Sunday, August 18, 2013

தகுதி

கோவிலைச் சார்ந்த உணவகத்தில்
அரைக்கால் சராய் அணிந்தவர்க்கு
அனுமதி மறுக்கும்
லுங்கி அணிந்த தடியன்.

Thursday, August 15, 2013

எந்தத் தொழிலும் கேவலமில்லை...

அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் எந்த தொழில் செய்யலாம். இன்னார் இந்தத் தொழில் செய்தால் கேவலம் என்ற நிலையில்லை. அந்த மனப்பான்மை இந்தியாவிலும் ஆரம்பித்திருப்பது நல்லது. ஊரில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இனிய அதிர்ச்சி.  நடிகைகள் காலங் காலமாக சோப், ஷாம்பூ, நகை விற்று வருகிறார்கள். இன்று நம் நடிகர்கள் பல விளம்பரங்களில் வருகிறார்கள். விஜய் அலைபேசி விளம்பரத்தில் வந்தார், ஷாருக் கான் சிமெண்ட் விற்கிறார்,  மம்முட்டி பனியன், வேட்டி விற்கிறார்.  இவர்கள் எல்லோரையும் விட சூப்பர் அப்பாஸின் டாய்லட் கழுவும் திரவம் விளம்பரம்.

என்னடா, மார்க்கெட் போனதால் டாய்லட் கழுவும் விளம்பரத்திலெல்லாம் வருகிறானே என்று கேலி செய்வார்கள் என்றெல்லாம் கவலைப்படாமல் ஜாலியாக விளம்பரத்தில் வருகிறார்.




அடுத்து  ______________________________ (மார்க்கெட் போன ஒரு நடிகர் பெயரை செருகவும்)  நடிக்கும் தென்னந்தொடப்பம் விளம்பரத்தை எதிர்பார்க்கிறேன். என் பையன்கள் தென்னந்தொடப்பத்தின் அருமை பெருமைகளை ஒத்துக் கொள்ள மாட்டென்கிறார்கள். :-)

Saturday, July 20, 2013

படம் பாரு கடி கேளு - 59


ஒரு 5 நிமிடம் ட்ராபிக்கை பார்த்துக்கோ ஒரு டீ சாப்பிட்டு எனக்கும் ஒரு பன் வாங்கி வரேன்னு சொல்லிட்டு போனவரு போனவருதான். ஆளையே காணும். ஒரு யூனிபார்ம், தொப்பி, ஷூ கூட கிடையாது. வரட்டும் அந்த ஆளு கடிச்சு கொதரிடறேன் பார்,

Friday, May 31, 2013

படம் பாரு கடி கேளு - 58


மாப்ளே: நாயகிய கல்யாணம் பண்ணி கண்கலங்காம பாத்துக்குங்கன்னு சொன்னாங்க. இங்க வந்தா வேற கதையா இல்லே இருக்கு!!!

Thursday, May 16, 2013

திருக்குறள் கணிணி மென்பொருள் - 2

சமீபத்தில் பதிந்த திருக்குறள் கணிணி மென்பொருள் பதிவின் தொடர்ச்சியாக, சில நண்பர்களின் வேண்டுகோளின் பேரில், சிறிது மேம்படுத்தப்பட்ட மென்பொருளைக்  கீழ்க்கண்ட சுட்டியில் தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.  மேல் விபரங்களுக்கு, மென்பொருளின்  F1 விசையை அழுத்தினால், தகவல் பெறலாம்.





நம் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல.


திருக்குறள் கணிணி மென்பொருள் முந்தைய பதிப்பு

http://blog.richmondtamilsangam.org/2013/05/blog-post.html




Wednesday, May 15, 2013

தடயம் - மர்மத்தொடர் - 15


தடயம் - மர்மத்தொடர்


தடயம் மர்மத்தொடரின் பதினைந்தாம் அத்தியாயத்தை இங்கேபடிக்கலாம்.


முரளி.

தடயம் - மர்மத்தொடர் - 14


தடயம் - மர்மத்தொடர்


தடயம் மர்மத்தொடரின் பதினான்காம் அத்தியாயத்தை இங்கே படிக்கலாம்.


முரளி.

