Saturday, February 22, 2014

நீ என்ன பெரிய அப்பாடக்கரா ஆ ஆ ஆ .....


அப்பாடக்கர் என்றால் என்ன? உங்கள் அநேகம் பேருக்கு தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு இதோ ஒரு விளக்கம் (இணையத்தில் படித்தது)

""இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகாலம் இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லப்பட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது.


அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது. அப்பாடக்கர் ஸ்கோலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க :)""
 
உங்கள் கற்பனையில் வேறு விளக்கம் இருந்தால் அதையும்தான் சொல்லுங்களேன்!

Wednesday, February 19, 2014

அம்மா வாழ்க

இராஜீவ் காந்தியின் கொலையாளிகளாக மரண தண்டனைக்  கைதிகளாய் இருந்தவர்களை உச்சநீதி மன்றம் ஆயுள் தண்டனைக் கைதிகளாய் மாற்றவும், தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய அறிவித்துள்ள செயல் நமக்குப் பல சுவாரஸ்யம், அதிர்ச்சி  மற்றும் அரசியல்வாதிகளின் சுயநலம் மற்றும் கையாலாகத்தனத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.

இதில் பல பரிமாணங்கள்

1. இராஜீவ் கொலையாளிகள் - இது ஒரு முட்டாள்தனமான கருத்து.  கொலை செய்யத் திட்டம் போட்டது ஒரு கும்பல், செய்தது ஒரு கும்பல், அதற்கு உதவியாய் இருந்த சில குப்பன் சுப்பன்மார்களைப் பிடித்து கொலையாளிகள் என்று பிரயோகப் படுத்தி குளிர் காய்ந்தாகி விட்டார்கள். இவர்களுக்கு ஆயுள் தண்டனை தேவை, ஆனால் மரண தண்டனை? கல்யாண  வீட்டில் புகுந்து 17 பேரைக் கொலை செய்தவனின்  கருணை மனுவை அங்கீகரிக்கும் இந்த நாட்டில் இவர்களுக்கு ஏன் மரண தண்டனை? ஏன் இந்த பாரபட்சம்? நிர்பயா வழக்கில் கண் முன் உள்ள குற்றவளிகளைத் தண்டிக்க வக்கில்லாத அரசமைப்பிற்கு இந்த 3 பேரின் மரண தண்டனையில் என்ன ஒரு ஆர்வம்?


2. கருணை மனுவைப் பதினோரு வருடங்களாகக் கிடப்பில் போட்டு விட்டு இப்போது புலம்பும் காங்கிரஸ் ஒரு இத்துப் போன கட்சி என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.

3. குற்றவாளிகளை விடுதலை செய்ய அம்மா காண்பிக்கும் அவசரம் பல ஊகங்களுக்கு வழி வகுக்கிறது. ஆனாலும் மதிய அரசின் கையாலகாத்தனத்தை அம்மா இதன் மூலம் வெளிப்படுத்தி மேலும் அவமானத்தையும் தர்ம சங்கடங்களையும் உச்ச நீதி மன்றமும் அம்மாவும் ஏற்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் . அதே சமயம் இது ஒரு தவறான முன் உதாரணத்தைக் கொண்டு வரலாம்

4. குற்றவாளிகளின் சமூக வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக அமையலாம், அல்லது மதிமுக கட்சியின் மூலம் சீட்டு வாங்கி அவர்கள் MP ஆகலாம்


Monday, February 17, 2014

பனி

வெள்ளை மேக துகள்கள் எங்கும் விழுந்து படர்ந்த பனி
வேற்று கிரகமாய் பூமியை கண்ணுக்கு விருந்து படைத்த பனி
வேகம் நீக்கி சாந்தமாய் நம்மை வீட்டில் வைத்த பனி
வேலை ஒதுக்கி மனைவி மக்களுடன் வீற்றிருக்க செய்த பனி

- சீனிவாசன்
 

இலை மறை கனி 
நம்மவர் சீனி 
கவிரகம் மினி 
சுட்டிற்றாம் பனி 
வாழ்த்துக்கள் மெனி (many)
மேல் வளர இனி !
- மார்சலின் 

இங்கு வந்து பதியாமல், முகப்புத்தகத்தில் கவிதை பொழியும் அனைவருக்கும் எச்சரிக்கை. அங்கிருந்து இங்கே சுட்டுப் போடப்படும்... :-)