Monday, February 05, 2007

கதை கேளு கதை கேளு

ஞாயிறன்று ரிச்மண்ட் வெள்ளித்திரையில் நான் கண்ட ஒரு தமிழ்த்திரைப்படத்தைப்பற்றி எழுதலாமென்று முற்பட்டேன். என்னடா நான் பட விமர்சனம் செய்யும் அளவுக்கு தமிழ் சினிமாவின் நிலை மாறிவிட்டதே என்று ஓரிருவர் பல்லைக்கடிப்பது கேட்கிறது. என்ன செய்வது? தமிழ்சங்க பிளாக் சில மாதங்களாக மிகவும் மந்தமாக இருக்கிறது. ஏதோ நம்மால் முடிந்த கைங்கர்யம். ஞாயிறன்று தலைக்கு மேல் வேலை இருந்தது. நிஜமாகவே நானும் என் மகனும் முடி வெட்டிக்கொண்டு பல வாரங்கள் ஆகின்றன. படம் பார்க்கப்போய் இந்த வாரக்கடைசியும் கோவிந்தா.எது எப்படியிருந்தாலும், ---ஏ போனாலும் தமிழ் பண்பாட்டைக்காப்பாற்றவேண்டும், நமது நண்பர் அரங்கேற்றும் படத்தைப்பார்க்கவேண்டும் என்ற கடமை உணர்வுடன் சென்றேன்.

அடடா, படத்தின் பெயரை சொல்லவில்லையோ? நமது இளைய தளபதி நடித்த "போக்கிரி" தான் அந்தப்படம். நம்ம "க்ரேட் டான்ஸர்" பிரபுதேவா இயக்கிய படம் என்பதை சொல்லவேண்டும். வழக்கமான தமிழ் படம் போல் இல்லாமல் ஒரு சில காட்சிகளும், வசனங்களும் என்னை மிகவும் கவர்ந்தன. முழு பட விமர்சனம் செய்ய இயலாது. அதனால் ஆங்காங்கே கோடிட்டுக்காட்டுகிறேன். மீதியை download செய்யாமல் DVD நம் பேட்டையில் ரிலீஸ் ஆன பிறகு பார்த்துக்கொள்ளவும்.

திருப்பதி, ஆதி, பரமசிவன், ஜாம்பவான், சிவகாசி என்று பக்திப்பெயர்களை வைத்துவிட்டு ஹீரோ வில்லன்களை பின்னியெடுக்கும் படங்களைப்பார்த்தநமக்கு "போக்கிரி" என்று சரியாக பெயர் வைத்து இது சண்டைப்படம் தான் என்று அப்பட்டமாக சொன்னது மிகவும் நல்லது. படத்தின் முதல் காட்சியே ஒரு underground parking lot ல் ஆரம்பமாகிறது. ஒரு பெண் "டக் புக்" என்ற செருப்பு சத்தத்துடன் காருக்கு சென்று ஏறுகிறாள்.என்னடா நமது ஜேஸன் ஸ்டாதம் நடித்த "ட்ரான்ஸ்போர்ட்டர்" போல ஆரம்பிக்கிறதே என்று எண்ணும் போது தடாலென்று ஒரு கொலையுண்ட ரத்தம் தோய்ந்த உடல் அந்தப்பெண்ணின் காரின் மேல் விழுந்து windshield ல் சரிகிறது. கொலையைப்பார்த்த அந்தப்பெண்ணும் பணால்.

புதிய போலீஸ் கமிஷனராக பதவியேற்கிறார் மொய்தீன் கான் (நமது 'விருமாண்டி' புகழ் மாவீரன் நெப்போலியன்).

