Showing posts with label US Presidential Election. Show all posts
Showing posts with label US Presidential Election. Show all posts

Wednesday, November 07, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்னு எங்கேயோ படிச்சது






அடுத்து நம்மூர் கொலு வலம் பதிவுல பாக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.

Saturday, October 27, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் - 2012 - தொடர்ச்சி

வரலாறு காணாத அளவுல மூமூமூமூமூனு பேர் பின்னூட்டம் போட்டு இருக்காங்க.  ஆனா எல்லாமே நல்லா இருக்கு சரி இன்னிக்கு வீட்டுல ஒன்னும் ஆணி புடுங்கர வேலை இல்லை, கொலுவை பத்திரமா எடுத்து வெக்கனும், சாண்டி புயல் வரதுக்கு முன்னாடி, பால் தண்ணி வாங்கி வெக்கனும் அவ்வளவுதான் சரி பதிலை ஒரு பதிவா போட்டுட்டா போச்சு, என்ன சொல்றீங்க.

மொதல்ல நாகு:

நீங்கள் போட்டிருக்கும் படம் ஜூப்பரோ ஜூப்பர். யானை தேய்ந்து கழுதை சைஸுக்கு வந்து விட்டது :-)

நான் இன்னும் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் யாருக்கு ஓட்டுப் போட்டு பட்டை நாமம் சாத்திக் கொள்ளலாம் என்று. நீங்கள் சொல்வது போல ரிபப்ளிகனாக இருந்தால், தாலிபான்கள் ரேஞ்சுக்குப் போகும் முர்டாக்குகளை - மன்னிக்கவும் - மூடர்களைக் கண்டுகொள்ளாமல் ஓட்டு போட்டு விடலாம். டெமாக்ரட்டாக இருந்தால் பரப்பி நிரப்பும் சோஷலிஸ கொள்கைகளைக் கண்டு கொள்ளாமல் குத்தி விடலாம். நடுவில் மாட்டிக் கொண்டால்தான் குழப்பமே...

அந்தப் பக்கம் போனால் Atlas Shrugged. இந்தப் பக்கம் போனால் Grapes of Wrath. இவன் தேவையில்லாமல் ஈராக் சண்டை போட்டு செலவழித்தால், அவன் கழகக் கண்மணிகளே வெட்கப்படும் ரேஞ்சுக்கு பேசித் தள்ளுகிறான். கூட திவாலாகும் ஓட்டு வங்கி நிறுவனங்களுக்கு செலவு...

ஓட்டு போட வேண்டும். ஆனால் யாருக்குப் போடுவது? யாரு லெஸ்ஸர் ஈவில்? சுஜாதா சொன்னதுபோல யாரையும் பிடிக்காவிட்டால் யாருக்கு வயது கம்மியோ அவருக்கு போடலாமா? இல்லை யாருக்கு பேங்க் பேலன்ஸ் கம்மியோ, ஜாஸ்தியோ அவருக்கு போடலாம். 

யோசித்து விட்டு ஒரு முடிவுக்கும் வராவிட்டால் வயதுதான்... :-)

ஆமாம் - யானை கீழேவிழுந்தா தின்னாதா? புதுக்கதையா இருக்கே? பணக்கார கொழுத்த யானையோ?



நாகு உங்க ஓட்டு  சின்ன வயசுகாரருக்கா?  சரி சரி புரிஞ்சிடுச்சு.  அதே சுஜாதா சொன்ன இன்னொரு அருமையான வழி இதோ:

சுஜாதா:  "எனக்கும் சகுனத்துல நிறைய நம்பிக்கை உண்டு, ஆனா, நிறைய உப கண்டிஷன்ஸ் போட்டுப்பேன்.  வீட்டை விட்டு கிளம்பினா சிங்கிள் குடுமி மாமா வரக்கூடாதுன்னு எங்க பாட்டி சொல்லியிருக்கா, ஶ்ரீரங்கத்துல அதெல்லாம் தினமும் நடக்கும் அதனால டக்குன்னு ஒரு கிளைக் கண்டிஷன் போட்டுப்பேன்.  அவருக்கு  கைல 6 விரலிருக்கணும்னு, அப்படி ஒருத்தர் ஒருநாள் எதிரே வந்துட்டார், உடனே கண்டிஷன் 2, அவருக்கு மாறு கண் இருக்கனும்னு.  இப்படி கண்டிஷன்ஸ் போட்டு போட்டு என்னோட சகுனத்தடைகளை எல்லாம் அடிச்சு உடைச்சுடுவேன்"

அதுமாதிரி நீங்க நிறைய வெச்சுக்கலாம். ஆனா, நல்ல ஆட்சி தர வேண்டாம்னு தீர்மானம் பண்ணிக்கனும் அவ்வளவுதான்.

