Showing posts with label naan. Show all posts
Showing posts with label naan. Show all posts

Tuesday, August 28, 2012

செய்திகள் வாசிப்பது - முரளி - 3

ஆரத்தியின் திருமணம் - பகுதி 2.

"என்னப்பு, டக்கு டக்குன்னு ரெண்டு-மூனுன்னு பதிவைப் போட்டு வாங்கரே, என்ன சமாசாரம்"ன்னு நீங்க கேக்க நெனைக்கரது எனக்கு தெரியும்.  அப்படி ஒரு நெனைப்பே இல்லைன்னாலும், இருக்கரமாதிரி  நடிக்கவாவது செய்ங்கப்பா.

நீங்க நெனைச்சாமாதிரியும் அதுக்கு நான் பதில் சொன்னா மாதிரியும் இந்த பதிவுன்னு வெச்சுக்கங்க.

என்னோட சில அன்பு நண்பர்கள் ஃபோன் பண்ணி, "யோவ், நாங்க ஆரத்தி கல்யாணத்துல டான்ஸ் ஆடினோம்னு பொத்தாம் பொதுவா சொன்னியே, அதுக்கு முன்னாடி நாங்க எவ்வளவு பொறுமையா சாப்பாட்டை வெளுத்து வாங்கினோம்னு சரியா சொன்னியா? அதுல என்ன என்ன வெரைட்டின்னு சொன்னியா? அது முடிஞ்சதும், ஸ்நாக்ஸை ஒரு கட்டு கட்டினோமே அதை பத்தி எழுதினியா இல்லை? அதுல என்ன ஐட்டம் இருந்ததுன்னு எழுதினியா?  அட அதெல்லாம் போகட்டும், இதை எல்லாம் பார்த்து பார்த்து ஏற்பாடு பண்ணின  ஷீலாவைப் பத்தி எழுதாம உன் ஃப்ரெண்ட் கார்த்தியைப் பத்தி மட்டும் எழுதினியே, என்ன பொட்டி கிட்டி வாங்கினியா?   கார்த்தியோட ஸ்பீச்சைப்  பத்தி எழுதினியா? அவர் பையன் அர்ஜுன் பேசி வெளுத்து வாங்கினானே அதைப் பத்தி எழுதினியா" ன்னு கேட்டு, வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்ஸன் துரையை கேள்வி கேட்டா மாதிரி கேட்டுட்டானுவ.

இதுல இவங்க சொல்லாத ஒன்னு மாலை மாத்தும்  விளையாட்டையும் விடாத நடத்தினதை நான் சொல்லாததை யாரும் கண்டுபிடிச்சி திட்டலை.  நீங்களும் சொல்லாதீங்க.  அப்புறம் அதுக்கும் சண்டை பிடிக்கப் போறாங்க.

ஒரே ஒரு நண்பர், "ஏம்பா இவ்வளவு எழுதினியே, சாயங்காலம், வெஸ்டர்ன் ஸ்டைல்ல நடந்த கல்யாணத்தைப் பத்தி ஒன்னும் சொல்லலியே அதப் பத்தியும் சொல்லிடு.  ஏன்னா நீ நல்லா அனுபவிச்சு ரசிச்சு இந்தக் கல்யாணத்தைப் பார்த்துட்டு இருந்தே" அவர் இப்படி சொல்லவும், எனக்கு என்னவோ, என்னோட கதைக்கு ஒரு 'சாகித்ய அகாடமி' அவார்ட் கொடுத்தா மாதிரி இருந்தது, அதுவும் ஒரு ரெண்டு செகண்டு தான், உடனே அவர், "நாங்க எல்லாம், வெள்ளிக்கிழமை காலைல இருந்து சனிக்கிழமை சாயங்காலம் ஒரு 7-7:30 மணி வரைக்கும் கல்யாணத்துல அவ்வளவு வேலை பார்த்திட்டிருந்தோம், கல்யாணத்தை சரியா பாக்க முடியலை.   நீதான், ஒரு வேலையும்  செய்யாம பெரிய எழுத்தாளன் கணக்கா வேஷ்டி ஜிப்பா மூக்குக் கண்ணாடியோட போஸ் கொடுத்திட்டு இருந்தே, அதனால கண்டிப்பா கல்யாணத்தை நல்லா வேடிக்கை பார்த்திருப்பே, நீ ப்ளாகுல எழுதினா அதை படிச்சுக்கரோம்"ன் சொல்லி என் சாகித்ய அகாடமி கனவுல கத்தியை சொருகிட்டார்.

எல்லாரும் (யார் அந்த எல்லாரும் னு எல்லாரும் எல்லார் கிட்டயும் கேக்கரமாதிரி யாரும் யார் கிட்டயும் இனிமே கேக்காதீங்க.  உஸ் அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே!)  கேட்ட எல்லா கேள்விகளுக்கு பதில் சொன்னா விடிஞ்சுடும்.

