Saturday, April 14, 2007

பித்தனின் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சர்வஜித் வருடத்தில் எல்லோரும் எல்லா நலங்களும் பெற்று இனிது வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன்,

பித்தன்.

Friday, April 13, 2007

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு

பத்து ஆண்டுகளுக்கு முன்

விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் பினாத்திக் கொண்டு புரண்டு படுத்த சங்கர் அதிர்ந்து எழுந்தான். மிக முக்கிய காரணம், இன்று அவன் வேலைக்குச் செல்லும் முதல் நாள்.

டேய் இந்டெர்வியூ கெடைக்கறதே கஷ்டம். அதும் கெடச்சு, ரெண்டு மூனு round தாண்டி வேலையும் கெடச்சிருச்சு, இன்னும் என்னடா பெனாத்தல். பேசாம படு, ஒரு ஏழரை மணிக்கா எழுந்திருக்கலாம். ஹிஸ்ஸித்தான் ஜீவா.

(a+b)2, இது எந்த விதத்தில் நமக்கு வாழ்க்கையில் உதவும் ? பள்ளி நாட்களில் அம்மாவிடம் பல முறை சங்கர் கேட்ட கேள்வி. அம்மாவின் ஆச்சரியம் குறையுமுன், நமக்கெதற்கு அதெல்லாம். நமக்குத் தேவை ராங்க். அட்டை to அட்டை படிக்கனும்டா. நிறைய முறை அப்பா சொன்ன வாக்கியம்.

சங்கரின் கணக்குகள் பாலாராய் பெருகி, மன்னிக்கவும், இந்த ஆறும் இப்ப பிரச்சினையில் இருக்கோ ! சிறு நதியாய் ஓடியது. வேலை எந்த மாதிரி இருக்கும். அங்கே இருப்பவர்கள் எப்படி நம்மை நடத்துவார்கள் ?

ஏதோ ஜாலியா போய்க்கொண்டிருந்த வாழ்க்கை கல்லூரி முடிந்தவுடன் பாலைவனம் போலானது. அடுத்தது என்ன ? என்ற கேள்வி பூதாகரமாய் உருவெடுத்தது. ஆரக்கல், விஸுவல் பேசிக், சி++ எல்லாம் படித்தான், அட்டை to அட்டை. பல வேதனைகள், சோதனைகள் கடந்தது. கல்லூரி நாட்களில் பரீட்சைக்குப் படித்ததை விட அதிகம் படித்து, முட்டி, மோதி, கிடைத்தது இந்த வேலை.


தற்போது - April 2007

விடியுமுன்பே எழுந்த சங்கர், குழந்தைகளின் விலகிய போர்வைகளை சரி செய்து, லேசாக தலை கோதுகையில், என்னங்க அவசரம், இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்களேன் என்றாள் சுமதி.

வார இறுதியில் ... Spring break க்கு எங்கேப்பா கூட்டிட்டுப் போறே என்றான் ஆறு வயது அபிஷேக். சுமதியின் கொஞ்ச்சலில், சரிம்மா, சரிம்மா என்றது தான் கேட்டது. தங்கை அனுக்ஷாவுடன் backyard-ல் விளையாட ஓடிவிட்டான்.

(a+b)2, இங்கு வந்த போது ஒரு முறை ஜீவா சன்னமாய்ச் சொன்னது ஞாபகம் வந்தது. அது ஒன்னுமில்லேடா சங்கரு, andhra 2 + babu 2 + whole andhra டா babu, குறிப்பா சொல்லனும்னா இந்த testing துறை.

இந்த testing என்ன பாடு படுத்துகிறது. ஆந்திரப் பெண்மணிகள், மனைவிமணிகள் அதிகமாயினும், பொதுவாக இந்தியப் பெண்மணிகள் ஐந்தாண்டு அனுபவம் பெறுவது ஐந்தே நாட்களில்.

ஆந்திராவில் இதுக்கும் கூட Certificate அடிச்சுக் கொடுக்கறாங்களாம்டா, வியந்தான் ஜீவா செல்பேசியில்.

ஜீவா, எப்போடா Richmond வர்ரே ?

