Showing posts with label மராத்தன். வேதாளம். Show all posts
Showing posts with label மராத்தன். வேதாளம். Show all posts

Tuesday, December 02, 2008

ஓடிய பொருளாளர்...

உங்க பொருளாளர்(அதாம்பா தமிழ்ல ட்ரெஷரர்னுவாங்களே) ஓடப் போறார்னு செய்தி வந்தவுடனே, என்னடா கணக்க எல்லாம் அடுத்த கமிட்டி கிட்ட ஒப்படைக்கற நேரத்துல இப்படி பண்ணப் பாக்கறாரேன்னு கொஞ்சம் கவலையா இருந்துது. பாத்தா அரை மராத்தன் ஓடறாராம். நிம்மதி!

ரெண்டரை மணி நேரத்துல ஓடினதா கேள்வி. வெகு ஜோர். அடுத்த தடவை வீட்ல உருட்டுக்கட்டை எடுத்துட்டு பின்னாடியே வரச்சொல்லுங்க. ஒரு மணிநேரத்துல முடிச்சிறலாம்.

படத்து மேல கிளிக்குங்க...  அரவிந்த் விஸ்வரூபம் எடுப்பார்.





இன்னும் கொஞ்சம் படங்க பாக்கனும்னா, இங்க வாங்க! அந்த தளம் வேலை செய்யாட்டி இந்த பக்கத்துல போயி BIB number 10477னு போட்டுப் பாருங்க. நம்ம அரவிந்த் இன்னா ஷ்டைலா ஓடறாருன்னு... நிறைய படத்துல தனியா ஓடறத பாத்தா சந்தேகம் வருது, சும்மா ஆக்ட்டு குடுக்கறாரோன்னு. ஆனா பினிஷ் பண்ணிக்கிறார்பா. அதுவும் மராத்தன் ஓடிட்டு அன்னக்கி மத்யானம் நடந்த நம்ப தீபாவளி பங்ஷ்னுக்கும் வந்துட்டாரு மனுஷன்.


அடுத்த வருஷம் நானும் கூட ஓடனும்னு சொல்லியிருக்கார். என்னை பாதி தூரம் உப்பு மூட்டை தூக்கிட்டு போறதுன்னா சரின்னு சொல்லியிருக்கேன். நாமளே முருங்க மரத்துல இருந்து இறங்கிட்டா மரம் என்ன ஆவறது?

கங்கிராட்ஸ் அரவிந்த்!

Monday, November 03, 2008

நியுயார்க் மராத்தனில் என் நண்பன்

நான் முன்பே எழுதியது மறுபடியும் நடந்திருக்கிறது. இல்லை.. ஓடியிருக்கிறது(நம்ம ஊர் ரமேஷ் பாணியில்). மராத்தன் ஓடி என்னை அசர வைத்த என் கல்லூரித் தோழன் மறுபடியும் நியுயார்க் மராத்தன் ஓடி அசத்தியிருக்கிறான். ஓடிவிட்டு வரும்போது போனில் சொன்னான், இந்த தடவை முடியலடா, கடசில நடந்து தவழ்ந்து முடிச்சேன்.

அவன் சொன்னதைப் வைத்து மோசமாக இருக்கும் என்று பார்த்தால், சென்ற முறையைவிட வேகமாகவே ஓடியிருக்கிறான் - 4 மணி 40 நிமிடங்களில். சென்ற முறை 5 மணி 20 நிமிடங்கள். முதல் 25 கிமீ வேகமாகவே போயிருக்கிறான்.




கடைசியில்தான் நிறைய நேரம் எடுத்திருக்கிறான். ஆரம்பத்தில் ரொம்ப வேகமாக போயிருப்பான் என்று நினைக்கிறேன். Proud of you, buddy! நம்ம கல்லாப்பெட்டி அரவிந்தன் ஏதோ அரை மராத்தன் ஓடுகிறேன் பேர்வழி என்று பயிற்சிக்கு என்னையும் இழுக்கப் பார்க்கிறார். இதுவரை சாக்குப்போக்கு சொல்லி சமாளித்துவிட்டேன். நானும் ஓடிவிட்டால் அப்புறம் யார் என் முருங்கமரத்தைப் பார்த்துக் கொள்வது?