Thursday, May 10, 2007

வலைவலம்

முதலில் வலப்பக்கத்தில் இருக்கும் வலைக்குலையும் காலண்டரும் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். லேபிள் கிளவ்ட் என்று ஒரு தளத்தில் பார்த்தது. இங்கு சேர்க்க நான் கொஞ்சம் ததிங்கினத்தோம் போட்டேன். கடைசியில் பொன்ஸுக்கு் அவுட்ஸோர்ஸ் செய்ய, அவர்கள் ஆணி பிடுங்கி வேலை செய்ய வைத்தார்கள். லேபிள் கிளவுட்டை நான் வகைக்குலை என்று தமிழாக்கம் செய்திருக்கிறேன்.

இது கொஞ்சம் பழைய செய்திதான். இருந்தாலும் தமாஷ் - அதாவது உங்கள் தலையெழுத்து, என் கண்ணில் இன்றுதான் பட்டது. குஜராத்தில் பத்தொன்பது வயதான ஒரு பெண்ணும், பையனும் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்ளப் பார்த்தார்கள். ஆனால் ஒரு பிரச்னை. குஜராத்தில் பையனுக்கு கல்யாணம் செய்ய இருவத்தோரு வயதாயிருக்க வேண்டும். என்ன செய்வது என்று யோசித்து இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள். இந்த செய்தியை ஒரு குரங்கு(மனம்) படித்துவிட்டு இப்படி கற்பனை செய்தது. குரங்கு(மனம்) நிறைய தமிழ் சினிமா பார்க்கிறது என நினைக்கிறேன். நம்ம ஊர் சத்தியாவிடம் சொல்லி நண்பருக்கு கொஞ்சம் ஆட்றா ராமா ஆட்டம் காண்பிக்கவேண்டும்.

அந்த சினிமா கதை இருக்கட்டும். இந்த செய்தியைப் பாருங்கள். பாலச்சந்தர் பிச்சை வாங்கவேண்டும். மாண்ட்ரியல் நகரைச் சேர்ந்த மெலனி போய்வின் என்பவர் தனது 7 வயது மகளுக்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறார். டெய்லர் சின்ட்ரோம் என்ற வியாதி கொண்ட மகளுக்கு குழந்தை பெறும் வாய்ப்பு இல்லை. அந்த குறையைத் தீர்க்க தாயார் மெலனியின் உத்தி என்ன தெரியுமா? தன் முட்டைகளை உறைநிலையில் வைத்து மகள் பெரியவளானவுடன் கர்ப்பம் தரிக்க பயன்படுத்துவாராம். ஆக ஒரே நேரத்தில் அவர் பாட்டியாகவும், தாயாராகவும் ஆவாராம். யாரோடு விந்தை பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை. பெண்ணிற்கு விந்துதானம் செய்பவர் தந்தையா, துணையா??? கேள்வியின் நாயகனைத்தான் கேட்க வேண்டும். குரங்க்கைக் கேட்டால் என்ன சொல்லும் என்று தெரியவில்லை.


ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைப்பு பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் பெரியார் சிலைக்கு குண்டு வைக்கப் பார்த்த அம்புஜம் மாமியைப் பற்றிக் கேள்விப் பட்டீர்களா? இந்த கண்மணிப் பக்கத்தில் அதைப் பற்றி படிக்கலாம். இன்னோரு மாமியிடம் ஒரு திருடன் பட்ட அவதி இந்தக் கதையில்.

ஆப்பிள் கம்ப்யூட்டரின் ஸ்டீவ் ஜாப் பற்றி தெரியாதவர்கள் கிடையாது. அவரது 10 பாடங்கள் இந்த தளத்தில். இது அவரே சொன்னதா, இங்கே ஜல்லியடிக்கிறார்களா என்று தெரியவில்லை. கன்ஃபூசியஸ் சொன்ன ஒரு மேற்கோள்தான் நினைவுக்கு வருகிறது.

கன்ஃபூசியஸ் சொன்னதாக சொல்லும் பல மேற்கோள்கள் உண்மை கிடையாது - கன்ஃபூசியஸ்!