யானை காட்டில இருந்தா இப்படித்தான் இருக்கும்னு நானும் நிறைய படிச்சிருக்கேன்.  கீழ விழுந்தா எடுத்து சாப்பிடரது, கை நீட்டி காசு வாங்கிட்டு ஆசீர்வாதம் பண்றது, குனிஞ்சு பாகனை மேல ஏத்திக்கரத்து, ஒத்தைக் கால்ல நின்னு சர்க்கஸ் வேலை பண்றது எல்லாம் ஊர்ல நாட்ல இருக்கர யானைங்கதான்.

இதுக்கு ஒரு சின்ன கதை:  ஒரு சர்க்கஸ்ல யானை எல்லா வேலையையும் செஞ்சுதான், அப்போ முன் வரிசைல இருந்த 4 பசங்க ஒரு இந்தியன், ஒரு ரஷ்யன், ஒரு சீனாக்காரன், ஒரு அமெரிக்கன், அவங்களை கேட்டாங்களாம், இது எப்படி சாத்தியம்னு.  அதுக்கு இந்தியன் சொன்னானாம் யானை விநாயகர் மாதிரி அதனால அது நாம எதைக் கேட்டாலும் செய்யும்னு, சீனாக்காரன் சொன்னானாம், அதை சின்ன வயசுலயே அடிச்சு அடிச்சு சொல்லிக் கொடுத்துட்டாங்க அதனால அது பயத்துல இதை செய்யுதுன்னானாம்.  ரஷ்யன் சொன்னானாம்,  அது சர்க்கஸ் யானையோட குட்டி அதனால அதனோட ரத்தத்துல சர்க்கஸ் வேலை பண்ற ஜீன் இருக்குன்னானாம்.  அமெரிக்கன் பையன் சொன்னானாம், அந்த யானைக்கு தன்னோட பலம் தெரியலை அது தெரிஞ்சுதுன்னா, இப்படி கேவலமான வேலையெல்லாம் செய்யாதுன்னானாம்.

யானை டைனோசர் காலத்துல இருந்து மிஞ்சியிருக்கர ஒரு சில மிருகங்கள்ல ஒன்னு.  எவ்வளவு பெரிசா இருந்தாலும் தாவர பட்சிணி, அருமையா நீச்சல் பண்ணக்கூடிய மிருகம்.  இப்படி சொல்லிகிட்டே போகலாம்.

அடுத்து சுப்பு தாத்தா:
இந்த அமெரிக்கன் ப்ர்சிடென்ட் எலக்சனே ஒரு சிக்கல். 
எல்க்டொரல் வோட் அப்படின்னு ஒரு பக்கம் சொல்றாங்க.
அதற்கப்பறம் மக்களுடைய நேரடியாக வோட் எண் ணிக்கையும் சொல்றாங்க.
அதற்கப்புரம் அந்தந்த ஸ்டேட்டுக்கு எத்தனை எலக்டொரல் வோட்டோ
அத்தனையும் யார் வின் பண்ராகளோ அவுகளுக்கு போயிடுமாம். 

இது பற்றி எத்தனையோ வெப் சைட்டுக்கு போனாலும் சொல்ராங்க.
இந்த சிஸ்டத்திலேயே கோளாரு இருக்கு. ஆனா சரி பண்ண அலவ் பண்ண மாட்டாங்க.
ஏன்னா இந்த ஸிஸ்டம் தான் இப்போதைக்கு ரைட் தோணுது அப்படின்னு.