நீ எப்போ Denver வர்ரேனு சொல்லு ? மறந்திட்டேன் பாரு, "தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்டா'.

o.k. ஜீவா, உனக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். வீட்டில கேட்டதாச் சொல்.

அலுவலகத்தில், சங்கர், நீங்க சொன்ன மாதிரியே உங்க Code (a+b)2 test செஞ்சா, andhra 2 + babu 2 + whole andhra டி baby னு வருது. Great ! testing is passed. Code Release க்கு அனுப்பலாம் என்றார் மூன்றே மாதத்தில் மாறிய பதினோறாம் tester.

Wednesday, April 11, 2007

முந்தானை முடிச்சு

தலைப்பைப்பார்த்துவிட்டு என்னவோ ஏதோவென்று எதிர்பார்த்து வந்தவர்களுக்கு என் அனுதாபங்கள். இது பாக்கியராஜ் படத்தின் விமர்சனமும் அல்ல.

பெண்கள் முந்தானையில் சாவி முடிவதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். முந்தானையில் புருஷனை முடிந்து வைத்திருக்கும் பெண்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் முந்தானையில் 'பார்முலாக்களை' முடிந்து வைத்து மாட்டிய ஒரு மாணவிப்பெண்மணியைப்பற்றி இன்று படித்தேன்.

பீகாரில், பாட்னாவில் கணித பட்டப்படிப்புத்தேர்வு மையத்தில் நடந்த விஷயம் இது. காப்பியடிப்பது அதிகமானதால், அந்தத்தேர்வு மையத்தை கண்காணிக்க அதிகாரிகள் படை சூழ சென்றுள்ளனர். அங்கு தேர்வு எழுதிக்கொண்டிருந்த ஒரு மாணவியின் செய்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை உன்னிப்பாக கண்காணித்தனர். அடிக்கடி புடவையால் முகத்தை துடைப்பதும், மூக்கைத்துடைப்பதுமாக இருந்த அம்மாணவி அருகில் சென்று நைஸாக கண்காணித்தபோது அவர் தந்திரம் வெட்டவெளிச்சம் ஆனது. மாணவியின் புடவை ஓரங்களில் பல கட்டங்கள் புடவை டிஸைன் போல வரையப்பட்டிருந்தன. கட்டங்களுக்குள் கணித பார்முலாக்கள் வண்ணங்களில் எழுதப்பட்டிருந்தன. இதைக்கண்ட அதிகாரிகளுக்கு 'பகீர்' என்றது. அவரை மேலும் சோதித்ததில் அவர் புடவை ஓரங்கள் மட்டுமல்லாமல் புடவை மடிப்புகளிலும் பலவித 'பார்முலாக்கள்' வரையப்பட்டிருந்தது தெரிந்தது. பிறகென்ன? மாணவியை தேர்வு எழுத விடாமல் விசாரணைக்கு அழைத்துச்சென்றுவிட்டனர்.

இது போல் 'நூதன பிட்' அடித்தல் வியக்கத்தக்கது. இம்மாதிரி பிட் அடிப்பதைத்தடுக்க பீகார் அரசாங்கம்/இந்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று தெரியவில்லை. ஆனால் நம் லாலுஜியிடம் இந்த அதிகாரத்தை கொடுத்தால் "இனிமேல் மாணவர்கள் கோவணத்துடன் தான் தேர்வு எழுதவேண்டும்" என்று சட்டம் கொண்டுவந்தாலும் வருவார். அப்போது தேர்வு எழுதுபவர்களை விட எழுத வருபவர்களைப்பார்க்க வருபவர்கள் கூட்டம் அதிகமாகிவிடும்.