பாடம் எல்லாம் இருக்கட்டும். வாழ்க்கைக்கு உதவும் இந்த சர்ச்சையைப் பார்ப்போம். தாளிப்பதற்கு எதைப் போடலாம் - எள்ளா, உளுந்தா? கடலை போடலாம் என்று குரல் கொடுப்பவர்கள் கடைசி பெஞ்சுக்கு போகவும். எள்ளா, உளுந்தா எந்த சமயத்தில் எதை பயன்படுத்தலாம் என்று கம்பராமாயணம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாமா இங்கே?

இந்த விஷயத்தை நமது உள்ளுர் கம்ப ராமாயண வல்லுனரைக் கேட்டிருக்கிறேன். என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

Wednesday, May 09, 2007

தமிழ்ச் சங்க தமிழ் இசை விழா

இந்தப் பதிவை நான் வெளியிடும் நேரம் தமிழ் இசை விழாவின் பாதிப்பு சற்று ஓய்ந்திருக்கும் என நினைக்கிறேன்.
பல விளம்பரதாரர்களைச் சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது. சென்ற நிகழ்ச்சியின் DVD விற்பனை மிக நல்ல முயற்சி. இதை தொடர்ந்து செய்தால், பல பெற்றோர்கள் காம்கார்டரும் கையுமாக அலையாமல் நிம்மதியாக நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம்.
குழந்தைகள் சற்று அமைதியாக இருக்க என்ன வழி என்பதை உடனடியாக கண்டு பிடிக்க வேண்டியது மிக மிக அவசியம். அவர்களுடைய பங்கேற்றல் முடிந்தவுடன் அவர்கள் அடிக்கும் லூட்டி சற்று தாங்க முடியவில்லை. நல்ல யோசனை சொல்பவர்களுக்கு ஏதேனும் இலவசம் என்று அறிவிக்கலாம் அல்லது அமைதியாக இருக்கும் குழந்தையின் குடும்பங்களில் ஒரு குடும்பத்துக்கு ஒரு வருட தமிழ் சங்கத்தின் சந்தா தள்ளுபடி என்று ஆசை காட்டி பார்க்கலாம்.
முதலில் சிறுவர் சிறுமியர் நிகழ்ச்சிகள்:
அவர்கள் மேடையேறி பாடும் போதும் சரி, ஆடும் போதும் சரி, என்ன ஒரு கம்பீரம்! அவர்களுக்கு இணை அவர்களேதான். குறிப்பாக யாரையும் சொல்லப் போவது இல்லை. அவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளும் வந்து விடக் கூடாது என்பதல்ல காரணம், அவர்களில் இவர் முதல், அவர் அடுத்து என சொல்லி அவர்கள் உழைப்பை, உற்சாகத்தை, முயற்சியை, உறுதியை கேள்வி கேட்கும் எந்தத் தகுதியும் எனக்கு இல்லாததுதான் காரணம்.
மெல்லிசை நிகழ்ச்சி`
ரிச் மெலோடீஸ் வழங்கிய மெல்லிசை நிகழ்ச்சியில் பல புது முகங்களை அறிமுகம் செய்தார்கள். அவர்கள் மெல்லிசை குழுவிற்கு புது முகங்களே தவிர தமிழ் சங்கத்துக்கு நன்கு பரிச்சயமானவர்களே.
பயிற்சி என்பது இது போன்ற இசை நிகழ்ச்சிகளுக்கு மிக மிக முக்கியம். பாடல் வரிகளை மறப்பதோ, தவறாகப் பாடுவதோ, பின்னனி இசையை மாற்றி வாசிப்பதோ ஒப்புக் கொள்ளக்கூடியதாக இல்லை.
பாட்டுத் தேர்வில் குழுவினர் சற்று கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 'மெலோடீஸ்' என்ற பெயருக்கு ஏற்ப பாடல்களைத் தேர்ந்தெடுத்தால், ரசிகர்களைக் கட்டிப் போடுவது ரொம்ப கடினம். தேவுடா தேவுடா மட்டுமே வேகப் பாட்டு அதுவும் நிகழ்ச்சியின் கடைசியில் என்றால் என்னைப் போன்ற மெல்லிசை மோகர்களுக்கு போதாதுங்கோ.
நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது ஒரு ரசிகர், குழுவினரிடம் உங்களுக்கு ஒரு தகுதியான ஒலிப் பொறியாளர் (Sound Engineer) உடனடித் தேவை என சொல்லிக் கொண்டிருந்தார். அதை நானும் வழிமொழிகிறேன். அது நிகழ்ச்சிக்கு நன்கு மெருகூட்டியிருக்கும். பல இடங்களில், சுரேஷின் Bass Guitar-ன் திறமை வெளிப்படவே இல்லை. கார்த்திக்கின் தபலாவும், மிதுனனின் ட்ரம்ஸும், சிவாவின் இசையும் ஏன் மார்லானின் ரிதம் கிடாரின் இசையும் கூட சரிவர கேட்கவில்லை.
அரவிந்தும் சிவாந்தியும் வழக்கம் போல கலக்கினார்கள், சிவாந்தியின் குரலில் நல்ல முதிர்ச்சி தெரிந்தது. நாராயணன் மேடையில் பாடுவது நமக்கு புதிதல்ல, மெல்லிசை நிகழ்ச்சியில் பாடுவது புதிது. ஆனால் அதுவும் தனக்கு ஒரு பெரிய விஷயமில்லை என்பதை நிருபித்தார்.
சித்ரா அவர்கள் மேடையில் கர்னாடக சங்கீதம் பாடி, கேட்டு மயங்காத ரிச்மண்ட் வாசிகள் இருக்க முடியாது. அவர் பாடியது நன்றாக இருந்தது. இருந்தாலும் அவர் சற்று வேகமான பாடலை எடுத்துக் கொண்டு கையாண்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். இது, அவர் மீது என் போன்ற சிலரின் அதீத எதிர்பார்பே அன்றி வேறு இல்லை. அவர் மெலோடியஸாக பாடலகளை select செய்து பாடியது, பாம்பே ஜெயஸ்ரீ மேடையேறி, தமிழ்தாய் வாழ்த்து மட்டும் பாடிவிட்டு சென்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.
ஆரதி, தான் சிவாந்தியின் தங்கை என்பதை just like that நிருபித்து விட்டார் அவர் பாடிய 'மஸ்தானா மஸ்தானா' பாடல் மூலம். கலா நன்றாக பாடினார், அவரும் சற்று வேகமான பாடல்களை பாடுவதற்கு முயல வேண்டும். பாடிய மற்றவர்களிடம் குறை என்று பெரிதாக ஏதுமில்லை, பயிற்சிக் குறைவைத் தவிர.
ஒரு முறை யாரோ சொல்லி கேட்டது, A critic need not be a professional என்று, அதை முழுவதுமாக பின்பற்றும் ஒரு சிலரில் நானும் ஒருவன்.
பின்னர் வழக்கமான கிறுக்கல்களில் சந்திக்கிறேன்.
- பித்தன்.
இந்த பதிவை எனது வளைப்பதிவிலும் படிக்கலாம்: http://pkirukkalgal.blogspot.com/2007/05/blog-post.html