நீங்க இந்த பிரஸிடென்ட் சிஸ்டம் எலக்ஷன் பத்தி கொஞ்சம் விலா வாரியா 
சொல்லுங்களேன். நம்ம இந்தியா கொஞ்சம் பெட்டரா இருக்கோன்னு தோனுது.

சுப்பு தாத்தா. 
American election allows an option 
for the voter to says that I do not want to vote for either, as Indian Election rules allow?



அமெரிக்கன் எலெக்‌ஷன் பத்தி விலாவரியா எழுதினா என் விலா எலும்பை எடுத்துடுவாங்க.  ஆனா நான் இங்க இருந்த 14 வருஷங்கள்ல பார்த்த வரைக்கும், இது இந்தியாவோட தேர்தல் முறையை விட எவ்வளவோ மேல்.  அதுக்கு எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம்.  மொதல்ல யார் அதிபரா வருவார்ங்கரது தேர்தலுக்கு முன்னாடியே எல்லோருக்கும் தெளிவா தெரியும்.  நம்மூர் மாதிரி, சோனியாவா, மன்மோகனா, மோடியா, அத்வானியா இல்லை வேற யாராவதான்னு தெளிவில்லாம இருக்காது.  யாரோட பார்வை எப்படின்னு முழுசா தெரியலைன்னாலும் கொஞ்சமாவது தெரிய வரும்.  4 வருஷம் ஆண்டதுக்கு பிறகும், எப்படி நல்லா உளர முடியும்னு தெரிய வரும், ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடியே எப்படி வெறும் வாய்ல முழம் போட முடியும்னு தெரியவரும்.  

முக்கியமா, அதிபர் பெரிய ஆளா இருந்தாலும் திரை மறைவுல ரொம்ப பவர்ஃபுல் துணை அதிபர்ன்னு பலர் சொல்லி கேட்டிருக்கேன்.  சும்மா மீன் பிடிக்க போயிட்டு, கூட வந்த நண்பரைகூட மூஞ்சில சுட்டுட்டு ஒரு சின்ன தண்டனைகூட இல்லாம தைரியமா சுத்தலாம்.  அவ்வளவு பவர்.  அதிபரா இருந்தா பெரிய மேசை போட்டுகிட்டு தன் பொண்ணு வயசு இருக்கர பொண்ணுங்க கூட ஜாலியா இருக்கலாம்.  கேட்டா தைரியமா டி.வி முன்னாடி "ஆமா, அப்படித்தான், உங்களால முடிஞ்சத பாத்துக்கங்க"ன்னு சொல்லலாம்.  

இந்தியாவுல இருக்கர ரூல் 49-ஓ (49-O) அமெரிக்காவுல இருக்கரமாதிரி எனக்குத்  தெரியலை.  அது எவ்வளவு தூரம் சரின்னும் தெரியலை.  கண்டிப்பா ஒரு விவாதத்துக்குரிய விஷயம்தான்.  

மறுபடியும் நாகு (அல்லது அவரோட நண்பனோட அப்பா எழுதிய பின்னூட்டம்)


என் நண்பனின் தந்தையிடம் இருந்து மின்னஞ்சலில் வந்தது:

கதையிலே கழுதை வராமே யானை மட்டும் வந்திருப்பதாலும் தம் நிலையை நடுவில் வைத்துக் கொண்டாற்போல எழுதியிருப்பதாலும் நாசகார ரிபப்லிக்கானுக்கு வாக்குப் போடுவார் போலிருக்கிறது.
என் நிலை இதுதான்.
ஒபாமாவை நல்லது ஏதும் செய்ய விடாமல் எதிரிகள் தடுத்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இரான், லிபியா, சிரியா முதலிய இடங்களில் போருக்கு புறப்படுவார்கள். அமெரிக்காவின் ஒரு சதவீத மக்களுக்குத்தான் ஆதாயம்.
உலகின் மற்ற எல்லாருக்கும் நஷ்டம்தான். Neutrality or undecidedness is being perverse.
மொதல்ல அந்த அப்பாவுக்கு அமெரிகாவுல ஓட்டு இருக்கான்னு தெரியலை,  இப்ப சொல்லிடரேன்.  நான் இந்த விஷயத்துல கண்டிப்பா நடுநிலைமைதான்.  ஆனா அதே சமயம், கண்டிப்பா இப்போதைய அதிபருக்கு ஓட்டு போடரதா இல்லை.  ஒபாமா நல்லது ஏதும் செய்ய விடாமல் எதிரிகள் தடுத்தார்கள்ன்னு ஒரு நோபல் பரிசு ரேஞ்சுக்கு எதையோ இந்த அப்பா கண்டு பிடிச்சிருக்கார் அது என்னன்னு சொன்னா நல்லா இருக்கும்.  தமிழ் ரொம்ப அருமையான மொழி, அவர் 'ஏதும்' ன்னு சொன்னதுனால, அதை கொஞ்சம் கூர்மையா பார்த்தா, அவர் எதுவும் செய்யலைன்னு ஆகுது.  தமிழ்ல ஒரு முறை உண்டு, அதாவது ஒரு விஷயத்தை சொன்னா இன்னொரு விஷயம் புரியும்ன்னு அதுக்கு அருத்தா பத்தின்னு சொல்லுவாங்க.  நான் இப்போ காபி குடிக்கரது இல்லைன்னு சொன்னா இதுக்கு முன்னாடி வரைக்கும் காபி குடிச்சுண்டு இருந்தேன்னு அர்த்தம்.  'ஏதும்' செய்ய விடலைன்னா அவர் எதுவும் செய்யலைன்னு அர்த்தம்.  4 வருஷமா கைல வீடோ பவர் வெச்சுண்டு எதுவ்ம் செய்யாம இவர் இருக்கரதுக்கு திண்ணையை காலி பண்ணிட்டு போகட்டும்.

இந்தியா தீவிரவாதிகளுக்கு எதிரா வழக்கமா சொல்ற வீராவேச பேச்சைக்கூட இப்போ நிறுத்திட்டாங்க அதனால தீவிரவாத ப்ரச்சனை இந்தியாவுல நின்னு போச்சா?  2001-ல அமெரிக்காவுல நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியா இவங்க எடுத்த நடவடிக்கைக்கை அப்புறம் அப்படி ஒரு தாக்குதல் நடத்த மத்தவங்க யோசிக்கராங்கன்னா அதை செய்யாம, க்ளிண்டன் அதிபரா இருந்த போது சவுதி அரேபியாவுல அமெரிக்க கான்சுலேட்ல நடந்த தாக்குதல்ல ஒரு மண்ணும் செய்யாம, மான் கொம்பு கராத்தே போட்டுட்டு வந்ததுக்கு (அப்படின்னா என்னன்னு நாகு கிட்ட தனியா கேளுங்க) பதில்தான் 2001ல அமெரிக்காவுல நடந்த தாக்குதல்.  மஹாபாரதத்துல பீஷ்ம நீதின்னு ஒரு கட்டம் வரும் அதுல அவர் தர்மருக்கு சொல்ற உபதேசம், ஒரு ராஜாவா இருக்கரது ரொம்ப கஷ்டம், அவன் அவனோட படையை நல்லா தயார் நிலைல வெச்சுக்கணும், அதே சமயம் 'யாரோடும் பகை கொள்ளலன், எனில் போர் ஒடுங்கும் புகழொடுங்காது'ங்கரார்.  அதுபோல நாம பவர்ஃபுல்ன்னு மந்த நாட்டுக்குத் தெரியனும் அப்பதான் அவங்க நம்ம கிட்ட வம்புக்கு வர மாட்டாங்க.  

கடைசியா, அமெரிக்காவுல 1% மக்களுக்கு மட்டும் நல்லது உலகத்துல எல்லோருக்கும் நஷ்டம்தான்னு எதை சொல்றாருன்னு தெரியலை.  அது எப்படின்னு அவருக்கு மட்டும் தெரிஞ்சத (இல்லை எனக்கு மட்டும் தெரியாததை) அவர் சொன்னா நல்லா இருக்கும்.

முரளி இராமச்சந்திரன்.

Thursday, October 25, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் - 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் - 2012


2012 அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் 12 நாள்ல நடக்கப்போறது.  சின்ன பசங்க ஒழுங்கா 9த் வீக் பரிச்சைக்கு படிக்கப் போங்க, பெருசுங்க மூஞ்சியை நல்லா தொடச்சு வெச்சுகிட்டா சூப்பரா ஒரு நாமம் போட கூட்டமா வந்து கிட்டு இருக்காங்க.