வலைவலம்

உலக வரைப்படத்தை ஒரே மாதிரி பார்த்து அலுத்துப் போனவர்களுக்கு இந்த தளம் பிடிக்கும். ஏஷியட் போட்டிகளில் எதை சேர்த்தால் தங்கம் கிடைக்கும் என்று யோசித்து கபடியை சேர்த்த மாதிரி, ஹை நம்ம ஊர் எவ்ளாம் பெருசு என்று வியக்கும் வண்ணம் இந்தியாவை பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாக காட்டும் மக்கள்தொகை அடிப்படையிலான வரைப்படம்! இந்தியத்தாய் இன்னொரு குழந்தை பெறுவதற்கு தயாராக உள்ளது போன்றிருக்கிறாள். அமெரிக்கர்கள் செல்வத்திலும், உணவுத் தானத்திலும் மட்டுமில்லாது, வேக உணவு(அதாங்க fastfood) வகையிலும் கொழித்திருக்கிறார்கள்(super size me!). இந்தியா மக்கள்தொகையில் கொழுத்ததுபோல் இந்த வகையிலும் கொழுத்திருப்பது ஒரு irony! ஆனால் படிப்பில் கொழுத்திருப்பது ஒரு நல்ல விஷயம். பெண்கல்வியில்லாமையில் கொழுத்திருப்பது இன்னொரு irony!

குழந்தை பெறுவதற்கு தயாராக இருக்கும் இந்தியத்தாய் என்றதும் நினைவுக்கு வருகிறது. குழந்தை பெறும் நிலையில் இருக்கும் இந்தியத் தாயார்களின் கூட்டு வலைப்பதிவு இது. நம் வலைப்பதிவில் உள்ள ஜனத்தொகையைவிட மிக அதிகம். ஆனால் நம் படையைப்போல அமைதி காப்பதில்லை. வயற்றிலுள்ள குழந்தை உதைக்கிறமாதிரி எழுதித் தள்ளுகிறார்கள். பெங்களூரில் ஒரு கர்ப்பிணியின் அனுபவங்கள் போன்ற பதிவுகள், இதை நம்ம ஊர் வெப் எம்டி அளவுக்கு கொண்டு போனாலும் போகலாம்.

என்னதான் நம்ம ஊர் படங்களை கிண்டல் அடித்தாலும், நம்ம ஊர் படங்கள் கம்ப்யூட்டரை காட்டுவதில் அமெரிக்க படங்களைவிட் எவ்வளவோ மேல். இங்கே ஒரு பயல் ஆப்பிள் லேப்டாப் பெண்ணே என்று எழுதினானா? ஹாலிவுட் படங்களில் கம்ப்யூட்டரை இன்னும் எவ்வள்வு கேலிக்கூத்தாக காண்பிக்கிறார்கள் என்று பட்டியலிட்டிருக்கிறார்கள் இங்கே.


நான் தமிழில் வலைவலம் வருவது இருக்கட்டும். பாருங்கள் யாரெல்லாம், தமிழில் செய்தி தருகிறார்கள் என்று. யாஹு பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்போது MSNனும் தமிழ் ஜோதியில் கலந்திருக்கிறார். நான் அன்றாடம் வழிபடும் கூகுளாண்டவர் என்ன செய்கிறார் என்று பார்த்தேன். ஊஹும்... இப்போதுதான் ஹிந்தியில் அவதாரமெடுத்திருக்கிறார். ஹிந்தி எதிர்ப்புக்காரர்களை கூப்பிட்டு அந்த வலைத்தளத்தில் கறுப்பு மை பூச சொல்ல வேண்டும்.

Monday, April 09, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 11

மென்பொருளால் ஆன நெருப்புச்சுவர்:

இல்லத்துக் கணிணிகளுக்காக வரும் இத்தகைய மென்பொருள்கள்

நிரவுவதற்கு எளிதாக இருக்கும், குறைந்த அளவு இடம் போதும், நம்மை அடிக்கடித் தொந்தரவு செய்யாது.

விண்டோஸ் எக்ஸ்பியுடன் வரும் நெருப்புச்சுவர்:

உங்கள் எக்ஸ்பி இயக்கத்தில் இது இல்லையெனில் சர்வீஸ்பேக் 2ல் இருக்கிறது. இறக்கி உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

இதை இயக்கிவிட்டால் போதும். அமைதியாகத் தன் பணியை தொடங்கிவிடும் . இதனால் கணிணியின் வேகத்தில் எந்த மாறுதலும் நமக்குத் தெரியாது.