Thursday, May 09, 2013

படம் பாரு கடி கேளு - 57


பார்வதி: என்னங்க அப்பவே சொன்னேன் பின்னால இன்னொரு ஸீட் இல்லேன்னா ஒரு ஸைட்கார்  மாட்டுங்கன்னு. நீங்க தான் கேட்கல்லே, இப்போ பாருங்க முருகன் மயில்மேல தான் வருவேன்னு பறந்துட்டான்.

மறுகடி:
போன் பேசும் இன்ஸ்பெக்டர்: ஆமாம் சார் 6 பேர் போகக்கூடிய மோட்டார்பைக்கில் 3 பேர் தான் போறாங்க. ம்ம்ம்.. இல்ல சார். 2 பேர் தலையில தான் ஏதோ ஹெல்மெட் மாதிரி இருக்கு. ஓட்டுனர் தலையில தண்ணி கொட்டுது சார். முன்னால உள்ள குழந்தைக்கு யானை தலை சார். 

Monday, May 06, 2013

திருக்குறள் ‍- கணிணி மென்பொருள்

அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு மனித வாழ்விலும் ஏதோ ஒருவகையில் கூடவே வரும் பழம் தமிழ் இலக்கியங்களுள் திருக்குறள் மிக முக்கியமான படைப்பாகும்.

மனனத்தில் தொடங்கிய கல்வி, எழுத்துக்களாய் உருப்பெற்று, ஏடுகளில் அழுந்தி, தாள்களில் தவழ்ந்து, இன்று மின்னணுவியலில் பயணிக்கும் இக்காலத்தில், என்னால் ஆன ஒரு சிறு முயற்சியே இது !

திருக்குறளை தமிழிலும் ஆங்கிலத்திலும், வரிசையாகவோ, அல்லது குறிப்பான வரிசை அன்றியோ, சிறு கட்டமைத்த‌ கால அவகாசத்தில் காட்டுவதே இத் திருக்குறள் மென்பொருளின் திட்டம். குறிப்பிட்ட எண் கொண்ட குறள் தேடும் ஆற்றலும் இதில் கண்டு பயன் பெறலாம்.

கீழ்க்கண்ட சுட்டியில், இம்மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் முயற்சித்துப் பாருங்கள்.


671 முதல் 680 குறள்களுக்கான ஆங்கில விளக்கம் கிடைக்கப் பெற‌வில்லை. தகவல் இருந்தால்/அறிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

இம்மென்பொருளின் சில திரைக்காட்சிகள்:

முதல் பக்கம்

குறிப்பிட்ட குறள் எண் தேடல் பக்கம்

அசைவூட்டக் கட்டமைப்புப் பக்கம்


தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரப்புவோம் !

நன்றி !!

