்ஸுக்கு மேல roof ல இருக்கேங்க

கண்டக்டர்: LIC 4 வது மாடிக்கு பஸ்ஸு மேலிருந்தே அப்படியே ஏறி போய்யா.

Wednesday, November 08, 2006

நான்.. நான்... நானே சொந்தமா எழுதியது

இங்கும் அங்கும் பார்க்காமல், வலையிலும் சுடாமல், மண்டபத்தில் எழுதியவரிடமும் வாங்காமல், நானே சுயமாக சிந்தித்து, நானே சொந்தமாக உருவாக்கியவை இவை. படித்துக்களியுங்கள் ப்ளாகிகளே!

நபர் 1: ஏன் சார் உங்க பக்கத்து வீட்டுக்காரர் தென்னைமரத்துல குரங்கு
மாதிரி ஏறி அவங்க மொட்டை மாடியில குதிக்கிறாரு?
நபர் 2: அவரு ஒரு வாஸ்து பைத்தியம்.
வீட்டு வாசப்படியை மொட்டைமாடியில் தான் கட்டுவேன்னு
அடம்பிடிச்சு கட்டிட்டு இப்படி குரங்கு மாதிரி குதிக்கிறாரு.

பேஷண்ட்: டாக்டர், நானும் உங்ககிட்ட 2 வருஷமா treatment க்கு வரேன்.
ஆனா ஒரு improvement ம் இல்லையே
டாக்டர்: ஏன் இல்லை? வெளியில பாருங்க. அது என்னோட புது கார்

பேஷண்ட்: டாக்டர், எனக்கு ராத்திரியெல்லாம் தூக்கமே வரமாட்டேங்குது
டாக்டர்: சில பேரு ஆபீஸில நல்லா தூங்குவாங்க. வேணும்னா ஒரு
வாரத்துக்கு ராத்திரி ஆபீசுக்கு போயி பாருங்களேன்
பேஷண்ட்: அதை தான் தினமும் செய்யறேனே
டாக்டர்: என்ன சொல்றீங்க?
பேஷண்ட்: டாக்டர், எனக்கு தினமும் 2nd shift வேலை. ஆபீஸில தூக்கம்
வரலேன்னு தான் சொன்னேன்.

நபர் 1: ஐயா இந்த வண்டி ஏறினா சென்னைக்கு போகமுடியுமா?
நபர் 2: இந்த வண்டி ஏறினா சொர்கத்துக்கே போகலாம்

நபர் 1: அந்த ஓட்டுச்சாவடியில ஒரே கலாட்டாவாமே?
நபர் 2: நம்ம தலைவரு அவரோட ஒட்டு போடும்போது எதிர்கட்சிக்காரங்க
voting machine ஐ reboot பண்ணிட்டாங்களாம்.

நபர் 1: ஓட்டு போட்டவங்க எல்லாம் ஏன் "ஆ" "ஊ" ன்னு கத்திக்கிட்டே
போறாங்க?
நபர் 2: இந்த எலக்ஷன்ல கமிஷனர் உத்தரவுப்படி ஓட்டு போட்டவங்க
கையில மைக்கு பதிலா சூடு போடறாங்களாம்.

Tuesday, November 07, 2006

நான் வாக்களித்த புராணம்

சில வாரங்களாக தினசரியிலும், தொலைக்காட்சியிலும் மாற்றி மாற்றி பிரசாரம் செய்துகொண்டிருந்தவர்கள் கம்மென்று ஆகி, முடிவுக்காக காத்திருக்கையில் நான் ஓட்டுப்போட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முற்பட்டேன். இந்தியாவில் இருந்தவரை ஒரு முறை கூட ஓட்டு போட்டது கிடையாது. ஆனால் அமெரிக்கன் ஆனவுடன் ஏனோ தெரியவில்லை இதுவரை 3 முறை ஓட்டுப்போட்டு விட்டேன். முதல் முறை ஜனாதிபதி தேர்தல், இரண்டாம் முறை ஆளுனர் தேர்தல், இன்று சட்டசபை உறுப்பினர்கள் (ஸெனேடர்/காங்கிரஸ்மன்) தேர்தல். நல்ல வேளை இன்று பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை. பள்ளிக்கு செல்லும் shuttle பேரூந்து பிடிக்க சாரத்தியம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. காலையில் எழுந்து குளித்து, ஆடையுடுத்தி, என் மனைவி கட்டித்தந்த நாஸ்தாவையும், மதிய உணவையும் ஏந்திக்கோண்டு என் வாகனத்தில் புறப்பட்டேன்.

சென்றமுறை சென்ற பள்ளியில் தான் வாக்களிக்கவேண்டும். பள்ளியருகில் சென்று வலக்கைப்பக்கம் திரும்பும் சமிஞை விளக்கைப்போட்டு திரும்பலாம் என்று எண்ணும்போது ஒரு பெரிய கருப்பு "சவ்" வண்டி (S U V) ரிவர்ஸில் வெளியே வந்தது. ஓட்டுனர் கையை அசைத்து உள்ளே பார்க் செய்ய இடமில்லை என்று கூறிவிட்டுச்சென்றார். நானும் வேறு வழியின்றி எதிரில் உள்ள மளிகைக்கடை (Grocery Store) பார்க்கிங் லாட்டில் வண்டியை நிறுத்திவிட்டு சாலையைக்கடந்து பள்ளிக்குள் நடக்க ஆரம்பித்தேன். வழியில் இரண்டொரு கட்சிக்கார ஜால்ராக்கள் துண்டு பேப்பரை வைத்துக்கொண்டு கொடுக்கலாமா வேண்டாமா என்று தயங்கிக்கொண்டிருந்தார்கள். நான் பார்க்காதமாதிரி நைஸாக நழுவிவிட்டு பள்ளியினுள் சென்றேன்.

உள்ளே நுழைந்ததும் ஒரே கூட்டம். ஒரு இளம் பெண் நின்றுகொண்டு A-G முதல் வரிசை, H-L அடுத்த வரிசை, M-Z கடைசி வரிசை என்று சொல்லிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் இருந்த ஒருவரிடம் "அட நமக்கு மூன்று சாய்ஸ் இருக்கே" என்றேன். அவர் சிரித்துக்கொண்டே நைஸாக தன் வாக்காளர் அட்டையை (Voter Registration Card) பார்த்து தான் சரியான வரிசையில் நிற்கிறோமா என்று பார்த்துக்கொண்டார்.

கடைசிப்பெயர் (Last Name) படி வரிசையமைப்புக்கு பதில் கட்சிக்கு ஒரு வரிசை என்றாலும் ஏறக்குறைய 3 தான். அதே நம்மூரில் கட்சி படி வரிசை அமைத்தால் என்னவாகும் என்று நினைத்துப்பார்த்தேன். அதற்குள் வரிசை நகர ஆரம்பித்தது. உள்ளே ஒரு மேஜையில் 3 பேர் இருந்தார்கள். இடது பக்கம் ஒரு வயதான் பெரியவர். வலது பக்கம் ஒரு வயதான பெண்மணி. நடுவில் ஒரு இளம் பெண். பார்க்க இந்திய பெண் போல இருந்தாள். கல்லூரி மாணவி போலுமிருந்தாள். பெயரட்டை (Name Badge) அணிந்திருந்தாள். மிகவும் முயன்று என்ன பெயர் என்று படிக்க முயன்றேன். எழுத்து சிறியதாக இருந்ததால் சரியாகத்தெரியவில்லை. அருகில் சென்று படிக்க முடியவில்லை. மேலும் கூர்ந்து பார்த்தால் டேஞ்சர் என்று அதோடு நிறுத்திக்கொண்டேன். அதற்குள் அந்த முதியவர் என் வாக்காளர் அட்டையை வாங்கி, சோதித்து, பட்டியலில் இருந்த என் பெயரை பெருமிதத்துடன் கண்டுபிடித்துவிட்டார்.
"உங்க பெயரை எப்படி சொல்லலாம்?" என்றார். "மக்காக்கா இல்லை" என்று சொல்ல வாய் வந்தது. ஆனால் ஏடாகூடமாகிவிடும் என்று எண்ணி என் பெயரைச்சொன்னேன். பிறகு நடுவில் இருந்த அந்த சிட்டு கொடுத்த சீட்டை வாங்கிக்கொண்டு நகர்ந்தேன்.

இன்னொரு பெரியவர் வந்து என்னை வாக்களிக்கும் இடத்துக்கு அழைத்துச்சென்று என் சீட்டை வாங்கிக்கொண்டு, ஒரு அட்டியை இயந்திரத்தில் சொருகி எடுத்து "நீ ஓட்டு போடலாம்" என்றார். முதல் முறை போட்டது போல் அட்டையில் ஓட்டை போடவேண்டுமோ என்று எண்ணி பயந்த எனக்கு பளிச்சென்று ஒரு screen கண்ணில் பட்டது. கையால் தொட்டு தொட்டு தேர்ந்தெடுத்து கடைசி பக்கம் வந்தேன். "நீ தேர்ந்தெடுத்தவர்கள் இவர்கள் - சரியா தப்பா என்று கேட்டது". "சரி" என்றேன். பிறகு கடைசியாக ஒரு பெரிய பொத்தானில் "வாக்களி" என்று மின்னியது. டக்கென்று அழுத்திவிட்டேன். "உன் வாக்கு பதிவாகிவிட்டது - நன்றி" என்றது இயந்திரம். சரியென்று சொல்லி நடையைக்கட்டினேன். வழியில் இன்னொரு பெரியவர் "நான் வாக்களித்தேன்" என்று பறைசாற்றூம் ஒட்டியை (Sticker) கொடுத்தார். அதை வாங்கி என் மேலுடையில் ஒட்டிக்கொண்டு அடுத்த தேர்தலுக்குள் பேசாம முன் லாடனை பிடித்து விடுவார்களோ என்று எண்ணிக்கொண்டே என் வண்டியைத்தேடிச்சென்றேன்.

Saturday, November 04, 2006

எதிரொலி மன்னிச்சிக்கபா

எதிரொலி மிச்ச ப்ளாகையும் கரைச்சு குடிச்சு ஜீரணம் பண்ணிட்டிருப்பாருன்னு தெரியும். அதுனால எதிரொலிக்கு எதிரொலியா நானே ஒரு விமர்சனம் எழுதிட்டேன். எதிரொலி கண்டுக்காதே வாத்யாரே. கண்டிப்பா எதிரொலி 3, 4.... என்று வரும் என்று எனக்கு நல்லா தெரியும்.

வலைதளப்பிதா (அதான் Father of WWW) பற்றிய விஷயங்கள் பிரமாதம். அதுவும் தக்குணூண்டு Web Server ஐ வெச்சுக்கிட்டு இன்னா வேலை செஞ்சுக்கீராரு வெப்நைனா (நல்லா இருக்கில்ல இந்த பேரு?). அவரு செஞ்ச முதல் வெப் பேஜ் பார்த்தேன். வியப்பாக இருக்கிறது.