இதுவரைக்கும் 3 டிபேட்டை கேட்டிருப்பீங்க.  அதைத் தாண்டி இந்தக் கட்சி அந்தக் கட்சின்னு எல்லோரும் பேசி பேசி காதைக் கிழிச்சிருப்பாங்க.  இப்ப நாம செய்ய வேண்டியது எந்தக் கட்சியை தேர்ந்தெடுக்கரதுன்னு யோசிக்கனும்.  யாரைக் கேட்டாலும் யோசிக்க வேண்டியதே இல்லை, நீ ரிபப்ளிகன் ஆதரவாளர்ன்னா யானைக்கு ஓட்டு போடு, டெமாக்ரெட் ஆதரவாளர்ன்னா கழுதைக்கு ஓட்டு போடு இதுல யோசிக்க என்ன இருக்குன்னு சொல்வாங்க.

"நான் தீர்மானமா இருக்கேன் யாருக்கு ஓட்டு போடரதுன்னு" யாராவது சொன்னா நம்பாதீங்க.  எந்தக் கட்சிக்கு ஓட்டு போட்டாலும், அடுத்த நாளே அமெரிக்காவுல தெருவுக்கு தெரு தேனும் பாலும் ஓடாது.  பால் டாங்கரும் தேன் லாரியும் மோதிக்கிட்டா வேணா ஓடலாம்.

"மாமி கொலூலூலூலூ......." ன்னு போனவாரம் ஒருத்தர் வீட்டுக்கு போன போது அங்க என்னை மாதிரி கொலுவுக்கு  வந்த ஃப்ரெண்ட், அந்த வீட்டு மாமி, மாமா, அவங்க பொண்ணு எல்லோரும் சேர்ந்து, நான் என்னமோ இந்த ஊர் அரசியல் விமர்சகர்ன்னு நினைச்சு கிட்டு என்னை கேள்வி மேல கேள்வி கேட்டாங்க.

நான் அவங்கள கேட்டது, கடந்த நாலு வருஷத்துல என்ன என்ன நல்லது நடந்தது (நடந்ததா?) ன்னு யோசிங்க.  இந்த ஆட்சிக்காரங்க சொன்னதை செஞ்சாங்களா,   அடுத்த நாலு வருஷம் அவங்க ஆண்டா நல்லதா இல்லையான்னு யோசிங்கன்னு கேட்டேன்.  அதுக்கு என்னா பேச்சு பேசராங்கப்பா!


இந்நாள் அதிபர் போர போக்குல அவனுக்கு 800 மில்லியன், இவனுக்கு 900 மில்லியன்னு கொடுத்து அதை வாங்கின அடுத்த வாரமோ இல்லை அடுத்த நாளோ அவங்க மஞ்ச கடுதாசி - ஐ.பி. கொடுத்துட்டு நம்மூர் பைனான்ஸ் கம்பெனிமாதிரி ஓஓஓஓஒடி  போயிட்டாங்க.  ஒருத்தன் கிட்ட ஒரு மில்லியன் இருந்தாலே அவன் பணக்காரன் (என்னை விடை ஒரு 10000 மடங்கு) அப்படி இருக்கரச்சே, எப்படி 800 மில்லியனும் 900 மில்லியனும் வாங்கிட்டு ஐ.பி கொடுக்கராங்க, இவங்களும் வழிச்சுகிட்டு அதை கேட்டுக்கராங்க.

அப்போ என் ஃப்ரெண்ட்டோட பொண்ணு ஒரு கேள்வி கேட்டா, "1928ல நடந்த போருளாதார சீரழிவு (அதாங்க க்ரேட் டிப்ரெஷன்) அதுக்கு மேலன்னு சொல்லனும்ன்னா இப்ப இருக்கரதுதான் அது 2008ல வெளியேறின அதிபர் கைங்கரியம் அதனால நீ என்ன இவரை பார்த்து இப்படி நாக்குமேல பல்லப் போட்டு கேள்வி கேக்கர"ன்னு காச்சி எடுத்துட்டா.  

