tag:blogger.com,1999:blog-4696240067324182147.post6156250465019298540..comments2023-12-07T22:46:03.698-05:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: மரங்கள்நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-64968681094815221812007-08-12T11:51:00.000-04:002007-08-12T11:51:00.000-04:00வணக்கம் நாகு.இங்கே பாலையில்(State of NM) தானாகவே ம...வணக்கம் நாகு.<BR/><BR/>இங்கே பாலையில்(State of NM) தானாகவே முளைத்து உயிரை வாங்கும் chinese elm மரங்கள்தான் மூலைக்கு மூலை. வேர்கள் பரவி கழிவுக் குழாய்களுடன் பின்னிக் கொண்டு கொடுக்கும் இன்னல்கள் சொல்ல மாளாது.<BR/><BR/>பூவரசு மரம் பற்றிய உங்கள் பதிவு சில நினைவுகளை கிளறிவிட்டது. பூவரசு இலையில் ஊதல் செய்வது ரொம்ப எளிது. ஆயினும் பூவரசு மரத்தில் ஒரு பெரிய அபாயம் உண்டு !! கோடைக்காலத்தில் அதன் பட்டைகளில் படர்ந்து அடைத்துக் கொண்டிருக்கும் "மொசுக்கட்டை" புழுக்கள். இதை கம்பளிப்பூச்சி என்றும் அழைப்பார்கள் என நினைக்கிறேன். <BR/><BR/>சிறுவனாய் இருந்த காலத்தில் நானும் எனது நண்பனும் வயலோரமாய் நிலத்தைத் தூர்த்து அங்கு நடந்து கொண்டிருந்த காத்தவராயன் கூத்தை ரசித்துக் கொண்டிருந்தோம்.அருகே உட்கார்ந்து பார்க்க பூவரசு மரத்தின் மீது ஏறினான் நண்பன் பாலு.<BR/><BR/>பத்தையாக அவன் முதுகில் விழுந்தது ஏராளமாக மொசுக்கட்டை !<BR/><BR/>அரிப்போ அரிப்பு அவனுக்கு ! இரவு 10 மணிக்கு மேல் என ஞாபகம். அரிப்பை போக்க சாம்பலை எங்கு தேடுவது..? எங்கள் வீட்டு கொல்லையிலிருந்த எருக்குழியில் சொல்லி வைத்தார் போல் வீட்டுக்கு பின்பக்கம் குடியிருப்பவர்கள் சாம்பலை கொட்டியிருந்தனர் போலும், சூடான சாம்பலை எடுத்து அவன் முதுகு பூராவும் நான் தேய்த்துவிட அரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக நின்றது !!<BR/><BR/>அதற்கப்புறம் பலவருடங்கள் பூவரசு மரங்கள் பக்கம் நாங்களிருவரும் போனதில்லை !!<BR/><BR/>நன்றி.Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-80713874132195290252007-08-01T06:32:00.000-04:002007-08-01T06:32:00.000-04:00வாங்க வெற்றி.//உங்கள் ஊரிலும் பூவரச இலையில் நாதசுவ...வாங்க வெற்றி.<BR/><BR/>//உங்கள் ஊரிலும் பூவரச இலையில் நாதசுவரம் இசைப்பீர்களா?!//<BR/><BR/>மற்றவர்கள் இசைப்பார்கள். நமக்கு ஜில்ஜில் ரமாமணி மாதிரி காத்துதான் வரும் :-(நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-67566694572046854302007-07-30T00:31:00.000-04:002007-07-30T00:31:00.000-04:00நாகு,நல்ல பதிவு./* பூவரச மர இலைகளை சுருட்டி பீப்பீ...நாகு,<BR/>நல்ல பதிவு.<BR/><BR/>/* பூவரச மர இலைகளை சுருட்டி பீப்பீ ஊதுவான் மாரிமுத்து. எனக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் காற்றுதான் வரும். மாரியை பார்த்து பொறாமையாக இருக்கும். */<BR/><BR/>பழைய ஞாபகங்களை நினைவுபடுத்திவிட்டீர்கள். :-)<BR/><BR/>உங்கள் ஊரிலும் பூவரச இலையில் நாதசுவரம் இசைப்பீர்களா?!வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-57965328547021348082007-07-29T23:10:00.000-04:002007-07-29T23:10:00.000-04:00இன்று மாலை ஒரு பூங்காவில் நடந்து கொண்டிருந்தபோது க...இன்று மாலை ஒரு பூங்காவில் நடந்து கொண்டிருந்தபோது கண்டேன் ஸாஸ்ஸஃப்ராஸ் மரத்தை. இலையில் மெலிதாக எலுமிச்சை இலையின் வாசம். என்னைவிட ஒரு <A HREF="http://www.bio.davidson.edu/projects/tate/Black%20rat%20snake.jpg" REL="nofollow">கருப்பு rat snake</A> பார்த்த என் மகன் ரொம்ப சந்தோஷித்தான்.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-27237277241176854712007-07-26T09:38:00.000-04:002007-07-26T09:38:00.000-04:00நன்றி சதங்கா. பூவரசின் படத்தைச் சேர்த்திருக்கிறேன்...நன்றி சதங்கா. பூவரசின் படத்தைச் சேர்த்திருக்கிறேன். வாழ்நார் என்று தேடினால் முதலில் இந்த பதிவுதான் கிடைக்கிறது ;-)<BR/><BR/>தமிழ் விக்கிபீடியாவில் <A HREF="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D" REL="nofollow">மரங்கள் பட்டியல் </A> இருக்கிறது. சில மரங்களின் படங்களும் இருக்கின்றன.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-42275001566759319812007-07-26T07:51:00.000-04:002007-07-26T07:51:00.000-04:00நாகு,மரங்களைப் பற்றி அருமையான கட்டுரை. இங்குள்ள ம...நாகு,<BR/><BR/>மரங்களைப் பற்றி அருமையான கட்டுரை. இங்குள்ள மரங்களின் படங்களைப் போட்டது போல், நம்மூர் மரங்களின் (தென்னை, வேம்பு என்று நினைத்துக் கொள்ளாதீர்) பூவரசம், வாழ் நார், கொன்னை ... இவைகளின் படங்களை போட்டிருந்தால் நன்றாக இருக்கும்.<BR/><BR/>வேப்பமரத்தின் மீது உங்களின் பற்று என்னையும் பற்றிக் கொண்டது என் பள்ளி நாட்களிருந்தே. அவ்வப்போது கவிதைகளிலும், கதைகளிலும் பயன்படுத்துவதும் உண்டு.<BR/><BR/>வள்ளுவர் மரங்களைப் பற்றி தன் குறட்பாக்களில் சொல்லியிருக்கிறார். அதில் இந்தக் குறள் 'வேம்பு'க்கு ஒத்து வருகிறது:<BR/><BR/><B>மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்<BR/>பெருந்தகை யான்கண் படின்</B><BR/><BR/>இங்கே மருந்தான மரத்தை வேம்பாகவும், செல்வத்தை உங்கள் கட்டுரையாகவும் ;-) எடுத்துக் கொள்கிறேன்.<BR/><BR/>வாழ்த்துக்கள், நல்ல பதிவு.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com