பிற இலவச நெருப்புச்சுவர்கள்:

ஜோன்அலார்ம் www.zonelabs.com

சைகேட் www.sygate.com


ஹார்ட்வேர் நெருப்புசுவர்கள்:

நெட்வொர்க் அட்ரஸ் டிரான்ஸ்லேட்டர் நெருப்புசுவர்கள் (NAT Firewalls) இதில் பிரசித்தம் . சிஸ்கோ, ஜுனிபர் நெட்வொர்க்ஸ் போன்ற பிரபல நிறுவனங்கள் கணிணி நெட்ஒர்க்குகளை பாதுகாக்கும் நெருப்புச் சுவர்களைத் தயாரிக்கிறார்கள் .

ஹேக்கர் தாக்குதலின் அறிகுறிகள் :

நமது கணிணியில் நமக்கே புரியாத வண்ணம் சில தகவல்கள் சேமிக்கப் பட்டிருக்கும். இந்த தகவல்கள் ஹேக்கரின் கைவரிசையாயிருக்கலாம்.

நமது வங்கி கணக்கில் பணம் குறைதலும் தாக்குதலின் அறிகுறி. நாம் நம் கணிணியில் நம் வங்கி கணக்கு விபரங்களை சேமித்து வைத்திருந்தோமானால் இம்மாதிரி நடக்க வாய்ப்புண்டு . ஆனால் இதற்கு ஹேக்கர் மட்டுமே காரணமாயிருக்க குடியாது. பிஷிங், கீலாக்கர் போன்றவையும் காரணமாக இருக்கலாம் .

ஹேக்கர் தாக்குதல் தெரிந்தால் செய்யவேண்டியது :


முதலில் இணையத்தில் இருந்து துண்டியுங்கள்.

நெருப்புசுவரை இயக்குங்கள்.

அன்று மாற்றப்பட்ட பைல்களை சர்ச் ஆப்சன் மூலமாகத் தேடுங்கள். சந்தேகத்திற்கு இடமாயுள்ள பைல்களை அழித்து விடுங்கள் .

இன்னும் சந்தேகமாயிருந்தால் கணிணியில் உள்ள அனைத்தையும் அழித்துவிட்டு புதிதாகத் துவங்குங்கள்.

பொதுவாக 2 நெருப்புச்சுவர்களை உங்கள் கணிணியில் நிறுவுதல் நலம் .

வாய்ப்பு இருப்பின் ஹார்டுவேர் நெருப்புச்சுவரும் நிறுவலாம். சில

டிலிங்க் www.dlink.com ,

நெட்கீர் www.netgear.com ,

லின்க்சிஸ் www.linksys.com ,

பெல்கின் www.belkin.com ,

எஸ்எம்சி www.smc.com

ஆப்பிள் www.apple.com javascript:void(0)
Publish


அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Saturday, April 07, 2007

சார் பேப்பர் - Question பேப்பர்

சமீபத்தில் தமிழகத்தில் தேனியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த SSLC சமூக அறிவியல் தேர்வு வினைத்தாள்களை ஒரு ப்ளஸ் 1 மாணவன் திருடி தன் ஹீரோயிசத்தைக் காட்டியிருக்கிறான்.
பிடிபட்ட அவன் சக மாணவர்களிடம் தன்னை ஒரு ஹீரோவாகக்காட்டவே இச்செயலைச்செய்ததாக போலீசிடம் கூறியுள்ளான்.
இதில் அபத்தம் என்னவென்றால் இத்திருட்டு பட்டப்பகலில் நடந்திருக்கிறது. கேள்வித்தாள்கள் வைத்திருக்கும் அறையின் பின்புறம் இருக்கும் ஜன்னலின் கம்பிகளை அறுத்து, உள்ளே சென்று, பீரோவின் பூட்டையும் அறுத்து கேள்வித்தாள்களை திருடிச்சென்றுள்ளான். பகலில் போலீசார் பாதுகாப்பு அறையில் இருப்பதில்லையாம். இரவில் தான் டூட்டியாம்.