பாக்கெட் வெச்ச புடவை பற்றிய விஷயம் ஜோர். இனிமே பொம்பளைங்களும் பிக்பாக்கெட் ஆசாமிகள் கிட்ட உஷாரா இருக்கணும். அடுத்தது என்ன? வேஷ்டியில பாக்கெட் தானே?

'மடை திறந்து' ராப் ஷோக்கா கீதுபா. ராப்பர்களின் உடைகளும் நல்லாயிருக்கு.

சரி, இனிமே நிஜமான எதிரொலி தொடங்குவாரு. வர்ட்டா? ஜூட்.

Friday, November 03, 2006

வலைவலம்

வலை மேய்ந்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
உருப்படியாக வேலை செய்து உய்வார்.

டிம்-பர்னர்ஸ்-லீ
-யாயனமஹ!

தமிழ்நாட்டு தேர்தல், அமெரிக்கத் தேர்தல் எல்லாம் கிடக்கட்டும். இவற்றையெல்லாம் விட ஒரு முக்கியமான விஷயம் உங்களுக்கு சொல்ல வேண்டும். பாக்கெட் வைத்த சட்டை, பேண்ட், சுடிதார் பார்த்திருப்பீர்கள். பாக்கெட் வைத்த புடவை பார்த்திருப்பீர்களா? இதோ பாருங்கள், குமரன் ஸ்டோர்ஸ் அறிமுகப்படுத்தும் பாக்கெட் வைத்த புடவை. பாக்கெட் சரியாக பக்கவாட்டில் வருமாறு கட்ட சொல்லித்தரும் வீடியோ காஸெட் தருகிறார்களா என்று விசாரிக்க வேண்டும். தம்பி எதிரொலி - கொஞ்சம் கேட்டு சொல்லேன்.

இவர்கள் இதற்கு முன்னால் 3-D புடவை, கலர் மாறும் மாயப்புடவை எல்லாம் தந்திருக்கிறார்கள். நமீதா கட்டும் மாயமாய் மறையும் புடவை யார் தயாரிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Ipod-ல் பாட்டு கேட்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். மற்ற பாட்கேஸ்ட்(யாரவர்?) பற்றியும் கேட்டிருப்பீர்கள். அறைத்துவிட்ட ரசம், பயத்தம்பருப்பு ரசம் பண்ணுவது எப்படி என்று தமிழில் பாட்கேஸ்ட் இருக்கிறது. முழுவதாக டவுன்லோடு பண்ணிவிட்டு சமைக்க ஆரம்பிக்கவும். இல்லாவிட்டால் தங்கவேலு சொல்வதுபோல பயத்தம்பருப்புதான் இருக்கும் ரசத்தை இண்டெர்நெட் அடிச்சிக்கிட்டு போயிடும். அந்த தளத்தில் மேலும் அவியல், மோர்குழம்பு மற்றும் கறிவேப்பிலை சட்னி பண்ணுவது எப்படி என்று என்னினிய தமிழ் மக்களுக்கு சுளுவாக புரிகிறமாதிரி ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார் சிங்கப்பூரில் இருந்து மாத்திஸ். சாப்பிட்டு பார்த்து சொன்னவர்கள் பாட்கேஸ்ட் இருந்தால் கொஞ்சம் தைரியமாக இருக்கும்.

நீங்கள் சில பல பதிவுகளை தொடர்ந்து படிப்பவராய் இருந்தால் ப்ளாக்லைன்ஸ், கூகுள் ரீடர் போன்ற இலவச சேவைகளை பயன்படுத்திப் பாருங்கள். யார் புதிதாய் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு பக்கத்திலேயே தெரிந்து கொள்ளலாம். சும்மா வலை மேயத் தேவையில்லை. நீங்கள் படிக்கும் தளத்தை உங்கள் ப்ளாக்லைன்ஸ் பட்டியலில் சேர்க்க சுலபமாக நெருப்புநரி 2.0 விலும், IE7லிம் வசதி இருக்கிறது. நான் மேயும் தளங்கள் இதோ. கவலைப்படாதீர்கள், பலான பதிவெல்லாம் அதில் இல்லை.

பேட்டை ராப் எல்லாம் ஜுஜுபி. அதுக்குத் தாத்தா ராப் இங்கே பாருங்க. பட்டிமன்றத்து பேச்சாளர்கள் இதை தவறாமல் பார்க்கவும். நம்ப ஊர் கிழியற கிழிக்கு...

செவ்வாய் கிழமை அமெரிக்கத் தேர்தல் பற்றி கணிப்பு சொல்லலாம் என்று யோசித்தேன். எதற்கு வம்பு? ஏற்கனவே பித்தனார் வாங்கிக் கட்டியிருக்கிறார். உனக்கெதுக்குடா 'மக்காகா' இதெல்லாம் என்று எதிரொலி சவுண்டு விட வாய்ப்பு கொடுப்பானேன்?

சரி - இரண்டாவது ரவுண்டு கூட்டாங்ஸ் பற்றி இங்கே பாருங்கள். கவிதை மற்றும் கதை.
நிறைய புண்ணியவான்கள் ரிச்மண்ட் தமிழ் காங்கிரஸில் (அதாங்க இந்த பிளாக்) சேர்ந்து விட்டு (ஓட்டுப்) பதியாமல் இருக்கிறார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாதிரி பிளாகாத பிளாகிகள் சங்கம் ஆரம்பித்து அங்கே பிளாக் கடத்திவிடுவேன் என்று எச்சரிக்கிறேன். நவம்பர் 12ல் எல்லோரையும் தமிழ் சங்க தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் விழாவில் சந்திக்கலாம். என்னைத் தெரியாதவர்கள் அங்கே என்னை சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளலாம். மேடையில் ஒரு பாட்டுக்கு ஜால்ரா அடிக்கக் கூப்பிட்டிருக்கிறார்கள்.

Thursday, November 02, 2006

எதிரொலி - 2

அல்லாருக்கும் வட்ட சலாம்.

பித்தனின் துவக்கம் - நல்லா போட்டு தாக்கு, ஏய் போட்டு தாக்குன்னு ஆரம்பிச்சிருக்காரு. அது என்ன கிறுக்கல்கள்-ன்னு பேர் வச்சிருக்கார்? 'தேர்தல் தினமும் மற்ற எல்லா தினங்களைப் போலவே சாதாரணமாக இருக்கும்' -ன்னு எழுதியிருக்கார், அதுதான் தப்பா போயிடுச்சு. மதுரை-ல நல்லா நடந்த தேர்தல், சென்னை உள்ளாட்சித் தேர்தல்ல சுனாமி மாதிரி காட்டிட்டானுங்க.

கிறுக்கல்கள் - 2 - அய்யா கோபம் ரொம்ப ஜாஸ்தியாகீது, control yourself, அல்லாங்காட்டி அல்சர் வந்துடும். 'ஜென்டில்மேன்' படத்தில் செந்தில் சொல்வாரே அது மாதிரி, less tension more work.

முரளி: 55 வார்த்தை சிறுகதைகள் நல்லா இருக்கு. மனிதாபிமானம் - நீங்க கலைஞனுக்கு சொன்னது போல நாடகத்தனமாதான் இருக்கு, ஆனா நல்ல ட்விஸ்ட். கம்பன் கவி இன்பம், எனக்கு அவ்வளவா தமிழ் தெரியாது so no comments.

கிறுக்கல்கள் - 3 - அண்ணே என்ன writer's blockஆ, சும்மா comments போட்டு ஜகா வாங்கிட்டே?

பரதேசியின் தீபாவளி கவிதை - அய்யா என்ன தமிழ் வாத்தியார் பையனா? பானாவுக்கு பானா, சனாவுக்கு சானா ன்னு கோர்வையா அடிச்சு விட்ருக்காரு.

கிறுக்கல்கள் - 4 - தலைவா தனிக்கட்சி போட்டுகினியா, I coming, your blog, ஒன் சீட் ப்ளீஜ்.
ஆமா, இன்னா சாஃப்ட்டா பூட்ட, ஓ ஷாட் பூட் த்ரீ தான் போட்டியா, நமக்கு ரைட் ஜூட் சொன்னா போதும் (பின்ன அடுத்தவன் கஷ்டப் பட்டு எழுதரத என்னை மாதிரி சும்மா வெட்டியா comment அடிக்கரவங்களுக்கு, writer's block-க்கே வராது) எளுதி தள்ளிடுவேன்.

நவம்பர் மாத லொள்ளு : அதோட இதையும் சேர்துக்கங்க:
தலைவலி மாத்திரை சாப்பிட்டா தலைவலி வருமா,
பேதி மாத்திரை சாப்பிட்டா பேதி ஆகுமா etc....

அடுத்த தபா பித்தன் சொல்லியிருக்கர டுபுக்கு, வெட்டிப் பயல் ப்ளாக்கை படிச்சுட்டு my comments putting.

Tuesday, October 31, 2006

எதிரொலி - 1

நாகு அவர்களே, ஜெயகாந்தன் அவர்களே, எங்க அண்ணாச்சி அவர்களே (உன்னையெல்லாம் மரியாதையா கூப்புடரத எண்ணி த்சொ த்சொ, ஒன்னும் இல்லை விஸ்கி விஸ்கி அழுதேன்). மற்றும் இந்த ப்ளாக்கில் நான் எழுதப் போவதையெல்லாம் தொடர்ந்து படிக்க இருக்கும் கோடான கோடி (ஒரு கோடில நாகு, இன்னொரு கோடில ஜெயகாந்தன்) தமிழ்(ள்/ல் எதுனாச்சும் போட்டுக்குங்க) மக்களே அல்லாருக்கும் வன்கம். நானும் எதிரொலின்னு ஒரு ப்ளாக் புடிச்சு வெச்சுட்டேன், கபால்ன்னு நீங்க என்னை வெளில தள்ளிட்டா என்ன பண்றது, அதான்.

பழைய பதிப்புகளை கொஞ்சம் பிரிச்சு மேஞ்சிருக்கேன். யாருக்காச்சும் sad-ஆ இருந்தா மன்சிகப்பா.

பரதேசியின் ஆகஸ்ட் மாசக் கதை படிச்சேன், தலைப்பு இல்லை கால்ப்பு தான்னு சொல்லிட்டு 'இது எப்படி இருக்கு'-ன்னு கேட்டு இருக்கார். நல்லா கனவு கண்டு எழுதியிருக்கார். நம்மூர்-ல இப்ப எல்லாரும், வயசு வித்தியாசம் இல்லாம செய்யரது கனவு காண்றது. பரதேசியாரின் கனவு கொஞ்சம் டேஞ்சர்தான், இந்தியால இப்ப இருக்கற ஜனத்தொகைக்கு மேல உங்க ஊர்ல இருந்து ஆட்கள் வந்தா கிழிஞ்சுடும், இருந்தாலும் நல்லா கீதுபா.