Monday, April 29, 2013


மேனேஜர் – பாகம் - 2
பலமான கைதட்டல்களுக்கும் “Congrats Kumar” க்கும் நடுவில் “குமார், குமார், எழுந்திருங்க குமார். குமார் குமார் ….” என்று எங்கோ குரல் கேட்டது.
திரும்பிப்படுத்த குமாரின் முகத்தில் சுளீரென்று வெய்யில் அடித்தது. சந்தியா தான் கிச்சனிலிருந்து கூவிக்கொண்டிருந்தாள். கடிகாரத்தைப்பார்த்தான். மணி 7:30. “சந்தியா காபி ரெடியா?” என்று கத்தினான். “ஆமாம் இவரை கட்டிக்கொண்ட கடனுக்கு தினமும் காபி, சாப்பாடு, வீட்டு வேலை பண்ணியே என் காலம் போயிடும்” என்று வழக்கம்போல சந்தியா முணுமுணுப்பது கேட்டது. அலுத்துகொண்டே எழுந்து பாத்ரூமுக்குள் சென்றவன் “சந்தியா இந்த பேஸ்டை இனிமேல் சுருட்டி அமுக்கினாலும் பேஸ்ட் வெளியே வராது. புது பேஸ்ட் எங்கே” என்றான். “புது பேஸ்டா? வாங்கலே. இன்னிக்கு ஒரு நாள் பல்பொடியால தேய்ச்சா பல் கெட்டுப்போகாது” என்றாள். “அது எங்கே” என்றான் குமார். “பல் பொடி அந்த வாஷ்பேசினுக்கு அடியில் உள்ள ட்ராவில இருக்கு. எல்லாம் நான் தான் எடுத்து வெக்கணுமா? எனக்கு சமையலுக்கு லேட் ஆயிடிச்சு” என்று சொன்னாள் அலுத்துக்கொண்டே. “டவல் எங்கே சந்தியா? எல்லா டவலையும் தோய்க்கப்போட்டுடுவீங்களே” என்று கூவினான் குமார். “ஆமாம் நீங்க குளிக்கிற குளியலுக்கு டவல் கடை தான் வெக்கணும். நேத்து துடைச்சுக்கிட்ட டவல் அங்கே கூடையில இருக்குங்க அதை இன்னொரு தடவை யூஸ் பண்ணுங்க. நான் இன்னும் துணியெல்லாம் துவைக்கல்லே” என்றாள் சந்தியா. குளிச்சு தலை, உடம்பை துவட்டிக்கொண்டு பெட் ரூமிற்கு வந்த குமார் “சந்தியா என் ப்ளூ கலர் ஸ்ட்ரைப்ட் ஷர்ட் எங்கே?” என்றான். “போன வாரம் துவைத்து அந்த க்ளாஸெட்ல தாங்க இருக்கு. ஏடுத்து அயர்ன் பண்ணிக்குங்க நான் லன்ச் பாக் பண்ணனும்ங்க” என்றாள். சட்டை பட்டனை மாட்டிக்கொண்டே ஈட் இன் கிச்சனிலுள்ள டைனிங் டேபிளிள் உட்கார்ந்து “என்ன ப்ரேக்பாஸ்ட் சந்தியா? இட்லி, வடை, சாம்பார், சட்னி இப்படி ஏதாவது” என்றான். “அதெல்லாம் பண்ணனும்னு தான் ஆசை ஆனால் சாம்பார் பொடியும் தேங்காயும் ஷார்ட்டேஜ். இன்னிக்கு ஸீரியல் தாங்க” என்றாள். ஸீரியலை பௌலில் போட்டு பாலை விட்டுக்கொண்டு சாபிட்டுவிட்டு “இன்னிக்கு என்ன லன்ச் சந்தியா?” என்றான். “ஸாரி டியர். இன்னிக்கு எனக்கு ஆபீஸில் 8:30 க்கு ஒரு மீட்டிங். அதுனாலே…” என்று இழுத்தாள் சந்தியா. “அதுனாலே?” என்றான் குமார். “அதுனாலே இன்னிக்கு உங்ளுக்கு ஸாண்ட்விச் தான்” என்றாள். “சரி ஸான்ட்விச் கூட சிப்ஸ் வெச்சிருக்கியா? தக்காளி, வெள்ளரிக்காய, வெங்காயம் கட் பண்ணி போட்டிருக்கியா? என்றான். “அதெல்லாம் போட்டா இந்த ஸாண்ட்விச் நல்லா இருக்காதுங்க”. என்றாள். “ஆமாம் இன்னிக்கு என்ன ஸாண்ட்விச்?” என்றான். “பீனட் பட்டர் ஜெல்லி ஸாண்ட்விச்சுங்க” என்று சொல்லிக்கொண்டே ஒரு பேப்பர் பையை குமார் கையில் திணித்தாள்.” “தாங்க்ஸ் சந்தியா” என்று சொல்லிக்கொண்டே சந்தியா