Tuesday, May 08, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 14

பார்மிங்:

நமக்கு வேண்டிய இணையதளம் போன்றே உள்ள வேறொரு இணைய தளத்தை நாம் அடைவதே பார்மிங் ஆகும் .

நமக்கு வேண்டிய இணையதளத்தின் பெயரை நாம் உள்ளீடு செயதவுடன் நம் கணிணி டிஎன்எஸ் சர்வரைத் தொடர்பு கொள்ளும் . டிஎன்எஸ் சர்வரானது நமக்கு வேண்டிய ஐபி முகவரியைத் தரும். பின் நம் கணிணியானது அந்த முகவரியின் மூலமாக நமக்கு வேண்டிய இணையதளத்தை அடையும். பார்மர்கள் இந்த டிஎன்எஸ் சர்வர்களைத் தாக்கி ஐபி முகவரிகளை மாற்றி விடுவர் . பின் அது குறிப்பிட்ட பெயரைக் கேட்போருக்கெல்லாம் தவறாகவே செயல்படும். தவறான முகவரி கிடைக்கப் பெற்ற கணிணியானது தவறான இணையதளத்தை அடையும். உண்மையான இணையதளத்தைப் போன்றே இந்தத் தளமும் வடிவமைக்கப் பட்டிருக்கும் அதனால் வித்தியாசம் எளிதில் தெரியாது பார்மரின் வலையில் செல்பவர் விழுந்து விடுவர் .