'இது ஞாயமா' 'புல்லின் டைரி குறிப்பு' ரெண்டும் கவிதையா, கட்டுரையா?

'ஒரு குடாக்கின் புலம்பல்' - கொஞ்சம் நெருடுதே வார்த்தைலாம்.
'பூபாளம் பாடும்போது நீலாம்பரி பாடினால்' அம்மா தாச்சுகினாங்கன்னு அர்தம் ஆவுது,
'நான் சீரியல் சாப்பிடும்போது நீ ஸீரியல் பார்க்கிறாய்' -ன்னா முய்சுகினாங்களா
'நான் அலுவலகம் கிளம்பும்போது நீ அவுட்டிங் கிளம்புகிறாய்' - முய்சுகினு மிட் நைட் ஷாப்பிங்கா?
'நான் உணவருந்தும்போது நீ நித்திரையில் ஆழ்கிறாய்' - மதியம் லஞ்ச்சா? அப்ப அம்மா மருடி தூங்கிட்டாங்களா?

நீ இருப்பதோ இந்தியாவில் நான் இருப்பதோ அமெரிக்காவில்
உனக்கோ வெகேஷன் எனக்கோ டென்ஷன்

இப்படி சொன்னா டைமிங் ஒத்து வர்லியே? சரி ரைமிங்கா இருந்தா சரின்றீங்களா, ஒகே.

வேதாளம் நல்லா வந்து இருக்கு, உங்க ஊர்காரங்களுக்குத்தான் அது புரியும்னு நினைக்கிறேன். எங்க அண்ணாத்தே 3 பேர கண்டு புடிச்சுட்டான்.

செப்டம்பர் மாதப் பதிப்புகளில், கொலு பற்றி நாகுவின் விளக்கங்கள் நல்லா இருக்கு.
உயிருள்ள சொற்றொடரகளும், சைவமா வைஷ்ணவமா அருமை. நல்லா என்ன மாதிரி பயலுகளையும் படிக்க வெச்சுட்டார்பா. ஆயிரம் ஆண்டுகளில் முதல் பாயிண்டா 'என்னை மாதிரி ஒன்னு ரெண்டு பேர் நக்கீரன் வேலை பண்ணிட்டு இருப்பாங்க' -ன்னு சேத்துடுங்க.

அக்டோபர் மாதப் பதிப்புகளில், முரளியின் அவருடைய comments பகுதியில் கலைஞனின் 2வரி கதைகளை மாற்றி எழுதியிருக்கார் அதுவும் நாடகத்தனமாகத்தான் இருக்கு.

பசியோடு தென்னை மரத்தடியில் ஒரு தேங்காய் விழாதா என இருந்தவனுக்கு
சித்ரகுப்தன் சொன்னான் விழுந்த தேங்காய் ரொம்ப கனம் என்று.

இது நல்லா இருக்கு.

சென்னையில் அடை மழை. தொட்டுக்க சாம்பார், கெட்டி சட்னி, அவியல் எதுவும் கிடையாது.

மத்தது அடுத்த தபா ரைட்டா?

முடிச்சு வைக்க வாங்க..

ரமேஷ் தன் கைபேசியில் நண்பனை அழைத்தான்.

மறுமுனையில் குரல், "ஹலோ.. யார் பேசரது.."

"டேய் வெண்ணை. எத்தனை வாட்டி உன்னை கூப்பிட்டு மெசேஜ் விடறது. அப்படி என்ன வெட்டி முறிக்கர வேலை ஒனக்கு. திருப்பி கூப்பிட மாட்டயாடா?"

"மெசேஜ் விட்டயா? எப்ப.. எனக்கு மிஸ்டு கால் ஏதும் இல்லையே.."

"போன சனிக்கிழமை மதியம் 2 மணி போல கூப்பிட்டேன். பிறகு செவ்வாய்கிழமை சாயந்திரம் பண்ணினேன்."

"வேலை கொஞ்சம் அதிகம். சரி என்ன விசயம்னு சொல்லு."

"ஒன்னும் இல்லடா கோபால். சும்மாதான் பண்ணினேன். தீபாவளி ரிலீஸ்'ல எந்த படம் பார்த்தே? எது நல்லா இருக்கு.?"

"----------------------------------------------------------------"

இந்த குட்டிக்கதையின் முடிவை ஒரே வரியில் முடியுமாறு பின்னூட்டத்தில் எழுதுங்க.. கோடிட்ட இடத்தில் நான் எனது முடிவு வரியை 2-3 நாளில் பதிக்கிறேன்.

நவம்பர் மாத லொள்ளு மொழிகள்

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்
ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா?

ஸ்கூல் test ல பிட் அடிக்கலாம். காலேஜ் test ல பிட் அடிக்கலாம்.
ஆனா blood test ல பிட் அடிக்க முடியுமா?

அனைவருக்கும் எதிரொலியின் வணக்கம்

ஐயா வணக்கமுங்க. உங்க ப்ளாக்ல எழுதியிருக்கர படைப்புகள படிச்சேன். நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் (எங்க அண்ணன் தான்) ஒரு லிங்க் அனுப்பி எனக்கு டைம் இருந்தா எழுதச் சொன்னாரு. முதல்ல இதுவரை எழுதியிருக்கரவங்க படைப்புகளப் பார்த்தா, நம்ம கதை கந்தல்ன்னு நினைக்கிறேன். நமக்கு (என்னடா பெரிய பருப்பு மாதிரி நமக்கு நமக்கு-நு எழுதரான்னு திட்டாதீங்க, என்னை நான் மதிக்கலைனா வேற யார் மதிப்பாங்க, அதான்) அவ்வளவா நல்ல தமிழ் வராது, இங்கிலீஷ் கலக்காம தமிழ் பேசவே வராது, இருந்தாலும், அண்ணாத்தே சொல்லிட்டாரேன்னு எழுதறேன். தப்பு இருந்தா சொல்லுங்க (திருத்திக்க மாட்டேன், எங்க அண்ணன் யாருன்னு சொல்றேன் அவனை பெண்டு எடுங்க, என்னை 'கவனிக்கனும்னா' சிங்காரச் (இப்போ கொஞ்சம் சொதச் சொதச்) சென்னைக்கு வாங்க, அது நம்ம பேட்டை யாபகம் வெச்சுக்கங்க).
என்னாடா எதிரொலி-ந்னு பேர் வெச்சிருக்கேன்னு கேட்பீங்கன்னு பாக்கறேன் ஒருத்தரும் கேக்கல, போனாப் போவுதுன்னு இந்த தடவை நானே சொல்லிடறேன். நெக்ஸ்ட் டைம் நீங்கதான் கேக்கனும் ரைட்டா.

முன்பு ஒரு காலத்தில, சென்னைத் தொ(ல்)லைக் காட்சியில் ரொம்ப ஃபேமஸ் ப்ரோக்ராம் எதிரொலி, அதுல T.S. நாராயணஸ்வாமின்னு ஒருத்தர் வருவார் (பேர் குன்ஸாதான் ஞாபகம் இருக்கு தப்பா இருந்தா, இதுக்கெல்லாம் கட்டைய தூக்கிட்டு வராதீங்க, இதெல்லாம் பேசி தீத்துக்க வேண்டியது), அவரால அந்த ப்ரோக்ராம் சக்க போடு போட்டது, அந்த ஞாபகத்தில இந்த பேரை வெச்சுகிட்டேன், (ஒன் கோலி சோடா ப்ளீஸ்).

மொதல்ல இங்க வந்திருக்கிற கதை, கவித எல்லாத்தையும் பிரிச்சு மேஞ்சிடலாம்னு இருக்கேன். ஒரு தபா யாரோ சொல்லி ஒரு பெரியவர் கேட்டு (நாந்தான்) இன்னிக்கு சொல்றது என்னடான்னா, 'A critic need not be a professional', so, இதுக்கும் கழி, கம்பு எடுத்துகிட்டு வராதீங்க, பாவம் அறியாபுள்ள தெரியாம சொல்லிகினான்னு உடுங்க. (ஐ எனக்கும் நல்லா எதுகை மோனைல எழுத வருது, okay okay, இதெல்லாம் நமக்கு ஜகஜமப்பா).

அடுத்து உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் நன்பன் எதிரொலி.

(பி.கு. இப்படி ஒரு தடவை வணக்கம் சொல்லி எழுதிப் பாக்கனும்னு ரொம்ப நாளா ஆசை, எழுதினதுக்கு அப்பரம்தான் தெரியுது சகிக்கலன்னு)

Friday, October 27, 2006

பித்தனின் கிறுக்கல்கள் - 4

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

என்னுடைய கிறுக்கல்களை http://pkirukkalgal.blogspot.com என்கிற ப்ளாக்கில் படித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் (அதாங்க comments) தரவும்.

எனது நாலாவது கிறுக்கலைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.

http://pkirukkalgal.blogspot.com/2006/10/4.html

- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Monday, October 23, 2006

யார் தலை(வர்)?


தொண்டர்களென்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும். தலைவர் சிலைக்கு மாலை போடலாம். ஆனால் தலைவர் தலையே தெரியாமல் மாலை போட்ட தொண்டர்களின் அபிமானத்தை என்ன சொல்வது?

Saturday, October 21, 2006

கூட்டாங்'ஸ்

அது என்ன கூட்டாங்ஸ்? இந்த வலைப்பதிவில் எழுதும் அன்பர்களின்(சுருக்கமாக பிளாகிகள்) கூட்டு முயற்சியான ஒரு கூட்டாங்கதை, ஒரு கூட்டாங்கவிதை - சேர்த்து சுத்தத் தமிழில் கூட்டாங்ஸ். ஆனால் கூட்டாங்கவிதை இந்த முறை ஒருவர் படைப்புத்தான். கூட்டாங்கதைதான் உண்மையில் கூட்டாங்கதை. நான் எங்கேயோ ஆரம்பித்ததை அனைவரும் கடத்திச் சென்று கடைசியில் தமிழீழத்தில் விட்டு விட்டார்கள்! நீங்களும் படித்துப் பார்த்து கொஞ்சம் திட்டினால் எங்களுக்கெல்லாம் சற்று உற்சாகமாக இருக்கும்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Friday, October 20, 2006

தீபாவளி

போராடி கிடைத்த போனஸ்
பளபளக்கும் பட்டாடை
பலவிதத்தில் பணியாரம்
படபடக்கும் பட்டாசு
பழங்கதையில் புதுப்படம்
இது தான் தீபாவளி என்பதோ?
ஆம் இது தான் பாமரனின் தீபாவளி

மினுமினுக்கும் மோதிரம்
கைகனக்கும் கடிகாரம்
ஜொலி ஜொலிக்கும் வேட்டி
பளபளக்கும் மோட்டார்பைக்
பல்லுடைக்கும் மைசூர்பாக்
படபடக்கும் மைத்துனன்
பரபரக்கும் மாமியார்
பல்லிளிக்கும் மாமனார்
இது தான் தீபாவளி என்பதோ?
ஆம் இது தான் புது மாப்பிள்ளையின் தலை தீபாவளி


சிடுசிடுக்கும் மாப்பிள்ளை
சரிக்கட்டும் செல்லப்பெண்
சிக்கல் தீர்க்கும் மனைவி
சிரித்துக்குலுங்கும் பேத்திகள்
சிலுமிஷம் செய்யும் பேரன்கள்
இது தான் தீபாவளி என்பதோ? இல்லை

வாசலில் நின்று பயமுறுத்தும் மளிகைக்கடைக்காரர்
வழியில் மடக்கி வாதாடும் தையல்காரர்
விட்டு விட்டு தலையை சொரியும் தபால்காரர்
இது தான் தீபாவளி என்பதோ? இல்லை
தபாலில் வந்து மதிமயக்கும் மாஸ்டர் கார்ட் பில்
தவராமல் வந்து விழி பிதுக்கும் விசா கார்ட் பில்
இது தான் தீபாவளி என்பதோ?
இது பாமரனின் தீபாவளியல்ல
இது புது மாப்பிள்ளையின் தலை தீபாவளியுமல்ல
இது தலைவரின் தீபாவளி
ஆம் குடும்பத்தலைவரின் தீபாவளி!


உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
ப்ளாகிகளே! மேலும் மேலும் ப்ளாகுக!

Tuesday, October 17, 2006

வலையில் சுட்டவை

தமிழ்நாட்டு அரசியல் YouTubeல் இணையம் சிரிக்கிறது (சந்தியெல்லாம் இந்த இன்டெர்நெட் உலகில் ரொம்ப சிறுசுங்க)



அரசியல் கிடக்கட்டும். இரண்டரை வயது வாண்டு தபலாவில் என்னமாய் கலக்குகிறான் பாருங்க!

படித்ததில் பிடித்தவை

"அரண்மனை தையல்கரரிடம் மன்னர் ஸ்பெஷலாக ஆர்டர் கொடுத்திருக்கராமே?"
"ஆமாம், முன் பக்கமும் பின் பக்கமும் ஒரே மாதிரி தெரியும்படி சட்டை தைக்கச் சொல்லியிருக்கார். போரில் புறமுதுகிட்டு ஓடும்போது மானக்கேடா இல்லாம இருக்கத்தான்!"


நன்றி: ஆனந்த விகடன்

Monday, October 16, 2006

கணவன் மனைவி ஜோக்

மனைவி - என்னை எந்த அளவு காதலிக்கிறீங்க
கணவன் - ரொம்ப, சொல்லப்போன ஷாஜகான் மாதிரின்னு வச்சிக்கோயேன்
மனைவி - சரி, அப்படீன்னா எனக்காக தாஜ்மகால் கட்டுவீங்களா
கணவன் - பிளாட் ரெடியா இருக்கு, நீ தான் லேட் பண்ணிக்கிட்டு இருக்க

தருமி
கடைகளிள் பொருள்கள் வாங்கும் போது நமக்கு கொடுக்கும் பைகளிள் உள்ள படங்கள் சில













































பிளாகிகளின் கூட்டாங்கதை!

ரிச்மண்ட் பிளாகிகளின்(ரமேஷின் பிரயோகம்) கூட்டு முயற்சியில் ஒரு கூட்டாங்கதை உருவாகிறது. மெகா சீரியல் மாதிரி போகும் கவலைக்கிடமான அறிகுறிகள் தோன்றுகின்றன. பார்க்கலாம் எப்படி போகிறதென்று. கூடிய விரைவில் பார்ட்டிகளில் செல்வி, மெட்டிஒலியைவிட கூட்டாங்கதை பற்றி விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

பித்தன், பரதேசி, நீர்வைமகள்,தருமி, ஓம்கார், ஜெயகாந்தன், ஷன், கவிநயா, நடராஜ மூர்த்தி மாமரத்துப்பட்டி, முரளி, ரவி, அஷோக்,தமில் பிளாகர் என்று சபை களைகட்டுகிறது. அனைவரும் அமைதிப்படையிலேயே தங்கிவிடாமல், சற்று கொஞ்சம் பதிவுகளை வீச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்ற வார இறுதியில் ஒரு பூஜையில் காதில் விழுந்தவை:

"ஜெயகாந்தன் என்ற பெயர்ல யாரு எழுதறது?"
"ஜெயகாந்தன்தான்".

"நிஜமா சொல்லுங்க, நீங்கதானே பித்தன்".
"யோவ், யார பாத்து பித்தன்ற?".
"இல்லண்ணா, ப்ளாக்ல எழுதறது நீங்கதானே?"
"ப்ளாகா? யாரவர்??"

"எனக்கு நிச்சயமா தெரியும், நாகுதான் பரதேசின்னு. சும்மா பாவ்லாகாக நாகு பேர்ல பரதேசி பதிவில் கமெண்ட் வேற எழுதறான். சுத்தமா வேல இல்ல போல இருக்கு".

"பித்தன் முத்துதான்"
"இல்லய்யா, அவர்தான் அஷோக்ன்ற பெயர்ல எழுதராரே"
"அது அஷோக் முத்துய்யா"
"என்னய்யா குழப்பற"

"ஓம்கார்ன்ற பேர்ல எழுதறது யாரு?"
"முதல்ல எழுதட்டும். அப்பறம் கண்டுபிடிக்கலாம்"

"ரவின்ற பேர்ல எழுதறது யாரு?"
"ரவிதான்"
"எந்த ரவின்னு கேட்டன்யா"
"முதல்ல எழுதட்டும். அதயும் அப்பறம் கண்டுபிடிக்கலாம்"

"RTS Blog தமிழ்நாடு காங்கிரஸ் மாதிரி ஆயிடிச்சி"
"ஏன்?"
"படிக்கறவங்கள விட அதுல எழுதறவங்கதான் ஜாஸ்தி"


அதுக்குமேல தாங்க முடியவில்லை. உட்டேஞ்சவாரி! உலகத்து அனைத்து மூலைகளிலும் படிக்கப்படுவது நமது பதிவுகள். சான்று? இதோ!

அமேயாவின் ரங்க பிரவேசம்!


சாரதா, பாபு ஜம்மி தம்பதியினரின் மகளான அமேயா ஜம்மி நவம்பர் 5ம் தேதி மதியம் 3.30 மணிக்கு காட்வின் பள்ளியில் ரங்க பிரவேசம் செய்கிறாள். குச்சிபுடி நாட்டிய ரசிகர்கள் அனைவரையும் ஜம்மி குடும்பத்தினர் இந்நிகழ்ச்சிக்கு வரவேற்கிறார்கள்.

Sunday, October 15, 2006

நான்கு வயது ஆதித்யாவுக்கு உதவி

நான்கு வயதே நிரம்பிய ஆதித்யாவுக்கு புற்றுநோய். இந்தியாவில் இருக்கும் அவனுக்கு சிகிச்சை அமெரிக்காவில்தான் கிடைக்கிறது. அவன் மருத்துவச் செலவுக்கு உங்களால் முடிந்த உதவி செய்தால் நல்லது. இந்த விவரங்களை தேசிகன் பக்கத்தில் படித்தேன்.

ஆதித்யா பற்றி விவரங்கள் இந்தத் தளத்தில் காணுங்கள். இந்தியாவில் புற்றுநோய் நோயாளிகளுக்கு உதவ ஒரு அமைப்பு இருக்கிறது. நீங்கள் விரும்பினால் அந்த நிறுவனத்திற்கும் உதவலாம்.

இன்னொரு முக்கியமான வேண்டுகோள். உங்களால் முடியும்போது எலும்பு மேரோ(தமிழில் என்ன?) தானம் செய்ய பதிந்து கொள்ளுங்கள். ஒரு உயிரைக் காக்கும் புண்ணியம் கிட்டலாம் உங்களுக்கு. => http://www.marrow.org/

Thursday, October 12, 2006

இலக்கியப் போட்டி

The deadline for RTS Literary competition has been extended to October 31, 2006.

இலக்கியப் போட்டியில் கலந்துகொள்ள இன்னும் நேரம் இருக்கிறது. முழு விவரம் இங்கே.