இந்த அபத்தத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட அபத்தம் இது தான் - கேள்வித்தாள்களைக்காப்பாற்ற முடியாத போலீசார், திருடிய மாணவனிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டால் போலீஸ் வேலை வாங்கித்தருவதாகப்பேசி குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்துள்ளனர்.

இது போல் அவலங்கள் பல முறை இந்தியாவில் பல இடங்களில் நடந்திருக்கின்றன - மேலும் நடந்துகொண்டே இருக்கின்றன. இதனால் தேர்வுகளை ஒத்திப்போட்டு கஷ்டப்பட்டு, வினைத்தாள்களை திருத்தி எழுதி படித்து தேர்வுக்கு தயாராக இருந்த பல மாணவ மாணவிகளின் டென்ஷனை அதிகமாவது தான் அவலம்.

ஒரு பேப்பரை காப்பாற்ற முடியாத அளவுக்கு இருக்கும் இந்த நிலமை அவலத்திலும் அவலம். இந்த வினைத்தாள் திருட்டைத்தடுக்க அரசாங்கம் ஏதாவது புது யுக்தியைக்கண்டுபிடிக்க வேண்டும். இதில் என்ன கஷ்டமென்றால் வினைத்தாள் மாஸ்டர் காப்பியையோ அல்லது அச்சடித்த வினைத்தாள்களையோ எங்கு வைத்தாலும் திருடு போய்விடுகிறது. சில சமயம் அச்சகத்திலிருந்தே திருடு போய்விடுகிறது.

இதற்கெல்லாம் முடிவு கட்ட பரதேசியின் சில யோசனைகள்:

1. அச்சடித்த வினைத்தாள்களையெல்லாம் ராக்கெட்டில் ஏற்றி வானத்தில் விட்டு Satellite ல் பறக்கவிடலாம். பிறகு தேர்வு தினத்தன்று பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையங்களின் வாசலில் இறக்கி உள்ளே கொண்டு சென்று தேர்வுக்கு வினியோகம் செய்யலாம். Satellite ஐ யாரும் ஹை-ஜாக் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. அதிகாரமில்லாதவர்கள் திறந்தால் வெடித்துச்சிதறும் வகையில் safe கள் உருவாக்கலாம்

3. கேள்வித்தாள் மாஸ்டர் காப்பியை நானோசிப்பில் (Nanochip) பதிவு செய்து உயர் அதிகாரியின் கையிலோ, காலிலோ, உடம்பிலோ இம்ப்ளாண்ட் செய்து விடலாம். பிறகு தேர்வு நாளன்று தேர்வு மையத்திலேயே வெளியெடுத்து ப்ரிண்ட் அடிக்கலாம். ஆனால் அதிகாரியை யாராவது கடத்தாமலிருக்க பாதுகாப்பு தேவை.

4. Special ink ல் கேள்வித்தாள்களை அச்சடித்து தேர்வு மையத்தில் ப்ரத்யேக இயந்திரத்தில் expose செய்து அச்சடித்து வினியோகம் செய்யலாம். இந்த இயந்திரம் Wal-mart ல் விற்கக்கூடாது என்ற ரூல் போட வேண்டும்.

5. இதெல்லாம் முடிகிற காரியங்களாகத்தோன்றாவிட்டால் தேர்வே இல்லாமல் எல்லோரும் 'பாஸ்' என்று சொல்லிவிடலாம். மாணவர்களுக்குக்கொண்டாட்டம். கல்லூரிகளுக்கு கூட்டம்.

Thursday, April 05, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 10

ஹேக்கர்ஸ் உபயோகப்படுத்தும் கருவிகள்:

டிரோஜன் குதிரைகள் - உபயோகமாகவும், பாதுகாப்பானதாகவும் கருதும் படி , வடிவமைக்கப் பட்ட மென்பொருள்கள். ஆனால் உள்ளே சில தீங்கு தரக்கூடிய நிரலிகள் மறைந்திருக்கும் .

வைரஸ்கள் - பொதுவாக வைரஸ் செயலிகளை எழுதுபவர் அனைவரும் ஹேக்கர் அல்லர் , இருப்பினும் வைரஸின் வரிகள் ஹேக்கருக்கு உபயோகமாயிருக்கும்.