பிஷிங் வலையில் மாட்டாமல் விடுபட :

வங்கிகள் நம்மை மின்னஞ்சல் மூலமாக சரிபார்க்க கேட்கவும் மாட்டார்கள் . நாமும் மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம். மீறி சந்தேகம் இருப்பின் உரியவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதி செய்துக் கொள்ளுங்கள் .

ஏதேனும் சுட்டிகள் தென்பட்டால் அதை அப்படியே சொடுக்கும் பழக்கத்தினை விடுங்கள் . அந்தச் சுட்டியை கட் செய்து பிரௌசரில் பேஸ்ட் செய்து அதன் மூலம் பயணியுங்கள்.

சில முகவரிகள் https எனத் துவங்கும். அவை ஓரளவு பாதுகாப்பானவை. அந்த பிரௌசரின் கீழ் தங்கப்பூட்டு பூட்டப்பட்டு காட்சி அளிக்கும். அது பாதுகாப்பான இணைய பக்கம் என்பதைக் குறிக்கும் . சிலர் ஜாவாஸ்கிரிப்ட் மூலம் அதே மாதிரி பூட்டைக் காண்பிக்க இயலும். ஆனால் நாம் அந்த விண்டோவையே நகர்த்தினால் அந்தக் குட்டு வெளிப்படும்.

பாதுகாப்பான இணையப் பக்கங்கள் மூலமே ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யவேண்டும் .

நெட்கிராப்ட் செயலியை நிறுவுதன் மூலம் பிஷிங் சைட்டை நாம் அடைந்தால் எச்சரிக்கையினைப் பெறலாம் http://www.netcraft.com .

முடிந்தது.
என்னால் இயன்றவரை எழுதியுள்ளேன். குறைகள் இருப்பின் பொறுத்தருள்க. நான் எழுத நினைத்த விதம் வேறு. ஆனால், நேரத் தட்டுபாடு என்னை பாதித்ததால் இவ்வாறாக வந்திருக்கிறது.
என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

-சுரேஷ்பாபு.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

Monday, May 07, 2007

தடயம் - அத்தியாயம் - 4

தடயம் மர்மத்தொடரின் நான்காவது அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்:
http://kalaichcholai.blogspot.com/2007/05/4.html
- முரளி.

கர்னாடிகா சகோதரர்களின் கச்சேரி

சென்ற வெள்ளியன்று கர்னாடிகா சகோதரர்களின் கச்சேரி ரிச்மண்டில் நடைபெற்றது. அந்த கச்சேரியை பற்றி நாராயணன் அவர்களின் வர்ணனை. நேரமின்மையால் ஆங்கிலத்தில் தருவதற்கு மன்னிக்கவும்.

Dear fellow music lovers,

The Carnatica brothers, Sashikiran and Ganesh, presented a
scintillating concert on Friday evening. They put together a nice
combination of ragams and krithis to fulfill and satisfy our hunger
for carnatic music. The concert lasted for almost 4 hours.

Here is a song list from the concert:

1. Varnam - kathanakuthuhalam - Mysore Vasudevachar
2. kanjadhaLAyadhAkshi - kamalAmanOhari - Muthuswami Dikshitar
3. arulavEndum thAyE - sAramathi - dhandapani desikar
4. parAthparA paramEshwara - vAchaspathi - Papanasam Sivan
5. varashiki vAhana - supradIpam - tyAgarAja
6. manasulOni marmamulu - varamu - tyAgarAja
7. EdayyA gathi - chalanAta - Koteeshwara Iyer
8. niravathi sukadA - ravichandrikA - tyAgaraja
9. Ragam Thanam Pallavi - malayamArutham - Adi
"rAgam thAnam pallavi trikAla tishramodu jolikkum"
with swarams in kApi, sindhubhairavi and vAsanthi
10. muruganin marupeyar - behAg - Periyasami thooran
11. kandanAL mudalAi - madhuvanthi
12. maithreem bajatha - rAgamAlika - Kanchi periyavAL.
13. Mangalam

