Sunday, April 22, 2007

மனசு

வானம் போல விரிஞ்சிருக்கும்
வண்டு போலச் சுத்தி வரும்
கானங் கேட்டுக் கனிஞ்சிருக்கும்
கனவுக் குள்ள கத படிக்கும்

வெள் ளந்திப் புள்ள போல
சொல்லுக் கேக்க வாடிப் போகும்
மறுகி உருகி மாஞ்சு போகும்
மாத்துத் தேடி ஏங்கிப் போகும்

அன்பக் கண்டா அசந்து போகும்
ஆவல் மீற ஆட்டம் போடும்
காட்டு மல்லிப் பூவப் போல
காடும் மேடும் வாசம் வீசும்

--கவிநயா

7 comments:

  1. கவிநயா,

    ஆழ்ந்த கருத்து. நல்ல சொற்பின்னல். தொடருங்கள்.

    என்றும் அன்புடன்
    சதங்கா

    ReplyDelete
  2. கவிநயா,

    மிக நல்ல கவிதை. லிஸ்ட் ஏன் சின்னதாயிடுத்து. நிறைய எழுதியிருக்கலாம், நேரமின்மையோ? மனசு - யாராலும், அளவிட முடியாத, அறுதியிட்டு சொல்லமுடியாத ஒன்று அதை நீங்கள் தொட்டு கவிதையாக்கியிருப்பது மிக நல்ல முயற்சி. சமீப காலமாக உங்கள் கவிதைகளில் 'folk' touch தெரிகிறதே, அது மிக நன்றாக இருக்கிறது.
    அன்புடன்,

    முரளி

    ReplyDelete
  3. சதங்கா, முரளி, உங்கள் அன்புக்கு நன்றி!

    ReplyDelete
  4. மனம் ஒரு குரங்கு என்ற சொல்லுக்கு மாறாக, மனம் எவ்வளவு அற்புதமானது என்று அழகாக கோடி காட்டியிருக்கிறீர்கள். முரளி சொன்னதுபோல கிராமிய நெடி நன்றாக வந்திருக்கிறது. தொடரட்டும் உங்கள் கவிநயம்! இப்போதுதான் சபை களை கட்டுகிறது.

    சதங்கா மற்றும் உங்கள் எழுத்துக்கள் மற்றவர்களையும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். பொங்கியெழட்டும் அமைதிப்படை!

    ReplyDelete
  5. அட, நன்றி நாகு. என் குட்டியூண்டு கவிதையைப் படிக்க உங்களுக்கு இத்தனை நாளா :)

    ReplyDelete
  6. திருக்குறள் மாதிரி :-)

    சின்ன கவிதையில் எவ்வளவோ விஷயங்கள்!

    ReplyDelete
  7. வெயிலுக்கு நல்லாருக்கு, உங்க வார்த்தைகள், குளுகுளுன்னு :-))

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!