நான் தெரியாமதான் கேக்கரேன் (அது சரி தெரிஞ்சா ஏன் கேக்கப் போறேன்) 1928 ல உலக மக்கள் தொகை எவ்வளவு, 2008-2012ல உலக மக்கள் தொகை எவ்வளவு.  அப்போ உலகத்துல பெரிய நாடுங்கன்னு சொன்னா, அமெரிக்கா, ப்ரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ப்ரிட்டன், சீனா.  அதுலயும் பாதி நாடுங்க ப்ரிட்டனோட ஆதிக்கதுல இருந்தது.  அப்போ நடந்த பொருளாதார வீழ்ச்சியே நமக்கு பெரிய பாதிப்பில்லை.  ஆனா, இன்னைக்கு இருக்கர இந்த வீழ்ச்சி சுதந்திர இந்தியாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கனும் ஆனா, அது அப்படி ஒரு பெரிய வீழ்ச்சியை தரல.  அமெரிக்கா, யூரோப்ல அப்புறம் சில இடத்துல வீழ்ச்சியாயிருக்கு, இதுக்கு என்ன சொல்ல முடியும்.  அமெரிக்காவோட இந்த வீழ்ச்சிக்கு காரணம், 2004-2008 ல நடந்த அதிபரோட ஆட்சின்னா, 2008-2012 வரைக்கும் இருந்த இவர் எதையும் செய்ய முடியலைன்னா, எதுக்கு மாற்றம் கொண்டு வரேன்ன்னு எம்.ஜி.ஆர் மாதிரி "என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கையணைக்க"ன்னு பாட்டு பாடி 44 வது அதிபரா பதவிக்கு வந்து, 20 டிரிலியன் கடன் (இதுக்கு எவ்வளவு சைபர்ன்னு சத்தியமா எனக்குத் தெரியாது) ஏத்தி விட்டுட்டு இப்ப மாற்றத்தை விட்டுட்டு 'ஃபார்வேர்ட்' ன்னு ஒரு தாரக மந்திரத்தை ஆரம்பிச்சு கதை குத்திகிட்டு இருக்காரு.

இதுல என் ஃப்ரெண்ட் ஒருத்தர், நம்ம குழந்தைங்களுக்கு 5ம் வகுப்புல பாஸ் பண்ணினதும் அவங்களுக்கு இந்த அதிபர் கையெழுத்து போட்டு ஒரு சர்டிபிகேட் கொடுத்தாரே அத போன அதிபர் செஞ்சாரன்னு கேட்டார்.  அதனால இவரே அடுத்த 4 வருஷம் பதவில இருக்கனும்னுங்கரது அவரோட வாதம்.

நானும் தான், தமிழ் சங்கத்துல அதிபரா இருந்தப்போ குழந்தைங்களுக்கெல்லாம் கையெழுத்து போட்டு சர்டிபிகேட் கொடுத்தேன், அப்போ நிறைய குழந்தைங்க 'அங்கிள் கப்பு கிப்பு ஒன்னு கிடையாதா வெறும சர்டிபிகேட்தானா'ன்னு கேட்டாங்க . ஹூம் என் கையெழுத்துக்கு அவ்வளவுதான் மதிப்பு.

இந்தப் பக்கம் இவர் இப்படி காமெடி பண்ணிகிட்டிருந்தா அந்தப் பக்கம் ஒருத்தர் திரும்பத் திரும்ப கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி 20 டிரிலியன் கடன், 20 மில்லியன் வேலை போச்சு, பொருளாதாரம் சீரடையல, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமா போச்சு, எத்தனையோ மில்லியன் உணவு சீட்டு கொடுத்துகிட்டு இருக்கோம்.  இதெல்லாம் கேக்க நாதியில்லாம போச்சு. அது இது ன்னு வீட்டுல ரிடையர்ட் ஆகிட்டு பொளம்பிட்டிருக்கர ஒருத்தர் மாதிரி சொல்லிகிட்டிருக்காரு.  அவர் சொல்றதுல உண்மை இருந்தாலும், சும்மா சொல்லிகிட்டிருந்தா அதோட வீரியம் கொறஞ்சுடும்.

