Showing posts with label குறள். Show all posts
Showing posts with label குறள். Show all posts

Tuesday, November 18, 2014

செல்போன் கிறள்...

மின்னஞ்சலில் வந்தது.... செல் டவர்ல ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?

குங்குமம்' இதழில் ஆல்தோட்ட பூபதி புனைந்துள்ள 'கிறள்' கள் இதோ:

செல்போனில் சூப்பெர்போன் ஸ்மார்ட்போன், அப்போன் 
செல்போனில் எல்லாம் தலை 
 
தந்தை மகற்காற்றும் நன்றி சாம்சங்கில் 
ஸ்மார்ட் போன் தந்துவிடல் 
 
மகன் தந்தைக்காற்றும் உதவி அப்பாமுன் 
போனை நோண்டாதிருக்கும் செயல் 
 
2G யினால் ஸ்லோவாகும் மொபைல்டேட்டா ஆகாதே 
3G யினால் போட்ட டேட்டா 
 
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே 
இடுக்கண் களைவதாம் சார்ஜர் 
 
பட்டனைத் தடவும் மணற்கேணி மாந்தர்க்கு  
டச்ஸ்க்ரீன் தூறும் அறிவு 
 
முகநக நட்பது நட்பன்று வாட்ஸப்பில் 
அகநக நட்பது நட்பு 
 
மிஸ்ட்கால் செய்தாரை ஒறுத்தல் அவர்நாண 
கால்செய்து பேசிவிடல் 
 
ரேட்கட்டரோடு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
 பில் கட்டியே சாவார் 
 
8மெகாபிக்சல் கேமெராவோடு வாங்குக அ.:திலார் 
வாங்குதலின் வாங்காமை நன்று 
 
ஆப்பிள் இனிது ஐபோன் இனிது என்பதம் மக்கள் 
ஆன்ட்ராய்ட் புகழ் கேளாதவர் 
 
என்பிலதனை வெயில்போலக்காயுமே 
சிக்னல் இல்லதனை நெட்வொர்க் 
 
ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்பாட்டெரி 
fullcharge எனக்கேட்ட மொபைல் 
 
வாட்ஸப்நாடி வைபர் நாடி அவற்றுள் 
மிகைநாடி மிக்க கொளல் 
 
wireநீப்பின் வாழாக் கவரிமா அன்னார் 
உயிர்நீப்பர் சார்ஜ் இல்லாவிடில் 
 
சிக்னலுக்கும் உண்டோ அடைக்குந்தாழ் நாட் ரீச்சபில் 
புன் கணீர் பூசல் தரும் 
 
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
மிஸ்ட்கால் மறந்த மகற்கு 
 
கீபெட்லாக் போட்டவர் தமக்குரியர் அன்லாக்குடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு

Friday, November 06, 2009

எங்கள் ஊரில் தீபாவளி

பட்டாசு வெடிக்காத குறை தான், தமிழ் சங்கம் அசத்தி விட்டது. சங்கத்தின் முதல்வரின் முன்னுரை ஒரு கலைஞரின் முன்னுரை போல் இருந்தது. குறள் சொல்லிய குழந்தைகள், பாரதி பாடிய பாப்பா, தீபாவளி பற்றி சொன்ன இளம் சிறார்கள், இவை தான் சிறுவர் பங்கு என்றால் மிகை ஆகாது.

மேடையில் குறள் சொல்லும் குழந்தையை பார்த்து, பார்வையாளர்களை தங்கள் பிள்ளைகளை அவசரமாக ஒரு குறள் சொல்லி கொடுக்கும் நிலையையும் கண்டோம். இதனை பெற்றோர்களின் பேரார்வம் என்பதா அல்லது தமிழ் பற்று என்பதா ?இது அல்லவோ புரட்சி. தமிழ் சங்கத்தின் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.

இதனையும் மீறி மேடையில் மாறி, மாறி கையை ஆட்டி, கண்களில் கண்ணீர் மாரியுடன், " சூ சூ மாரி " என்று ஒரு இரயில் ஒட்டிய லதாவும், குழந்தைகளும் பார்த்த அனைவரும் தங்கள் கண்களின் ஆனந்த கண்ணீருடன் இருந்தனர் என்பதை இங்கு சொல்லியே ஆக வேண்டும்.

மூன்று இளம் அறிவிப்பாளர்களின் தமிழ் மிக்க அருமை. அவர்களின் உச்சரிப்பு மற்றும் பாராட்டுகளின் ஏற்ற இறக்கங்கள் மிதவும் நேர்த்தி அக இருந்தது. ஆங்கிலத்தில் எழுதி வாசித்தனர் என்று சொன்னால் ஒருவரும் நம்ப மாட்டர்கள். அதிலும் ஸ்வேதாவின் தமிழ் தாய் வாழ்த்து மிக்க அருமை. பிரசு என்று சொல்லி அதனை பரிசு என்று திருத்தியது மட்டும் அல்லாமல், மன்னிக்க வேண்டும் என்று கேட்ட அங்கிதாவின் தமிழ் மரபினை பாராட்டியே ஆக வேண்டும்.

சலாம் பாபுவும், முரட்டு காளையும் எல்லோரையும் ஆட வைத்து விட்டது.
மு. கோபால் அய்யா பாரதிக்கும், அவ்வைக்கும் ஒரு பாலமே கட்டி விட்டார். மிக அருமை மற்றும் புதுமை. நடராஜ மூர்த்தியும் கம்பனை கண் முன் நிறுத்தி விட்டார் என்றால் மிகை ஆகாதது.

மிக்க அருமையான கொண்டாட்டம். லக்ஷ்மியின் தனி ஆவர்த்தனுமும், செயலர் ஜெயகாந்தனின் நன்றி அறிவுப்பும் மிக எளிமையாக இருந்தது.
இவ்வளவு அருமைகள் இருந்தும், உங்களின் தமிழ் வகுப்பு ஆசிரியர்களை அறிமுகபடுத்த வில்லை என்ற குறை ஒன்றும் இருந்தது.