Wednesday, October 11, 2006

பித்தனின் கிறுக்கல்கள் - 3

பித்தனின் கிறுக்கல்கள் - 3
தமிழ் சங்கத்துக்கு ஒரு யோசனை:
சமீபத்தில் இலக்கியப் போட்டி 2006-க்கான அறிவிப்பு வந்து இருக்கிறது. மேலும் பரிசுன்னு சொல்லாம, எல்லா படைப்புகளையும் படைப்பாளர்களின் புகைப்படங்களோடு இந்த வளைத்தளத்தில் வெளியிடலாமே? இதனால, ஒன்னு - நிறைய பேர் கலந்து கொள்வார்கள், ரெண்டு - பொறாமை இருக்காது, ஒரு அறிஞன் சொன்னது We see things not as they are but as we are-னு இது இந்த போட்டிக்கு கண்டிப்பாகப் பொருந்தும் காரணம், இந்தப் போட்டியில தலைப்பு எதுவும் தராததினால யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் எழுத முயற்சி செய்யலாம், அது நடுவர் குழுவுக்குப் பிடிக்கலைன்னா நல்லா எழுதியிருந்தாலும் பரிசு கிடைக்காதே? ஊதர சங்கை ஊதிட்டேன், இனி சங்கத்தின் பொறுப்பு, பண்ருட்டியார் பொறுப்பு. 'நாராயண, நாராயண'.
தமிழ் சங்கத்தின் தற்போதைய செயற் குழுவின் பணிக்காலம் முடியப் போவதால், அடுத்த குழுவினர்களைத் தேர்ந்து எடுக்கும் பணியும், பொறுப்பும் அவர்களுக்கு வந்திருக்கிறது. அவர்களின் இந்த முயற்சி இனிது முடிய என் வாழ்த்துக்கள்.
போன வெளியீட்டில் ஒரு சில யோசனைகளைச் சொல்லியிருந்தேன், அது அந்த வெளியீட்டில் கடைசியில் இருந்ததால், பலர் பார்வையில் பட்டிருக்காது எனவே, மீண்டும் ஒரு முறை - சங்கு ஊதி விடுகிறேன்.
பட்டிமன்றம்
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் வகையில் ஒரு பட்டிமன்றம் நடத்த இருக்கின்றோம் என்று ரிச்மண்ட் தமிழ் சங்கத்திலிருந்து அறிவிப்பு வந்து இருக்கிறது. செவிக்கு நல்ல விருந்தாக இருக்கும். அரட்டை அரங்கம் போல ஒன்றுகூட செய்யலாம் நல்லா பொழுது போக கத்தி பேசலாம். நிறைய குழந்தைகள், பாட்டு, பரத நாட்டியம் பயில்கிறார்கள் அவர்களுக்கு பாட்டு போட்டி வைத்து 'சப்தஸ்வரங்கள்' போல ஒன்றும் செய்யலாம். கலந்து கொள்ளும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசு என்று வைத்துவிட்டால், போட்டி நல்ல களை கட்டும்.
இந்த ப்ளாக் பற்றி
இந்த ப்ளாக்ல நிறைய இலக்கிய படைப்புகள் வெளியிட ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு சந்தோஷம் எனக்கு போட்டியா யாரும் இன்னும் அரசியல் விமர்சனம் எழுத ஆரம்பிக்கல, அது கொஞ்சம் ஆறுதலா இருக்கு.
55 வார்த்தைல கதை கேட்டு இருக்கார் முரளி:
சுஜாதா சொன்னது:
ஒரு ஊர்ல ஒரு நரியாம் அத்தோட கதை சரியாம்
சுவற்றில் ஆணி அடிக்கும் முன் வேலைக்காரப் பையன் கேட்ட கடைசி கேள்வி, ஏங்க
வீட்டில concealed wiring-நு சொன்னீங்களே, மெயின் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டீங்களா?
நான் சமுதாய அவலங்களைச் சாடுவதாக முரளி எழுதியிருக்கார், உங்க எல்லோருக்கும் உள்ள கோபம் என்னிடத்தில் வார்த்தைகளாக வெடிக்கிறது நீங்கள் மனதுக்குள் பொருமுகிறீர்கள் அவ்வளவுதான்.
சமீபத்தில் வந்த சில அறிக்கைகள்:
மக்களுக்காக கக்கூஸ் (கழிப்பறை) கழுவவும், தெருவைக் கூட்டவும் கூட நான் தயார் என்று தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பேஷ் பேஷ், இதைவிட கீழே இறங்கி வேறு யாரும் ஓட்டு கேக்க முடியுமா?
************************************************************************
மதுரை மத்திய தொகுதியில் வாக்காளர்களைக் கவர கட்சிகள் கொடுத்த பணத்தில் கள்ள நோட்டுக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அப்படி போடு அறுவாள! ஓட்டும் கிடைக்கும், கள்ள நோட்டும் கையை விட்டு போயிடுச்சுன்னு கட்சிகள் சந்தோஷப் படும். வாங்கினவங்கதான் பாவம், திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி ஆயிடுச்சு.
************************************************************************
கருணை மனுக்களை பரிசீலிக்கும்போது அரசியல், சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் தண்டனையை ரத்து செய்வதோ, குறைப்பதோ கூடாது என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
சபாஷ், இது போன்ற தீர்ப்புகள்தான் நம் நாட்டில் நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கையை மேலும் வலுப் படுத்துகின்றன.
************************************************************************
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்கு செலவுக்குக் கூட அதிமுக பணம் தரவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
என்னங்க இப்படி சொல்றீங்க, அவங்க தயவால ரெண்டு MLA சீட் கிடைச்சு இருக்கு, அதை வெச்சு எவ்வளவு சம்பாதிக்க முடியும்!
************************************************************************
தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஒருபோதும் விரும்பியதில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைளை ஒழிக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அதிபர் கூறியுள்ளார்.
மெய்யாலுமா!!! ஐ, சும்மா டமாஸ் பண்ணாதீங்க.
************************************************************************
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி பல ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார், எனவே அவரை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் கோரியுள்ளார்.
அதோட விடுவானேன், அவங்களுக்கு ஒரு MLA சீட்டும் வாங்கி கொடுத்துடுங்க பாவம் பொழைக்கரதுக்கு ஒரு வழி கிடைச்சாமாதிரி இருக்கும்.
************************************************************************
ஏர் இந்தியா விமானத்தை பறவை தாக்கியதால் லண்டனிலிருந்து டெல்லி வர முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி பரிதவித்த விமான பயணிகள் ஒரு வழியாக 3 நாட்களுக்குப் பிறகு தலைநகர் வந்து சேர்ந்தனர்.
விமானத்துக்கு பறவைக் காய்ச்சல் வந்து இருக்குமோ?
************************************************************************
இந்தவாரம் அரசியல் விமர்சனம் இல்லை! உள்ளாட்சி தேர்தல் முடிவும், மதுரை மத்திய தொகுதிக்கு இடைத் தேர்தல் முடிவும் வந்ததும் நிறைய எழுதலாம்.
இந்தப் பதிவை பித்தனின் ப்ளாக்கில் படிக்க இங்கே க்ளிக்கவும்:
- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ...

