Thursday, October 10, 2013

மழை



உயரம் வெறுத்த மேகம்
தவழ்ந்து தரையிறங்கி
தெளிவு மறைத்து எழில் கூட்ட
கதகதப்பான காரில்
கண்ணதாசன் தமிழ் கசிய
காப்பியின் மணம் நுகர்ந்து
இளங்கசப்பை சுவைத்தபடி
கண்டதையும் கேட்டதையும்
கொண்டாடும் மனம்

                                         - வாசு

சென்ற வருடம் எழுதியது, இன்று நன்கு பொருந்தும்

Wednesday, October 09, 2013

மழை

நாளை மதியம் முதல் மழையென
நேற்றே அறிவித்தது அறிவியல்,
அறிந்தவுடன் அவரவர் அறிவிற்கேற்ப
வழக்கத்தை வசதிக்கேற்ப மாற்றியும்
உடை கொண்டும் குடை கொண்டும்
மழை தவிர்த்தது மனிதரினம்
மரத்தின் கிளைகளில் பதுங்கின பறப்பன
மரத்தின் கீழ் ஒதுங்கின நடப்பன
மண்ணுக்குள் ஒளிந்தன ஊர்வன
விண்ணிலிருந்து ஆவலோடிறங்கி
தொட்டுத் தழுவி உடல் நனைக்க
நகரும் உயிர் தேடித் தேடி
அலைந்து அலுத்து ஏமாந்து
தனித்துத் தவித்து அழும் மழை
                                                         - வாசு