Showing posts with label 2012. Show all posts
Showing posts with label 2012. Show all posts

Wednesday, November 07, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்னு எங்கேயோ படிச்சது






அடுத்து நம்மூர் கொலு வலம் பதிவுல பாக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.

Thursday, October 25, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் - 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் - 2012


2012 அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் 12 நாள்ல நடக்கப்போறது.  சின்ன பசங்க ஒழுங்கா 9த் வீக் பரிச்சைக்கு படிக்கப் போங்க, பெருசுங்க மூஞ்சியை நல்லா தொடச்சு வெச்சுகிட்டா சூப்பரா ஒரு நாமம் போட கூட்டமா வந்து கிட்டு இருக்காங்க.

இதுவரைக்கும் 3 டிபேட்டை கேட்டிருப்பீங்க.  அதைத் தாண்டி இந்தக் கட்சி அந்தக் கட்சின்னு எல்லோரும் பேசி பேசி காதைக் கிழிச்சிருப்பாங்க.  இப்ப நாம செய்ய வேண்டியது எந்தக் கட்சியை தேர்ந்தெடுக்கரதுன்னு யோசிக்கனும்.  யாரைக் கேட்டாலும் யோசிக்க வேண்டியதே இல்லை, நீ ரிபப்ளிகன் ஆதரவாளர்ன்னா யானைக்கு ஓட்டு போடு, டெமாக்ரெட் ஆதரவாளர்ன்னா கழுதைக்கு ஓட்டு போடு இதுல யோசிக்க என்ன இருக்குன்னு சொல்வாங்க.

"நான் தீர்மானமா இருக்கேன் யாருக்கு ஓட்டு போடரதுன்னு" யாராவது சொன்னா நம்பாதீங்க.  எந்தக் கட்சிக்கு ஓட்டு போட்டாலும், அடுத்த நாளே அமெரிக்காவுல தெருவுக்கு தெரு தேனும் பாலும் ஓடாது.  பால் டாங்கரும் தேன் லாரியும் மோதிக்கிட்டா வேணா ஓடலாம்.

"மாமி கொலூலூலூலூ......." ன்னு போனவாரம் ஒருத்தர் வீட்டுக்கு போன போது அங்க என்னை மாதிரி கொலுவுக்கு  வந்த ஃப்ரெண்ட், அந்த வீட்டு மாமி, மாமா, அவங்க பொண்ணு எல்லோரும் சேர்ந்து, நான் என்னமோ இந்த ஊர் அரசியல் விமர்சகர்ன்னு நினைச்சு கிட்டு என்னை கேள்வி மேல கேள்வி கேட்டாங்க.

நான் அவங்கள கேட்டது, கடந்த நாலு வருஷத்துல என்ன என்ன நல்லது நடந்தது (நடந்ததா?) ன்னு யோசிங்க.  இந்த ஆட்சிக்காரங்க சொன்னதை செஞ்சாங்களா,   அடுத்த நாலு வருஷம் அவங்க ஆண்டா நல்லதா இல்லையான்னு யோசிங்கன்னு கேட்டேன்.  அதுக்கு என்னா பேச்சு பேசராங்கப்பா!


இந்நாள் அதிபர் போர போக்குல அவனுக்கு 800 மில்லியன், இவனுக்கு 900 மில்லியன்னு கொடுத்து அதை வாங்கின அடுத்த வாரமோ இல்லை அடுத்த நாளோ அவங்க மஞ்ச கடுதாசி - ஐ.பி. கொடுத்துட்டு நம்மூர் பைனான்ஸ் கம்பெனிமாதிரி ஓஓஓஓஒடி  போயிட்டாங்க.  ஒருத்தன் கிட்ட ஒரு மில்லியன் இருந்தாலே அவன் பணக்காரன் (என்னை விடை ஒரு 10000 மடங்கு) அப்படி இருக்கரச்சே, எப்படி 800 மில்லியனும் 900 மில்லியனும் வாங்கிட்டு ஐ.பி கொடுக்கராங்க, இவங்களும் வழிச்சுகிட்டு அதை கேட்டுக்கராங்க.