இண்டர்நேஷனல் தாதா அலி பாய் (பிரகாஷ் ராஜ்).
அவர் கூட்டத்தைச்சேர்ந்தவர்கள் பட்டியல் - தனக்குப்போட்டி வந்துவிட்தே என்று அஞ்சும் ஒருவன்,
"நீ எப்போ கிடைப்பாய்", "நான் உன்னை வேட்டையாடுவது எப்போ" என்று "ஜொள்ளு" விட்டுக்கொண்டு அலையும் ஒரு "ஜேம்ஸ் பாண்டி" ரேஞ்சுக்கு வரும் ஒரு பார்ட்டி,
மொட்டை தலை ஆனந்தராஜ்,
பான் பீடா சவைத்து தன் ஆபீஸிலேயே துப்பும் "ஜொள்ளு" இன்ஸ்பெக்டர் (பெயர் ஏதோ **திவாரி என்று படித்த ஞாபகம் - அவர் நடிப்பு புதிதாக உள்ளது).
இவர்கள் எல்லோரும் சேர்ந்து செய்யும் அட்டூழியங்களைக்காட்டுகிரார்கள்.
இவர்களையெல்லாம் பின்னியெடுக்கும் "போக்கிரி"யாக வருகிறார் விஜய்.
இவரை காதலிப்பதா வேண்டாமா என்று குழம்பி காதலிக்கும் "அசின்". தலையில் சுமோ wrestler போன்ற கொண்டையுடன், விதவிதமான குங்பூ, கராத்தே, சுமோ காஸ்ட்யூமில் வந்து கூத்தடிக்கும் "சோடா பாடி" வடிவேலு. ஒரு காட்சியில் ஒரு ஆள் டீ குடித்துக்கொண்டிருக்கிறார். அவர் அருகில் வடிவேலு சென்று 'படார்' என்று -சு விட, saucer லிருந்து டீ பறக்கும் காட்சி பிரமாதம்.
அசின் தம்பியாக வரும் ஒரு "கொழுக் மொழுக்" அசினிடம் வம்பு செய்ய வரும் வில்லன்களை விஜயிடம் cell phone ல் பேசி லாவகமாக இருக்கும் இடத்தைத்தெரிவிக்கும் இடம் ஜோர். Cell phone களால் விளையும் பயன்களில் தலைசிறந்தது இது.

விஜய் போடும் ஸ்டண்ட்கள், பேசும் வசனங்கள், காமெடி காட்சிகள் புது விதமாக இருந்தது.

நான் ரசித்த சில காட்சிகள்:

1. ஒரு கும்பல் விஜயை துரத்திச்சென்று ஒரு warehouse க்கு செல்கிறது. கும்பலின் தலைவன் ஷட்டரை பூட்டி சாவியை எறிந்து விடுகிறான். பிறகு சண்டை. விஜய் எல்லோரையும் பின்னியெடுத்துவிட்டு கடைசியில் தலைவன் பக்கம் பார்க்கும் போது அவன் சுத்தியலால் ஷட்டரின் பூட்டை உடைத்து வெளியேறப்பார்க்கிறான். அப்போது விஜய் "சாவியை எறியாம இருந்திருக்கலாமில்லே?" என்று சொல்வது ஜோர்

2. விஜய் பிரகாஷ்ராஜை முதலில் சந்திக்கும் போது வரும் வசனங்கள்: பிரகாஷ்ராஜ்: உன்னை பார்த்தா ரௌடி மாதிரியே தெரியலியே - பக்கத்து வீட்டுப்பையன் மாதிரி இருக்கே
விஜய்: ஏன் உங்களைப்பார்த்தா கூட தான் எதிர்த்த வீட்டு மாமா மாதிரி இருக்கு

3. படம் முடிவில் விஜய் விடும் ஒரு குத்தினால் சில வினாடிகள் பிரகாஷ்ராஜின் காது மந்தமாகிவிடுகிறது. அப்போது எந்தவித சத்தமும் இல்லாமல் காட்சி சில வினாடிகள் நிசப்தமாக இருக்கிறது.

4. பிரகாஷ்ராஜை தூங்கவிடாமல் துன்புறுத்தும் போலீஸ் லாக்கப் காட்சி

மணி சர்மாவின் இசையில் சில பாடல்கள் நன்றாக உள்ளன. குறிப்பாக "வசந்த முல்லை", "மாம்பழமாம் மாம்பழம்", "ஆடுங்கடா என்னைச்சுத்தி".

ஆக மொத்தம் சமீபத்தில் பார்த்த சில நல்ல படங்களில் "போக்கிரி" ஐயும் சேர்த்துக்கொள்ளலாம் (புது விதமாக இருப்பதால்)

2 comments:

  1. பரதேசியாரே - நல்லா இருக்கு, விமர்சனம். விமர்சனம் நல்லா வந்த மாதிரி படமும் வந்திருக்கும் என நம்புகிறேன் :-)

    ReplyDelete
  2. ஹ்ம்.. படத்துல விஜய் "நடிச்சாருன்னு" சொன்னா ஆச்சர்யம் தான்.. பிரபு தேவாவின் தவறா இல்லை விஜயின் டென்சனா? இதுல விஜய் அசினுக்கு கொடுத்தது எவ்வளவு முத்தம்னு போட்டி வேறா!! அசினோட money market account'ல இன்னும் 1 கோடி(?).. வெடி-வேலு.. சில இடங்களில் "அட..".

    விமர்சனம் நல்லா இருக்கு..

    சரி.. குரு எப்போ வருது..?

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!