Monday, October 09, 2006

கம்பன் கவி இன்பம்

இந்த ப்ளாக்கில் நண்பர் (நடராஜமூர்த்தி) உயிருள்ள சொற்றொடர்கள் எழுதி இறை மாட்சியை விளக்குகிறார், மற்றொருவர் (பித்தன் - யாருப்பா இவரு?) கிறுக்கல்கள் மூலம் சமுதாயக் குறைபாடுகளைச் சாடுகிறார், அடுத்து (பரதேசி - என்னைப் போன்ற பலரும் அமெரிக்காவிற்குப் பரதேசிகள்தான்) வாழ்கையைச் சற்று கனவுகளோடு பார்கிறார். என் பங்கிற்கு, நடராஜமூர்த்தி எழுதுவதற்குள் கம்பனின் கவித்திறமை பற்றி எழுதிவிட்டால், நான்தான் இந்த முயற்சியில் முதல் என்று கொஞ்சம் 'படம்' காட்டலாம் என்கின்ற முயற்சியே இது. எனவே குறையிருப்பின் பொருத்தருள்க.
கம்பர் மிகச் சிறந்த படைப்பாளி என்பது உலகம் அறிந்த உண்மை. கம்பர் எழுதிய ராமாயணத்தை கம்ப சித்திரம் என்றும், கம்ப சூத்திரம் என்றும், கம்ப நாடகம் என்றும் பலவாறு போற்றுவர் தமிழ் இலக்கியதை நன்கு கற்றவர்.
கம்ப சித்திரம்
- ஒரு காட்சி எப்படி இருக்கிறது, அதில் கதாபாத்திரங்கள் எப்படி இருகின்றார்கள் என்பதை சொல்லால் புனைந்து நம் கண் முன் காட்சியாக வடித்து தருவதால் அது கம்ப சித்திரம்.
கம்ப சூத்திரம்
-
ஒரு உணர்வை அல்லது செயலை அல்லது குணத்தை ஆயிரம் பாடல்களில் விளக்கலாம், அதை ஒரே ஒரு வரியில் விளக்கலாம் என்று காட்டியவர் கம்பர். உதாரணத்திற்கு அரக்கர் என்பவர் யார் என்னும் கேள்விக்கு, அவர்கள் பற்கள் பெரிதாக இருக்கும், கைகள் முறங்கள் போல இருக்கும், நகங்கள் கூராகவும் அழுக்காகவும் இருக்கும், உடல் கரியதாகவும் பெரியதாகவும் இருக்கும், கண்கள் சிவப்பாக இருக்கும், நடந்தால் பூமி அதிரும், அனைவரும் அஞ்சும் தோற்றமும், செயலும் இருக்கும், என்றும் நாம் கூற முற்படுவோம். கம்பன் ஒரே வரியில் எவருக்கு இரக்கம் இல்லையோ அவர் அரக்கர் என்கிறார்.
அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்
இரக்கம் இன்மைன் றோஇன்றுஇவ் வுலகங்கள் இராமன்
பரக்கும் தொல்பொருள் அமுதினைப் பருகுதின் றதுவே.
பொருள்
அரக்கர்கள் செய்த தீவினையும், தேவர்களும் முனிவர்களும் செய்த நல்வினையும், ஏவுதலால், இயற்கையாகத் தன்னிடம் இருக்கும் அருள் தன்மையை விட்டவளும் தூய்மையான நல்ல சொற்களைப் பேசும் மான்போன்ற கைகேயியின் இடத்து இரக்க உணர்வு நீங்கிய காரணத்தினால்தான் இன்றும் இந்த உலகத்தவர் இராமபிரானது பரவிய புகழாகிய அமிழ்தத்தினைப் பருக முடிகின்றது என உணர்த்துவதால் அது கம்ப சூத்திரம்.
கம்ப நாடகம்
-
ஒரு நாடகத்தை காணும் போது அதில் நடிப்பவர்கள், அவர்கள் பேச வேண்டிய வசனங்கள், அவர்கள் நிற்க/நடக்க வேண்டிய இடங்கள், அவர்களது நடை, உடை, பாவனைகளை எப்படி அந்த நாடகத்தின் சூத்திரதாரியான ஒரு இயக்குனர் வெளிப்படுத்துவாரோ அதை கம்பர் வெளிப்படுத்துவது தனிஅழகு.
கன்னி மாடத்தில் சீதா பிராட்டியாரை, விசுவாமித்ர முனிவர், இராமன் மற்றும் இளைய பெருமாள் மிதிலையில் முதன்முதல் காணும் காட்சியை கம்பர் இப் பாடல் மூலம் வருணிக்கிறார்.
பொன்னின் சோதி போதினில் நாற்றம் பொலிவேபோல்
தென்உண் தேனின் தீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம்
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே களிபேடோடு
அன்னம் மாடு முன்றுறை கண்டாங்கு அயல் நின்றார்
பொருள்
கன்னி மாடத்தின் மேல் பகுதியில் பொன்னின் ஒளியும், பூவின் நறுமணமும் ஒன்று சேர்ந்து பொலிவதைப் போன்றும், வண்டு விரும்பி உண்ணும் தேனின் சுவை போன்றும், செம்மை விளங்கும் சொற்களாலாகிய கவிதையின் இனிமை போன்றும், களிப்பு மிகுந்த பெண் அன்னம் போன்ற தோழியர்களோடு அரச அன்னம் வீற்றிருக்கும் எழிலைப் போன்று சீதாப் பிராட்டியார் அம் முற்றத்தில் (இதை இக்காலத்தில் பால்கனி என அழைப்பர்) வீற்றிருக்க இம்மூவரும் கண்டார்கள்.
இதைப் படிக்கின்றபோது நம் மனதில் ஒரு கேள்வி எழும். ஒரு கதையின் நாயகன், தன் நாயகியை முதன் முதல் காணும் போது, அவள் ஒர் உயர்ந்த இடத்தில் இருந்தும், தான் ஒரு தாழ்வான பகுதியில் இருந்தும் காண விரும்பமாட்டான், அதை கம்பரும் மாற்றிப் பாடியிருக்க முடியும், இப்படி அவர் பாடியதன் கருத்தை வள்ளுவர் 'வாழ்க்கைத் துணைநலம்' என்ற அதிகாரத்தில் இவ்வாறு விளக்குகிறார்.
புகழ் புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
எவன் ஒருவன் தன்னை இகழ்பவர்கள் முன் ஒரு எருதின் தன்மையதாய், தலை நிமிர்ந்து நடக்கும் தகுதியில்லாதவனோ அவனுக்கு வாய்த மனைவியின் குணம் சரியில்லை என்று இடித்து கூறுகிறார். இராமன் சீதையை மிதிலையில் காணும் பொழுது திருமணம் ஆகாத ஒரு இளைஞன் ஆகவே அவன் தலை குனிந்து நடக்க வேண்டியிராதவன். சீதை, கற்பின் மொத்த உருவம், அவள் தலை நிமிர்ந்து பிற ஆடவரை நோக்கும் தன்மையில்லாதவள், அவள் தலை கவிழ்ந்து இருந்தவாரே, கீழே தலை நிமிர்ந்து நடக்கும் இராமனைக் காண முடிந்தது, இராமனால் காணப்படவும் முடிந்தது. இதனால் கம்பராமாயணம் கம்ப நாடகம் எனவும் போற்றப்படுகிறது.
இவ்வாறு, தன் புலமையை கொண்டு கவிச்சக்ரவர்த்தி எனப் பெரும் பெயர் பெற்ற கம்பர், ஒரிடத்தில் சீதையின் அழகை வருணிக்க தன்னிடத்தில் வார்த்தைகள் இல்லை என இராமாயணத்திலேயே வாக்குமூலம் தருகிறார். இது நமக்கெல்லாம் வியப்பான ஒரு செய்தி. ஒரு கட்டுரையை வடிக்கும் ஆசிரியர், கட்டுரையின் முகப்பில், இந்த கட்டுரையை வடிக்கும் திறமை தன்னிடத்தில் இல்லை என்றால், அதை எவர் படிக்கக் கூடும். ஒரு சொற்பொழிவாளர், கொடுக்கப் பட்டத் தலைப்பில் பேச தனக்குத் திறமை இல்லை என்று கூறினால், அவருடைய சொற்பொழிவை யார் கேட்பர், ஆனால், ஒரு காவியத்தைப் பாடும் கம்பர், காவியத்தலைவின் அழகை வருணிக்க தன்னிடத்தில் வார்த்தைகள் இல்லை என்பதை அந்த காவியத்திலேயே சொன்ன பிறகும் நாம் அதைப் படித்து இன்புறுகிறோம் என்றால், அந்த கருத்தைச் சொன்ன கம்பனின் கவி அழகுதான்.
அந்தப் பாடல்:
செப்பும் காலைச் செங்கமலத்தோன் முதல்யாரும்
ஒப்பெண் பாலும் கொண்டு உவமிப்போரும் உவமிக்கும்
அப்பெண் தானே ஆயின போதுஇங்கு அயல் வேறோர்
ஒப்பு எங்கே கொண் டெவ்வகை நாடி உரை செய்வோம்?
பொருள்:
சிறந்த தாமரை மலரில் வாழும் பிரமதேவன் முதல், சாதாரண மனிதர் வரையில் எவரும், ஒப்பாக எண்ணத் தகுந்த பகுதிகளையெல்லம் ஆராய்ந்து உவமிப்பவர்கள் உவமையாகச் சொல்லும் திருமகள் தானே இங்கு வந்திருப்பதால், அத்திருமகளை விட வேறு ஒரு உவமைப் பொருளை நான் எவ்விடம் தேடி உரைக்க முடியும்? எனக் கேட்கின்றார்.
இதை சற்று ஆராய்ந்து பார்த்தால் நம் இன்றைய நடைமுறை வாழ்க்கை முறையிலிருந்தே அறிந்து கொள்ளலாம். தன் மகனுக்கு ஏற்ற மணப்பெண்ணைத் தேடும் எல்லா தாயும், தன் மகனுக்கு மஹாலட்சுமி போல ஒரு பெண் தேடுவதாகச் சொல்லுவாள், ஆனால் அவளுக்கு மஹாலட்சுமியே மருமகளாக வந்தால் அவள் என்ன சொல்ல முடியும், அது போல, வேறு ஒரு பெண்ணாக இருந்தாள், நான் இந்த சீதை அழகில் மஹாலட்சுமி போல எனக் கூறலாம், இவள்தான் உலகத்தோர் அனைவரும் ஒப்பு நோக்கும் மஹாலட்சுமி என்கிற போது, நான் எவ்விதம் இவளுக்கு ஒப்புமை கூற முடியும் என்ற கம்பரின் கவி மிக இனிது.
கடைசியாக இந்த பகுதியை நிறைவு செய்ய ஒரு மங்களகரமான பாடல்.
எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழிக்
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.
பொருள்
பிறரால் எண்ணுவதற்கும் அரிய நலன்களைச் செய்பவளாகிய சீதாப் பிராட்டி கன்னிமாடத்தில் நின்று கொண்டு இருக்கையில் இருவர் கண்களும் ஒன்றையொன்று உணர்வினால் கவ்வி ஒருவரையொருவர் ஈர்க்க ஒருங்கிணைந்து விளங்க, அண்ணலாகிய இராமனும் நோக்கினான். சீதாப் பிராட்டியும் நோக்கினாள்.
இந்தப்பாடலை பல பேர் பல இடங்களில் விளக்கியுள்ளார்கள். 'பார்த்தல் வேறு, நோக்குதல் வேறு' என்பது பற்றியும், 'அண்ணலும்' என்று எழுதிப் பிறகு 'அவளும்' என்று எழுதியிருகிறார், அதன் காரணத்தை விளக்கியுள்ள பல கட்டுரைகளை நாம் படித்து இருப்போம். ஆயின், நான் வியந்து பார்க்கும் ஒரு பகுதி 'உணர்வும் ஒன்றிட'. தலைவன் தலைவி இருவரும் ஒருவரை ஒருவர் முதன் முதல் பார்கின்றபோது இருக்கும் எல்லா எண்ணங்களையும் விவரித்த கம்பர், உணர்வும் ஒன்றிட என்ற சொற்றொடர்மூலம் வாழ்வில் எது முக்கியம் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்குகிறார். இன்றைக்குத் திருமணமாகி 10, 15, 20 வருடங்கள் இல்வாழ்கை வாழ்ந்த பிறகும், அத்திருமணங்கள் முறிவதற்குக் காரணம் எது என ஆராய்ந்தால், நாம் கண்டு கொள்ளும் ஒர் உண்மை நம் மனங்கள் ஒன்றாததுதான். இராமனும், சீதாபிராட்டியும் ஒருவரை ஒருவர் பார்க்கின்ற அந்த கணத்திலேயே அவர்கள் இருவருடைய 'உணர்வும்' ஒன்றிவிட்டதாகச் சொன்ன் கம்பனின் கவி மிக மிக இனிது.
-முரளி

Sunday, October 08, 2006

மனிதாபிமானம்


"அடுத்தது",
கணீரென ஒலித்தக் குரல் கூடியிருந்த அனைவரின் சப்தத்தையும் நிறுத்தியது.
அப்போது, இருவர் அவனை கொண்டு வந்து நிறுத்தினர். குழுமியிருந்த அனைவர் பார்வையும் அவன் மேல்தான்.
அவன் கண்களில் ஒளியில்லை, முகத்தில் அடர்ந்த தாடி, தலை எண்ணெயைக் கண்டு குறைந்தது 2 வருடமாவது இருக்கும், உலகில் உள்ள அழுக்கெல்லாம் அவன் மீதுதான் என்று சொல்லும் அளவிற்கு அழுக்காக இருந்தான், உடம்பில் உள்ள எலும்புகளை எக்ஸ்-ரே இல்லாமலேயே எண்ணிவிடலாம் என்ற அளவிற்கு ஒல்லியாக இருந்தான். கையில் ஒரு நசுங்கின, அழுக்கான ஒர் அலுமினிய தட்டு வைத்து இருந்தான், அதில் கொஞ்சம் காசு இருந்தது. தோளில் ஒர் பழைய துணி மூட்டை இருந்தது, அவனுடைய துணிகளும் மிகவும் அழுக்காக இருந்தது, ஒரு பழைய கிழிந்த சட்டையும், கறையேறிய வேட்டியும் அணிந்து இருந்தான்.

அவனைப்பார்த்த கூட்டம் ஸ்தம்பித்து போனது. யாருக்கும் பேசக்கூட தோன்றவில்லை. அவர்கள் பார்த்துக் கொண்டு இருப்பது ஒரு 6 அடி உயர வண்ண ஓவியம் என்பது கூட அவர்களுக்கு மறந்து போனது. அந்த ஓவியத்தில் லயித்து அவனுடைய தட்டில் போட, சிலர் தன்னிச்சையாக தங்கள் சட்டைப் பைக்குள் கைவிட்டு பணத்தை எடுத்தனர். அப்போது அந்த ஓவியக் கல்லூரியின் தலைவரும், நிருவனருமான கலாதர் மைக் அருகில் வந்து தெளிவான ஆங்கிலத்தில் பேசத்துவங்கினார்.

"இனிய கலா ரசிகர்களே, நீங்கள் ஏலம் கேட்க இருக்கும் இந்த பிச்சைக்காரனின் படத்தையும் இது போன்ற மேலும், 3 ஓவியத்தையும் நான் வெறும் விற்பனைக்காக வரையவில்லை. நீங்கள் இந்த ஓவியப் பள்ளிக்கு பக்கத்து சந்தில் இவனைப்பார்த்து இருப்பீர்கள். இவனைப்போல பலர் அங்கு இருக்கின்றார்கள். இந்த ஓவியக் கல்லூரிக்கு வரும் பலர், இவனையும், இவன் கூட இருக்கும் மற்ற பிச்சைக்காரர்களையும் இங்கிருந்து அப்புறப் படுத்த வேண்டினர். இவர்களை அடித்து விரட்டுவது ஒரு காட்டுமிறாண்டித்தனம் என்பது என்னுடைய தாழ்மையான் கருத்து. அதை விடுத்து இவனுக்கும், இவனைப்போன்ற பலருக்கும் ஒரு புது வாழ்க்கைக்கு வழி செய்யுமாறு ஒரு தொண்டு நிறுவனத்திடம் பேசினேன், அவர்களும் இதை ஒப்புக் கொண்டனர். அவர்களுக்கு இதனால் ஏற்படும் செலவை ஈடு கட்டவே இந்த ஓவியங்களை வரைந்து ஏலத்தில் விற்கிறேன். எனவே, இது ஒரு நல்ல காரியத்திற்கு என்பதை கருத்தில் கொண்டு தாராளமாக ஏலம் கேளுங்கள். அந்தத் தொண்டு நிறுவனத்தின் தலைமைப் பொருப்பாளர் திரு. மோகன் இங்கு வந்துள்ளார், இன்று ஏலம் முடிந்ததும், அந்தப் பணம் அவாரிடம் தரப்படும்.”

“முதல் படம் துவக்க மதிப்பு ரூ.5000/-“

அப்போது, கூட்டத்தில் ஒருவர், எழுந்து, “ரூ. 10,000” என்றார், மற்றொருவர் “ரூ.20,000” என்றார். 5 நிமிடத்தில் அது 2 லட்சமாகிவிட்டது.

