Showing posts with label ராஜேஷ். Show all posts
Showing posts with label ராஜேஷ். Show all posts

Saturday, February 23, 2008

உயிர் காக்க உதவுங்கள்

ராஜேஷ் அவர்கள் பற்றி ஒரு கட்டுரையும், கவிதையும் எழுதி எண்ணாலான மிகச் சிறிய உதவியாக எனது வலைத்தளைத்தில் பதிந்திருக்கிறேன். வாருங்கள், வாசியுங்கள், ராஜேஷ் குடும்பத்தாருக்கு உதவிக் கரம் நீட்டுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_23.html

Saturday, January 12, 2008

ராஜேஷுக்கு உதவுங்கள்!


என்னுடன் கல்லூரியில் படித்த ராஜேஷைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். அவனுக்கு எலும்பு மஞ்சை(bonemarrow) யாரால் கொடுக்கமுடியும் என்ற தேடல் மும்முரமாக நடந்து வருகிறது. உங்களால் முடிந்தால் எலும்பு மஞ்சை தானம் செய்ய பதிந்து கொள்ளுங்கள். ராஜேஷுக்கு உதவ நண்பர்கள் சேர்ந்து ஒரு தளம் அமைத்திருக்கிறோம். (http://www.helprajesh.com).

ராஜேஷ் ஒரு நல்ல நண்பன், பரோபகாரி. அவனுக்கு தெரிந்தவர்களாகட்டும் சரி, தெரியாதவர்களாகட்டும் சரி - உதவி தேவைப்பட்டால் முதலில் போய் நிற்பான். அவனுடன் பெங்களுரில் சாயந்திர வேலைகளில் நம் பசியைக்கூட கவனிக்காமல் அவன் பரோபகார அலுவல்களில் நிறைய சுற்றியிருக்கிறேன்(அவனைத் திட்டிக்கொண்டே). அப்படிப்பட்டவனுக்கு இன்று புற்றுநோய். புற்றுநோய் ஏதோ அபூர்வமான மக்களுக்குத்தான் வரும் என்று நினைக்கவேண்டாம். ராஜேஷ் உங்களை மாதிரி ஒரு சாதாரணன். நிறைய சினிமா பார்த்துக்கொண்டு, கிரிக்கெட் விளையாடிக்கொண்டு, வகுப்பில் மேஜையே ஆடும்வரை காலை ஆட்டிக்கொண்டு திரிந்த ஒருவன். சென்ற ஆண்டு கீமோவில் ஆளே அடையாளம் தெரியாமல் ஆகி மீண்டு வந்தவனுக்கு மீண்டும் வந்திருக்கிறது புற்றுநோய்.
அதுவும் அவன் இரண்டாவது மகன் பிறக்கும்வேளையில் இவன் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தான். என்ன கொடுமை!

ராஜேஷ் மாதிரி நிறைய இளைஞர்கள், குழந்தைகள் காத்திருக்கிறார்கள் எலும்பு மஞ்சை தானத்திற்காக. ஆகவே முதலில் பதிந்து கொள்ளுங்கள். ராஜேஷுக்கு பொருளுதவியும் நிறைய தேவைப்படுகிறது. உங்களால் முடிந்த நிதி உதவி செய்தால் நல்லது. பொருளுதவி செய்ய விவரத்துக்கு இங்கே செல்லுங்கள்.

Sunday, December 16, 2007

உயிருக்கு போராடும் ராஜேஷ் ராமநாதன்


என்னுடன் கல்லூரியில் படித்த ராஜேஷ் ராமநாதன் இன்று லூகேமியாவுடன் போராடிக் கொண்டிருக்கிறான். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சென்ற வருடம் போராடி வென்றவன், இப்போது மீண்டும் போரைத் தொடர்ந்திருக்கிறான். முழு விவரங்களை இங்கே காண்க => http://www.helprajesh.com

இந்த Bone Marrow விஷயத்தில், போன் மாரோ(bone marrow) தானம் செய்ய நம் வர்க்கத்தினரால்தான் முடியும். நம் வர்க்கம் என்றால் தெற்காசிய மக்கள். ஆகவே எவ்வளவு பேர் bone marrow donor ஆக பதிவு செய்ய முடியுமோ,  ராஜேஷ் போன்றவர்களுக்கு உயிர் வாழ வாய்ப்புகள் அதிகமாகின்றன. ராஜேஷ் மாதிரி இன்னும் சில பேர் இருக்கிறார்கள். சிகாகோவில் ஆறு வாரங்களே நிரம்பிய பிரனவுக்கு தானம் செய்ய அவசரத் தேவை. 

நம் ரிச்மண்டில் வரும் புத்தாண்டு தினத்தன்று ஹிந்து மையத்தில் bone marrow donor registration நடக்கவிருக்கிறது. இதில் பதிய தேவையானதெல்லாம் ஒரு காகிதத்தை நிரப்புவதும், ஒரு குச்சியால் உங்கள் உள்கன்னத்தை தடவிக் கொடுப்பதும்தான். உங்களுக்கு ஒரு செலவும் இல்லை, பதிவு செய்ய ரத்தத்துளி தேவையில்லை.  ஒரு உயிரைக் காக்க தயாள குணம் மட்டுமே தேவை. 

உங்கள் ஊரிலும் மக்களை பதிவு செய்யலாம். சமார் நிறுவனம் தேவையான பொருட்களை இலவசமாக அனுப்புவார்கள்.விவரங்களுக்கு http://www.samarinfo.org. போன் மாரோ தானம் பற்றிய முழு விவரங்கள் சமார் தளத்தில் அமெரிக்க போன் மாரோ தளத்திலும்(http://www.marrow.org) காணலாம்.
இதைப் படிக்கும் அனைவரும் நீங்கள் பதிவது மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களையும் பதிவு செய்யவிக்க வேண்டும். உங்களால் முடிந்த நிதியுதவியும் செய்தால் நல்லது.