அருகில் சென்று அவள் உதட்டில் ஒன்று பதிக்கு முன் சந்தியா திரும்ப “பச்சக்” என்று அவள் கன்னத்தில் ஒன்று விழுந்தது. “சரி மீதி சாயந்திரம்” என்று குமார் சொல்லுமுன் “குமார் எனக்கு இன்னிக்கு இயர் என்டிங். வீட்டுக்கு வர 9:30 – 10:00 ஆயிடும். Freezerலே சாம்பார், ரசம் கறி, Fridgeல் ரைஸ், தயிர் இருக்கு, நீங்க வந்து டின்னர் சாப்பிட்டு படுத்துக்குங்க. ஸீ யூ குமார் எனக்கு பஸ்ஸுக்கு லேட் ஆயிடுச்சு” என்று சொல்லிக்கொண்டே வெளியில் சென்றாள் சந்தியா. வீட்டை பூட்டிக்கொண்டு கடிகாரத்தைப்பார்த்தான். மணி 8:00. இன்னும் 30 நிமிடத்தில் மேனேஜருடன் மீட்டிங். அதற்குள் ஆபீஸ் போய்ச்சேரணுமே என்று எண்ணிக்கொண்டே பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான் குமார். பஸ் ஸ்டாப்பில் ஒரே கும்பல். 8:00 மணி பஸ் ஒரு பக்கம் சாய்ந்து கொண்டே வந்துகொண்டிருந்தது. புட்போர்டில் தொங்கிக்கொண்டு வரும் சிலரின் செருப்புகள் ரோட்டில் தேயுமளவுக்கு சாய்ந்துகொண்டே வந்துகொண்டிருந்தது. பஸ் ஸ்டாப் அருகில் வந்து நிற்காமல் சிறிது தூரம் தள்ளி நின்றும் நிற்காமலும் சில பயணிகளை தள்ளிவிட்டு சென்றது. “ஐயோ இன்னிக்கு மீட்டிங் அவ்வளவு தான்” என்று எண்ணிக்கொண்டே ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் பார்வையைச்செலுத்தினான். தனியாக ஒரு ஆட்டோ நின்றுகொண்டிருந்தது. ஆருகில் சென்று “என்ன ஆட்டோ மவுண்ட் ரோடு L I C பக்கம் போகணும் வர்றியா” என்றான் குமார். குமாரை ஒரு மாதிரி பார்த்துவிட்டு “ஆட்டோ கூப்பிடுற ஆளைப்பாரு - கிண்டி பக்கம் போறேன் வர்றியா?” என்று நக்கலாக மறு கேள்வி கேட்டான் ஆட்டோ ட்ரைவர். “என்னப்பா பப்ளிக் சர்விஸ் பண்ணிக்கிட்டு இப்படி பேசறே? கம்ப்ளைன் பண்ணட்டுமா?“ என்றான் குமார். “இன்னா ராங் காட்றே? ஆட்டோல போற மூஞ்சப்பாரு நான் தான் பாக்குறேனே நெதோக்கும் பஸ்ல போற பார்ட்டி தானே நீ? ஆட்டோ ரிப்பேர் ஓடாது போ” என்று அடுக்கிக்கொண்டே போனான். இனி அங்கு நின்றால் மானம் போகுமென்று உணர்ந்த குமார் மறுபடியும் பஸ் ஸ்டாப் பக்கம் சென்றான். அடுத்த பஸ் வந்து ஸ்டாப்பில் அதிசயமாக நின்றது. அதிலும் கூட்டம். முன்னால் ஏறலாமா பின்னால் ஏறலாமா என்று குமார் எண்ணிக்கொண்டிருக்கையில் ஒருசிலர் முன் பக்கம் ஏறினர். “முன்னால ஏறின சாவுகிராக்கியெல்லாம் பின்னால வாங்க” என்று கண்டக்டர் கத்த மட மடவென்று முண்டியடித்துக்கொண்டு பின் பக்கம் ஏறி பஸ்ஸினுள் சென்றான் குமார். “ரைட் ரைட்” என்று சொல்லிய கண்டக்டர் நகர பஸ்ஸும் நகர்ந்தது. “பஸ் கம்பியில் எல்லா இடமும் தொட்டுப்பாருங்க” என்று கிண்டலாக கண்டக்டர் கூவ லேடீஸ் ஸீட் பக்கம் நின்று கொண்டு “ஜொள்” விட்டுக்கொண்டிருந்த மூன்று காலேஜ் மணிகளும் கேட்டும் கேட்காமலுமாக மெதுவாக முன்னால் நகர்ந்தனர். “டிக்கட் டிக்கட்” என்று சொல்லிக்கொண்டே குமார் அருகில் வந்த கண்டக்டர் “இன்னா சார் எங்கே போவணும்” என்றார். “L I C” என்று