அப்போ என் ஃப்ரெண்ட்டோட பொண்ணு ஒரு கேள்வி கேட்டா, "1928ல நடந்த போருளாதார சீரழிவு (அதாங்க க்ரேட் டிப்ரெஷன்) அதுக்கு மேலன்னு சொல்லனும்ன்னா இப்ப இருக்கரதுதான் அது 2008ல வெளியேறின அதிபர் கைங்கரியம் அதனால நீ என்ன இவரை பார்த்து இப்படி நாக்குமேல பல்லப் போட்டு கேள்வி கேக்கர"ன்னு காச்சி எடுத்துட்டா.  

நான் தெரியாமதான் கேக்கரேன் (அது சரி தெரிஞ்சா ஏன் கேக்கப் போறேன்) 1928 ல உலக மக்கள் தொகை எவ்வளவு, 2008-2012ல உலக மக்கள் தொகை எவ்வளவு.  அப்போ உலகத்துல பெரிய நாடுங்கன்னு சொன்னா, அமெரிக்கா, ப்ரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ப்ரிட்டன், சீனா.  அதுலயும் பாதி நாடுங்க ப்ரிட்டனோட ஆதிக்கதுல இருந்தது.  அப்போ நடந்த பொருளாதார வீழ்ச்சியே நமக்கு பெரிய பாதிப்பில்லை.  ஆனா, இன்னைக்கு இருக்கர இந்த வீழ்ச்சி சுதந்திர இந்தியாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கனும் ஆனா, அது அப்படி ஒரு பெரிய வீழ்ச்சியை தரல.  அமெரிக்கா, யூரோப்ல அப்புறம் சில இடத்துல வீழ்ச்சியாயிருக்கு, இதுக்கு என்ன சொல்ல முடியும்.  அமெரிக்காவோட இந்த வீழ்ச்சிக்கு காரணம், 2004-2008 ல நடந்த அதிபரோட ஆட்சின்னா, 2008-2012 வரைக்கும் இருந்த இவர் எதையும் செய்ய முடியலைன்னா, எதுக்கு மாற்றம் கொண்டு வரேன்ன்னு எம்.ஜி.ஆர் மாதிரி "என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கையணைக்க"ன்னு பாட்டு பாடி 44 வது அதிபரா பதவிக்கு வந்து, 20 டிரிலியன் கடன் (இதுக்கு எவ்வளவு சைபர்ன்னு சத்தியமா எனக்குத் தெரியாது) ஏத்தி விட்டுட்டு இப்ப மாற்றத்தை விட்டுட்டு 'ஃபார்வேர்ட்' ன்னு ஒரு தாரக மந்திரத்தை ஆரம்பிச்சு கதை குத்திகிட்டு இருக்காரு.

இதுல என் ஃப்ரெண்ட் ஒருத்தர், நம்ம குழந்தைங்களுக்கு 5ம் வகுப்புல பாஸ் பண்ணினதும் அவங்களுக்கு இந்த அதிபர் கையெழுத்து போட்டு ஒரு சர்டிபிகேட் கொடுத்தாரே அத போன அதிபர் செஞ்சாரன்னு கேட்டார்.  அதனால இவரே அடுத்த 4 வருஷம் பதவில இருக்கனும்னுங்கரது அவரோட வாதம்.

நானும் தான், தமிழ் சங்கத்துல அதிபரா இருந்தப்போ குழந்தைங்களுக்கெல்லாம் கையெழுத்து போட்டு சர்டிபிகேட் கொடுத்தேன், அப்போ நிறைய குழந்தைங்க 'அங்கிள் கப்பு கிப்பு ஒன்னு கிடையாதா வெறும சர்டிபிகேட்தானா'ன்னு கேட்டாங்க . ஹூம் என் கையெழுத்துக்கு அவ்வளவுதான் மதிப்பு.

இந்தப் பக்கம் இவர் இப்படி காமெடி பண்ணிகிட்டிருந்தா அந்தப் பக்கம் ஒருத்தர் திரும்பத் திரும்ப கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி 20 டிரிலியன் கடன், 20 மில்லியன் வேலை போச்சு, பொருளாதாரம் சீரடையல, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமா போச்சு, எத்தனையோ மில்லியன் உணவு சீட்டு கொடுத்துகிட்டு இருக்கோம்.  இதெல்லாம் கேக்க நாதியில்லாம போச்சு. அது இது ன்னு வீட்டுல ரிடையர்ட் ஆகிட்டு பொளம்பிட்டிருக்கர ஒருத்தர் மாதிரி சொல்லிகிட்டிருக்காரு.  அவர் சொல்றதுல உண்மை இருந்தாலும், சும்மா சொல்லிகிட்டிருந்தா அதோட வீரியம் கொறஞ்சுடும்.

