Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

Friday, January 13, 2012

பொங்க‌ல் வாழ்த்து - 2012



ஏர் பூட்டிய எருது
நிலம் பிளக்கும் உழவன்

எம்குல‌ப் பெண்க‌ளின் வ‌ருகை
விண் அதிரும் குலவை

வெண் மேகம் நீந்தும்
நீர் ததும்பும் நிலம்

சடசடத்துக் கதை பேசும்
காற்றில் ஆடும் நாற்று(க‌ள்)

முப்பொழுதும் நீர் பிடிக்க‌‌
த‌ப்பாது வ‌ள‌ரும் ப‌யிர்

நீண்டு வளர்ந்து பின்
தலை வ‌ண‌ங்கும் நெல்மணி(க‌ள்) !

***

ஞாயிற்றின் வ‌ர‌விற்கு,
மாக்கோல‌த் த‌ரையினிலே
ம‌ஞ்ச‌ள் த‌ண்டுடுத்தி
வைத்திட்ட‌ ம‌ண்பானை

க‌ற்க‌ண்டுத் தேனோடு
வெல்லம் கலந்திடவே
நீரூறும் ந‌ம்நாவில்
ப‌ச்ச‌ரிசிப் பால்பொங்க‌ல்

உண்டு மகிழ்ந்திடுவோம்
உழ‌வ‌னை வாழ்த்திடுவோம்
வைய‌க‌ம் தழைத்திட‌
உழ‌வினைப் போற்றிடுவோம் !!

***

அனைவ‌ருக்கும் இனிய‌ பொங்க‌ல் ந‌ல்வாழ்த்துக்க‌ள் !!!

படம்: நன்றி இணையம்