கார்த்திக்கு க்ரியேடிவிட்டி அதிகம்னா, அதை தூண்டிவிட்டு அதை அணையாம பார்த்துக்கரது ஷீலான்னு யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  அதுலயும் இந்தக் கல்யாணத்துல அவங்க எப்படி டென்ஷனே ஆகாம சிரிச்சுகிட்டே எல்லா வேலையையும் செஞ்சாங்கன்னு யோசிச்சா ஆச்சர்யமா இருந்தது.  ஒரு சின்ன சமாச்சாரம் சொல்லிட்டு அடுத்த விஷயத்துக்கு போயிரலாம்னு இருக்கேன்.  கமல் நடிச்ச மூன்றாம் பிறை படத்துக்கு அவருக்கு 'பாரத்' - இந்தியாவுல அந்த வருடத்துல வந்த படங்கள்ல நல்லா நடிச்ச ஹீரோவுக்கு கொடுக்கர பரிசு, கெடச்சதுக்கு படத்தோட டைரக்டர் பாலு மகேந்திராவை பேட்டி காண்றாங்க அப்போ அவர ஒருத்தர் கேட்டார், இந்தப் படத்துல கமல் கடைசி சீன்லதான் கொஞ்சம் ஏதோ நடிச்ச மாதிரி இருந்துது அதுக்கு அவருக்கு 'பாரத்' அவர்டா?  ஶ்ரீதேவி படம் பூரா சூப்பரா மனநிலை சரியில்லாத ஒரு சின்னப் பொண்ணா நடிச்சங்களே அதுக்கு அவங்களுக்கு ஏன் 'ஊர்வசி' அவார்ட் தரலைன்னு.  இதுக்கு பாலு மகேந்திரா சொன்னார், "ஶ்ரீதேவிங்கர காட்டாறு எப்படி வந்துச்சுன்னு நீங்க படத்துல பார்த்தீங்க, அந்தக் காட்டாற்றோட இருக்கர கமல் தனக்கும் நடிக்கத் தெரியுங்கரதுனால நடிச்சிருந்தா அந்தக் கேரக்டர் கெட்டுப் போயிருக்கும், அவர் தன்னால இப்படி அமுக்கமாவும் நடிக்க முடியும்னு நிருபிச்சுட்டு அவர் கடைசி சீன்ல ஶ்ரீதேவியோட நிலைமைக்கு வந்ததும் ஶ்ரீதேவியை தூக்கி சாப்பிடரமாதிரி நடிச்சார் அதனால அவருக்கு பாரத் அவார்ட் கொடுத்தாங்க.  ஶ்ரீதேவிக்கு ஏன் கொடுக்கலைன்னு நீங்க எல்லாம் அந்தக் கமிட்டிக்கு தந்தி அடிங்க"ன்னா ர்.  அந்த ரிப்போர்டருக்கு இருந்த குறை உங்களுக்கெல்லாம் இருக்கக் கூடாதுன்னு, ஶ்ரீதேவி மாதிரி வேலை பார்த்த கார்த்திக்கு அவார்ட் கொடுத்துட்டு, கமல் மாதிரி அநாயசமா எல்லா வேலையையும் பார்த்த ஷீலாவுக்கு அவார்ட் தரலை.  யப்பா எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.  ஒரு கவனக் குறைவுல விட்டுடேன், அதப் பெரிசாக்கி, எங்க வூட்ல வேர சொல்லி அவங்க பங்குக்கு இடிக்க.  யம்மா, இனிமே அடிவாங்க நம்ம ஒடம்புல சக்தியில்லை.  விட்டுடுங்க.

மத்தியானம் நடந்த வெஸ்டர்ன் கல்யாணம் நான் மொத மொதலா பாத்த வெஸ்டர்ன் ஸ்டைல் கல்யாணம்.  இதுக்கு கோ-ஆர்டினேடர்கள் - ராஜி தேவதாசனும், க்ரிஸ்டஃபர் தேவதாசனும்.  இவங்க இந்த நிகழ்ச்சிக்கு பக்காவா ப்ளான் பண்ணியிருந்தாங்க.  இடது பக்கம் இத்தனை சேர்ஸ், வலது பக்கம் இத்தனை சேர்ஸ்ங்கரது வரைக்கு ப்ளான் பண்ணியிருந்தாங்கன்னா பார்த்துக்கங்க.

