tag:blogger.com,1999:blog-4696240067324182147.post7763920213938189967..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: தமிழர் காது எதனால் ஆனது?நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-38340760246923886262009-05-24T18:31:41.910-04:002009-05-24T18:31:41.910-04:00வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, ரவி, நாராயணன். ட...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, ரவி, நாராயணன். டீச்சருக்கு ஒரு ஸ்பெஷல் சலாம்.<br /><br />இதுபோல் எழுதினால், பதிவுப் பக்கம் வராதவர்கள் எல்லாம் எழுதுகிறார்கள் என்றால் இந்த மாதிரி நிறைய எழுதலாம். <br /><br />இந்த நட்சத்திர வாரத்தில் என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மீனாவும், நாராயணனும். மிக்க நன்றி. இருவரும் made my week. (விகடன் தமிழுக்கு மன்னிக்கவும்)<br /><br />நாராயணன் மாதிரி பாட்டின் பொருளையும் எல்லா மொழிப்பாடல்களின் வார்த்தை உச்சரிப்பை சரி செய்து கொள்வதில் காட்டும் சிரத்தையில் பாதி மற்றவர் செலுத்தினால் போதும். எங்கேயோ போய்விடுவார்கள்....<br /><br /><br /><br />இனி முரண்பட்ட கருத்துக்கள் பற்றி...<br />1. பிறமொழியில் பாடுவது குறையல்ல. பத்துப் பாட்டு பாடினால், அதில் தமிழில் எத்தனை என்பதுதான் குறை. ஒரு மூன்று-நான்கு தமிழில் இருந்தாலும் போதும் என்னை மகிழ்விக்க! :-)<br />2. அமெரிக்காவில் இது உதவாதுதான். நான் சொல்வது பொதுவாகவும் நம்ம ஊரிலும்தான். இனி சபையில் உட்கார்ந்திருக்கும் எண்ணிக்கை பேரில் ஒரு ரிசர்வேஷன் கோட்டா சிஸ்டம் கொண்டு வர வேண்டும். :-)<br />4. கல்லூரி நாட்களிலும், சமவயதினர் தாக்கத்திலும் கேட்கும் பாடல்கள்தான் பீட் இட், நாக்க முக்க போன்றவைகள். அவை எத்தனை நாட்கள் நிலைக்கின்றன? மற்றவர்கள் பற்றித் தெரியாது. பொருள் தெரிந்த ஆங்கிலப் பாடல்கள்தான் என் நினைவில் நிற்கின்றன. அதுவும் தோல்செவியார் அந்த ரகப் பாடல்களை தலைமுறை தலைமுறையாகப் பாடுவதும் கேட்பதும் கிடையாது.<br /><br />மேலும் இந்த கால தமிழ் சினிமா பாடல்களில் அர்த்தம் இருந்தால்தானே புரிவதற்கு. அட்றாட்றா நாக்க முக்க...<br /><br />5. எனக்கு சங்கீதம் ரசிப்பதற்கு இந்த வார்த்தைக்கொலை பெருந்தடையாக இருக்கிறது. ஜேசுதாசின் தர்ரி மொர்ர கிர்ர்ர்ர்ரி மாதிரி... :-) நான் ஒரு சங்கீத ஞான சூன்யம் என்பதால் எனக்குப் தெரிந்த நிறை,குறையெல்லாம் வார்த்தைகளிலும், பொருளிலும், குரல்வளத்திலும், இசையிலும்தான். (order of priority for me)நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-47170547097871207772009-05-24T17:09:06.951-04:002009-05-24T17:09:06.951-04:00மரத்தைப் பிடுங்கினானே
அருமையான பதிவு நாகு.மரத்தைப் பிடுங்கினானே<br /><br /><br />அருமையான பதிவு நாகு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-50030808402779608122009-05-24T14:48:47.982-04:002009-05-24T14:48:47.982-04:00என் எழுத்து திறமையின் மேல் நம்பிக்கை இல்லாததால் இம...என் எழுத்து திறமையின் மேல் நம்பிக்கை இல்லாததால் இம்மாதிரி ப்ளாக் உலகத்தில் பங்கு பெறுவது சற்று அரிது தான். ஆனால் நண்பர் நாகுவின் இந்த பதிவு என்னை எழுதும் அளவிற்கு ஊக்குவிதுள்ளது. எழுத்து பிழைகளை பொறுக்கவும். கருத்து பிழை என்றெண்ணினால் வாதிக்கவும்.<br /><br />சிறுவயதில் ("விஷயம்" தெரிந்த வயதில்) எங்கள் வீட்டருகே இருக்கும் சேரியில் தெருக்கூத்துகள் நடக்கும். அந்த கூத்துதான் நினைவிற்கு வருகிறது. அவர்கள் வெகு நாஸுக்காக பாய், தேன் மற்றும் கரண்டி விற்பவர்கள் மாதிரி நடித்து காட்டுவது, நினைவிற்கு ஓடோடி வருகிறது.