நீங்க யாருக்கு வேணும்னாலும் ஓட்டு போடுங்க.  ஆனா கண்டிப்பா ஓட்டு போடுங்க.  அப்புறம் இவங்களைப் பத்தியும், இவங்க ஆட்சியைப் பத்தியும் கத்தி பேசலாம்.

இன்னிக்கு துக்ளக்ல தலையங்கத்துல கேஜ்ரிவால் பரபரப்பா செய்துகிட்டு இருக்கரதைப் பத்தி சோ சொல்லிட்டு கடைசில இப்படி எழுதியிருக்காரு.

கடம் பிந்த்யாத்
படம் சிந்த்யாத்
ஏனகேன பிராகாரேண
பிரஸித்த புருஷோ பவ 

– என்பது ஒரு ஸம்ஸ்க்ருத சடையர் மொழி. 
அதாவது – 
பானையை உடை,
படத்தைக் கிழி,
ஏதோ ஒரு வழியில்
பிரபலமான மனிதனாகி விடு! 


இது இப்போதைய அதிபருக்கும் அடுத்து வர ஆசைப்படர அதிபருக்கும் சரியா பொருந்தும்.

கடைசியா ரெண்டு குட்டி கதைங்க :
1) ஒரு காட்டுல இருக்கர எல்லா மிருகங்களுக்கும் யானை தான் தலைவன்.  எப்படின்னா, ஒரு நாள் ஒரு சிங்கம், எல்லா மிருகங்கள் கிட்டேயும் போய், "ஏய், இந்தக் காட்டுக்கு யார் ராஜா?"ன்னு கேட்டுச்சான்.  எல்லா மிருகங்களும், "நீங்க தான் ராஜா!"ன்னு பவ்யமா சொல்லிச்சாம்.

இப்படி கேட்டு கேட்டு மிதப்பா வந்த சிங்கம் தனியா போய்கிட்டிருந்த யானையைப் பாத்து, "ஏய் இந்த காட்டுக்கு யார் ராஜா?"ன்னு கேட்டுச்சாம்.  யானை கவனிக்காத மாதிரி போயிட்டே இருந்துச்சாம்.  சிங்கத்துக்கு கோபம் வந்து யானை முன்னாடி வந்து திரும்பியும் கேட்டுச்சாம், யானை ஒன்னும் பதில் சொல்லாம, துதிக்கையால, சிங்கத்தோட வாலை பிடிச்சு தலைக்கு மேலை மூனு தடவை சுத்தி தூக்கி போட்டுச்சாம், தூரத்துல போய் விழுந்த சிங்கம் அங்கேயிருந்து சொல்லிச்சாம். "சே இது செவுட்டு யானை போல இருக்கு, பேச்சு பேச்சா இல்லாம அனவசியமா அடிக்குதுன்னு" சொல்லிட்டு ஓடி போச்சாம்.


2) காட்டுல இருக்கர எல்லா மிருகங்களுக்கும் உணவு போடரது யானைதான்னு குருஜி சொல்வார்.  எப்படின்னா, யானை உணவு தேடிண்டு போகும் போது, அங்க இங்க இருக்கர மரக்கிளையெல்லாம் பறிச்சு சாப்டுண்டே போகுமாம், அப்போ கீழ விழரத அது சாப்பிடாதாம், அதைச் சாப்பிட மான், வரிக்குதிரை, முயல், காட்டெருமைன்னு தாவர பட்சிணிகள்லாம் வருமாம், இதுங்க வரும்னு அதுங்கள சாப்பிட சிங்கம், புலி எல்லாம் வருமாம், இதுங்க சாப்பிட்டு மிச்சம் இருக்கரத சாப்பிட கழுதைப் புலி, நரி, ஓநாய் எல்லாம் வருமாம், இதுங்களும் சாப்பிட்டு வெக்கர மிச்சத்தை சாப்பிட கழுகு பருந்து எல்லாம் ஆகாசத்துல வட்டம் போடுமாம்.  இப்படி ஒரு காட்டுக்கே தினமும் உணவு போடரது யானை.

இந்த கதைகளுக்கும், யாருக்கு நீங்க ஓட்டு போடனும்ங்கரதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


முரளி இராமச்சந்திரன்.