Showing posts with label கிராமம். Show all posts
Showing posts with label கிராமம். Show all posts

Tuesday, March 14, 2017

கிராமத்தில் ஓர் நாள்

Photo Courtesy: Internet

இப்பொழுதெல்லாம் கொசுக்களும் தம் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றியிருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.  அவை வருவதும் தெரிவதில்லை, கடிப்பதும் தெரிவதில்லை, பறப்பதும் தெரிவதில்லை.

ஒலி குறைக்கும் கருவி (silencer) பொருத்தி வரும் போலும்.   நம் காதுகளுக்கு வெகு அருகில் பறந்தாலும் ரீங்காரமெல்லாம் கேட்பதேயில்லை.  நமது டமாரம் தான் காலி என்று பயந்து, சுற்றும் முற்றும் புள்ளினங்களின் ஓசை கேட்ட பின் தான் நிம்மதி.

மேலும் குத்தூசி முறை (acupuncture) கற்றிருக்கும் போல.  அவைகளுக்குள்ளும் சந்தைப்படுத்துதல் (marketing), பயிற்சிக்கூடங்கள் (training), எல்லாம் இருக்குமோ என்னவோ?  ஏனெனில் தொழிலில் அத்தனை துல்லியம், கடிப்பதே தெரிவதில்லை.

சிறிது நேரம் கழித்து, என்னடா கால் பக்கம் சுர்க்குன்ற மாதிரி இருக்கிறதே என சுர்க்கிய இடத்தில் பட்டென அடித்தால், உள்ளங்கை விரல்களில் ரத்தம்.  அட கொசு!  அப்பாடா ஒன்றை அடித்தாயிற்று என கூர்ந்து கவனித்தால், ஒரு ரெண்டு மூன்று கொசுக்கள் எனது கால்களை வட்டமடித்துக் கொண்டிருந்தன, எங்கே எப்படி தரையிறங்கலாம் என.

இவை, நான் செய்யும் செயலுக்கு மிக்க இடைஞ்சலாய்ப் போனது.  ஆப்பக்கட ஆயா மாதிரி ஈ ஓட்டினால் நம்மை விட்டு போவதாய்த் தெரியவில்லை.  அப்பொழுது, ஆரம்பித்தது எனது அபிநயங்கள்.  ஏனெனில், ஆரம்பித்த செயலை செவ்வனே செய்து முடிக்க வேண்டும்.  பாதியில் விட்டுவிட்டு வரவும் முடியாது, வந்தால் அந்த நாள் தொலைந்தது.  பரதநாட்டியம் முதல் பரோட்டா மாஸ்டர் வரை அத்தனை கலைஞர்களும் தோற்றனர் என் அபிநயத்தில்.

ஓர் அடியில் உயிர் போய்விடும் எனத் தெரிந்தும், அவற்றின் உருவத்தை விட பன்மடங்கு பெரிய விலங்கான மனிதர்களையே மிரட்டுவதை எண்ணி வியந்து, இன்றைய அதிகாலைப் பல் துலக்கலை வெற்றிகரமாக முடித்துக் கிணற்றங்கரையை விட்டு வெளியேறினேன்!

Sunday, May 04, 2008

கிராமத்துக் கோவில் திருவிழா

சித்திரை, வைகாசியில் அநேக கிராமங்களில், கோவில் திருவிழாக்கள் இன்றும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது, நாமறிவோம். அத்தகைய திருவிழாவினைப் பற்றிய ஒரு கவிதை .

http://vazhakkampol.blogspot.com/2008/05/blog-post.html

Friday, April 25, 2008

கிராமத்து மீசை

கிராமத்தில், வரப்பில் இருக்கும் வயோதிகர் முதல், வழித்து தேநீர் ஆற்றும் வாலிபர் வரை, பொதுவாக நிறைய பேர், மீசை என்றாலே, சற்று அளவில் பெரியதாக வைத்திருப்பார்கள். அது பற்றிய கவிதை கிராமத்து மீசை.

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_24.html

Saturday, March 15, 2008

கிராமத்து நடவு

கிராமங்களில் நாற்று நடுவதே ஒரு விழா போலத் தான் நடக்கும். உழவர்களும், மாடுகளும், சேறும், நாற்றும், நாற்று நடும் பெண்களும் ... அப்படியே ஒரு ரம்மியமான சூழல். அதைப் பற்றி ஒரு கவிதை "கிராமத்து நடவு".

http://vazhakkampol.blogspot.com/2008/03/blog-post_13.html

Tuesday, February 26, 2008

கிராமத்து ஊருணி


"ஊருணி நீர் நிறைந்தற்றே - உலகவாம்

பேரறி வாளன் திரு"

என்று ஊரே உண்ணும் ஊருணி பற்றி வள்ளுவர் பெருந்தகை அருமையாக ஈற்றடிகளில் சொல்லியிருப்பார். அவர் சொல்கிற ஊருணியில் கடல் அளவுக்கு விசயங்கள் அடங்கியிருக்கும். நாம என்னதான் வரி வரியா எழுதினாலும், அந்தக் காலத்து ஆட்களை கிட்ட கூட நெருங்க முடியாது என்றே தோன்றுகிறது. இதோ எனது கவிதை.

http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_25.html

Thursday, January 10, 2008

கிராமத்து முடிதிருத்தும் நிலையம்

சிறு வயது முதல் கல்லூரி காலம் வரை, விடுமுறையின் போது, கிராமத்துக்குப் போகும்போதெல்லாம் இந்த நிலையத்திற்கு செல்லாமல் இருந்ததில்லை. அதை ஒரு கவிதையாக்கி சேமித்து வைக்க எண்ணி எழுதியது. வாசித்துச் சொல்லுங்கள் உங்கள் அனுபவங்களையும்.

http://vazhakkampol.blogspot.com/2008/01/blog-post_08.html

Thursday, December 27, 2007

கிராமத்து மார்கழிக் காலை

மார்கழி என்றாலே நம்ம ஊர்ல குளிர், சங்கீதம், திருப்பள்ளி எழுச்சி தான். அத்தோடு நம்ம ஊர் பெண்கள் வண்ணக் கோலம் இடுவதும் சிறப்பு (இப்பவும் நடைமுறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை !). அதைப் பற்றின என் எண்ணங்கள் கவிதையாய், இங்கே க்ளிக்கவும்.


http://vazhakkampol.blogspot.com/2007/12/blog-post_25.html

Thursday, November 15, 2007

கிராமத்துக் குலதெய்வ வழிபாடு

சமீபத்தில இரண்டு கவிதைகள் என்னோட வலைத்தளத்தில் பதிந்திருக்கிறேன். சுட்டிகள் கீழே, படித்துப் பார்த்து, உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

கிராமத்துக் குலதெய்வ வழிபாடு

http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_15.html

மயில் - குழந்தைகள் கவிதை

http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_14.html

Monday, October 29, 2007

கிராமத்து பேருந்துப் பயணம்

என்றைக்குமே பழைய நினைவுகள் இனிமையானதே. அப்படி கிராமத்தின் பயணத்தைப் பற்றி எழுதிய கவிதையை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

http://vazhakkampol.blogspot.com/2007/10/blog-post_28.html