<br /><br />உடன்படும் கருத்து:<br /><br /> 1. கலைஞர்கள் பாடும் பாட்டின் உச்சரிப்பு, அந்த மொழியின் தூய்மையை பாதுகாக்க வேண்டும் என்பதில் எனக்கு மிகவும் நம்பிக்கை உண்டு. பாடல்களை வாத்யங்களில் வாசிக்கும் போது கூட அந்த வார்த்தை பிரிவுகள் பொருத்தமாக இருக்கவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.<br /> 2. கலை ஈடுபாடு உள்ளவர்கள் ஒரு படைப்பை கற்றுக்கொள்ளும் பொழுது மொழியின் உச்சரிப்பு, பாடலின் அர்த்தம், ராகத்தின் இனிமை, ராகத்தின் லக்க்ஷணம், தாளத்தின் உணர்வுகளை அறிந்து கற்றால் அந்த அனுபவமே வேறு தான். இவ்வாறு கற்ற பாடல்களை படைக்கும் பொழுதும் ஒரு ஈடுபாடு (பாவம் என்றும் சிலர் கூறுவர்) ஏற்படுவது நிச்சயம். இது கலைஞருக்கும் சரி. ரசிகர்ளுக்கும் சரி. அதை கற்றுக்கொள்ளும் தருணத்திலேயே இதில் சிறிது கவனம் செலுத்தினால் நன்று. அதுவும் இந்த இன்டர்நெட் கால கட்டத்தில் இது மிக மிக எளிது.<br /> 3. மேலும் ஒரு மொழியை சார்ந்தோர் இப்பிழைகளை சுட்டி காட்டினால், அதை பணிவுடன் ஏற்று, தம்மை மாற்றி கொள்ளும் மனப்பான்மை இருந்தால் போரும்.<br /> 4. சங்கீதத்தில் மொழிக்கு முக்கியத்துவம் வேண்டாமென்று கருதுவோர் எதற்கு பாடல்களை பாடவேண்டும். வெறும் ஆலாபனையும் ஸ்வரமும் மட்டும் பாடவேண்டியது தானே?<br /> 5. இதுவே ஒரு காரணம், நான் ஹிந்தி பாடல்களை பொது இடங்களில் பாட மறுப்பதற்கு. எனக்கு படிக்க, எழுத, ஓரளவிற்கு பேச கூட தெரியும். அனால் முத்துதிர்ந்ததும், தமிழா?, என்று கேட்கும் அளவிற்கு இருக்கும்.<br /><br />முரண்படும் கருத்து:<br /><br /> 1. இரும்பு செவி கொண்டோர் (தமிழர்) பிற மொழிகளில் பாடுவது ஒரு குறை அல்ல. அது அவர் திறந்த மனப்பான்மையை வெளிபடுத்துகிறது.<br /> 2. கச்சேரிகளில், வெவ்வேறு மொழியினர் அமர்ந்திருக்கும் சபையில், ஒரே மொழி பாடல்களை பாடுவதென்பது சாத்யம் அல்ல. அதுவும் பிரத்யேகமாக அமெரிக்காவில் இது நடைமுறைக்கு உதவாது.<br /> 3. கலைஞர்கள், தாம் பாடும் பாடல்கள் எழுதபட்டிருக்கும் மொழிகளையெல்லாம் கற்று கொள்வதென்பது சாத்யமல்ல. அனால் அதை சற்று கொல்லாதிருப்பது முற்றிலும் சாத்யமே. சங்கீதம் கற்று கொடுப்பவர்கள் அவர்களுக்கு இயன்ற வரை பாடலின் பொருளையும், உச்சரிப்பையும் கற்று கொடுக்கவேண்டும். சில சந்தர்பங்களில் கற்று கொள்பவரே அவர்களது குருக்களுக்கு அந்த நுணுக்கங்களை புகற்றுவதும் நாம் கேள்விபட்டிருக்கிறோம்.<br /> 4. நீர் போற்றும் தோல் செவியினர் மைகேல் ஜாக்சனின் பீட் இட் என்ற பாடலை ஒரு வார்த்தை புரியாமல் ரசித்ததை நான் கண்டு இருக்கிறேன். அந்த மெட்டும் பீட்டும் அவர்களை கவர்திருந்தால் அதில் என்ன தப்பு. அவரவர், அந்த பாடலுக்கு, அவர்கள் மனதுக்கு வந்த வார்த்தைகளை சேர்த்துக்கொண்டு பாடி மகிழ்கின்றனர். அந்த அளவு பெருந்தன்மை ஏன் இப்பாடல்களுக்கும் காட்ட கூடாது? மேற்கத்திய பாடல்கள் ஏன், இக்காலத்தில் தமிழ் சினிமா பாடல்களையே அர்த்தம் புரியாமல் ரசிக்கிறோம் (நாக்க மூக்க போன்றவை).<br /> 5. எனக்கு தெரிந்த ஓர் சிலர், இம்மாதிரி பிழைகளை சுட்டி காட்டி மார் தட்டி கொள்வதையே ஒரு பழக்கமாக வைத்திருக்கின்றனர். சங்கீதம் ரசிப்பதை விட்டுவிட்டு இதையே ஒரு நோக்கமாக எண்ணி கச்சேரிகளுக்கு செல்கின்றனர். எல்லோருக்குள்ளும் ஒரு சுப்புடு உறங்குகிறார் என்று ஒரு எண்ணம். மற்றவர் ஏன். நானே கூட சில நேரங்களில் இந்த மனப்பான்மைக்கு பலியாகி இருக்கிறேன். <br /><br />நாராயணன்<br />~~~~~~~~Naareenoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-47739796079563780542009-05-24T07:51:28.294-04:002009-05-24T07:51:28.294-04:00Bravo Nagu, இனிமே கல்லுதான்.
அது மரத்தை புடுங்க...Bravo Nagu, இனிமே கல்லுதான். <br />அது மரத்தை புடுங்கினானே. பீம பராக்ரமத்தை பத்தின பாட்டு.<br /><br />- RaviRavihttps://www.blogger.com/profile/09240901812270519127noreply@blogger.com