They started off with a varnam, brisk varnam, as the audience was
getting settled in. The kamalamanohari piece was rendered with an
array of citta swaram combinations. Sashikiran presented a very nice
alapana in vachaspathi. Ganesh took the alapana credits for his
brilliant rendition of varamu. This was followed by a serene
rendition of the KI krithi from his kandha gAnamudham in the ragam
chalanata. The ragam and thanam in malayamarutham was very very good.
The RTP was rendered with the exploration of anulOmam, prathilOmam,
and off-course staying true to the lyric of the pallavi "tri-kalam"
and "tishram". Even though they had only 3 ragams as part of the
ragamalika swaram, each was handled more elaborately than is
customary. They finished up with some nice thukkada pieces.

Nagai Sriram was brilliant in support on his violin. He mirrored
every phrase that the artistes threw at him with precision including
all the layam dominated phrases. Murugaboopathy performed admirably
in support on the mrdangam. Richmond's own Ravi provided excellent
support.

I was amazed at the professionalism of the artists in terms of the
effort they put out inspite of a lower than expected turnout. They
delivered an undiluted concert, with rich content and quality.

Saturday, May 05, 2007

மாறினால் மறக்க முடியுமா ?

"சைலூ, இன்னிக்கு சாயந்திரம் சீக்கிரம் கெளம்பிடு. ஞாபகம் இருக்குல்ல ?" என்று கேட்ட வண்ணம் சாதத்தைக் குழைத்துப் பாலையும், தயிரையும் ஊற்றிக் கிளறினாள் சொர்ணா.

"எப்படி மறக்க முடியும்" ... சரிக்கா, என்றாள் சைலஜா.

சாதத்தை இரு டப்பாக்களிலும், உருளை வருவலை மற்றிரு டப்பாக்களிலும் அடைத்தாள் சொர்ணா.

கைப்பைகளில் மதிய உணவைத் தினித்துக் கொண்டு மாடிப் படியிறங்கினர் இருவரும்.

இவர்கள் அறை தள்ளி இடப்புறம் வினோதினி, வலப்புறம் எதிர் அறையில் ராஜி. அவர்களோடு சேர்ந்து கொண்டனர். அதுவரை அமைதியாய் இருந்த அந்த இருண்ட படிக்கட்டு டக், டக், டக் என்று ஜட்கா வண்டிப் பாதையானது. மெல்லப் போங்கடீ என்று சன்னமாய்க் கத்தினாள் சொர்ணா.

இந்த ஓட்டப் படிக்கட்டு என்னமோ நம்ம ஹைஹீல்ஸ்ல தான் ஒடையற மாதிரி திட்டும் அந்த 'பிங்க் பேந்த்தர்'. வார்டனின் அறை தாண்டும் போது சற்றே எட்டிப் பார்த்துச் சொன்னாள் ராஜி. சூப்பர் பேருக்கா. பாரு தூங்கும் போது கூட ரோஸ் பவுடர் அடிச்சிருக்கறத.

ஒரே ஹாஸ்டலில் தங்கியிருந்தும், ஹே, இந்த பொட்டு எங்கே வாங்கினே ? இந்த துப்பட்டா சூப்பரா இருக்கே ? அவ நெயில் பாலிஸ் பாருங்கடீ, கலர் different-ஆ இருக்கே ? என்று நித்தம் எழும் பல்லாயிரம் கேள்விகளையும் கேட்டுக் கொண்டே ஹாஸ்டலை விட்டு வெளியில் வந்தனர் அனைவரும். சைலு, சிரிப்பை வெளியிலும், இருக்கத்தை உள்ளிலும் தாங்கி அவர்களைத் தொடர்ந்தாள்.

காரை ஸ்டார்ட் செய்தாள் ராஜி. சைலு, நீ நேத்து முன்னாடி ஒக்காந்தே, இன்னிக்கு அது முடியாது. மரியாதயா பின்னாடி வா என்று கடிந்தாள் வினோதினி.