மொதல்ல அந்த சேர்ஸ்ல உக்காரதுக்கு மைக்கேல் சார்புல அவரோட அம்மா, அப்பா, தாத்தா பாட்டி வந்தாங்க, ஆரத்தி சார்புல ஷீலா, ஷீலாவோட அம்மா, சகோதரி, அர்ஜுன் வந்தாங்க.  அதுக்கு அப்புறம்,  ஆரத்தி சார்புல ஒரே மாதிரி புடைவை கட்டிகிட்டு 5 பெண்கள் வந்தாங்க அதே மாதிரி மைக்கேல் சார்புல ஒரே மாதிரி குர்தா பைஜாமா போட்டுண்டு 5 பசங்க வந்தாங்க.  அப்புறம் எல்லோரும் எழுந்து நிக்க கார்த்தி ஷீலாவை அழைச்சுண்டு வந்தார்.  மேடைக்கு கீழ மைக்கேலும், ப்ரீஸ்டும் இருந்தாங்க, கார்த்தி வந்து ஆரத்தி கையை மைக்கேல் கைல கொடுத்துட்டு நகர்ந்துட்டார்.  அதுக்கப்புறம் ப்ரீஸ்ட் கல்யாணம்ங்கரது எவ்வளவு முக்கியங்கரதைப் பத்தி சொல்லிட்டு பைபிள்ல இருந்து ஒரு சில வாக்கியங்களப் படிச்சுட்டு, ரெண்டு பேரையும் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதமான்னு கேட்டுட்டு, அவங்களை உறுதி மொழி எடுத்துக்க வெச்சுட்டு, மோதிரம் மாத்திக்கச் சொல்லி, கல்யாணம் முடிஞ்சாச்சுன்னு சொன்னார்.  இது ரத்ன சுருக்கமா இருந்தாலும், ஒரு ஒழுங்கு இருக்கரதா எனக்குப் பட்டுது.  இதுக்கு அப்புறம்தான் தாகசாந்தி, ஸ்நாக்ஸ், டான்ஸ் (என்கிற உடான்ஸ்) எல்லாம்.

கடைசியா கேக் கட் பண்ணினதும், கார்த்தி வழக்கம் போல நல்லாத்தான் பேசினார், ஆனா அவர் பேச்சை தூக்கி சாப்டு ஏப்பமே விட்டுட்டான் அர்ஜுன்.  மைக்கேலோட ஃப்ரெண்டு ஒருத்தர் பேச வந்துட்டு, டெல்லி தமிழ்காரங்க "எனக்கு அவ்வளவா பேஷ வராது, மன்னிச்சுக்கோங்கோ"ன்னு மழலைத் தமிழ்ல பேசரமாதிரி, ஆரம்பிச்சுட்டு ஒரு ஸ்டாண்டப் காமெடி தோத்து போர ரேஞ்சுக்கு பேசி அசத்தினார்.

அடுத்தது தமிழ்நாட்டு விஷயம்:

நித்திக்கும் - ஆதீனம் அருணகிரிக்கும் லாடாய்ன்னு சில பத்திரிகைகள்ல போட்டிருக்காங்க.  நிஜமான்னு தெரியலை.  க்ராணைட் குவாரில ஊழல்ன்னு எல்லாரும் தாம் தூம்னு குதிக்கராங்க.  அதுல   பெரிய தலைன்னு ஒருத்தரை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க.  அழகிரி பையன் தலைமறைவா இருக்கானாம்.  என்னய்யா காமெடி பண்றீங்க, எப்படியா இவ்வளவு பேருக்கு தெரிஞ்ச ஒருத்தன் சட்டுன்னு தலைமறைவாக முடியும்.  இதே ரேஞ்சுல போனா, தாத்தாவும்  சக்கர நாற்காலியோட காணலன்னு சொன்னாலும் சொல்வாங்க.  பாராளுமன்றத் தேர்தல் சீக்கிரம் வரலாம்னு ஒரு புரளி இந்தியாவுல ஓடுது, அதுக்கு ஜெவும் தேர்தல் வந்துட சான்ஸ் இருக்குனு கருத்து சொல்லிட்டு ஒரு நால்வர் அணியை ஃபார்ம் பண்ணியிருக்கார்.  அது எதுக்குன்னு தெரியலை, எப்படியும் இவர்தான் முடிவெடுக்கப் போரார், அப்புறம் எதுக்கு நால்வர் அணி?

தமிழ்ப் படம் நான்
விஜய் ஆண்டனி தயாரிச்சு, நடிச்சு, ம்யூசிக் போட்டு இருக்கர படம் நான்.  கதை Talented Mr. Ripley படத்தோட கதையையும் Taking Lives கதையையும் மிக்ஸ் பண்ணி அங்கங்க திகிலை சேர்த்து, சில இடங்கள்ல திரைக் கதைல சொதப்பி எடுத்திருக்காங்க.  சுமாரா ஆக்ட் பண்ணியிருக்கார் விஜய் ஆண்டனி.  பாட்டு சுமார்ன்னு வெப்ல பல இடங்கள்ல சொல்றாங்க எனக்கு அப்படி ஒன்னும் பெரிசா தெரியலை.  போரடிச்சா பாருங்க.

இனிமே அடுத்த வாரம் அலாஸ்கா பயணக் கட்டுரை 2ல பாக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.