சொல்லிக்கொண்டே 10 ரூபாயை குமார் கண்டக்டரிடம் நீட்ட “டென் ரிபீஸா? நான் இன்னா பாங்கா நட்த்தறேன்? கீழ எறங்கு. ட்ரைவர் ஹோல்டான் என்று கத்த “இருப்பா இருப்பா சேஞ் இருக்கு” என்று சொல்லிக்கொண்டே பாண்ட் பாக்கட்டை துழாவி சரியான சில்லரையை கொடுக்க “இந்தா” என்று டிக்கட்டைக்கசக்கி குமார் கையில் திணித்துவிட்டு ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தார் கண்டக்டர். அந்த கும்பலில் எந்த ஸ்டாப்பும் கண்ணுக்குத்தெரியாமல் பஸ் நடுவில் நின்றுகொண்டிருந்த குமாருக்கு ஒரு வழியாக “L I C எல்லாம் இறங்கு” என்று கேட்டவுடன் அப்பாடா என்றிருந்தது. எப்படியோ முட்டி மோதிக்கொண்டு பஸ்ஸைவிட்டு இறங்கி ஆபீஸ் இருக்கும் சாலையில் நடந்து சென்று ஆபீஸ் பில்டிங்கை அடைந்து உள்ளே நுழைந்தான். மேனேஜர் குட்டி போட்ட பூனையைப்போல் அங்கேயும் இங்கேயும் நடந்துகொண்டுந்தார். “குட் மார்னிங் சார்” என்றான் குமார். “குட் மார்னிங்கா? குட் ஈவினிங்னு சொல்லு குமார். என்னப்பா ஆபீஸுக்கு வர்ற நேரமா இது அது தவிற இன்னிக்கு எனக்கும் உனக்கும் மீட்டிங்னு தெரியுமில்லே? என்று கடுப்புடன் கேட்டார். “ஸாரி சார் பஸ் லேட், அடுத்த பஸ்லே ஒரே கூட்டம் அதான்…” என்று இழுத்தான். “சரி வா என் ரூமுக்கு போவோம்” என்று விரைந்தார். பின்னாலேயே குமார் சென்றான். “குமார் என்னோட files எல்லாம் நீ தான் பாக்கணும். உனக்கு hand-over பண்றதுக்குத்தான் காத்திட்டு இருந்தேன் இந்தா” என்று ஒரு 10 பைல்களை அவன் முன் குவித்தார். “சார் நான் இதை எதிர் பார்க்கவேயில்ல சார். ரொம்ப தாங்ஸ்” என்றான் குமார். “நான் கூட இதை எதிர் பார்க்கவேயில்ல குமார். ஆனா என்ன ஒரு 2 வாரத்துக்கு தானே I am sure you can manage” என்றார் மேனேஜர். “என்ன சார் சொல்றீங்க?” என்றான். “குமார் இந்த Quarterலே என்னோட Numbers meet பண்ணினதாலே எனக்கும் என் wife க்கும் 2 weeks all expenses paid Europe tour + hefty bonus குடுத்திருக்காங்க நம்ம ஹெட் ஆபீஸிலிருந்து. இன்னும் 2 வாரத்துக்கு நம்ம ஆபீஸ் உன் கைலே. Flight க்கு நேரமாச்சு. நான் வரட்ட்டா?” என்று சொல்லிவிட்டு பறந்தார் மேனேஜர். குமார் மேனேஜர் சேரில் அமர்ந்து மேஜையில் குமிந்திருக்கும் பைல்களை சோகத்துடன் பார்த்தான். மேலாக இருந்த பைலை தூக்கிக்கொண்டு ஜன்னலின் வெளியே பார்த்தான், குமார் ஆபீஸின் அதே complexல் உள்ள பக்கத்து கம்பெனியின் வெளியில் பலூன்களும், streamerகளும் கட்டியிருந்தன. “சரி யாருக்கோ பிறந்தநாளாயிருக்கும் என்று எண்ணினான்”. மதியம் லன்சுக்குப்பிறகு வெளியே வந்த குமார் ஆர்வத்துடன் அந்த கம்பெனியின் அருகில் சென்று lobbyயை நோட்டமிட அவன் கண்ணில் பட்டது வண்ணமிகு பூக்களால் எழுதிய “Welcome to our New Manager”. அந்த கம்பெனியின் புது மேனேஜருக்கு  மனதிற்குள் வாழ்த்து சொல்லிக்கொண்டே தன் ஆபீஸுக்குள் நுழைந்து அடுத்த file ஐ புரட்ட ஆரம்பித்தான்.         
முற்றும்