பாவம் விடுடி. அவ ஒக்காந்திட்டுப் போறா. சின்னக் கொழந்த மாதிரி அடிச்சிக்கறீங்களே என்று அங்களாய்த்தாள் சொர்ணா. பரவாயில்ல, இந்தா ஒக்காந்துக்கோ என்று சினுங்கலுடன் பின் சீட்டுக்கு வந்துவிட்டாள் சைலு.

பழைய மஹாபலிபுரம் கடற்கரை சாலையில் பயணித்து, பதினைந்து நிமிடத்தில் அலுவலகம் அடைந்தனர். ராஜி, இன்னிக்கு நாங்க சீக்கிரம் கெளம்பிடுவோம். " சாயந்திரம் எங்களுக்கு காத்திருக்காத சரியா" என்ற சொர்ணாவிற்கு தலையசைத்து அவரவர் கட்டிடங்களுக்குச் சென்றனர்.

வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. தலைப்பிலேயே வீண் என்று தெரிந்த மின்னஞ்சல்கள் சிலவற்றை திறக்காமலே அழித்தாள். மணி பதினொன்றாகும் போது, டீ குடிக்கப் போலாம் வரியாடா என்ற ஜெமிமாவுடன் சென்றாள். ஜெமிமா கேட்டாள், ஒரு மாதிரியா இருக்கியே ஏதும் பிரச்சினையா ? உங்க TL பரந்தாமன் கூட லீவுலல இருக்காருனு கேள்விப்பட்டேன் !

அவரு எப்பவுமே பிரச்சினை இல்லடி. மாட்யூல் நேரத்துக்கு முடிச்சி டாகுமெண்ட் அடிச்சிட்டாப் போதும். சூப்பர் type.

எனக்கும் வாச்சிருக்கே ஒரு சிடுமூஞ்சி. பேரப் பாரு "சுந்தர வடிவேல்". பேருக்கும் ஆளுக்கும், ஏரோப்ளேன் வச்சாலும் எட்டாது. ரெண்டு நிமிஷம் எங்கேயும் போய்டக்கூடாது. இப்பக் கூட என்னத் தேடிட்டு இருக்கும். ஜெமிமாவின் ஹிம்ம்ம்ம்மில் அத்தனை அழுத்தம் தெரித்தது.

இருக்கைக்கு வந்து அமர்ந்தாள் சைலு. ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அவளை, மேசைத் தொலைபேசி மிதமாய்க் களைத்தது. அழைப்பானில் ராஜியின் பெயர்.

சொல்லுடா ராஜி.

இல்லே ... சொர்ணாக்கா கால் பண்ணிருந்தாங்க. உனக்கும் கொஞ்சம் முன்னால செல்-ல கால் பண்ணாங்களாமே. எங்கேடீ போய்ட்டே ?

செல்லை மேசையிலேயே விட்டுவிட்டு ஜெமிமாவுடன் டீ குடிக்கச் சென்றது அப்போதுதான் நினைவிற்கு வந்தது.

அவங்களால இன்னிக்கு சாயந்திரம் வரமுடியாதாம். ஏதோ அவங்க ப்ராஜக்ட்-ல மேஜர் டிபெக்ட்டாம். இப்ப ஆன்-சைட் கூட கான்பரன்ஸ் கால்ல இருக்காங்க. எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியாதாம்.

அக்கா 4 மணிக்கா கெளம்ப்பிடச் சொன்னாங்க. நீ ரெடியானவுடன் சொல்லு. காலையில் பார்க்கிங் பண்ண இடத்துல சந்திப்போம்.

TTK சாலை, பார்க் ஷெரட்டனில் நுழைந்தது, ராஜியின் கார். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி, கப்பூச்சினோ நோக்கிச் சென்றனர். இவர்கள் வருவதைப் பார்த்து, லேசாய்ப் புன்னகை சிந்தி வரவேற்றான் ரமேஷ். இருவரும் மவுனமாய் அமர்ந்தனர். காபி என்றான். இல்லை வேண்டாம் என்றனர்.

