Tuesday, July 31, 2012

இந்திய அரசியலில் மீண்டும் ஒரு அராஜகம்

'சோ' வை நிறைய பேருக்கு புடிக்காது, எவ்வளவு கேவலமா திட்டனுமோ திட்டுவாங்க, போன வார துக்ளக்ல ஒரு கேள்வி பதிலுக்கு அவரோட பதிலைப் படிங்க அது எவ்வளவு பர்ஃபெக்ட்டா இருக்குன்னு தெரியும்.

கே: ‘பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொள்வார்’ என்று ப. சிதம்பரம் கூறியுள்ளாரே? 

ப: ஒரு குறிப்பிட்ட அமைச்சரை, வேட்டி கட்டுபவரை, தென்னகத்திலிருந்து வருபவரை, நிதியமைச்சராக இப்போது நியமித்தால், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும், அந்த நியமனம் உதவும். அதுதான் சரியான நடவடிக்கை. அதைப் பிரதமர் எடுப்பார் - என்று சிதம்பரம் நம்புகிறார். அது நடக்கிறதா, பார்ப்போம். 


நேத்திக்கு ப.சிதம்பரத்தை மறுபடி நிதி அமைச்சரா நியமிச்சுட்டதா தகவல்.


எவ்வளவுதான் அரசியலைப் பத்தி எதுவும் எழுதாதேன்னு ஆளாளுக்கு மதிச்சும்,  சில சமயம் மிதிச்சும் சொன்னாலும், எதோட வாலையோ நிமிர்த்த முடியாதுன்னு சொல்லுவாங்களே அதுமாதிரி தான் இதுவும்.  கவுண்ட மணி சொல்ற மாதிரி "அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா".


முரளி.

Monday, July 09, 2012

எச்சரிக்கை - அலாஸ்கா பயணக்கட்டுரை

சமீபத்தில் அலாஸ்கா சென்று வந்த பயணத்தைப் பற்றி எழுதுன்னு சில கோடி  நண்பர்கள் (கேடி இல்லை, நல்லா பார்த்துப் படிங்க) அன்பாக மிதிச்சு, சாரி மதிச்சு கேட்டதால அடுத்த வாரத்துல இருந்து எழுதலாம்னு இருக்கேன், உங்களுக்கு ஒரு 5-6 நாள் டைம் இருக்கு அதுக்குள்ள இந்த எச்சரிக்கைக்கு பதில் எழுதி என்னை எழுத வேண்டாம்னு சொன்னா மன்னாப்பு கொடுத்து விட்டுடுவேன். இல்லை, உங்க தலை எழுத்து அம்புட்டுதேன்.

போன தடவை போன பஹாமாஸ் ட்ரிப் 4 நாள் சொகுசு கப்பல் ப்ரயாணம், இந்த தடவை போன அலாஸ்கா பயணம் 7 நாள் சொகுசு கப்பல் ப்ரயாணம்.

அடுத்தவாரம் உங்களுக்கு டைம் சரியா இல்லைன்னா சந்திப்போம்.

முரளி இராமசந்திரன்.

Friday, July 06, 2012

ஜீவன் முக்தி


"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியோம் பராபரமே"
                                                              - தாயுமானவர்

ஒரு கோடீஸ்வரர் பழ மரங்கள் வைத்தார்.  ஏழைகள் ஃப்ரீயா சாப்பிடட்டும்னு.  கொய்யாப்பழம், மாம்பழம், பலாப்பலம், வாழைப்பழம், திராட்சைப்பழம், மாதுளம்பழம். இந்தப் பழங்களை யார் வேண்டுமானாலும் அருந்தலாம்.  இலவசம் !

நாளாக நாளாக இந்த உண்மையை மக்கள் உணரவில்லை.  உண்மைக்கு மாறாகப் பேசுவது சிலருடைய வழக்கம்.  'உள்ளே பேய் பிசாசு இருக்குதுடா'ன்னான் ஒருத்தன்.  கருப்பா ஒன்னு உலாத்துதுடான்னான்.  அந்தப் பக்கமே போறதில்லை.  கடைசியில் ஒரு துணிந்த ஆளு, 'என்ன இருக்கிறது பார்க்கலாம்' என்று பாதி மதில் மேல ஏறினான்.  வழுக்கி விழுந்துட்டான்.  யாரோ புடிச்சு தள்ளுறாங்கன்னான்.

முக்கால் பாகம் ஏறி வழுக்கி விழுந்தார்கள் சிலர்.  முக்காலே மூனு வீசம் ஏறி வழுக்கி விழுந்தார்கள் சிலர்.  ஒருவர் முழுவதும் ஏறிவிட்டார்.  உள்ளே, பெரிய பெரிய பலாப்பழம் வெடிச்சு மஞ்சளா.  இவ்வளவு பெரிய மாதுளம் பழம், ராஜா வாழை, செவ்வாழை, ஆரஞ்சுப் பழம் உதிர்ந்திருக்கு.  அநேகம் பேர் உண்ணுகிறார்கள்.  இவர் மதில் மேல இருந்த படியே, 'அண்ணா, என்ன விலை?'ன்னார்.  'இல்ல இலவசம்'.  உள்ளே குதிச்சுட்டார்.  இந்த உண்மை தெரியாது போச்சேனு பழமா சாப்பிடறார்.

அப்புறம் ஒருவர் மதில் மேல ஏறினார்.  'என்ன விலை'ன்னார்.  'ஒரு புண்ணியவான் இலவசமா வச்சது'.  உள்ளே குதிச்சுட்டார்.  இறுதியில் ஒருவர் ஏறினார்.  'ஐயா, இது விலையா?'ன்னார்.  'இல்ல இல்ல இலவசம்'.  ரெண்டு பழம் சாப்பிட்டார்.  தித்திப்பா இருந்தது.  வெளியே குதிச்சார்.  உள்ளே குதிக்கலை.  'ஐயா வாருங்கள், ஏக உருவாய் கிடக்குது ஐயோ.  சிவானந்த போகமென்னும் பேரின்பம் ...' தாயுமானார் அழைக்கிறார்.  ஏன் அழைக்கின்றேன்.  காகம் கறைந்து உண்ணக் கண்டீர்.  காக்கைக்கு இருக்கிற நல்ல குணம் எனக்கில்லையா?'  கா கா என்று அழைத்து தன் இனத்தை ஒறுங்கு சேர்த்து உண்ணுவதில்லையா.

'காகம் உறவு கலந்து உண்ணக் கண்டீர்; அகண்டாகார சிவ போகம் என்னும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப்பூரணமாய், ஏக உருவாய்க் கிடக்குது ஐயோ! இன்புற்றிட நாம் இனி எடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் ஜகத்தீரே !'

கொள்வாரற்றுக் கிடக்கிறது.  மதில் மேல ஏறி உள்ளே குதித்தவர்கள் எல்லாம் ஜீவன் முக்தர்கள்.  வெளியில் குதித்தவர் அவதார புருஷர்.  ஜீவன் முக்தர்கள் தான் தானே அருள் பெற்றவர்கள்.  அவதார புருஷர்களை நமக்காக இறைவன் அனுப்பினார்.

சுவாரஸ்யமான இக்கருத்துக்கள் வாரியார் அவர்களுடையது.  இன்றைக்கு நித்தி போன்ற போலிகளின் கையில் ஞானசம்பந்தர் தோற்றுவித்த மடமும், ஜீவன் முக்தியும், இதை நம்பி அவரிடம் சென்ற அமெரிக்கவாழ் இந்தியப் பெண்ணும்.  என்ன கொடுமை சார் ....