கலாதர் முகத்தில் சந்தோஷம் கொப்பளித்தது. கூடியிருந்தவர்களின் அன்பின் மிகுதியால் அவருக்கு அதிகம் பேசவும் தோன்றவில்லை. அனைவரையும் பார்த்து "2 லட்சம் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்" என்று கூறி முதல் படத்தின் ஏலத்தை முடித்தார்.

இதை அடுத்து மேலும் 3 படங்களை கலாதாரின் உதவியாளர்கள் கொண்டுவந்து மேடையில் வைத்தனர். எல்லாம், முதல் படத்தைப் போலவே மிக அற்புதமாக இருந்தது. எல்லாப் படங்களும் முதல் படத்தைப் போலவே நிமிடத்தில் விற்று தீர்ந்தது.

பிறகு கலாதர், தழுதழுத்த குரலில் " உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தொ¢யவில்லை. ஒரு நல்ல காரியத்திற்கு என்றவுடன் இப்படி தாராளமாக ஏலம் கேட்டு இந்த நாட்டில் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதை உணர்த்தியுள்ளீர்கள், உங்கள் அனைவருக்கும், நீண்ட ஆயுளையும், நல்ல வசதியையும், எப்போதும் இது போன்ற நல்ல எண்ணத்தையும் ஆண்டவன் தரட்டும்" என்று பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்த படி கூறினார்.

பிறகு பள்ளியின் மற்ற ஓவியர்களின் ஓவியங்கள் விற்பனைக்கு வந்தது. ஓர் உதவியாளர் ஒவ்வொரு ஓவியமாக கொண்டு வந்து மேடையில் வைக்க, மற்றோர் உதவியாளர் அதன் விலையை கூறினார். அவற்றில் பல நல்ல விலைக்கு விற்கப்பட்டது, சில சாதாரண விலைக்கு விற்கப்பட்டது.

ஏலம் முடிவுக்கு வந்ததும், அவரவர்கள் ஏலம் எடுத்த படத்தை பணத்தைச் செலுத்தி வாங்கிக் கொண்டனர்.

பிறகு கலாதர் மேடைக்கு வந்து “4 படங்களின் ஏலத்தின் மூலம் கிடைத்த 7 லட்சத்திற்கான காசோலையையும், இந்த கல்லூரியின் சார்பில் ரூ.25,000/-க்கான காசோலையையும் திரு.மோகனிடம் உங்கள் சார்பாக அளிக்கிறேன்” என்றார்.

திரு.மோகன் மேடைக்கு வந்து காசோலையை பெற்றுக்கொண்டு அனைவருக்கும் நன்றி கூறினபிறகு எல்லோரும் கலைந்து சென்றனர்.

அனைவரின் கார்களும் சென்றபின் கடைசியாக திரு. மோகன், கலாதாரிடம் கை குலுக்கி விட்டு, “நீங்கள், மிக நல்லவர், மிக நல்ல ஒரு செயலை இன்று செய்து இருக்கின்றீர்கள், மிக்க நன்றி” என்றார்.

“மோகன், இது நாம் இருக்கும் சமுதாயத்திற்கு, நாம் எல்லோரும் செய்ய வேண்டிய கடமை, அதனால் இதை பெரிதாக்காதீர்கள். அந்த பிச்சைக்காரகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்தால் அதுவே போதும். நீங்கள் எப்படி போகப்போகிறீர்கள், நான் உங்களை என் காரில் ட்ராப் செய்யட்டுமா?”

“வேண்டாம், நான் வழக்கம் போல் பஸ்சில் போயிடுவேன்”.

மோகன் கல்லுரியை விட்டு வெளியில் வந்து சிறிது தூரம் நடந்து அங்கிருந்த ஒரு காரில் பின் கதவைத்திறந்து ஏறிக்கொண்டார். அதன் ட்ரைவர் திரும்பிகூடப் பார்க்காமல், “ஐயா, போன காரியம் என்னங்க ஆச்சு?” என்றான்.

“எல்லாம் நல்ல படியா முடிஞ்சது, நம்ம எஸ்.ஐ. செல்லதுரைக்கு ஃபோன் போட்டு அந்த பிச்சைக்காரங்களை நாளைக்கு ஒரு லாரியில கூட்டி கிட்டு போய், ஊருக்கு 20 கி.மீ. தள்ளி இறக்கி விட்டுட சொல்லு.” என்றார்.

அப்போது அவருடைய செல் ·போன் ஒலித்தது. அதை எடுத்து அவர்,

“சொல்லு!” “ம், ம், அப்படியா!, வெரிகுட்”, என்றார்.

பிறகு ட்ரைவரைப் பார்த்து, “எஸ்.ஐ. க்கு ·போன் செய்து விட்டாயா?”

“இன்னும் இல்லை, இப்பவே பண்ணட்டுமா, இல்ல ஆபிஸ் போய் பண்ணட்டுமா?”

“இப்பவே பண்ணிடு, செல் ஃபோன்ல இருந்து பண்ணாதே, அந்த பி.சி.ஓ. -ல இருந்து செய், அந்த பிச்சைக்காரங்களை ஊருக்கு வெளியில கொண்டு போய் விடச்சொல்லாதே, அவங்களை போன மாசம் திறந்தாங்களே அந்த 5-ஸ்டார் ஓட்டல் பக்கத்தில விடச்சொல்லு, அப்படியே அவருடைய கவர் ரெடி, இன்னிக்கு ஈவினிங் அவர் வீட்டுக்கு வந்துடும்- னு சொல்லிடு”

ட்ரைவர் ஃபோன் செய்யப் போனபோது மனதில் குத்து மதிப்பாக ஒரு 20 லட்சம் அந்த 5-ஸ்டார் ஓட்டலில் இருந்து கறந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அதை நினைக்கும் போதே அவர் முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடியது.

-முரளி
55 வார்த்தையில் 2வது சிறுகதை

வரன்

"என்னது!, நம்ம ராஜி, அந்த ரகுவைக் காதலிக்கறாளா!"

"கத்தாதீங்க, யோசிச்சு நல்ல முடிவா எடுக்கலாம்."

"என்னடி நல்ல முடிவு, தூ... அவனா எனக்கு மாப்பிள்ளை?".

அப்பா முன் தினம் பெண் பார்க்க வந்தவர்கள் வீட்டிற்கு ·போன் போட்டு ,"நமஸ்காரம், எங்க வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். ஒரு நல்ல நாள்ல நிச்சயதார்த்தம் வெச்சுக்கலாம்" என்றார்.

"அம்மா என்னைப் பத்தி ஏன் தப்பா சொன்னே?"

"சும்மாயிரு ராஜி, இல்லைனா, இது அப்பா சாக்கு சொல்லி நிறுத்தற 10-வது வரனாயிடும்".

- முரளி
55 வார்த்தையில் முதல் சிறுகதை

'விபத்து'

நல்ல பிஸியான அந்த சாலையில் ஒரு தண்ணீர் லாரி வேகமாக வந்த போது ஒரு குழந்தை திடீரென சாலையை கடந்தது.

பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் "ஐயோ!" என்று அலறினர்.

அதை ஸ்ரீராம் மட்டும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

சரியான சமயத்தில் ஒருவன் குழந்தையை காப்பாற்றி விட, அருகில் இருந்த எல்லோரும் உரக்க கை தட்டி பாராட்டும் போது ஸ்ரீராம் தன் மனைவியிடம் சொன்னான்,"இதே மசாலா ஸீன் இன்னும் எத்தனை தமிழ் படத்தில் வருமோ தெரியலை?"

- முரளி

Saturday, October 07, 2006

பித்தனின் கிறுக்கல்கள் - 2

பித்தனின் கிறுக்கல்கள் - 2

மரண தண்டனை ஒழிப்பு:
இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001-ல் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் முகமது அப்சலின் தூக்கு தண்டனை தீர்ப்பு இன்று இந்தியாவில் மாநகரத்தின் முக்கிய பேச்சாக (அதாங்க talk of the town) இருக்கிறது. நம்ம ஊர் அரசியல்வாதி திருமாவளவன் இந்த மரணதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து மன்னிப்பும் கருணையும் காட்ட வேண்டும் என்றும், உலகில் 129 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று 'அறிவியல்பூர்வமான ஆய்வுகள்' வெளிக்காட்டியுள்ளன என்றும், மக்கள் விரோதச் சட்டம் என்று பெருவாரியான அரசியல் கட்சிகளால் வலியுறுத்தப்பட்டு பின்னர் கைவிடப் பட்ட பொடோசட்டத்தின் கீழ் இந்த தண்டனை விதிக்கப் பட்டுள்ளது இதனால் இதை ரத்து செய்து மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாடாக உலக அரங்கில் இந்தியா பெருமையுடன் விளங்க வேண்டும் என்று தன் 'திரு' வாய் மலர்ந்தருளியிருக்கிறார். என்ன ஒரு ஆய்வு, என்ன ஒரு கண்டு பிடிப்பு, என்ன ஒரு நாட்டுப் பற்று, என்ன ஒரு மனித நேயம் இவை எல்லாம் மெய் சிலிர்க வைக்கிறது. எப்படி இதுபோல சிந்திக்க கற்றுக்கொள்கிறார்கள் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படி யோசிப்பதற்கு படிப்பு என்ற ஒன்று அவசியமே இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறார்.

இந்த மரணதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து மன்னிப்பும் கருணையும் காட்ட வேண்டும் - மிக ஞாயமான கோரிக்கை, அவர் என்ன ஆங்கிலத்தில் தமிழ்த் திரைப்படத்துக்கு பெயர் வைத்தாரா? தங்கர் பச்சானை திட்டினாரா? விரப்பனை கொடுங்கோலன் என்று சொன்னாரா? பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று சொன்னாரா? இல்லையே சும்மா நமது மரியாதைக்குரிய பாரளுமன்றத்தை தாக்கி அவருடைய பல சகாக்களை அநியாயமாய் இழந்து, பல அப்பாவி மக்கள், தோட்டகாரர், பாதுகாப்புப் படையினர் என்று பலரையும் கொன்று, இன்று பிடிபட்டு, இந்திய நீதிமன்றம் அவரது வாதங்களை கேட்ட பிறகு இப்படி ஒரு தண்டனை பெற்று, அதற்காக கொஞ்சமும் வருத்தப்படாமல் இருப்பவருக்கு கண்டிப்பாக கருணை காட்டத்தான் வேண்டும்.