ஆறு மணிக்கு உங்களுக்கு மும்பை flightனு சொர்ணாக்கா சொன்னாங்களே என்று கேட்ட சைலு, அதான் ஏற்கனவே எல்லாம் சொல்லிட்டிங்கள்ல, இன்னும் எதுக்கு நேர்ல வரச்சொல்லிப் படுத்தறிங்க. பாவம் அவங்க ரொம்ப நொந்து போய்ருக்காங்க.

டிக்கெட் cancel பண்ணிட்டேன். ஆமா, சொர்ணா வல்ல ? என்ற ரமேஷ், எனக்குத் தெரியும் அவ வர மாட்டானு என்று மெதுவே முனகினான்.

விஷயம் என்னன்னா, என்னைக் கட்டிக்கரதா இருந்த அந்த மும்பைக்கார U.S. பொண்ணு, ஏற்கனவே ரெண்டு, மூனு கல்யாணம் பண்ணி divorce வாங்கினவனு இப்பத்தான் தெரிஞ்சது.

கேவலமா இல்ல, நீ எல்லாம் படிச்சவன் தானே. எல்லாம் easyயா வேணும் உனக்கு. நாலு வருஷம். எப்படிப் பழகினாங்க உன்கூட. கொஞ்சமாவது யோசிச்சியா ? ரெண்டு மாசம் மும்பையில அவ கூடப் பழகிட்டு எப்படித் தான் அக்காவ கழட்டி விட மனசு வந்துச்சோ ?

உன் கோபத்திலயும், சொர்ணாவின் கோபத்திலயும் ஆயிரம் அர்த்தம் இருக்கு. நான் இல்லேன்னு சொல்லல. நான் இப்ப மாறிட்டேன். ஒரு முடிவு செஞ்சிருக்கேன். எங்க வீட்டுல ஏற்கனவே சொர்ணாவுக்கு ஓகே சொன்ன மாதிரி, அவளையே கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கேன். இத மறக்காம சொர்ணாகிட்ட சொல்லிடுங்க. நான் அவள சீக்கிரம் மீட் பண்ணனும்னு சொல்லுங்க என்று கெஞ்சினான் ரமேஷ்.

நீங்க சொல்லிட்டிங்க. அவ்ள சீக்கிரம் அக்காவல மறக்க முடியுமானு தெரியல. ஆனா ஒன்னு, அவங்க மனசு மாறுகிற நிலையில இல்ல. அதுக்கு இந்த சான்றே போதும் என்று ரமேஷ், சொர்ணாவிற்கு அளித்த அன்பளிப்புக்கள், வாழ்த்து அட்டைகள், .... கடிதங்கள் அனைத்தும் அடங்கிய பையை மேசையில் வைத்துவிட்டு ராஜியும், சைலுவும் அங்கிருந்து கிளம்பினர்.

Thursday, May 03, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 13

பிஷிங்(phishing)

இதற்கு உரிய தமிழ்பெயர் இனிமேல்தான் வரவேண்டும். இது அடையாளத் திருடர்களால் கையாளப் படும் ஒருவகை தந்திரம். நமக்கு ஒரு மின்னஞ்சல் நம் வங்கி கணக்கினை சரிபார்த்துக் கொள்ளச் சொல்லி வரும் . நாம் அதன் மூலம் பயணித்து விபரங்களை அதில் இட்டோமானல் அவ்வளவுதான் நம் விபரங்கள் பிஷர் கையை அடைந்து விடும் .

பெரும்பாலும் இவ்வாறு வரும் மின்னஞ்சல்கள் நம்மைத் தூண்டும் வண்ணமே வரும் . அவ்வாறு வருதலில் உங்களுக்கு உண்மையானது எனத் தோன்றினால் கடிதம், போன் மற்றும் மின்னஞ்சல் மூலமாக சம்மந்தப் பட்ட நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பின் பதில் அனுப்பவும் .

இதுபற்றி மேலும் விபரங்கள் அறிய www.antiphishing.org

பிஷிங் செய்பவர் கையாளும் வழிமுறைகள்:

மின்ஏமாற்றுதல்(spoofing) தான் பிஷர்களின் முக்கிய ஆயுதம்.

மின்னஞ்சல் முகவரி மூலமாக ஏமாற்றுதல் - நமக்கு அனுப்பும் மின்னஞ்சலின் தலைப்பு விபரங்களை (header information)மாற்றி, அது உண்மையான மின்னஞ்சல் என நம்பவைத்து விடுவர் .

