Showing posts with label கார்லி. Show all posts
Showing posts with label கார்லி. Show all posts

Thursday, April 24, 2014

நினைவிற்குத் தேன்

ஆடி அசைந்து பள்ளி நுழைந்து
வெயிலும் நிழலும் அப்பிய முற்றத்தில்
அணிவகுத்து நின்று கடவுளை வாழ்த்திய காலை
நிழல் தேடி வட்டமிட்டு அமர்ந்து
கதை பேசிப்பேசி காகம் விரட்டி
கட்டித்தந்ததை உண்ட மரத்தடி மதியம்
ஆவலாய்க் காத்திருந்து மணிச்சத்தம் கேட்டவுடன்
ஆர்ப்பரித்த்து வெறியோடு வளாகம் விட்டு
அங்கும் இங்குமாய்ச் சிதறி ஓடிய மாலை
தன்னைவிடப் பிரம்பை நம்பிய ஆசிரியர்கள்
கேட்கக் கேட்கத் தாலாட்டாய் மாறும் அவர்கள் குரல்
கண்விழித்துக் கண்ட பகல் கனவு
சமைக்காத போதும் சாம்பார் மணக்கும் சத்துணவுக்கூடம்
கவனம் ஈர்த்த கிருத்துவக் கல்லூரிப் பெண்கள்
இடை இடைச் செரித்த பாடம்
பதைபதைக்கப் புரட்டிய வினாத்தாள்
படித்ததை எழுதி முடித்த நிம்மதிப் பெருமூச்சு
அறிவையும் ஆன்மாவையும் தொட்ட சிந்தனைகள்
இவை அனைத்தும் தந்த அனுபவம் கொண்டு
நான் நானாக உருவாகத் துவங்கிய கருவறை
கார்லி கலைக் கோயில்
- வாசு சண்முகம்