உலகில் 129 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று 'அறிவியல்பூர்வமான ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன':
என்ன ஒரு அபாரமான கண்டுபிடிப்பு. மரணதண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று அறிவியல்பூர்வமான ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன என்றால், ஒரு நாட்டில் எதற்கு ராணுவம், எதற்கு போலீஸ், எதற்கு சட்டங்கள், எதற்கு தண்டனைகள் அட எதற்கு இவரைப் போல அரசியல்வாதிகள், எந்த சட்டத்தாலும், தண்டனையாலும் குற்றங்கள் குறையப் போவது இல்லையே, மக்களே அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டுமே. உலக அரங்கில் தீவிரவாதத்தை கட்டுப் படுத்த இன்று இருக்கின்ற சட்டங்கள், தண்டனைகள் போதவில்லை என்று எல்லா நாடுகளும் கவலைப் பட்டுக்கொண்டிருக்கும் போது, உலகில் தீவிரவாதத்தால் தினம்தோறும், அதிகம் பாதிக்கப்படும் இந்தியாவில் இவரைப் போன்றவர்கள் இப்படி பேசி வருவது நமக்கெல்லாம் ஒரு சாபம்.

மக்கள் விரோதச் சட்டம் என்று கைவிடப் பட்ட பொடோ சட்டம்
தீவிரவாதத்தை முழுவதும் ஒழிக்க முடியாவிட்டாலும், அதன் வளர்ச்சியை தடுக்க முயன்ற ஒரு சட்டமே பொடோ. அதையும் இவரைப் போன்ற கையாலாகாத அரசியல்வாதிகள் குழி தோண்டி புதைத்து விட்டனர். 1000 பொதுமக்கள் உயிர் இழக்கலாம், ஆனால், இவர்களுக்கு ஒரு தீவிரவாதி உயிர் இழக்கக் கூடாது, மனித உயிர்களை மதிக்க முடியாத தீவிரவாதிக்கு எப்படி மனித உரிமைக் கமிஷனும், இவரைப் போன்றவர்களும் வக்காலத்து வாங்குகின்றனரோ தெரியவில்லை.

ஒரு ஏழை பாடகன் முக்காலத்தையும் அறிந்து இந்திய விடுதலைக்கு முன்பே எழுதினான்:

நெஞ்சி லுரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ - கிளியே வாய்ச்சொல்லில் வீரரடீ.

கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே நாளில் மறப்பாரடீ.

சொந்த அரசும்புவிச் சுகங்களு மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ? - கிளியே அலிகளுக் கின்பமுண்டோ?

சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல்கண்டும்
சிந்தை யிரங்காரடீ - கிளியே செம்மை மறன்தாரடீ.


மேல் குறிப்பிட்ட அரசியல் வாதியை நம்பும் நம் நாட்டு மக்களைப் பற்றி இந்த மகா கவி பாடுகிறார்:

நெஞ்சு பொறுக்குதிலையே - இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே
கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே - இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே

பட்டிமன்றம்
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் வகையில் ஒரு பட்டிமன்றம் நடத்த இருக்கின்றோம் என்று ரிச்மண்ட் தமிழ் சங்கத்திலிருந்து அறிவிப்பு வந்து இருக்கிறது. செவிக்கு நல்ல விருந்தாக இருக்கும். அரட்டை அரங்கம் போல ஒன்றுகூட செய்யலாம் நல்லா பொழுது போக கத்தி பேசலாம். நிறைய குழந்தைகள், பாட்டு, பரத நாட்டியம் பயில்கிறார்கள் அவர்களுக்கு பாட்டு போட்டி வைத்து 'சப்தஸ்வரங்கள்' போல ஒன்றும் செய்யலாம். கலந்து கொள்ளும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசு என்று வைத்துவிட்டால், போட்டி நல்ல களை கட்டும்.

இந்தப் பதிவை பித்தனின் ப்ளாக்கில் படிக்க இங்கே க்ளிக்கவும்:
http://pkirukkalgal.blogspot.com/2006/10/2.html
-பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ...

Wednesday, October 04, 2006

பித்தனின் கிறுக்கல்கள் ஒரு துவக்கம்.

'பித்தனின் கிறுக்கல்கள்' என்ற தலைப்பில் பல காரசாரமான விவாதங்களுக்கு அடித்தளமிடக்கூடிய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிவு செய்து இந்த பகுதியைத் துவக்குகிறேன். இதில் இந்திய அரசியல், சமூகம், விளையாட்டு, அறிவியல், இலக்கியம், புதுக் கவிதைகள் (மரபுக் கவிதை அதிகம் பரிச்சயமில்லை), கட்டுரைகள், புத்தகங்கள், நகைச்சுவை காட்சிகள், கதைகள், பத்திரிகைகளின் திரை விமர்சனம், தொலைக்காட்சி, திரைப்படம் பற்றிய பல வியங்களை (நாகு, மூர்த்தி, முரளி, பரதேசி, பட்டாம்பூச்சி, தருமி(எந்த ஊர்) - - வட மொழியாச்சே பரவாயில்லையா?) இங்கு அலச இருக்கிறேன்.

இந்த கருத்துக்கள் என் தனிப்பட்ட கருத்துக்கள், இதை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் உரிமை. இந்த எழுத்துக்கள் மூலம் என்னை எடை போட முயல்வது ஒரு காலவிரயம். எனக்கு இந்தப் பகுதியை துவக்கி எழுதலாம் என்கிற துணிவைத் தந்தது பலருடைய எழுத்துக்கள். 'சோ' -வின் - நினைத்தேன் எழுதுகிறேன், சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் (கணையாழி இன்னும் வருதான்னு தெரியல), கண்ணதாசன் எழுதிய கடைசிப் பக்கங்கள், தி.ஜா வின் தெளிவான மற்றும் புதுமைப் பித்தனின் தைரியமான எழுத்துக்கள்.

பீடிகை போதும்னு நினைக்கிறேன். இனி......

தமிழ் நாட்டில் உள்ளாட்சி மற்றும் மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல்.

இதனால் என்ன பயன்? எல்லா சுவர்களும் மேலும் கறைபடியும், சாராய விற்பனை வானைத்தொடும், முட்டை, கோழி வறுவல் வியாபாரம் தூள் பறக்கும், எல்லா காய்கறிகளும் கிலோ ரூ.50 க்கு விற்கும். ரேஷனில் எல்லா நாட்களும் எல்லா பொருட்களும் எல்லோருக்கும் கிடைக்கும். எல்லா கட்சிகாரர்களையும் (முதல்வரை கூட) சுலபமாக பார்க்கலாம். சன் டிவியில் தமிழ் நாடு எப்படி சுபிட்சமாக இருக்கிறது என்று காட்டுவார்கள். பஞ்சம், பட்டினி எல்லாம் தமிழ்நாட்டில் இல்லை என சத்தியம் செய்வார்கள். ஜே டிவியில் தமிழ்நாடு எப்படி குட்டிசுவராக இருக்கிறது என்று பட்டிமன்றமே போடுவார்கள். சோ துக்ளக்கில் கருணாநிதி எப்படி 2 ஏக்கர் கொடுக்காமல் இழுத்தடிப்பார் என்ற தன் சந்தேகத்தை எழுதுவார். விகடன்/ஜூ.விகடன் கருணாநிதியின் ராஜதந்திரம் பற்றி இரண்டு வாரம் எழுதுவார்கள். சென்னை தெருக்களுக்கு உடனடி மேக்கப் நடக்கும். கார்ப்பரேஷன் தண்ணீர் சென்னையில் நல்லா கிடைக்கும். மழை அதிகமானால் நிவாரணம் உடனே கிடைக்கும். அரசு ஊழியர்கள் சின்னதாக ஒரு அடையாள ஸ்ட்ரைக் செய்வார்கள், முதல்வர், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிபந்தனையின்றி உடனே ஒப்புக் கொள்வார். ஸ்டாலினும் - அழகிரியும் சண்டை இல்லாமல் பத்திரிகைகளுக்கு சிரித்த படி போஸ் கொடுப்பார்கள். சுப்ரமணியஸ்வாமி பத்திரிகையாளர்களைக் கூட்டி கருணாநிதி, தயாநிதி மாறன், சோனியா மூவரும் சேர்ந்து செய்த ஊழலைப் பற்றிய ஒரு முக்கிய தடயம் தன்னிடம் இருக்கிறது, இன்னும் ஒரே வாரத்தில் இவர்கள் அனைவரையும் பதவியிறக்குவேன் என்று சவால் விடுவார். தமிழக காங்கிரஸில் எந்த சண்டையும் இல்லை என்று எல்லா தமிழக காங்கிரஸாரும் அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பார்கள். வைகோ தன் புலிப்பாசத்தை கொஞ்ச நாட்களுக்கு வெளிக் காட்டாமல் இருப்பார். தேர்தல் தினமும் மற்ற எல்லா தினங்களைப் போலவே சாதாரணமாக இருக்கும்.

சரி நமக்கு என்ன பயன்?

முகத்தை சோப்பு போட்டு அலம்பி நல்லா துடைத்து வைத்துக் கொண்டால் போதும், கழகங்கள், கட்சிகள் நல்லா, அழகா, பட்டையா ஒரு நாமத்தைப் போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க. ஜாக்கிரதை.

சமீபத்தில் பார்த்த படம்

'நாளை' - மிகச் சாதாரணமான கதை, நடிக-நடிகைகள் 4 அல்லது 5 பேர்தான் பழைய ஆட்கள் மற்ற அனைவரும் புதுசு. நிறைவான நடிப்பு, நல்ல காட்சி அமைப்பு எல்லாம் இருந்தும் வழக்கம் போல் கமர்ஷியலுக்காக 2 குத்து பாட்டு புகுத்தப்பட்டு, கடைசி காட்சியில் எல்லோரும் செத்து போய்விட 'அட போங்கடா'-ன்னு திட்டத்தான் தோணுது. S.V.சேகர் ஒரு நாடகத்தில் ஒரு drawing கொண்டு வந்து காட்டி அதில் "நான் ஒரு ரெயில்வே ஸ்டேஷனை வரைந்சு இருக்கேன், அதுல ரெயில் வந்து நிக்குது, ஜனங்க இறங்கி போறாங்க இதை எல்லாம் நான் தத்ரூபமா வரைந்சு இருக்கேன்", என்பார்.

அவர் friend "ரெயில் எங்கடா?"
சேகர்: "ஜனங்களை எறக்கி விட்டுட்டு ரெயில் போயிடுத்து"
friend: "ஜனங்க எங்கடா?"
சேகர்: "அவங்க என்ன ஸ்டேஷன்லேயேவா இருப்பாங்க, வீட்டுக்கு போயிட்டாங்க"
friend: "ஸ்டேஷன் எங்கடா?"
சேகர்: "அது சமீபத்தில புயல் அடிச்சுது இல்லை அப்ப அதுவும் அடிச்சுட்டு போயிடுத்து" என்பார். அதுதான் ஞாபகம் வந்தது.

இந்தப் பதிவை பித்தனின் ப்ளாகில் படிக்க இங்கே க்ளிக்கவும்:
http://pkirukkalgal.blogspot.com/2006/10/blog-post.html

-கிறுக்கல்கள் தொடரும்.