சுட்டிகள் மூலமாக எமாற்றுதல் - சுட்டிகள் எப்பொழுதும் பெயர் வேறாகவும் , அந்த இணைப்பு வேறாகவும் இருக்கும். உதாரணம் சுரேஷின் இணையதளம் இதில் சுரேஷின் இணையதளம் நம் கண்ணுக்கு தெரியும். .காம் தெரியாது. சுரேஷ்பாபு.காமை ரமேஷ்பாபு. காம் என மாற்றினாலும் வெளியில் ஒன்றும் தெரியாது. அப்பாவித் தனமாக அதை சொடுக்கி விடுவர் .

இணையதள பெயர் மூலம் ஏமாற்றுதல் - இன்டர் எக்ஸ்புளோரரில் சில குறைகள் உள்ளது. அதை பயன்படுத்தி நாம் ஒரு இணையதளத்தில் இருந்தாலும் வேறொரு தளத்தில் இருப்பதுபோல் காட்ட முடியும். இதை வைத்தும் பிஷர் நம்மை ஏமாற்றி விடுவர். இந்த குறைபாடு நம் கணிணியில் உள்ளதா இல்லையா என நாம் அறிய http://secunia.com/internet_explorer_address_bar_spoofing_test/ . சொடுக்குங்கள் . உங்கள் பிரௌசரின் அட்ரஸ்பார் பொய் முகவரியை காட்டியது என்றால் உங்க பிரௌசரில் இந்தக் குறைபாடு இன்னும் சரி செய்யப் படவில்லை என்று அர்த்தம் . பேஜ் கேனாட்பி டிஸ்பிளேயிட் வந்தால் உங்களது பிரௌசரில் இந்தக் குறைபாடு இல்லை என்று அர்த்தம்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

மே மாத லொள்ளு மொழிகள்

ஆறின கஞ்சி பழங்கஞ்சி
ஏறின கஞ்சி சுண்டக்கஞ்சி

Wednesday, May 02, 2007

அமைதி

கால வீசி நடக்கும் போது
காத்து கூந்தல் கோதும் போது
தென்றல் கொஞ்சம் தீண்டும் போது
வெள்ளி நெலவு காயும் போது
வானில் மீன்கண் சிமிட்டும் போது
வசந்த மரங்கள் அலையும் போது
மனசில் அன்பு மலரும் போது
நேசம் நெஞ்சில் நெறயும் போது
அமைதி வந்து எட்டிப் பாக்கும்
இதயக் கதவத் தட்டிப் பாக்கும்!

--கவிநயா

Tuesday, May 01, 2007

யாரிடம் கற்றோம் ?

ஆடு தழைகளைத் தின்றதாலே
நாம் கீரைகளை உண்கிறோமா ?

புலி மானைத் தின்றதாலே
நாம் ஆட்டை உண்கிறோமா ?

எல்லைச்சண்டை அவை போட்டதாலே
நாம் சண்டை இடுகிறோமா ?

கூட்டமாய் அவை திரிந்ததாலே
நாம் நட்பாய் இருக்கிறோமா ?

மீனைக் கண்டு படகையும்
மானைக் கண்டு ஊர்தியும்
பறவையைக் கண்டு விமானமும்
பல்செயலும் படைப்பும் அவைபோலே !

இயற்கையாய்ப் பலவற்றில் மிருகமே
நமது முன்னோராய் இருந்திருக்க

சத்தமிடும் பேசா மிருகத்திடம்
கற்றிருக்க நமக்கு வாய்ப்பில்லை

மார்தட்டிச் சிரிக்கும் குரங்கிடமும்
நம்மூத்தோர் கற்றுக் கொண்டதில்லை

எவரிடம் எப்படிக் கற்றுக்கொண்டோம்
பேச்செனும் மாயக் கலைதனை ?

பின்பு வந்தது குகைச்சித்திரம்
அதன்பின்னே வந்தது எழுத்துருவம்
மனதில் எழுகிற திவ்வெண்ணம்
விடை காணத்துடிக்குது எனதுள்ளம் !