Showing posts with label அஜாதசத்ரு. Show all posts
Showing posts with label அஜாதசத்ரு. Show all posts

Wednesday, July 01, 2009

மீண்டும் ஒரு பட்டாம்பூச்சி

எனக்கா! எனக்கே எனக்கா! நிஜமா! என்ன இப்படி ஒரு கட்டு கட்றான்னு யோசிக்காதீங்க. ஒன்னும் இல்லை, நண்பர் ஜெயகாந்தன் எனக்கு பட்டாம்பூச்சி விருது தந்தவுடன் கொஞ்சம் படம் காமிக்கலாமேன்னு நினைச்சேன். இவருக்கு எங்கிருந்து நேரம் கிடைக்குதுன்னு தெரியலை. ஒரு விஷயம் பத்தி கேட்டா, பட்டுன்னு ஒரு பத்து நிமிஷத்தில நமக்கு பதிலையும், கேட்ட விஷயம் பத்தி ஒரு 100 தகவல், இணையதள முகவரி எல்லாம் கொடுத்து நம்மை அசர அடிச்சுடுவார். புகைப்படம் எடுப்பதில் மன்னன். எனக்கும் பரதேசி மற்றும் வசந்தம் அவர்களுக்கும் பட்டாம்பூச்சி விருதினைத் தந்ததற்கு நன்றி.

பட்டாம்பூச்சி விருதினைத் தருவதற்கு முன்பு, இந்த பட்டமளிப்பு தத்துவம் பதிவிட சோம்பி இருப்பவர்களை பதிவிட செய்ய ஒரு மிகச்சரியான உத்தி. பட்டம் கொடுத்தாச்சுன்னா வேற வழியே இல்லை எழுதித்தான் ஆக வேண்டும். இதை கொண்டு வந்ததற்கு அனைவருக்கும் நன்றி.


முதலில் நான் பட்டாம்பூச்சி விருதினைத் தருவதற்கு தேர்ந்தெடுத்திருப்பது சமீபத்தில் நமது வளைப்பூவில் எழுத ஆரம்பித்திருக்கும் வேதாந்தி. இவர் அடுத்தவர் கதையிலும் கதை பண்ணுவதில் கெட்டிக்காரர். ஒரு புறம் அப்பாக்களை சிலாகித்து எழுதுவார் மறுபுறம் அரசியல்வாதி அப்பாக்களைத் தாக்கியும் எழுதுவார். இவரால் பல விஷங்களை பல கோணங்களில் பார்க்கவும் முடியும் அதை எழுதவும் முடியும். வாங்க விருதைப் பிடிங்க.


இரண்டாவதாக அஜாதசத்ரு. கல்கியின் எழுத்து சாயல் இவரிடத்தில் உண்டு. நிறைய யோசிப்பவர் என்பதும், அதை எழுத்தில் கொண்டுவர முயல்பவர் என்பதும் இவரது ஆரம்பகால எழுத்தில் தெரிந்தது. இரண்டு பதிவிற்குப் பிறகு இவரைக் காணவில்லை. தனிக் கட்சி ஏதும் துவங்கி விட்டாரோ என்னவோ தெரியவில்லை. இந்த விருதின் மூலம் இவரை மீண்டும் நமது வளைப்பூவில் எழுதத்தூண்டலாம் என்று இவருக்கு இந்த விருது.


மூன்றாவதாக விருதினைப் பெற அழைப்பது நாராயணன். இவரது சங்கீத பற்றும் அதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் நமக்கெல்லாம் தெரியும். சமீபத்தில் நமது வளைப்பூவில் எழுதி கலக்கும் இவரது பின்னூட்டமும் மிகப் ப்ரபலம். ஒவ்வொரு முறை நாம் இந்தியா செல்லும் போதும் நாம் படும் பாட்டை நறுக்கென சொல்லி நம்மை கவர்ந்தவர். ஐயா வாங்க பிடிங்க உங்க விருதை.
எனக்கு இந்த விருதை வழங்கிய ஜெயகாந்தனுக்கு மிக்க நன்றி. விருது பெரும் வேதாந்தி, அஜாதசத்ரு, நாராயணன் மூவருக்கும் வாழ்த்துக்கள்.







நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளுக்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

முரளி இராமச்சந்திரன்