வார்ம்க்ள் - மனித எத்தனம் இல்லாமல் தானாக பரவும் நிரலிகள்.

வல்நரிபிலிட்டி ஸ்கேனர் - கணிணியில் உள்ள செயலிகளின் பலவீனங்களை ( நிரலிகளின் வடிவாக்கப்பிழைகள், பாதுகாப்பு குறைபாடுகள்) ஆராயும் நிரலிகள்.

ஸ்னிஃப்பர் - மற்றவரின் ஐடி, சங்கேத குறியீடு ( பாஸ்வேர்டு) இவற்றைத் தேடும் நிரலிகள்.

சமூக ஆர்வலர் வேடம் - ஒருவர் உதவுவது போல் நடித்து நம் கணிணியில் விசமத் தனமான நிரலிகளை நிரவுதல் .

ரூட்கிட் - செக்யூரிட்டி புரோகாராம் களிடமிருந்து விசமத்தனமான நிரலிகளை தப்பவைக்கும் வண்ணமாக எழுதப் படும் நிரலி .

எக்ஸ்பிளாயிட் - கணிணியில் உள்ள தெரிந்த பாதுகாப்பு பலவீனங்களை உபயோகப் படுத்திக் கொள்ளல் .

நெருப்புச் சுவர் (Fire wall);


நெருப்புச் சுவரானது நமது கணிணிக்கும், இணையத்திற்கும் இடையே மின்னணு தடுப்புச்சுவராக பணியாற்றுகிறது . இதில் கதவுகளை ஒத்த அமைப்பாக போர்ட்க்ள் இருக்கும். போர்ட்களை நிரலிகள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் . இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற பிரௌசர்கள் போர்ட் 80ஐ உபயோகிக்கும். மின்னஞ்சல் அனுப்ப 25 உபயோகமாகும், எம்எஸ்என் 1863, 6891-6900, மற்றும் 6901ஐ உபயோகிக்கும்.

முறையாக நெருப்புச் சுவரை இயங்க வைத்திருந்தோம் ஆனால் பெரும்பாலான பாதிப்புகள் தவிர்க்கப்படும்.

நெருப்புச் சுவர்கள் அடிப்படையில் இரண்டு வகைப் படும். அவை மென்பொருளால் ஆன நெருப்புச்சுவர் , ஹார்ட்வேர் நெருப்புச்சுவர் ஆகும்.

விண்டோஸ் எக்ஸ்பி இலவச நெருப்புச்சுவருடனே வருகிறது.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Sunday, April 01, 2007

இலவச இன்டெர்நெட்

வரப்போகிறது, வரப்போகிறது என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கூகுளின் இலவச இன்டெர்நெட் சேவை வந்தே விட்டது. Project Teaspoon வழக்கம்போல அனைவரும் பயன்படுத்துமாறு மிகவும் எளிதாக்கப்பட்டிருக்கிறது. இலவசமாக router ரும், எப்படி நிறுவுவது என்ற விவரங்களும் மிக அருமையாக விளக்கப்பட்டிருக்கின்றன. சிறு குழந்தைகூட - மன்னிக்கவும் - இந்த விஷயங்களில் அவர்கள்தான் சூரர்களாயிற்றே... - எல்லா அம்மா, அப்பாக்களுக்கு கூட புரியும் வண்ணம் என்று சொல்லவேண்டும். வழக்கம்போல ஒவ்வொரு கூகுள் செயலிகளைப் பார்த்து வரும் அதே கேள்விதான். ஏன் இது இத்தனை நாள் மற்றவர்களுக்கு தோன்றவில்லை?

ஏப்ரல் மாத லொள்ளு மொழிகள்

என்ன தான் கௌரவமா நடித்தாலும் ஒரு காமெடியன் நடிப்பை பார்த்து நாலு பேர் நாலு விதமா சிரிக்கத்தான் செய்வாங்க

பித்தனின் கிறுக்கல்கள் - 9

பித்தனின் ஒன்பதாவது கிறுக்கலைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.
http://pkirukkalgal.blogspot.com/2007/03/9.html
- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com