நீங்க யாருக்கு வேணும்னாலும் ஓட்டு போடுங்க.  ஆனா கண்டிப்பா ஓட்டு போடுங்க.  அப்புறம் இவங்களைப் பத்தியும், இவங்க ஆட்சியைப் பத்தியும் கத்தி பேசலாம்.

இன்னிக்கு துக்ளக்ல தலையங்கத்துல கேஜ்ரிவால் பரபரப்பா செய்துகிட்டு இருக்கரதைப் பத்தி சோ சொல்லிட்டு கடைசில இப்படி எழுதியிருக்காரு.

கடம் பிந்த்யாத்
படம் சிந்த்யாத்
ஏனகேன பிராகாரேண
பிரஸித்த புருஷோ பவ 

– என்பது ஒரு ஸம்ஸ்க்ருத சடையர் மொழி. 
அதாவது – 
பானையை உடை,
படத்தைக் கிழி,
ஏதோ ஒரு வழியில்
பிரபலமான மனிதனாகி விடு! 


இது இப்போதைய அதிபருக்கும் அடுத்து வர ஆசைப்படர அதிபருக்கும் சரியா பொருந்தும்.

கடைசியா ரெண்டு குட்டி கதைங்க :
1) ஒரு காட்டுல இருக்கர எல்லா மிருகங்களுக்கும் யானை தான் தலைவன்.  எப்படின்னா, ஒரு நாள் ஒரு சிங்கம், எல்லா மிருகங்கள் கிட்டேயும் போய், "ஏய், இந்தக் காட்டுக்கு யார் ராஜா?"ன்னு கேட்டுச்சான்.  எல்லா மிருகங்களும், "நீங்க தான் ராஜா!"ன்னு பவ்யமா சொல்லிச்சாம்.

இப்படி கேட்டு கேட்டு மிதப்பா வந்த சிங்கம் தனியா போய்கிட்டிருந்த யானையைப் பாத்து, "ஏய் இந்த காட்டுக்கு யார் ராஜா?"ன்னு கேட்டுச்சாம்.  யானை கவனிக்காத மாதிரி போயிட்டே இருந்துச்சாம்.  சிங்கத்துக்கு கோபம் வந்து யானை முன்னாடி வந்து திரும்பியும் கேட்டுச்சாம், யானை ஒன்னும் பதில் சொல்லாம, துதிக்கையால, சிங்கத்தோட வாலை பிடிச்சு தலைக்கு மேலை மூனு தடவை சுத்தி தூக்கி போட்டுச்சாம், தூரத்துல போய் விழுந்த சிங்கம் அங்கேயிருந்து சொல்லிச்சாம். "சே இது செவுட்டு யானை போல இருக்கு, பேச்சு பேச்சா இல்லாம அனவசியமா அடிக்குதுன்னு" சொல்லிட்டு ஓடி போச்சாம்.


2) காட்டுல இருக்கர எல்லா மிருகங்களுக்கும் உணவு போடரது யானைதான்னு குருஜி சொல்வார்.  எப்படின்னா, யானை உணவு தேடிண்டு போகும் போது, அங்க இங்க இருக்கர மரக்கிளையெல்லாம் பறிச்சு சாப்டுண்டே போகுமாம், அப்போ கீழ விழரத அது சாப்பிடாதாம், அதைச் சாப்பிட மான், வரிக்குதிரை, முயல், காட்டெருமைன்னு தாவர பட்சிணிகள்லாம் வருமாம், இதுங்க வரும்னு அதுங்கள சாப்பிட சிங்கம், புலி எல்லாம் வருமாம், இதுங்க சாப்பிட்டு மிச்சம் இருக்கரத சாப்பிட கழுதைப் புலி, நரி, ஓநாய் எல்லாம் வருமாம், இதுங்களும் சாப்பிட்டு வெக்கர மிச்சத்தை சாப்பிட கழுகு பருந்து எல்லாம் ஆகாசத்துல வட்டம் போடுமாம்.  இப்படி ஒரு காட்டுக்கே தினமும் உணவு போடரது யானை.

இந்த கதைகளுக்கும், யாருக்கு நீங்க ஓட்டு போடனும்ங்கரதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


முரளி இராமச்சந்திரன்.